தைப்பிங்கில் மாலை வேளையில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால், திட்டமிடப்படி மெழுகுவர்த்தியை ஏந்த முடியாமல் போனது. இருப்பினும் மக்கள் அமைதியான முறையில் தலைவரை சென்று சந்தித்தார்கள். தலைவர் உதயகுமார் C4 எனும் சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருந்தார். அவ்வறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படாததால், அனைவரும் அறையின் வெளியே நின்றுக் கொண்டு கண்ணாடி வழியாக தலைவரை தரிசித்தோம். பலர் வாங்கி வந்த மலர்ச் செண்டுகளை அதிகாரிகள் அறையினுள் கொண்டுச் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே பூச்செண்டுகளை அறையின் வெளியே வைத்துவிட்டார்கள். ஆரம்பத்தில் சிகிச்சை அறையின் வெளியே நின்றுக் கொண்டிருந்த சிறை அதிகாரிகள் எங்களை புகைப்படம் எடுக்கவிடவில்லை. இருப்பினும் நாங்கள் அனைவரும் அவர்களைத் தாஜா செய்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.
முகத்தில் தாடியுடனும், கையில் விலங்குடனும், உடல் இளைத்தும் தலைவர் உதயகுமார் காணப்படார். இருப்பினும் அவரைப் பார்க்கச் சென்ற எங்களிடம் புன்னகையுடன் கையசத்து உற்சாக மூட்டினார். இவரைப் பார்த்த பொழுது 'மலேசியா காந்தி' என பெயர் சூட்டலாம் என நினைத்தேன்.. அதற்குக் காரணம் அவரின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, துணிவு, தெளிவு, சத்தியத்திற்காக போராடும் குணம் போன்றவை காந்தியடிகளை நினைவுப்படுத்தின..
இதோ, மகா தலைவர் திரு.உதயகுமாரின் திருவுருவம்...
ஒளிப்படக்காட்சி...
எங்களுக்கு மிகவும் மனவேதனை அளித்த காட்சி, தலைவர் உதயகுமாரின் ஒரு கையில் விலங்கு போடப்பட்டிருந்தக் காட்சிதான்.. என்ன சட்டமோ தெரியவில்லை..! இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்..
இரவு மணி 7.30க்கு வருகைப் புரியும் நேரம் முடிவடைந்து விட்டதால் தலைவரை விட்டு பிரியாத மனதோடு பிரிந்தோம்..
நாளையும் தலைவரை சந்திக்கலாம்... தலைவர் உதயகுமார் தைப்பிங் மருத்துவமனையில் இருப்பது இபொழுதுதான் பலப் பேர்களுக்கு தெரிய வந்துள்ளது.. நாளை இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.. நாடு முழுவதிலுமுள்ள பல இந்து ஆலயங்களில் தலைவர் குணமடைய வேண்டி பல சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப் படுகின்றன..
தைப்பிங் மருத்துவமனையின் முகவரி : Hospital Taiping. Jalan Taming Sari. 34000 Taiping Perak D.R.
மருத்துவமனையின் தொலைப்பேசி எண் : 05-8083333
போராட்டம் தொடரும்...
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..