Monday, January 11, 2010

மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் நடைப்பெறாது - இண்ட்ராஃப்


சமய விடயங்களில் அம்னோ அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினைக் கண்டிக்கும்வகையிலும், கிருத்துவ நண்பர்களின் நம்பிக்கைகளை மதிக்காது அவர்கள்மீது இழைக்கப்பட்டிருக்கும் அரசியல் நோக்கங்கொண்ட வன்முறை தாக்குதல்களைக் நிறுத்தக் கோரியும் இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இருப்பினும், கிருத்துவ சமயத் தலைவர்களும் மற்றும் கிருத்துவ சமயத்தவர் சிலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க பெட்டாலிங் செயா அசம்சன்ஸ் கிருத்துவ தேவாலயத்தின் நுழைவாயிலில் எதிர்வரும் 13 சனவரியன்று நடைப்பெறவிருந்த அமைதி மறியல் கைவிடப்படுகிறது.

இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துவரும் மலேசிய கிருத்துவ சமயத்தவர்கள் மற்றும் அதன் தலைவர்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியலைக் கைவிடுகிறது என அறிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

பொ.வேதமூர்த்தி
இண்ட்ராஃப் தலைவர்

2 comments:

  1. பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. இன‌ம், ச‌ம‌ய‌ம்,ம‌தம் பேத‌ங்க‌ளை க‌ட‌ந்து த‌மிழ் பேசும் அனைவ‌ரும் ஒன்றினைந்து த‌மிழ‌ர் திருநாளை த‌மிழ்ப் புத்தாண்டை வ‌ர‌வேற்றுக் கொண்டாடிடுவோம்.

    ReplyDelete

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..