Wednesday, June 29, 2011

பினாங்கில் அம்னோ, பெர்காசா குண்டர் கும்பலின் அராஜகம்!

நேற்று இரவு 9.00 மணிக்கு பினாங்கு இண்ட்ராஃப் மக்கள் சக்திக்கு சோசலிச கட்சியிடமிருந்து ஓர் அவசர அழைப்பு வந்தது. அம்னோ மற்றும் பெர்காசா குண்டர் கும்பல் காவல் நிலையத்தின் வெளியே திரண்டிருக்கும் 40 சோசலிச கட்சியினருக்கும் கைதானவர்களின் குடும்பத்தினருக்கும் மருட்டல் விடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அச்சமயம் பிறை அலுவலகத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த இண்ட்ராஃபின் வாராந்திர சந்திப்புக் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு அனைவரும் கெப்பாலா பாதாசை நோக்கி விரைந்தோம்.

சுமார் 200க்கும் மேற்பட்ட அம்னோ மற்றும் பெர்காசா குண்டர்கள் காவல் நிலையத்தின் முன்பு கூச்சலிட்டுக் கொண்டு சாலையை வழிமறித்துத் திரண்டிருந்தனர். காவல்த்துறையினரோ வயதானவர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்காது நடப்பதைக் கண்டும்காணாதது போல் நின்றுகொண்டிருந்தனர்.

அன்று நடைப்பெற்ற அப்பரபரப்பான சம்பவத்தின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

1 comment:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..