சொந்த நாட்டிலேயே கள்ளக்குடியேறிகளைப்போல் வாழ்க்கை!

>> Wednesday, March 17, 2010

ஏழை இந்திய மலேசியர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சனைகளில் முதன்மையாகத் திகழ்வது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை எனும் பிரச்சனைதான். சொந்த நாட்டிலேயே சுமார் ஒரு லட்சம் இந்திய மலேசியர்கள் கள்ளக்குடியேறிகளைப் போல் வாழ்ந்து வருகிறார்கள் என புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன. நாளுக்கு நாள் இப்பிரச்சனை தொடர்ச் சங்கிலியைப்போல் நீண்டுகொண்டே செல்கிறது.

அண்மையில் இண்ட்ராஃப் தலைமையிலான பிரித்தானிய மக்களவை கருத்தரங்கு நிகழ்வில், ஒரு தமிழர் குடும்பத்தின் அவல நிலையினை திரு.நரகன் பங்கேற்பாளர்களிடம் விளக்கிக்காட்டி, ஏழை இந்திய மலேசியர்கள் எவ்வாறு ஓரங்கட்டுதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதனை நன்கு படம்பிடித்துக் காட்டியிருந்தார்.

பினாங்கில் கம்போங் பாகான் செராய், பெர்மாத்தாங் பாவோ எனுமிடத்தில் மிக வரிய நிலையில் வாழ்க்கையை ஓட்டிவரும் அக்குடும்பத்தினரின் நேர்க்காணலின் ஒரு பகுதி இதோ :-

பாகம் 1

பாகம் 2


போராட்டம் தொடரும்...

Read more...

பிரித்தானிய மக்களவையில் இண்ட்ராஃப் (காணொளி)

>> Sunday, March 14, 2010

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 4


பாகம் 5


பாகம் 6


பாகம் 7


போராட்டம் தொடரும்...

Read more...

பிரித்தானிய மக்களவையில் மலேசிய இந்தியர்கள் மற்றும் கிழக்கு மலேசிய பழங்குடியினர் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்தான இண்ட்ராஃபின் விளக்கக்கூட்டம்.

>> Wednesday, March 10, 2010

10/03/10 திகதியன்று லண்டனில் பிரித்தானிய மக்களவை உறுப்பினர் திரு.வீரேந்திர சர்மாவின் துணையோடு இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி, இண்ட்ராஃப்பின் தேசிய ஆலோசகர் திரு. என்.கணேசன் ஒரு விளக்கக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மலேசிய இந்தியர்கள் மற்றும் கிழக்கு மலேசிய பூர்வீகக் குடினருக்கு எதிராக தொடர்ச்சியாக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கூட்டத்தில் திரு.கணேசன் மற்றும் திரு.வேதமூர்த்தியால் விளக்கப்பட்டது. தொடர்ந்து அம்னோ அரசாங்கத்தின்கீழ் நிகழ்ந்துவரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து அனைத்துலக ரீதியில் அதற்கான தீர்வினை விவாதிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக இவ்விளக்ககூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.







மேலும் படங்களைக் காண்பதற்கு இந்த இணைப்பைச் சுட்டவும் : பிரித்தானிய மக்களவையில் இண்ட்ராஃப்

போராட்டம் தொடரும்...

Read more...

துவான், தவுக்கே அதிகாரத்தில் கட்டுண்டுகிடக்கும் இந்திய மண்டூர்கள் பதவி விலகட்டும்!

>> Tuesday, March 9, 2010

அங்கொன்றும் இங்கொன்றுமாக ரொட்டித் துண்டுகளைக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பக்காதான் அரசாங்கம் ஆட்சி செலுத்தும் நான்கு மாநிலங்களில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிரந்தர நிலப்பட்டா உடனடியாக கொடுக்கப்பட வேண்டும்!

தொடர்ந்து மண்டூர்களிடம் கையேந்தி நிற்கும் சூழல்கள் வேலைக்காகாது!

யாரை அதிகமாக நம்பி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட்டார்களோ, அவர்களைத்தான் நாம் வலியுறுத்திக் கேட்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

ஏன், அம்னோவைக் கேட்கவில்லை, மஇகாவைக் கேட்கவில்லை என்று கதையை திசைத்திருப்புவதை விடுத்து, முதலில் மக்கள் கூட்டணி ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களின் தேவைகளையும் உரிமைகளையும் புரிந்து கொண்டு அதற்கானத் தீர்வை கொண்டுவர வேண்டும்.

அதன் முதல்கட்டமாக, பக்காதான் ஆட்சி புரியும் நான்கு மாநிலங்களில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிரந்தர நிலப்பட்டாவை மாநில அரசுகள் எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும்.

இதோ நிலம் என்று கைக்காட்டுவது, ரொட்டித் துண்டுகளைப் போட்டுவிட்டு நாளிகைகளில் விளம்பரப்படுத்துவது, புதிய தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்று வெற்று அறிக்கை விடுவது போன்ற மக்களைக் குழப்பும் நடவடிக்கைகளில் இனியும் மக்கள் கூட்டணி அம்னோவைப்போல் செயல்படக் கூடாது.

நில விவகாரங்கள் அனைத்தும் முற்றிலும் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தமிழ்ப்பள்ளிகளின் நில விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகளோடு மக்கள் கூட்டணி அம்னோவைப்போல் இனியும் விளையாடக்கூடாது!

அடுத்த பொதுத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றியவுடன் இதற்கான தீர்வைக் காண்கிறோம் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்! அடுத்தப் பொதுத்தேர்தலில் கையில் இருக்கும் நான்கு மாநிலங்களும் உருப்படியாக நிலைத்து நிற்குமா என்று உறுதி கூறமுடியாத நிலையில், உடனடியாக 53 வருடங்களாக இந்திய மலேசியர்கள் எதிர்ப்பார்த்த தமிழ்ப்பள்ளி நில விவகாரங்கள் முழுமையாக தீர்க்கப்பட்டுவிட வேண்டும் என்பதே இந்தியர்களின் கோரிக்கை!

இதனை மக்கள் கூட்டணி தலைவர்களிடம் அமர்ந்து பேசுவதற்கு ஒரு சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு முறையான கடிதம் வழங்கிய மனித உரிமைகள் கட்சி / இண்ட்ராஃப் இயக்கத்திற்கு எந்தவொரு மறுகடிதமும் கிடைக்காத பட்சத்தில், கடந்த 7/03/2010 அன்று இண்ட்ராஃப் கெஅடிலான் தலைமையகத்தின் முன்பு அமைதி மறியலை மேற்கொண்டது. இவர்களின் முயற்சியை மேலும் களங்கப்படுத்தும்வகையில், சில மண்டூர்களை கெஅடிலான் தலைமையகத்தின் முன்பு நிறுத்தி வைத்தது கண்டிக்கத்தக்கதாகும். ஓர் இந்தியனைக் கொண்டு மற்றொரு இந்தியனை சமாதானப்படுத்துவது, மோதவிடுவது, சமரசம் பேசுவது போன்ற அம்னோ வழியை மக்கள் கூட்டணியும் கையாண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்!



போராட்டம் தொடரும்...

Read more...

மாசி மகத் திருவிழாவில் மனித உரிமைகள் கட்சியின் சேவைப் பந்தல்

>> Thursday, March 4, 2010

Read more...

இண்ட்ராஃப் குரல் - பிப்ரவரி மாத மின்னிதழ்

>> Tuesday, March 2, 2010

HINDRAF/HRP Bulletin (Tamil)

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP