tag:blogger.com,1999:blog-57184461301076777122024-03-13T21:13:26.391+08:00"ஓலைச்சுவடி"என் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comBlogger683125tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-47379924057744758822015-08-07T07:19:00.001+08:002015-08-07T07:23:57.061+08:00சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/tQg1QpsQUqU" width="440"></iframe>
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க விரும்பும் அன்பர்கள் இணைக்கப்பட்டுள்ள தொடுப்பைச் சுட்டி, கல்வி அமைச்சருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை பதவிறக்கி இரண்டே வாரங்களுக்குள் கல்வி அமைச்சருக்கு AR Registered Mail - வழியாக அனுப்பி வைத்துவிடுங்கள்.<br />
<br />
<a href="https://www.dropbox.com/s/1qvhgwnrsvs81yf/Surat%20kepada%20Menteri%20Pelajaran%20Malaysia.pdf?dl=0" target="_blank">கல்வி அமைச்சருக்கான கடிதம்</a><br />
<br />
பிரதமருக்காக அனுப்ப வேண்டிய சிறப்பு அஞ்சல் அட்டையைப் பெற்றுக்கொள்ள திரு.மாறன் அவர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அவரின் அலைப்பேசி எண்கள்<br />
016-4165443 / 017-4098006<br />
<br />
நமது தமிழ்ப்பள்ளி , நமது கடமை</div>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-16606507519190747562015-07-22T13:59:00.000+08:002015-07-22T17:25:48.765+08:00தத்தளிக்கும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் அவல நிலையை சித்தரிக்கும் ஆவணப்படம்
<iframe width="440" height="315" src="https://www.youtube.com/embed/YQKbbkdGHBk" frameborder="0" allowfullscreen></iframe>
இக்காணொளியைக் காணும் அன்பர்கள் தயைகூர்ந்து முகநூல், Whatsapp, WeChat போன்ற சமூகத் தளங்களில் இச்செய்தியைப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம். பதவியில் அமர்ந்திருப்பவர்களின் காதுகளை இச்செய்தி எட்ட வேண்டும்! இப்பள்ளிக்கு உடனடி நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்! இனமான உணர்வுகொண்ட அன்பர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 2, 2015 காலை 11.00 மணியளவில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியில் நடைப்பெறவிருக்கும் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவு கரங்களை நீட்டலாம்.<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-30887216153836506082015-04-18T16:58:00.000+08:002015-04-18T17:01:50.798+08:00இலண்டன் உயர் நீதிமன்ற தீ விபத்தால் பதிவு அழிந்தது. ஹிண்ட்ராஃப் மேல்முறையீடு செய்வதில் தடங்கல் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-2z5T6qrHIgw/VTIclaB9HLI/AAAAAAAAQOA/7N1Pd2hW42E/s1600/11156319_891992470861598_7694027029444407843_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-2z5T6qrHIgw/VTIclaB9HLI/AAAAAAAAQOA/7N1Pd2hW42E/s1600/11156319_891992470861598_7694027029444407843_n.jpg" height="320" width="226" /></a></div>
<div style="color: #141823; font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px;">
<span style="background-color: black;"><br /></span></div>
<div style="font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px;">
<span style="background-color: black; color: white; line-height: 19.3199996948242px;">இலண்டன், 18 ஏப்ரல்: </span></div>
<div style="font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px;">
<span style="background-color: black; color: white; line-height: 19.3199996948242px;"><br /></span></div>
<div style="margin-bottom: 6px;">
<span style="font-family: helvetica, arial, lucida grande, sans-serif;"><span style="background-color: black; color: white; font-size: 14px; line-height: 19.3199996948242px;">ஐக்கிய இராஜியத்திற்கு(UK) எதிராக ஹீண்ட்ராஃப் இயக்கம் தொடர்ந்த வழக்கு நடைபெற்ற ஏப்ரல் முதல் நாளில் இலண்டன் உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மின் தடை ஏற்பட்டது. இதனால், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்போது வழக்கமாக பதிவு செய்யப்படும் ஒலிப்பதிவு அன்றைய நாளில் இடம்பெறவில்லை. இதனால், வழக்கின் குரல் பதிவு அறிக்கையாக பதிவு செய்யப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட வாதி, பிரதிவாதி தரப்பினரிடம் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கும் நடைமுறை ஹிண்ட்ராஃப் வழக்கைப் பொறுத்த மட்டில் தடை கண்டுள்ளது என்று ஹீண்ட்ராஃப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி இலண்டனில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</span></span></div>
<div style="font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px;">
<span style="background-color: black; color: white; line-height: 19.3199996948242px;"><br /></span></div>
<div style="font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="background-color: black;"><span style="color: white;">பிரிட்டிஷ் அரசினால் மலாயாவிற்கு அழைத்துவரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நியாயம் வேண்டி ஹிண்ட்ராஃப் தொடர்ந்த வழக்கை, இலண்டன் உயர்நீதி மன்ற நீதிபதி நிக்கோலஸ் பிளேக், மலாயாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்ட காலத்தில் ராணியார் தன் சட்டப்பூர்வ கடமையைத்தான் நிறைவேற்றினாரேத் தவிர, பாதிக்கப்பட்ட மலாயா இந்தியர்களுக்கு இன்றைய பிரிட்டிஷ் அரசு பொறுப்பாக முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.</span></span></div>
<div style="font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="background-color: black;"><span style="color: white;"><br /></span></span>
<span style="background-color: black;"><span style="color: white;">இது குறித்து தற்பொழுது மேல் முறையீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர் நிறுவனமான ‘இம்ரான் கான் & பார்ட்னர்ஸ்’, கடந்த 9-ஆம் நாள் இலண்டன் உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு நகலுக்காக விண்ணப்பித்த வேளையில்தான் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய நிலை, 21 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்னும் நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப செயல்படுதில் தடங்கலை ஏற்படுத்தி உள்ளது. தவிர, ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர்களும் இது குறித்து மேலாலோசனை வழங்க முடியாமல் இருக்கின்றனர்</span></span><br />
<span style="background-color: black;"><span style="color: white;"><br /></span></span>
<span style="background-color: black;"><span style="color: white;">அதேவேளை, தீர்ப்பு குறித்த நகல் கிடைக்காத நிலையில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு குறித்தும் பிரிட்டிஷ் அரச உச்ச நீதிமன்றத்துடன் ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். மேல் முறையீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.</span></span></div>
<div style="font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="background-color: black;"><span style="color: white;"><br /></span></span>
<span style="background-color: black;"><span style="color: white;">இதற்கிடையில், வழக்கின்போது ஹீண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் எடுத்துக் கொண்ட குறிப்புகளின் அடிப்படையில் ஹீண்ட்ராஃப் சார்பான இலண்டன் வழக்கறிஞருடனும் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதில், 1957 மலாயா சுதந்திரச் சட்டம் தொடர்பான சட்டத்திற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் 21-07-1957-இல் ஒப்புதல் அளித்த பிரிட்டிஷ் அரசியாரின் சட்டப் பூர்வ கடமை குறித்த அம்சம்தான் தடைக்கல்லாக இருக்கிறது.</span></span></div>
<div style="font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="background-color: black;"><span style="color: white;"><br /></span></span>
<span style="background-color: black;"><span style="color: white;">இந்தப் பிரச்சினையில், ஹீண்ட்ராஃப் இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து எழுப்பப்படும் ஐயம், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மலாயா அரசியல் சாசனத்தில் பின்னர் இடைச்செருகல் எப்படி இடம் பெற்றது என்பதுதான். இதில், அப்போதைய பிரிட்டிஷ் அரசும் அம்னோ தலைவர்களும் தனிக் கூட்டு அமைத்து செயல்பட்டனரா என்பதும் ஐயத்திற்குரியதாக இருக்கிறது.</span></span></div>
<div style="font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="background-color: black;"><span style="color: white;"><br /></span></span>
<span style="background-color: black;"><span style="color: white;">ஹீண்ட்ராஃப் இயக்கத்தால் முன் வைக்கப்படும் இன்னொரு ஐயம், பிரிட்டிஷ் அரசினால் மலாயாவிற்கு கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், 1948 பிரிட்டிஷ் தேசியச் சட்டத்தின்படி பிரிட்டிஷ் குடிமக்கள் என்ற தகுதிக்கு உரியவர்கள். அதேவேளை, மாலாயா சுதந்திரம் தொடர்பான பேச்சு வார்த்தை இடம்பெற்ற போது, இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2-ஆம் அல்லது 3-ஆவது தலைமுறையைக் கண்டிருந்தனர். அந்த வகையில், இவர்களின் நலனையும் மலாயாவை விட்டு பிரிட்டிஷ் அரசு வெளியேறிய தருணத்தில் பிரிட்டிஷ் அரசு கவனத்தில் கொண்டிருந்ததா என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை குறித்த ஏராளமான ஆவணங்களையெல்லாம் வழக்கின்போது ஹீண்ட்ராஃப் சமர்ப்பித்தது. இருந்தும், நீதிபதி நிக்கோலஸ் பிளேக் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டாரா என்பதும் தெரியவில்லை.</span></span></div>
<div style="font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="background-color: black;"><span style="color: white;"><br /></span></span>
<span style="background-color: black;"><span style="color: white;">வழக்கை தள்ளுபடி செய்யும் முன், ஹீண்ட்ராஃப் தொடுத்த வழக்கின் முழு சாரத்தையும் அறிந்து, தெளிந்து கொண்டாரா என்பதே எங்களின் ஐயமாக இருக்கிறது. அப்படி என்றால் பிரிட்டிஷ் நீதி பரிபாலனத்தில் இது ஒரு பின்னடைவாகவேக் கருதப்படும். எது எவ்வாறாயினும், ஹீண்ட்ராஃப் இயக்கத்தின் போராட்டம் தொடரும் என்று வழக்கஞர் வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவு படுத்தியுள்ளார்.</span></span></div>
<div style="font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="background-color: black;"><span style="color: white;"><br /></span></span></div>
<div style="background-color: black; display: inline; font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-top: 6px;">
<span style="color: white;">பொ.வேதமூர்த்தி<br />
தலைவர் - ஹிண்ட்ராஃப்<br />
18-04-2015</span></div>
</div>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-20875895023658297752015-03-30T13:00:00.000+08:002015-03-30T20:40:31.379+08:00லண்டன் வழக்கு மலேசிய அரசை இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கலாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-rEpIDSN7D64/VRjX_SmFR5I/AAAAAAAAP_E/n7XOAO3xWeU/s1600/waytha.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-rEpIDSN7D64/VRjX_SmFR5I/AAAAAAAAP_E/n7XOAO3xWeU/s1600/waytha.jpg" height="320" width="320" /></a></div>
<div style="font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 12px; line-height: 16.0799999237061px; margin-bottom: 1em; margin-top: 1em;">
<span style="background-color: black;"><span style="color: white;"><span style="line-height: 16.0799999237061px;">இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிந்திய வியர்வைக்கும் இரத்திற்கும் நீதி கேட்கும் உரிமைப் போராட்டம்தான்</span><span class="text_exposed_show" style="display: inline; line-height: 16.0799999237061px;"> இந்த லண்டன் வழக்கு: வேதமூர்த்தி</span></span></span></div>
<div class="text_exposed_show" style="display: inline; font-family: helvetica, arial, 'lucida grande', sans-serif; font-size: 12px; line-height: 16.0799999237061px;">
<span style="background-color: black;"><span style="color: white;"></span></span><br />
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
<span style="background-color: black; color: white;">மலேசிய அரசியல் சாசனம் 1957-இல் வரையப்பட்டபோது, இந்தியர்களின் நலனையும் மற்ற இனத்தினரின் பாதுகாப்பையும் பிரிட்டிஷ் அரசு அடியோடு புறக்கணித்து விட்டதாக ஹிண்ட்ராஃப் தொடர்ந்துள்ள சிவில் வழக்கு, இலண்டன் உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருக்கின்ற நிலையில் இது, மலேசிய அரசை இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கலாம்; ஆனால், ஹிண்ட்ராஃப்-பின் நோக்கம் அதுவல்ல என்று இவ்வழக்கு தொடர்பாக இலண்டன் மாநகரில் முகாமிட்டுள்ள ஹிண்ட்ராஃப் தலைவர் பொ.வேதமூர்த்தி அங்கிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</span><br />
<span style="background-color: black; color: white;">இந்திய தோட்டத் தொழிலாளர்களை அப்போதைய பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டே புறக்கணித்ததால், மலாயா இந்தியத் தொழிலாளர்கள் சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளானதுடன், மலேசியாவில் வாழ்கின்ற மற்ற இனத்தினரின் ஓர் இளப்பமான பார்வைக்கும் ஆளான நேர்ந்தது.</span><br />
<span style="background-color: black; color: white;"><br /></span>
<span style="background-color: black; color: white;">ஏறக்குறைய 8 இலட்ச பாட்டாளிகள் இடம்பெயர வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளானதுடன், அவர்கள் வேலையை இழந்து, இருப்பிடம் இன்றி மொத்தத்தில் வாழ்வாதாரத்தைத் தொலைத்து நகர்ப் புறாத்தில் அல்லல்பட நேற்ந்தது. அத்துடன், ஏறக்குறைய 3 இலட்ச மலேசிய இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக ஆயினர். மொத்தத்தில் சுதந்திர மலேசியாவின் தேசிய பொருளாதார மேம்பாட்டில் இந்தியர்கள் ஒதுங்கி நிற்க நேர்ந்தது.</span></div>
<span style="color: white;"><span style="background-color: black;">
</span></span>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
<span style="color: white;"><span style="background-color: black;"><br /></span>
<span style="background-color: black;">ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சுதந்திர மலேசியாவில், அம்னோ தலைமையிலான கூட்டணி அரசு, இன அடிப்படையிலும் ஏற்றத் தாழ்வு மனப்பான்மையிலும் செயல்படுவதற்கு பிரிட்டிஷ் ஆட்சியினர்தான் அடித்தளமிட்டனர் என்பதை மையக் கருத்தாகக் கொண்டுதான் ஹிண்ட்ராஃப் தொடுத்துள்ள வழக்கு இன்று மார்ச் 30-ஆம் நாள் விசாரணைக்கு வருகிறது என்று வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.</span></span></div>
<span style="color: white;">
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
<span style="background-color: black;"><br /></span>
<span style="background-color: black;">மலேசிய இந்தியப் பாட்டாளி சமுதாயம் எதிர் கொண்ட துயரத்திற்கும் நட்டத்திற்கு பிரிட்டிஷ் அரசு பொறுப்பாக முடியாது என்று இந்த வழக்கை பிரிட்டிஷ் அரசு எதிர்க்கலாம. அதேவேளை, பிரிட்டிஷ் அரசுதான் பொறுப்பு என்பதற்கு ஹிண்ட்ராஃப் ஆயிரக் கணக்கான ஆவணங்களைத் திரட்டியுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.</span></div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
<span style="background-color: black;"><br /></span>
<span style="background-color: black;">இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குடியேற்ற நிலம் வழங்குவதாக வாக்குறுதி தந்த அந்நாளைய பிரிட்டிஷ் நிர்வாகம் அப்பட்டமாக ஏமாற்றி விட்டது. கடல் பயணத்தின்போதும் மலாயாவின் காடுகளை அழித்து நிலத்தைத் திருத்தியபோதும் ஏறக்குறைய ஒரு இலட்சப் பாட்டாளிகள் மடிந்தனர். இதையும் பிரிட்டிஷ் அரசு மூடி மறைத்துவிட்டது.</span></div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
<span style="background-color: black;"><br /></span>
<span style="background-color: black;">மலாயாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கிய இரப்பர் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றியவர்கள் இந்தியத் தொழிலாளர்கள், குறிப்பாக தமிழர்கள். அத்துடன், நாடு முழுக்க இரயில் தண்டவாளங்களை அமைத்தது, கட்டடங்களை நிர்மானித்ததெல்லாம் தமிழர்கள்தான். குறைந்த சம்பளத்துடனும் அடிப்படை வசதிகூட இல்லாமலும் பாடுபட்ட தொழிலாளர்களுகாகக் குரல் கொடுத்த சமூகத் தலைவர்களான கணபதி, வீரசேனன் போன்றோரை கம்யூனிசவாதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களை தூக்கிலிட்டு கொன்றதும் பிரிட்டிஷ் அரசுதான்.</span></div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
<span style="background-color: black;"><br /></span>
<span style="background-color: black;">சுதந்திரப் போராட்ட காலத்தில் மஇகா தலைவர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் கூட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்காமல், அதிகார வர்க்கத்துடன் சமரசம் கண்ட தலைவர்களாக இருந்தனர்.</span><br />
<span style="background-color: black;">இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ், பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இருந்த தோட்டங்களில் பிறந்த நம் முன்னோர், ‘1948 பிரிட்டிஷ் குடியுரிமை(தேசிய)ச் சட்ட’த்தின்படி பிரிட்டிஷ் பிரஜைகளாவர்.</span></div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
<span style="background-color: black;"><br /></span>
<span style="background-color: black;">இப்படி எந்த வகையில் பார்த்தாலும் பிரிட்டிஷ் அரசு தன் கடமையிலிருந்தும் பொருப்பில் இருந்தும் விலகிக் கொண்டதற்காக, குறிப்பாக நம் முன்னோர் சிந்திய இரத்தத்திற்கும் வியர்வைக்கும் நியாயத்தையும் நீதியையும் கேட்கும் உரிமைப் போராட்டம்தான் இந்த சிவில் வழக்கு என்று பொ.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</span></div>
<div style="margin-bottom: 1em; margin-top: 1em;">
<span style="background-color: black;">பொ. வேதமூர்த்தி</span><br />
<span style="background-color: black;">தலைவர் - ஹிண்ட்ராஃப்</span></div>
</span></div>
</div>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-282743943507968692015-03-30T12:22:00.001+08:002015-03-30T13:01:04.568+08:00”சயாம் - பர்மா மரண ரயில் பாதை” ஆவணப்படத் திரையிடல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-rmr49r8Cfec/VRjQ571VAPI/AAAAAAAAP-0/V9SzfKlrH7o/s1600/SBDR.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-rmr49r8Cfec/VRjQ571VAPI/AAAAAAAAP-0/V9SzfKlrH7o/s400/SBDR.jpg" /></a></div>
<br />
நாடோடிகள் கலைக்குழுவின் தயாரிப்பில் வெளிவந்துள்ள சயாம் - பர்மா மரண ரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) எனும் ஆவணப்படம் எதிர்வரும் 25-ஆம் தேதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமையன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பினாங்கு ரெக்சம் சீமியோ மண்டபத்தில் திரைக்காணவுள்ளது.<br />
<br />
பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து இத்திரையிடல் நிகழ்ச்சியை சிறப்பித்து பயன்பெறுமாறு விழைகிறோம். இந்நிகழ்ச்சிக்கான நுழைவு முற்றிலும் இலவசம்.<br />
<br />
நிகழ்ச்சி நிரல் :-<br />
<br />
மாலை<br />
5.30 : தேநீர் விருந்துபசரிப்பு<br />
5.50 : நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் உரை<br />
6.00 : கவிதைப் படைப்பு<br />
6.05 : திரு.ராஜ்சங்கர் உரை (ஆவணப்பட இணை இயக்குநர்)<br />
6.10 : ‘சயாம் - பர்மா மரண ரயில் பாதை’ ஆவணப்படம் திரையிடல்<br />
<br />
இரவு<br />
7.15 : கேள்வி & பதில் அங்கம்<br />
7.45 : முடிவுரை / நிகழ்ச்சி நிறைவடைதல்<br />
<br />
(நிகழ்ச்சி நிரல் ஏற்பாட்டாளரின் வசதிக்கேற்ப மாற்றம் காணலாம்)<br />
<br />
இவ்வாவணப்படம் குறித்த சில தகவல்களுக்கு கீழ்கண்ட வலைத்தள தொடுப்பினை சுட்டவும் : <a href="http://www.jeyamohan.in/68380#.VRjFpPmUd8E">http://www.jeyamohan.in/68380#.VRjFpPmUd8E</a><br />
<br />
முகநூலின் வழி உங்களின் வருகையை உறுதி செய்ய இத்தொடுப்பைச் சுட்டவும் : <a href="https://www.facebook.com/events/635218089954878/">https://www.facebook.com/events/635218089954878/</a><br />
<br />
மேலதிக தகவல்களுக்கு : திரு.கனகசுந்தரம் / 017-4155449</div>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-28605450817061004792014-04-17T05:02:00.001+08:002014-04-18T23:24:00.536+08:00மலேசியாவின் மூத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான கர்பால் சிங் கார் விபத்தில் மரணம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-RxRtbwxWEt8/U07u7NURdfI/AAAAAAAAMxg/vay_YqkyXMw/s1600/karpal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-RxRtbwxWEt8/U07u7NURdfI/AAAAAAAAMxg/vay_YqkyXMw/s1600/karpal.jpg" height="192" width="320" /></a></div>
<br />
<br />
மூத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான கர்பால் சிங் இன்று (17-04-2014) காலை 1 மணியளவில் தாப்பா , பேராக் அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலை கிலோ மீட்டர் 301.6-ல் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் கொல்லப்பட்டார் .<br />
<br />
காரில் உடன் சென்ற அவரின் நீண்ட கால உதவியாளர் மைக்கேல் கொர்ணேலியசும் உடன் கொல்லப்பட்டார் .<br />
<br />
அதுபோக காரில் பயணித்த அவருடைய வாகனமோட்டி, அவரது மகன் ராம் கர்பால் மற்றும் வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஈப்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
எம்.பி.வி ரக காரில் கோலாலம்பூரிலிருந்து பினாங்கு நோக்கி செல்லும் வழியில், முன் சென்றுகொண்டிருந்த லாரியொன்று இடப்பாதையிலிருந்து வலப்பாதையை நோக்கி திடீரென்று திரும்பியதால் இந்த கோர விபத்து நடந்ததாக நம்பப்படுகிறது.<br />
<br />
ஏற்கனவே, கர்பால் , 74 , 2005-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் சிக்கி உடல் பாதி செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியை பயன்படுத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
2008-ல் நடந்த பேராக் அரசு மாற்ற சர்ச்சையில் பேராக் சுல்தான் ஆணைக்கு கர்பால் மறுப்பு கருத்தை தெரிவித்ததாக தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சுமத்தப்பட்டு, ரி.ம 4000 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டார். இதனால் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் ஆபத்து ஏற்பட்டதால் அண்மையில் டி.ஏ.பி கட்சியின் தேசியத் தலைவர் பதவியை அவர் துறந்தார்.<br />
<br />
அதுபோக 2009-ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலத்தின் கடைசி இந்திய பாரம்பரிய கிரமமான புவா பாலாவை தற்காக்கத் தவறியதால் மலேசிய இந்தியர்களின் கடுஞ்சினத்திற்கும் ஆளானார்.<br />
<br />
அதே சமயம் இசுலாமிய ஹுடுட் சட்டம் மலேசியாவில் அமுல்படுத்தவதை தொடர்ந்து பலமாக எதிர்த்தும் வந்தார். மலேசியா என்றும் மதசார்பற்ற நாடு எனும் கொள்கையில் அவர் உறுதியாக இருந்தது பல்லின மலேசியர்களின் ஆதரவை அவருக்குப் பெற்று தந்தது.<br />
<br />
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைமையை இறைஞ்சுவோமாக.</div>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-68829553697055001732014-02-05T22:43:00.000+08:002014-02-06T00:38:35.991+08:00தென்கிழக்காசியாவிலேயே மிகப் பழமையான வரலாற்றுச் சின்னமான பூஜாங் பள்ளத்தாக்கை காப்பாற்றுங்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-0WvpSa5xnl4/UvJNkfL_a1I/AAAAAAAAInM/y9cGIuiamQM/s1600/Bujang+Valley.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-0WvpSa5xnl4/UvJNkfL_a1I/AAAAAAAAInM/y9cGIuiamQM/s200/Bujang+Valley.jpg" /></a></div>
கடாரம் எனப்படும் பண்டைய நாகரீகத்தின் எச்சங்களாக விளங்கிவரும் பூஜாங் பள்ளத்தாக்கின் சண்டி எனப்படும் புராதனத் தலங்கள் அழிவை நோக்கிச் செல்கின்றன. முறையான பாதுகாப்பு, புனரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் சரித்திர ஏடுகளிலிலிருந்து கடாரத்தின் புகழ் அழிந்துவிடாமல் காக்கவேண்டும். அதற்காக யுனேசுகோ அமைப்பு பூஜாங் பள்ளத்தாக்கை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க முயற்சி எடுக்கக் கோரி விண்ணப்பிக்கும் மகஜர் ஒன்றினை இணையத்தில் பதிவேற்றியுள்ளோம். தயை கூர்ந்து கீழ்காணும் தொடுப்பில் உள்ள மனுவிற்கு ஆதரவாக மின்னொப்பம் இடுங்கள்.
<a href="http://www.gopetition.com/petitions/save-bujang-valley.html">http://www.gopetition.com/petitions/save-bujang-valley.html</a><br />
<br />
பூஜாங் பள்ளத்தாக்கு தொடர்பான மற்றுமொரு பதிவு :<a href="http://olaichuvadi.blogspot.com/2013/12/blog-post.html"> http://olaichuvadi.blogspot.com/2013/12/blog-post.html</a>
</div>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-58904479084946798912013-12-28T00:25:00.001+08:002013-12-28T02:21:12.877+08:00பூஜாங் பள்ளத்தாக்கை உலகப் பாரம்பரியச் சின்னமாக பிரகடனப்படுத்துக!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-bKCxN-Qf3PA/Ur2qBdANY_I/AAAAAAAAH7k/hyOlmJNo46M/s1600/1462877_559829564105870_1771966958_n.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-bKCxN-Qf3PA/Ur2qBdANY_I/AAAAAAAAH7k/hyOlmJNo46M/s320/1462877_559829564105870_1771966958_n.png" /></a></div>
அன்பின் வாசகர்களே,
அண்மையில் பூஜாங் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த சண்டி 11-ஐ, பொறுப்பற்ற நில மேம்பாட்டாளர் நிறுவனத்தினர் சட்டவிரோதமாக உடைத்து அப்புறப்படுத்தியிருக்கின்றனர். 1970-ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு மறுசீரமைப்புச் செய்யப்பட்ட இந்த சண்டியானது கடந்த 43-ஆண்டுகளாக ரப்பர் மற்றும் செம்பனை பயிரிடும் தனியார் நிலத்தில் பாதுகாக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கெடா மாநில நில அலுவலகம் கொடுத்த அனுமதியின் பேரில் சௌஜானா செண்ட்.பெர்ஹாட் எனும் வீடமைப்பு மேம்பாட்டாளர் நிறுவனம் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சண்டியை சட்டவிரோதமாக உடைத்து தள்ளியிருக்கின்றனர். இன்றுவரை தேசிய பாரம்பரிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இச்சட்டவிரோத செயலுக்காக மேம்ப்பாட்டளர் நிறுவனம் மீது எந்தவொரு சட்ட வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
பொதுமக்களிடமிருந்து எழுந்த எதிரொலிகளின் விளைவாக சண்டி 11 மீண்டும் அதே இடத்தில் எழுப்பப்படும் என கெடா மாநில அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை. தென் கிழக்காசியாவிலேயே மிகப் பழமையான நாகரிகமான கடாரத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் இந்த பூஜாங் பள்ளத்தாக்கை யுனேஸ்கோ உடனடியாக உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பதன்வழி, இப்பாரம்பரியங்களை நம் அடுத்த தலைமுறையினர்கள் பார்த்து அறித்துகொள்வதற்காக பாதுகாப்பாக விட்டுச் செல்ல முடியும். எனவே, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 2014-ல் பாரிஸ் நகரில் இயங்கும் யுனேஸ்கோ தலைமையகத்தில் ஒரு மனு அளிக்கப்படவுள்ளது. இந்த மனுவுக்கு ஆதரவாக 10,000 மலேசியர்களின் கையெழுத்துகளை வாங்குவதற்காக கையெழுத்து வேட்டையும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தகவல்களை கண்ணுறும் அன்பர்கள் உடனடியாக கீழ்காணும் பாரங்களை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு மலேசியர்களின் கையெழுத்துகளை வாங்கி, அந்த படிவங்களை savebujangvalley@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு 31 ஜனவரி 2014-குள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.<br />
<br />
Dear Malaysian,
We need you to be our pillar by tendering your signature to give support to our initiative to pursue petition for URGENT intervention by UNESCO to urge the Federal Government of Malaysia, Kedah State Government and Malaysia National Heritage Department to immediately initiate the necessary action plans to protect, preserve, conserve and listing theBujang Valley archaeological site in World Heritage List. And make all proactive efforts to revisit the UNESCO recommendation proposal which was submitted in 1987 to the Federal Government of Malaysia.<br />
<br />
In the heart of all Malaysian, The Bujang Valley is wealth of our ancestors and it is our legacy from the past, what we live with today, and what we pass on to future generations. Our cultural and natural heritages are both irreplaceable sources of life and inspiration.
Please feel pride of our heritage and come forward to save our heritage from taken away from us systematically. Before it is too late, let we act now!
Let us together YOU & ME with support of our beloved family and friends regardless of race and religion to be part of this 10,000 signatures campaign.<br />
<br />
The petition will be handed over to UNESCO in Paris by Mr.Saravanan from Belgium in February 2014. Please download the attached signature form and send us back the forms via email : savebujangvalley@gmail.com before 31st January 2014.
<br />
<div style="-x-system-font: none; display: block; font-family: Helvetica,Arial,Sans-serif; font-size-adjust: none; font-size: 14px; font-stretch: normal; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; margin: 12px auto 6px auto;">
<a href="http://www.scribd.com/doc/193802222/Petition-to-UNESCO" style="text-decoration: underline;" title="View Petition to UNESCO on Scribd">Petition to UNESCO</a> by <a href="http://www.scribd.com/sathis2kumar_2" style="text-decoration: underline;" title="View Sathis Kumar's profile on Scribd">Sathis Kumar</a></div>
<iframe class="scribd_iframe_embed" data-aspect-ratio="0.706896551724138" data-auto-height="false" frameborder="0" height="600" id="doc_78975" scrolling="no" src="//www.scribd.com/embeds/193802222/content?start_page=1&view_mode=scroll&access_key=key-3siwxz5jddrr4guxb1z&show_recommendations=true" width="400"></iframe>
<br />
<div style="-x-system-font: none; display: block; font-family: Helvetica,Arial,Sans-serif; font-size-adjust: none; font-size: 14px; font-stretch: normal; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; margin: 12px auto 6px auto;">
<a href="http://www.scribd.com/doc/194060046/UNESCO-Petition-Signature-Campaign" style="text-decoration: underline;" title="View UNESCO Petition Signature Campaign on Scribd">UNESCO Petition Signature Campaign</a> by <a href="http://www.scribd.com/sathis2kumar_2" style="text-decoration: underline;" title="View Sathis Kumar's profile on Scribd">Sathis Kumar</a></div>
<iframe class="scribd_iframe_embed" data-aspect-ratio="1.41444270015699" data-auto-height="false" frameborder="0" height="600" id="doc_63543" scrolling="no" src="//www.scribd.com/embeds/194060046/content?start_page=1&view_mode=scroll&access_key=key-273mjdeyn7xus1pggpyn&show_recommendations=true" width="400"></iframe></div>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-6251288769472779872013-10-30T08:49:00.001+08:002013-11-01T02:41:55.740+08:00சயாம்-பர்மா மரண ரயில்வே திட்டத்தில் மலாயாத் தமிழர்களின் பங்குகடந்த அத்தோபர் 19-ஆம் தேதி பினாங்கு காந்திஜி மண்டபத்தில் சயாம் - பர்மா மரண ரயில்வே திட்டம் மற்றும் தேசிய இந்திய இராணுவத்தில் மலாயாத் தமிழர்களின் பங்கு எனும் தலைப்பில் உரை நிகழ்வு நடந்தேறியது. பினாங்கு பாரம்பரிய மையம் ஏற்று நடத்திய இந்நிகழ்வில் கியோட்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.டேவிட் போகட் சிறப்பு உரையாற்றினார். அவரின் உரையின் சில பகுதிகள் காணொளியாகத் தொகுக்கப்பட்டு இங்கு வழங்கப்பட்டுள்ளது.
<iframe width="450" height="300" src="//www.youtube.com/embed/0b5Z9o6-2IY" frameborder="0" allowfullscreen></iframe><div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-68104517819081056522013-09-13T22:14:00.001+08:002013-09-13T22:14:33.398+08:00மனித உரிமைக் கல்வி - தனி மனிதருக்கு உரிய உரிமைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-GMpt1LWKZU8/UjMdmJnUlMI/AAAAAAAAF90/8NeCmtdSOeo/s1600/Whole+School+Approach+Booklet.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-GMpt1LWKZU8/UjMdmJnUlMI/AAAAAAAAF90/8NeCmtdSOeo/s320/Whole+School+Approach+Booklet.JPG" width="241" /></a></div>
<br />
<br />
<b>குடிமை உரிமைகள் (Civil Rights)</b><br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>உயிர் வாழ்வதற்கான உரிமை</li>
<li>சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை</li>
<li>தேசிய இனத்திற்கான உரிமை</li>
<li>நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை</li>
<li>வெளிப்படையான விசாரணைக்கான உரிமை</li>
<li>குற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை</li>
<li>(இலவச) சட்ட உதவிக்கான உரிமை</li>
<li>குற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை</li>
<li>உறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைத்தீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை.</li>
<li>ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை</li>
<li>மேல்முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை</li>
<li>மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை</li>
<li>தனது வீட்டில் தனியாக இருக்க உரிமை</li>
<li>தன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை</li>
<li>நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை</li>
<li>நீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை</li>
<li>தன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை</li>
<li>ஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமை</li>
<li>ஒரு நாட்டைவிட்டு வெளியேறுய்வதற்கான உரிமை</li>
</ul>
<br />
<b>அரசியல் உரிமைகள்</b><br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>கருத்துகளை வெளியிட உரிமை</li>
<li>கூட்டம் கூடுவதற்கான உரிமை</li>
<li>சங்கமாகச் சேருவதற்கான உரிமை</li>
<li>வாக்களிப்பதற்கான உரிமை</li>
<li>அரசியல் பங்கேற்புகான உரிமை</li>
<li>பொதுப்பணிகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான உரிமை</li>
</ul>
<br />
<b>பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்</b><br />
<br />
<div style="text-align: left;">
</div>
<ul style="text-align: left;">
<li>வேலைக்கான உரிமை</li>
<li>வேலையைத் தெரிவு செய்யும் உரிமை</li>
<li>சொத்து வைத்திருப்பதற்கான உரிமை</li>
<li>போதிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை</li>
<li>கல்வி பெறுவதற்கான உரிமை</li>
<li>சமூகப் பாதுகாப்புக்கான உரிமை</li>
<li>ஆயுள் காப்பீட்டுக்கான உரிமை</li>
<li>சமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை</li>
<li>அறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமை</li>
<li>சுகாதாரம், பாதுகாப்புக்கான உரிமை</li>
</ul>
<br /><br />
<div style="text-align: left;">
<b>குழுக்களின் உரிமைகள்</b></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
</div>
<ul style="text-align: left;">
<li>சமய ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)</li>
<li>கூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை</li>
<li>தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை</li>
<li>போராட்ட உரிமை</li>
<li>பணி நீக்கம் செய்யப்படுவதற்குமுன் முன்னறிவிப்புப் பெறும் உரிமை</li>
<li>பதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிப்புரிவதற்குமான உரிமை</li>
<li>வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி பெறும் உரிமை</li>
<li>சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை</li>
<li>நியாயமான ஊதியத்திற்கான உரிமை</li>
<li>வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை)</li>
</ul>
<br />
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<b>பெண்களுக்கான உரிமைகள்</b></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
</div>
<ul style="text-align: left;">
<li>சம ஊதியம் பெறுவதற்கான உரிமை</li>
<li>பாலியல் சமத்துவத்திற்கான உரிமை</li>
<li>தம்பதியருக்கிடையில் சமத்துவ உரிமை</li>
<li>சுரண்டலிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமை</li>
<li>கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை</li>
</ul>
<div>
<b>குழந்தைகள், இளங்குற்றவாளிகளுக்கான உரிமைகள்</b></div>
<div>
<br /></div>
<div>
<ul style="text-align: left;">
<li>கல்விப் பெறுவதற்கான உரிமை</li>
<li>தொழிற்பயிற்சி மற்றும் வேலையிடைப் பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமை</li>
<li>கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புனர்வாழ்வுப் பெற உரிமை</li>
<li>மரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை</li>
<li>சித்திரவதை, சுரண்டல், கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை</li>
<li>வேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமை</li>
<li>விளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புப் பெறும் உரிமை</li>
<li>சமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமை</li>
</ul>
<div>
<b>சிறைக்கைதிகளின் உரிமைகள்</b></div>
</div>
<div>
<br /></div>
<div style="text-align: left;">
<ul style="text-align: left;">
<li>சிறைக்கைதியாகப் பதிவு செய்யபடுவதற்கான உரிமை</li>
<li>சிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமை</li>
<li>சிறையில் தனியாகத் தங்கவைக்கப்படுவதற்கான உரிமை</li>
<li>போதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத் தேவையான வசதிகளுக்கான உரிமை</li>
<li>துணிமணிகள், படுக்கை, போதிய உணவு, தண்ணீர், மருத்துவ வசதி பெற உரிமை</li>
<li>பயிற்சி, விளையாட்டுக்கான உரிமை</li>
<li>கொடூரமான, கேவலமான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை</li>
<li>அதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கான உரிமை</li>
<li>குடும்பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதத் தொடர்பு, நேர்காணல் மூலம்)</li>
<li>வெளியுலகச் செய்திகளை தொடர்ந்து பெறுவதற்கான உரிமை</li>
<li>சிறைச்சாலையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை</li>
<li>மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை</li>
<li>சொந்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவதற்கான உரிமை</li>
<li>பெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை</li>
</ul>
<div>
<a href="http://olaichuvadi.blogspot.com/2008/03/blog-post_7556.html" target="_blank">மனித உரிமைகள் என்றால் என்ன?</a></div>
</div>
</div>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-1015081086189488972013-09-11T10:08:00.000+08:002013-09-11T10:18:25.247+08:00கொஞ்சம் விவேகத்தைக் கையாளுங்கள் - இண்ட்ராஃப் நினைவுறுத்தல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-hW-ZydMbx3w/Ui_QKMvaLDI/AAAAAAAAF9U/PtDAT8kscKY/s1600/images.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-hW-ZydMbx3w/Ui_QKMvaLDI/AAAAAAAAF9U/PtDAT8kscKY/s320/images.jpg" /></a></div>
மேலும் பல ஆலயங்களை தகர்ப்பதன்வழி இந்து ஆலயங்களின் பிரச்சனைகளை கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தீர்த்துவிடப்போவதில்லை.
தலைநகர் ஜாலான் பி.ரம்லியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலய விவகாரத்தை கவனமாகவும் விவேகமாகவும் கையாள வேண்டியுள்ளது. இல்லையென்றால் அது தெங்கு அட்னானை மட்டுமல்லாது அவரின் முதலாளியான பிரதமர் நஜீப் துன் ரசாக்கையும் வெகுவாக பாதித்துவிடும்.<br />
<br />
இன்று இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு கடந்தகாலங்களில் வகுக்கபட்ட தவறான கொள்கைகளே காரணம் என்பதனை பிரதமரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி அவர் சுட்டிக்காட்டிய தவறான கொள்கைகளில் ஒன்று இந்து ஆலய விவகாரங்கள் குறித்த கவனமான புரிதல் இல்லாததாகும். ஓர் ஆலத்தை உடைக்கும்பொழுது அங்குள்ள கற்கள், சுண்ணாம்பு மற்றும் சிலைகளை மட்டும் நீங்கள் அகற்றவில்லை, மாறாக நாட்டிலுள்ள பல லட்சம் சாதாரண மக்களின் அடிமனங்களையும் நீங்கள் துளைக்கிறீர்கள்.<br />
<br />
2008-ஆம் ஆண்டுவரை எண்ணிலடங்கா இந்து ஆலயங்கள் உடைப்பட்டதன்வழி இந்திய சமூகத்தின் ஆதரவு வெகுமளவில் சரியத் தொடங்கியது. 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு பாரிசான் நேசனல் நல்ல பாடத்தையும் கற்றுக் கொண்டது.
அதே சாதாரண இந்தியனின் வாக்குதான் பாரிசான் நேசனல் 2013-ஆம் ஆண்டு புத்ரா ஜெயாவை கைப்பற்ற உதவியும் புரிந்தது. ஆனால் அவையனைத்தும் இன்று மறக்கடிக்கப்பட்டுவிட்டது.<br />
<br />
ஆனால் ஏன் இந்து ஆலயங்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது? ஏன் தேவாலயத்திறோ, மசூதிக்கோ, சீனர் கோயிலுக்கோ இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதில்லை என ஆராயும்போது பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாததே அதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.<br />
<br />
இந்த காரணங்களினால்தான் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் திரு.வேதமூர்த்தியும் அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றார்.<br />
இப்பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து வைத்திருக்கும் திரு.வேதமூர்த்தி, அதற்கான சிறந்த தீர்வுகளையும் அறிந்து வைத்திருக்கிறார்.
எனவே பதவியில் இருக்கும் அவரை கடமையாற்ற வழிவிடவேண்டும்.<br />
<br />
அதைவிடுத்து, பல்வேறு பிரச்சனைகள் முறையாகக் கவனிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் கூட்டுப் பொறுப்பு என்ற பெயரில் அவரை வாய்மூடி இருக்கச் சொல்வது நியாயமில்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-LETItrWgyuU/Ui_RwbrzZVI/AAAAAAAAF9k/dA2vR9uJSVw/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-LETItrWgyuU/Ui_RwbrzZVI/AAAAAAAAF9k/dA2vR9uJSVw/s1600/download.jpg" /></a></div>
<br />
<br />
2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு ஹிண்ட்ராஃப் உடனான கையெழுத்து உடன்படிக்கையின்படி தெங்கு அட்னான் இந்தியர்களுக்கான சிறப்புக் குழுவின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தி நாட்டில் உள்ள இந்து ஆலய மற்றும் இடுகாட்டுப் பிரச்சனைகளை கவனிக்க ஆவண செய்ய வேண்டும்.<br />
<br />
ஹிண்ட்ராஃப் செயல்திட்டத்தில் கையெழுத்திட்ட தெங்கு அட்னான் அதன் உள்ளடக்கங்கள் என்னவென்று குறைந்தபட்சம் படித்தாவது தெரிந்திருப்பார்.
இருப்பினும், ஹிண்ட்ராஃப் செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டுமொருமுறை நினைவுறுத்துகிறேன்.<br />
<br />
1.4 - இடப்பெயர்வுக்கு ஆளான இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வழிப்பாட்டுத் தளங்களும் இடுகாடுகளும்<br />
<br />
இடப்பெயர்வுக்கு ஆளான இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் இடுகாடுகள் எதிர்நோக்கும் சவால்களை களையும் சிறப்புத் திட்டங்கள் :<br />
<br />
1. முதன்மைக் குழுவின் கீழ் ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டு ESC-யின் மேற்பார்வையில் நாட்டிலுள்ள இந்து வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் இடுகாடுகள் அனைத்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அதன்பின் விவரமான பரிந்துரைகளின்படி அவை எதிர்நோக்கும் பிரச்சனைகளை களைய ஆவண செய்ய வேண்டும்.
<br />
<br />
2. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் யாதெனில், 2018-ஆம் ஆண்டிற்குள் எந்தவொரு இந்து வழிப்பாட்டுத் தளமும் இடுகாடும் சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் மட்டுமே அமைந்திருப்பதை உறுதி செய்வதாகும்.<br />
<br />
<b>அமைதி கொள்ளுங்கள்</b><br />
<br />
தெங்கு அட்னான் அவர்களே, இப்பிரச்சனைகளுக்கான தீர்வு நீங்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கையிலேயே உள்ளது. எனவே அரசாங்கத்திடம் உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி இப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி செயல்படுங்கள்.
திரு.வேதமூர்த்தியை பணியில் அமர்த்துங்கள். அவர் அரசாங்கத்தில் இணைந்ததே இத்தகைய காரணங்களினால்தான்.<br />
<br />
மீண்டும் ஒருமுறை ஹிண்ட்ராஃப் - பாரிசான் நேசனல் உடனான உடன்படிக்கையின் ஒரு சரத்தை உங்களுக்கு நினைவுறுத்துகிறேன்.<br />
<br />
பிரிவு 3 : ஐந்தாண்டுகால செயல்திட்ட பரிந்துரைகளை செயல்படுத்தும் கட்டுமானம்.
”பிரதமர் துறையின் கீழ் ஒரு பிரத்தியேக குழு அமைக்கபட்டு, போதுமான நிதி ஒதுக்கிடுகளை வழங்கி அதனை முறையாகவும் விவேகமாகவும் செயல்திட்டங்களுக்காகப் பயன்படுத்த முழு அதிகாரம் வழங்கப்படும்.”<br />
<br />
“இந்த சிறப்புக் குழுவானது செயல்திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முழு பொறுப்பினையும் ஏற்று கண்காணிப்பாளாரகவும் மேற்பார்வையாளராகவும் இருந்து சம்பந்தபட்ட அரசாங்கத்தின் துறைகளின் வழி செயல்திட்டம் செயல்படுவதை உறுதி செய்யும்.”<br />
<br />
எனவே, தெங்கு அட்னான் அவர்களே, இந்து வழிப்பாட்டுத் தளங்களினால் உங்களுக்கு பிரச்சனை எழக்கூடாது என்று கருதினீர்கள் என்றால், இப்போது நீங்கள் கையாளும் முறையைக் கைவிடுங்கள். அமைதி பெறுங்கள். சற்று விவேகத்தைப் பயன்படுத்தி சரியான முறையைக் கையாளுங்கள்.<br />
<br />
இனியும் இந்நாடு இதுபோன்ற உணர்வுகளை மதிக்காத சம்பவங்களை தாங்கிக் கொள்ளாது.<br />
<br />
நா.கணேசன்<br />
ஹிண்ட்ராஃப் ஆலோசகர்</div>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-9919327851483479832013-03-02T02:51:00.002+08:002013-03-02T02:51:53.418+08:00நலிந்துவரும் தமிழர் இசைக் கலை<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/atUaOUaLsX0" frameborder="0" allowfullscreen></iframe>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-40689738835703424372013-03-02T02:50:00.003+08:002013-03-02T02:50:34.914+08:00முக்கியப் புள்ளிகளின் தலைகளின் மீது கைவத்த திரு.குணாளம்.<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/Qa0Nl-3EmBE" frameborder="0" allowfullscreen></iframe><div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-68122838084548225802013-03-02T02:49:00.000+08:002013-03-02T02:49:03.186+08:00பாரம்பரிய ‘சொங்கொக்’ தொப்பி தயாரிப்பாளர்<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/Xj_zVe9h9d0" frameborder="0" allowfullscreen></iframe><div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-36188144770153946832013-02-23T14:12:00.000+08:002013-02-23T14:12:34.841+08:00கதிஜாவிற்கு உதவுங்கள்!<iframe width="430" height="315" src="http://www.youtube.com/embed/jxg5CkXMYEs" frameborder="0" allowfullscreen></iframe><div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-84149204921479824572013-02-23T14:10:00.001+08:002013-02-23T14:12:56.349+08:00மகிழ்ச்சியான கால்கள் - தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு புதிய காலணிகள்<iframe width="430" height="315" src="http://www.youtube.com/embed/zVML-DNYQxk" frameborder="0" allowfullscreen></iframe><div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-37186433277229293052013-02-23T14:09:00.000+08:002013-02-23T14:13:44.697+08:00பினாங்கு வாடகை வண்டி ஓட்டுநர் எதிர்நோக்கும் சவால்கள்.<iframe width="430" height="315" src="http://www.youtube.com/embed/bt1iar0BQYY" frameborder="0" allowfullscreen></iframe><div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-62532789080338863472013-02-23T14:07:00.001+08:002013-02-23T14:14:40.914+08:00இருநூறு வெள்ளிக்காகவா இந்த அமளி துமளி?
<iframe width="430" height="315" src="http://www.youtube.com/embed/Riq2Owlkskc" frameborder="0" allowfullscreen></iframe><div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-63265028394271038712013-02-15T20:44:00.000+08:002013-02-15T20:44:12.317+08:00தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மையை குலைக்கும் மலேசியக் கல்விப் பெருந்திட்டம்!கடந்தாண்டு கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025, தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மையை குலைக்ககூடியது என தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் திரு.க.ஆறுமுகம் அண்மையில் மக்கள் நிருபர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார். இதோ அப்பேட்டியின் காணொளி :
<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/UOgBLmdj22g" frameborder="0" allowfullscreen></iframe>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-79269828819513621122013-02-07T16:30:00.000+08:002013-02-08T08:23:57.293+08:00வீதியில் படுத்துறங்கும் தூதர்பினாங்கு மாநிலத்தை பொருத்தமட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு பினாங்கை அறிமுகப்படுத்தும் தூதர்களாக இந்த முச்சக்கர சைக்கிளை ஓட்டிவருபவர்கள் திகழ்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு ஒதுங்குவதற்க்குக் கூட ஒரு கூரை இல்லாதது மனதிற்கு வேதனையளிக்கும் ஒரு விடயமாகும். திரு.முனியாண்டி (வயது 64) கடந்த 42 வருடங்களாக முச்சக்கர சைக்கிளை ஓட்டி வருகிறார். அவர் மக்கள் நிருபருக்கு அளித்த பேட்டி இதோ..
<iframe width="430" height="315" src="http://www.youtube.com/embed/e-lBUlI8dkw" frameborder="0" allowfullscreen></iframe><div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-47015219061249900942013-02-04T15:53:00.001+08:002013-02-07T16:17:51.757+08:00முருகனுக்கு காவடியேந்தும் ஆஸ்த்ரேலியர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வருடந்தோரும் தைப்பூசத்தன்று பத்து மலையில் காவடியெடுக்கும் ஆஸ்த்ரேலியரான முனைவர் கார்ல் வடிவேலா பெல் உடனான ஒரு நேர்க்காணல்.<br />
<br />
.
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/omBaDQhv80U" width="400"></iframe></div>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-3403490147438220932013-01-30T11:03:00.000+08:002013-01-30T11:03:04.597+08:00காணொளி - விஸ்வரூப திரைப்பட தடை குறித்து மலேசியத் தமிழர்கள் அதிருப்தி! <iframe width="400" height="315" src="http://www.youtube.com/embed/YZ5EoBpk4Ws" frameborder="0" allowfullscreen></iframe>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-69802129941444089852013-01-29T16:32:00.001+08:002013-01-29T16:35:30.998+08:00பினாங்கில் இடைநிலைத் தமிழ்ப் பள்ளி அமைக்கக்கோரி கையெழுத்து வேட்டை<iframe width="400" height="315" src="http://www.youtube.com/embed/PHIVtcavwcY" frameborder="0" allowfullscreen></iframe>
<br />
<br />
பினாங்கு இந்து சங்கத்தின் அறிக்கை
தொடக்கத் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து இடைநிலைப்பள்ளிகளுக்குப் போகும் தமிழ் மாணவர்கள் தமிழைத் தொடர்ந்து படிப்பதற்குப் பலவகையில் தடைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை :-<br />
<br />
1. எல்லா இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ் வகுப்புகள் நடைப்பெறுவதில்லை.<br />
<br />
2. ஒரு சில பள்ளிகளில் தான் வகுப்பு நேரத்திலேயே தமிழ் பாடங்கள் போதிக்கப்படுகின்றன.<br />
<br />
3. அப்படியே நடைப்பெற்றாலும் ஏனோ தானோ என்றுதான் நடைபெறுகிறது.
<br />
<br />
4. POL வகுப்புகள் மார்ச் மாதத்திற்குப் பிறகுதான் நடத்தப்படுகின்றன. மூன்று மாத காலம் நேர விரையம் செய்யப்படுகிறது.<br />
<br />
5. ஒரு சில இடைநிலைப்பள்ளிகள் தமிழ் மாணவர்கள் தமிழ் மொழிப் பாடம் PMR/SPM தேர்வில் எடுப்பதை ஆதரிப்பதில்லை.<br />
<br />
6. SPM இலக்கிய பாடம் பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படுவதில்லை. அதனால் இலக்கிய பாடம் எடுக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.<br />
<br />
7. SPM தேர்வில் 10 + 2 தமிழ் இலக்கணம் மற்றும் தமிழ் இலக்கியம் சேர்ந்து 12 பாடம் எடுத்தாலும் JPA உபகாரக் கல்வி நிதிக்கு தமிழ் பாடத்திற்கு அங்கீகாரம் தரப்படுவதில்லை.<br />
<br />
இவை யாவையும் கருத்தில் கொண்டு தமிழை மேம்படுத்தும் பொருட்டும் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் பினாங்கு மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமையுமானால் ஆர்வமுள்ள மாணவர்கள் இதைப் பயன்படுத்தி இடைநிலைத் தமிழ்க் கல்வியைத் தொடர பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே மத்திய அரசு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டுமாய் பொதுமக்களும் அரசு சாரா இயக்கங்களும் கேட்டுக் கொள்கிறோம். இதை பினாங்கு இந்து சங்க முழுமனதோடு முன்மொழிகிறது.<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-12545340818683084852013-01-11T00:58:00.003+08:002013-01-11T01:41:49.147+08:00ஆஸ்கார் விருதிற்காக முதன்முறையாக தமிழ்ப்பாடல் தேர்வு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அண்மையில் உலகெங்கிலும் வெளியீடு கண்டு மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்ற ’லைஃப் ஒப் பாய்’ எனும் திரைப்படம் 2013-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுப் பட்டியலில் 11 வித பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ளது.
<br />
<br />
சிறந்த இயக்குனர்<br />
<br />
சிறந்த திரைப்படம்<br />
<br />
சிறந்த திரைப்படவியல்<br />
<br />
சிறந்த திரைப்பட ஒளிப்பதிவு<br />
<br />
சிறந்த அசல் இசை<br />
<br />
சிறந்த அசல் திரைப்பாடல்<br />
<br />
சிறந்த உற்பத்தி வடிவமைப்பு<br />
<br />
சிறந்த திரைப்பட ஒலிப்பதிவு<br />
<br />
சிறந்த ஒலிகலப்பு<br />
<br />
சிறந்த திரைப்பட காட்சி வடிவமைப்பு<br />
<br />
சிறந்த ’தழுவல் செய்யப்பட்ட’ திரைக்கதை<br />
<br />
இதில் சிறந்த அசல் திரைப்பாடலுக்காக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதிப் பாடிய ‘கண்ணே கண்மணியே’ எனும் தமிழர்களின் தாலாட்டுப் பாடல் ஆஸ்கார் விருதிற்காக முன்மொழியப்பட்டுள்ளது. இதன்வழி ஆஸ்கார் விருதிற்காக முன்மொழியப்பட்ட முதல் தமிழ்ப்பாடல் எனும் பெருமையை பாம்பே ஜெயஸ்ரீ தமிழர்களுக்காகப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதே சமயம் சிறந்த அசல் இசைக்காகவும் இப்பாடல் முன்மொழியப்பட்டுள்ளது. இப்பாடல் ஆஸ்கார் விருதினைப் பெற வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம்.
மைக்கல் டானா இசையமைப்பில் பாம்பே ஜெயஸ்ரீயின் மயங்க வைக்கும் குரலில் இதோ தமிழர்களின் தாலாட்டுப் பாடல்.
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/8vbxdqCi_AQ" width="400"></iframe>
</div>
<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5718446130107677712.post-52175517190807009862012-10-29T03:39:00.000+08:002012-10-29T03:39:40.123+08:00கோரப்படாத இறந்த உடல்களுக்கு இறுதிக் காரியம் - பினாங்கு இந்து சங்கத்தின் அளப்பரிய தொண்டுகடந்த 27 ஆண்டுகளாக பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களில் கோரப்படாத இறந்த உடல்களை எடுத்து அடக்கம் மற்றும் எரிக்கும் சேவையை மேற்கொண்டு வருகின்றனர் பினாங்கு இந்து சங்கத்தினர். அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்காத பட்சத்தில், பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டே இச்சேவையை அவர்கள் செய்துவருகின்றனர். இதுவரையில் 500 இறந்த உடல்களுக்கு இறுதிக் காரியங்களைச் செய்துள்ளனர். கோரப்படாத உடல்களைத் தவிர்த்து, இறுதிக் காரியங்களைச் செய்விக்க இயலாத ஏழைக் குடும்பங்களுக்கும் இவர்களின் உதவி கிட்டியுள்ளது. அண்மையில் இவர்களின் சேவையைக் கண்டு பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன். அதன் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு.
<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/k-KlmOitqL8" frameborder="0" allowfullscreen></iframe>
இதுபோன்ற தன்னலமில்லாத சமூகச் சேவைகளைக்கு பொதுமக்களாகிய நாம்தான் உதவிக் கரம் நீட்ட வேண்டும். பினாங்கு இந்து சங்க செயல்பாடுகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி புரிய எண்ணம் கொண்டால், அவ்வியக்கத்தின் துணைத் தலைவரை அலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம். திரு.முருகையா 016-4449246<div class="blogger-post-footer">செய்தியோடை</div>Sathis Kumarhttp://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com0