பழமைகளை விரும்பும் ஜோடி

>> Monday, June 4, 2012

’ஒருவரின் குப்பை மற்றொருவருக்கு புதையலாகிறது’ என்பது எவ்வளவு உண்மை என்பதனை பிரகாஷ், புனிதா தம்பதியரைக் கண்டவுடன் தெரிந்து கொண்டேன். கடந்த ஜூன் 2-ல் பினாங்கு டத்தோ கிராமாட் எனும் இடத்தில் இவ்விருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பலமுறை அவர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாளிகைகளிலும் பார்த்திருந்தபோதிலும் நேரில் சந்தித்து அவ்விருவரும் மேற்கொண்டிருக்கும் அரிய முயற்சியினை காணும்பொழுது ஒரு பிரமிப்பு எனக்குள் ஏற்பட்டது. தமிழர்கள் மற்றும் பெரானாக்கான் இனத்தவர் பயன்படுத்திய பழமையான பொருட்களை சேகரித்துவரும் இவர்கள் இதுவரை 1,400 வகையான பழம்பொருட்களை தங்களுடைய அடுக்குமாடி வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாத்து வருகின்றனர். 200 ஆண்டுகால மலேசியத் தமிழர்களின் வரலாற்றை பரைச்சாற்றும் கண்காட்சியகம் ஒன்றினை பினாங்கில் திறக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்கால ஆசை. இவர்களின் கனவை மெய்யாக்க வேண்டியது ஒவ்வொரு மலேசியத் தமிழர்களின் கடமையல்லவா? இதோ அவர்களை நான் பேட்டிக் கண்ட காணொளி உங்களின் பார்வைக்காக...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP