பந்திங் இளைஞர்கள் தைரியத்தின் அடையாளங்கள் எனக் கூறலாம். இந்து உரிமைப் பணிப்படை நடத்திய கூட்டத்தில் காவல்துறையினரும், கலகத்தடுப்புக்காரர்களும் தொந்தரவுக்கொடுக்க முனைந்தனர். காலணிகளோடு ஆலயத்திற்குள் புகுந்த அவர்களை நம் பந்திங் இளைஞர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தடுத்து அவர்களை வெளியேற்றினர். உண்மையில் பாரட்டப்பட வேண்டியவர்கள் இவர்கள்.
இவர்களைப்போல் நம் நாட்டில் "நான் தான் இங்கு மண்டை! நான் தான் இங்கு குண்டர்க்கும்பல் தலைவன்" என யாரவது மார்தட்டிக் கொண்டால், தைரியமாக வரச்சொல்லுங்கள். நம்முடைய இந்து ஆலயங்கள் உடைப்படும்பொழுது வந்து தற்காத்து நிற்கச் சொல்லுங்கள்.. அது தைரியம் எனக் கூறலாம். நமக்குள் வெட்டிக் கொண்டு உயிரைவிடுவதை விட இது போன்ற நல்லக் காரியங்களுக்காக அவர்களின் சக்திகள் பயன்படலாம் அல்லவா?
பந்திங் பொதுக்கூட்ட படக்காட்சிகள் கீழே :
தொடர்ச்சி...
தொடர்ச்சி...
போராட்டம் தொடரும்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..