Thursday, February 10, 2011

கில்லிங் பன்றி ! இந்திய மாணவர்களுக்கு எதிரான மனோவியல் வன்முறை!

அன்புசார் உறவுகளே, இந்தப் படக்காட்சியை பாருங்கள்! அந்த வெகுளி இந்திய மாணவனின் மூளைக்குள் இனவாத நஞ்சுகள் விரும்பாலேயே காய்ச்சி ஊற்றப்படுகின்றன. அவன் முகத்தில் ஏற்படும் ஒருவிதமான அவமான முத்திரையை நாமும் ஒருகாலத்தில் தாங்கியிருக்கிறோம் என்பது உங்கள் நினைவுக்கு வருகிறதா? அந்த மாணவனின் முகம் உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாலிப முகம் என்பதனை மட்டும் மறந்துவிடாதீர்கள் உறவுகளே!

’இண்டர்லோக்’ எனும் மனோவியல் போர் தனது உக்கிரத்தை இந்திய சமூகம் மீது கடுமையாக்குவதற்குள் ஒரே மலேசிய இந்தியன் எனும் உணர்வோடு விழித்தெழுவோம்!

நம்மை இந்நாட்டின் அவமானச் சின்னங்களாக கருதி நடத்திவரும் அம்னோவின் ’மலாய் மேலாண்மை’ எனும் விஷமத்தன கோட்பாட்டினை வேரறுப்போம், வாரீர்!

27 பிப்ரவரி, நம் இனத்தின் மற்றுமொரு விடிவெள்ளி! அம்னோ இனவாதத்திற்கோர் மரணவெடி!

http://www.youtube.com/watch?v=YVUsoPayw7w



போராட்டம் தொடரும்...

No comments:

Post a Comment

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..