உங்களுக்காக சில மென் புத்தகங்கள் பதிவிறக்கம் இங்கே :
குரு பெயர்ச்சிப் பலன்கள் : பதிவிறக்கம்
மழலையர்களுக்கான கதைகள் : பதிவிறக்கம்
தந்தை பெரியார் சொந்தமாக எழுதிய சுயசரிதை : பதிவிறக்கம்
படித்துப் பயன்பெறுங்கள்...
இந்து உரிமைப் பணிப்படையின் ஊழியனாக இருந்துக் கொண்டு ஏன் நான் பெரியாரின் சுயசரிதத்தை வெளியிட வேண்டும்? எப்பொழுதுமே நாம் ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதோ, அல்லது கண்டனத்திற்கு ஆட்படுத்த முயலும்போது, அது தொடர்பான தகவல்கள் நமக்கு அக்கு வேரு ஆணி வேரு எனத் தெரிந்திருப்பது மிகவும் அவசியமானது. முறையான தகவல்கள் நம் விரல் நுனியில் இருப்பின் நாம் எந்த ஒரு சித்தாந்தத்தையும் ஒட்டியோ அல்லது வெட்டியோ பேசலாம். இந்து மதத்தையும், கடவுள் மறுப்புக் கொள்கைப் பற்றியும் நாம் பேசும்பொழுது நமக்கு அதன் கருத்துக்கள் முதலில் தெரிந்தாக வேண்டும். ஒரு அரசியல்வாதி இன்னொரு எதிர்க்கட்ட்சியினரைப் பற்றி குறைக் கூறும்பொழுது, முதலில் அக்கட்சித் தொடர்பாக இவருக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரால் எதிர்க்கட்சியினரின் சித்தாந்தங்களை மறுத்து பேசக் கூடிய தகுதி அடைகிறார். எனவே, நாம் வெறுக்கும் சில சித்தாந்தங்களையும் படித்துக் கொள்வது நம்முடைய எண்ணங்களை மாற்றுவதற்கு அல்ல, எண்ணங்களை வளுப்படுதுவதற்கு. இருப்பினும் பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவராக இருந்தாலும், சமுதாயத்தில் சில ஆக்கப்பூர்வமான செயல்களையும் செய்திருக்கிறார். விதவைத் திருமணம், ஜாதி ஒழிப்பு என இன்னும் பல. நாம் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம். நமக்கு ஒவ்வாததை புறந்தலாமல் வெட்டி பேசுவதற்கு நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என அவற்றை நாம் சேகரித்துக் கொள்வோம். அடுத்த முறை எனக்கு 'கணிக வாக்கியம்'அல்லது Machiavelli-யின் 'The Prince' மென் புத்தகங்கள் கிடைத்தால் அதையும் படியுங்கள். அடுத்தவரை அழிப்பது எப்படி என்கிற புத்தகம் அது... அரசியல்வாதிகளுக்கு பிடித்த புத்தகம்... அதற்காக அடுத்தவரை அழிக்க நினைப்பது நம் நோக்கம் அல்ல. அழிவிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..