நாடோடிகள் கலைக்குழுவின் தயாரிப்பில் வெளிவந்துள்ள சயாம் - பர்மா மரண ரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) எனும் ஆவணப்படம் எதிர்வரும் 25-ஆம் தேதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமையன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பினாங்கு ரெக்சம் சீமியோ மண்டபத்தில் திரைக்காணவுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து இத்திரையிடல் நிகழ்ச்சியை சிறப்பித்து பயன்பெறுமாறு விழைகிறோம். இந்நிகழ்ச்சிக்கான நுழைவு முற்றிலும் இலவசம்.
நிகழ்ச்சி நிரல் :-
மாலை
5.30 : தேநீர் விருந்துபசரிப்பு
5.50 : நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் உரை
6.00 : கவிதைப் படைப்பு
6.05 : திரு.ராஜ்சங்கர் உரை (ஆவணப்பட இணை இயக்குநர்)
6.10 : ‘சயாம் - பர்மா மரண ரயில் பாதை’ ஆவணப்படம் திரையிடல்
இரவு
7.15 : கேள்வி & பதில் அங்கம்
7.45 : முடிவுரை / நிகழ்ச்சி நிறைவடைதல்
(நிகழ்ச்சி நிரல் ஏற்பாட்டாளரின் வசதிக்கேற்ப மாற்றம் காணலாம்)
இவ்வாவணப்படம் குறித்த சில தகவல்களுக்கு கீழ்கண்ட வலைத்தள தொடுப்பினை சுட்டவும் : http://www.jeyamohan.in/68380#.VRjFpPmUd8E
முகநூலின் வழி உங்களின் வருகையை உறுதி செய்ய இத்தொடுப்பைச் சுட்டவும் : https://www.facebook.com/events/635218089954878/
மேலதிக தகவல்களுக்கு : திரு.கனகசுந்தரம் / 017-4155449

No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..