
கடந்த மூன்று நாட்களாக உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வழக்கறிஞர் திரு.உதயகுமார் அவர்கள் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று தைப்பிங் மருத்துவமனையில் மாலை 6.30 மணியளவில் சேர்க்கப்பட்டார்.. அவர் கடுமையான வயிற்று வலியின் காரணமாக தைப்பிங் மருத்துவமனையில் C4 எண் கொண்ட சிகிச்சைக் கூடத்தில் ஒரு கை விலங்கிடப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவருக்கு நெஞ்சு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திரு.உதயகுமார் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பது அனைவருடைய கோரிக்கை.. தற்போது, இவரைச் சுற்றி நான்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் வைக்கப்பட்டுள்ளனர்.. நோய்வாய்ப்பட்டவர்களை இவ்வழி நடத்துவது மிகவும் கண்டிக்கத் தக்கது.
எனவே இச்செயலை கண்டிக்கும் வகையில், இன்று மக்கள் சக்தி தைப்பிங் மருத்துவமனையின் முன் ஒன்றுகூடவிருக்கின்றனர்.. பலரும் இக்கூட்டத்திற்கு வந்து மக்கள் சக்தி யாரென்பதை நிரூபிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்..
தற்போது லண்டனில் வசித்து வரும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் வழக்கறிஞர் திரு.வேதமூர்த்தி மலேசிய இந்தியர்களை தொடர்ந்து அநீதிக்கு எதிராகப் போராட கேட்டுக் கொண்டுள்ளார்..
நிகழ்வு நடைப்பெறுமிடம் : தைப்பிங் மருத்துவமனை
திகதி : இன்று 25-01-2008
நேரம் : மாலை 6.30 மணி
பொருட்கள் : மெழுகுவர்த்தி / அகல் விளக்கு / பூக்கள் , முடிந்தால் மக்கள் சக்தியின் ஆரஞ்சு நிற சட்டை அணிந்து வரவும்.. அவ்வுடை இல்லாவிடில் வேறு ஆரஞ்சு நிற உடையை அணிந்து வரவும்..
நேரமாகிவிட்டதால், நானும் தைபிங்கிற்கு இப்பொழுது செல்லவிருகின்றேன்.. அங்கு சந்திப்போம்...
மக்கள் சக்தி வாழ்க...!!
போராட்டம் தொடரும்....
No comments:
Post a Comment
தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சுட்டுங்கள்.. தங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி, மீண்டும் வருக..