மலாக்காவில் இந்து உரிமைப் பணிப்படையின் கருத்தரங்கு..
கடந்த ஜனவரி 18-ஆம் திகதியன்று வெள்ளிக்கிழமை மலாக்காவில், லக்சாமானா செங் கோ சாலையில் அமைந்துள்ள ஏங் ஆன் சீனர் மண்டபத்தில் இரவு 7 மணி அளவில் இந்து உரிமைப் பணிப்படையின் கருத்தரங்கு நடைப்பெற்றது. இக்கருத்தரங்கில் உரைகளை வழங்க வழக்கறிஞர்கள் திரு.சிவநேசன், திரு.குலசேகரன் மற்றும் திரு.கோபிந் சிங் ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். பொதுமக்கள் சுமார் 900 பேர்கள் கலந்துக் கொண்டு இக்கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.
இக்கருத்தரங்கை மலாக்காவில் உள்ள நண்பர் கலையரசு தனது ஒளிபடக் கருவியினால் பதிவு செய்து எமக்கு அனுப்பினார். அப்படக்காட்சியை ஒலிவடிவமாக மாற்றி இதோ உங்களுக்காக..
*ஒளிப்படக்காட்சியில் சிறு கோளாறுகள் இருப்பின் மன்னிக்கவும்...
நிகழ்வின் வரவேற்புக் காட்சி
வழக்கறிஞர்கள் கோபிந்த் சிங், குலசேகரன் மற்றும் சிவநேசனின் உரைகள்
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..