மலாக்கா ரும்பியா தமிழ்ப்பள்ளிக்கு உடனடியாக நிதியுதவி தேவைப்படுகிறது!

>> Monday, May 25, 2009

மக்கள் ஓசை 24/05/09 பக்கம் 1



மக்கள் ஓசை 24/05/09 பக்கம் 13 (தொடர்ச்சி)



மலாக்கா மக்கள் ஓசை நிருபர் திரு.சரவணதீர்த்தா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இச்செய்தி இங்கு பதிவிடப்படுகிறது. மலாக்கா ரும்பியா தமிழ்ப்பள்ளிக்கு நிலம் வாங்குவதற்கு மூன்றரை லட்சம்வரை நிதியுதவித் தேவைப்படுவதாலும், அப்பணத்தை மூன்றே மாதத்திற்குள் செலுத்தி நிலத்தைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், பொதுமக்கள் தயவு செய்து தங்களால் இயன்ற நிதியை இப்பள்ளிக்கு காணிக்கையாக்குமாறு திரு.சரவணதீர்த்தா கேட்டுக்கொள்கிறார்.

நன்கொடைகளை கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.

Maybank : 504124002001

காசோலையாக இருந்தால் , Lembaga Pengurus SJK(T) Rumbia எனும் பெயரில் அனுப்பவும்.

மேலும் தகவல்களுக்கு நீங்கள் தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் :

06-3163180 / 010-2086265 , 019-6565004 / 013-6132191

Read more...

உதயாவின் உடல்நிலை..

>> Thursday, May 21, 2009






கடந்த வாரம் புதன்கிழமை, திரு.உதயகுமார் இரத்த பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு திரு.செயதாசுடன் சென்றிருக்கிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திரு.உதயகுமாரின் இரத்தத்தில் சக்கரை அளவு 10.1-ஆக இருக்கிறது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவு 7.9 ஆகும். கடந்த மூன்று மாதங்களில் திரு.உதயகுமாரின் சக்கரை அளவு சராசரி 8.1. இதன்வழி திரு.உதயகுமாருக்கு கமுந்திங் தடுப்புக் காவலில் முறையான உணவுகளும், மருந்துகளும், சிகிச்சைகளும் வழங்கப்படவில்லை என்பது புலனாகிறது.

உதயாவிற்கு வழங்கப்பட வேண்டிய மருந்துகளில் 30% குறைக்கப்பட்டிருப்பதை அறிந்து, கெம்தா அதிகாரிகளிடம் பலமுறை உதயா முறையிட்டிருந்தும் அவ்வதிகாரிகள் தொடர்ந்து அவரின் உடல்நிலையை மோசமடையச் செய்வதற்கான பல வழிகளைக் கையாண்டிருக்கின்றனர். அதனாலேயே உதயா தன் காலை இழந்துவிடும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார். உளவியல் ரீதியில் இசா கைதிகளை துன்புறுத்துவதில் பெயர்ப்போன கெம்தா அதிகாரிகள் எவ்வளவு முயன்றும் உதயாவின் திடமான மனோநிலையை அசைக்கமுடியாத காரணத்தால், அவரின் உணவில் அளவுக்கதிகமான சக்கரை சேர்த்தல், மருந்துகளை மாற்றியும் குறைத்தும் கொடுத்தல், முறையான சிகிச்சைக்கு அனுமதி வழங்காதுதல் போன்ற தண்டனைகள வழங்கியிருக்கின்றனர்.

இத்தகைய மனித உரிமை மீறல்கள் அம்னோ அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் கொள்கைகளினால் விளைந்தவையே. அக்கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியதுதான் நம்முடைய அடுத்தக்கட்ட போராட்டமாக இருக்க வேண்டும்!

Read more...

சிறீ லங்கா தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!

>> Wednesday, May 20, 2009

தமிழர்களின் எட்டப்பனான கருணா, பிரபாகரனின் உடலத்தை அடையாளம் காண்பதாக இலங்கை தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள படங்கள் சித்தரிக்கின்றன. காணொளியில் காட்டப்பட்ட பிரபாகரனைப் போன்ற தோற்றம் கொண்ட முகத்திற்கும் புகைப்படங்களில் தெரியும் முகத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் தெரிகின்றன.







இவ்விடயம் குறித்து மக்கள் தொலைக்காட்சியில் ஓர் அலசல்.

Read more...

பிரபாகரனைப்போன்ற உடல் நெகிழியால் செய்யப்பட்ட பொம்மையா?


19-ஆம் திகதி மே மாதம், பிபிசி தமிழ்ப்பிரிவின் வானொலி செய்தியான தமிழோசையில் தமிழர்களின் எட்டப்பனான கருணா பேட்டி கொடுத்திருந்தான். அவன் அளித்த பேட்டியின்வழி பிரபாகரனின் மரணம் குறித்து பல கேள்விகள் நம்முள் எழுகின்றன.

பிரபாகரன் எப்பொழுது கொலை செய்யப்பட்டார் என தமிழோசை நிருபர் வினவியபொழுது, இன்று (19/05/09) அதிகாலையில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் எனக் கூறினான். ஆனால், பிரபாகரன் 18-ஆம் திகதியன்றே கொல்லப்பட்டுவிட்டார் என ஏற்கனவே சிங்கள அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பின்பு ஏன் பிரபாகரன் 18-ஆம் திகதியன்று சுடப்பட்டு இறந்துவிட்டதாக சிங்கள அரசு அறிவித்தது என நிருபர் வினவியபொழுது, அது யூகத்தின் அடிப்படையில் அரசு வெளியிட்ட அறிக்கையாகும் எனக் கூறினான்.

பிரபாகரன் எப்படி கொல்லப்பட்டார் என நிருபர்கள் வினவியபொழுது, பிரபாகரன் தனது இரு மெய்க்காப்பாளர்களுடன் ஒளிந்திருந்த சமயம் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அவன் கூறினான்.

ஆனால், பிரபாகரனும் அவரது இரு மெய்க்காப்பாளர்களும் ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச் செல்லும்பொழுது சிங்கள இராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்தார் என சிங்கள அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இறந்த பிரபாகரனின் சடலம் என நம்பப்படும் உடலை சிங்கள அரசு என்ன செய்யவிருக்கிறது என நிருபர் கருணாவிடம் வினவியபொழுது, உடலைப் புதைத்து விடுவோம் எனக் கூறினான்.

அவ்வுடலை பொதுமக்களின் அல்லது அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திடம் காண்பித்துவிட்டு புதைப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என நிருபர் வினவியபொழுது, அது தேவையில்லாத ஒன்று எனக் கூறினான் எட்டப்பன் கருணா.

தற்சமயம் சர்ச்சையில் இருக்கும் பிரபாகரனின் மரணத்தையொட்டி, பொதுமக்களின் பார்வைக்கு அவ்வுடலை காண்பிக்க வேண்டாமா என நிருபர் வினவியபொழுது, அதைப்பற்றி பிறகுதான் யோசிக்க வேண்டும் என அவன் பதிலளித்தான்.

***

கருணாவின் மேற்கண்ட நேர்க்காணலைக் கேட்கும்பொழுது, பிரபாகரனின் மரணம் குறித்து நம்மிடையே சந்தேகம் வலுக்கிறது. முதல்நாள் வெளியிட்ட தகவல்களுக்கும் 19-ஆம் திகதி வெளியான செய்திகளுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதனை கவனியுங்கள்! ஏன் இத்தனை முரண்பாடுகள்!?

பிரபாகரனின் சடலம் எனக் காணொளி காட்சியில் கண்ட அந்த உடலானது நெகிழியால் செய்யப்பட்ட ஒரு பொம்மை என யூகிக்கப்படுகிறது. அக்காட்சியில் வலது பக்கம் திரும்பியிருந்த தலையைப் பிடித்து ஓர் இராணுவன் நேராக திருப்பும்பொழுது இரு கண்களும் ஒரேடியாக நகர்வதைக் காணலாம். (வினாடி 0:09)

ஒருவர் இறந்த பின்பும் கண்களிரண்டும் அகல திறந்திப்பது என்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. படக்காட்சியை உற்று நோக்கினால் அவ்வுடலின் வலது கை யாரும் தூக்காமலேயே தூக்கிக் கொண்டுருப்பதைக் காணலாம். டிஸ்கவரியில் "Myth Busters" எனும் நிகழ்ச்சியில் பரிசோதனைகளுக்குள்ளாக்கப்படும் நெகிழி பொம்மைகள் இப்படிதான் விறைத்துக்கொண்டு இருக்கும்.

ஒரு போராட்டக்குழுவிற்கு தலைமையேற்றிருக்கும் தலைவன் என்றுமே வியூகம் அமைப்பதிலும், கட்டளைகளைப் பிறப்பிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் போராட்டத்தினை திறமையாக வழிநடத்திச் செல்ல முடியும். இக்கட்டான நிலையில், அதுவும் ஒரு கால்பந்து திடலுக்குச் சமமான நிலப்பரப்பளவில் தலைவனே களமிறங்கி போராடுவது என்பது நிச்சயம் விவேகமான ஒரு செயலாக இருக்கமுடியாது.

அப்படியிருக்க நிச்சயம் அண்ணன் பிரபாகரன் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றிருக்க வேண்டும். சில மாதங்களாகவே தமிழூடகங்களில் பிரபாகரன் களமிரங்கி போராடிவருவதாகவும், தாய்மண்ணைவிட்டு அவர் வேறெங்கும் ஓடிவிடவில்லை என்று அறிக்கைகளும் செய்திகளும் வரும்பொழுது சந்தேகம் வலுத்தது. நிச்சயம் போர்த்தந்திரம் கருதி, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருக்க வேண்டும். 37 வருட போராட்டத்தை மீண்டும் தொடர வேண்டுமல்லவா..

ஒருவேளை, அவர் களத்திலேயே இருந்து போர் புரிந்திருந்தால், சிங்கள இராணுவம் முற்றுகையிட்டதை அறிந்த மறுகணமே சயனைட் குப்பியை விழுங்கி வீர மரணம் எய்தியிருக்கலாம். ஒருபோதும் சிங்களவன் கையில் குண்டடிப்பட்டு உயிர்துறப்பதை விடுதலைப் புலிகள் விரும்பமாட்டார்கள்.

இவ்வளவு சந்தேகங்களுக்கும் இடையில், அவர் உயிர் நீத்தது உண்மை என்றால் அவரின் சடலம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வுடலின்மீது சவ மற்றும் மரபணு பரிசோதனை நடத்தப்பெற வேண்டும். இச்சோதனைகளைக் கண்காணிக்க சுயேட்சை குழு ஒன்று அமர்த்தப்படவேண்டும். இக்குழுவில் இலங்கை, சீனா, அமெரிக்கா, இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகள் பங்கேற்க வேண்டும்.

ஒருவேளை, மரபணுச் சோதனையில் வீரச்சாவடைந்தது பிரபாகரன் என நிரூபனமானால், ஒரு வீரனுக்கு உரிய சகல மரியாதைகளுடன் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும்.

ஆனால், சிங்கள அரசு ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

போரில் என்றுமே இரண்டு அத்தியாயங்கள் உள்ளன.

ஒன்று போர் நடக்கும் காலகட்டம். மற்றொன்று போர் முடிந்த பின்பு நிலவும் காலகட்டம். இவற்றில் இரண்டாவது அத்தியாயம் என்பது சிங்கள இனவெறி அரசிற்கொரு கெட்ட கனவாக அமையப்போகிறது என்பது உறுதி!

Read more...

ஐயோ...!! எங்கள் அண்ணனா இது!?

>> Tuesday, May 19, 2009


இப்போதைக்கு கண்ணீர்த்துளிகளோடு.. மனம் கல்லாகிவிட்டது.. இனி சொல்வதற்கும் எழுதுவதற்கும் வார்த்தைகள் இல்லை! இது பொய்யாக இருக்கக்கூடாதா...!!

Read more...

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! - உதயகுமார்

கடந்த 17-ஆம் திகதி மே மாதமன்று, பத்துமலை வளாகத்தில் திரு.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் முடிகணிக்கை செலுத்தினார். இந்நிகழ்வில் சுமார் 3,000 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். காலை 6 மணி தொடங்கி பத்துமலையில் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். 10.30 மணியளவில் உதயகுமார் பத்துமலை அருகில் அமைந்துள்ள ஆற்றங்கரைக்கு வருகைப் புரியும்பொழுது கூட்டம் 2000க்கும் மேல் கூடியிருந்தது. அங்கு முடிகாணிக்கை செலுத்தியபின்பு, அனைவரும் திரளாக பத்துமலை முருகனை தரிசிக்கச் சென்றனர். நண்பகல் 12 மணியளவில் ஆதரவாளர்கள் கூட்டம் சுமார் மூவாயிரத்தை எட்டியிருந்தது.

பிரார்த்தனை முடிந்தவுடன், திரு.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பின்பு, உயரமான முருகன் சிலை முன்பு திரளாகத் திரண்டிருந்த மக்கள் முன்பு அவர் சுவாரசியமாக உரை நிகழ்த்தினார்.

514 நாட்கள் கொடூரச் சட்டத்தின்கீழ் கமுந்திங் தடுப்புக் காவலில் சிறைவைக்கப்பட்டாலும், அண்ணன் உதயாவின் எண்ணம் , பேச்சு, எழுத்து, செயல் அனைத்தும் அதே பழைய உதயாவை அன்று நமக்கு நினைவூட்டின என்று கூறலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலர் மாறிவிட்டனர். உதயா மட்டும் தான் முன்னெடுத்த போராட்டத்தினின்று துளியளவும் மாறவில்லை!

அன்றைய உரையில் உதயகுமார் கூறியது :-

"போராட்டம்னு வந்துட்டா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்!" இதுதான் உதயாவின் கொள்கை.

பாகம் 1



பாகம் 2



பாகம் 3



போராட்டம் தொடரும்...

Read more...

பத்துமலையில் உதயா முடிகாணிக்கை..

>> Tuesday, May 12, 2009


எதிர்வரும் 17-ஆம் திகதி மே மாதம் (ஞாயிற்றுக்கிழமை), பத்துமலை வளாகத்தில் அண்ணன் உதயா முடிகாணிக்கை மற்றும் சிறப்பு பிராத்தனை நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவிருக்கிறார். காலை 9 மணியளவில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். அன்றைய தினத்தில், உதயாவின் விடுதலையை முன்னிட்டு பல ஏராளமான மக்கள் சக்தி ஆதரவாளர்கள் முடிகாணிக்கை செலுத்தவிருப்பதாக அறியப்படுகிறது.

இந்நிகழ்வினை முன்னிட்டு பினாங்கு மக்கள் சக்தியினர் பத்துமலை செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தியிருக்கின்றனர். பினாங்கு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பத்துமலை செல்ல எண்ணம் கொண்டவர்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் : -

திரு.கலை 012-5637614

திரு.செல்வம் 016-4827974

ஆதரவாளர்கள் பேருந்துப் பயணத்திற்காக தங்களின் பெயரை விரைவாக பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

போராட்டம் தொடரும்..

Read more...

உதயாவின் விடுதலை!

>> Sunday, May 10, 2009



நேற்று கமுந்திங்கிலிருந்து சிரம்பான்வரை மகிழ்வுந்து பேரணியில் கலந்துகொண்ட அனுபவம் மறக்க முடியாத ஒன்று. மலேசிய வரலாற்றில் நிபந்தனையோடு கூடிய விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்து இட மறுத்து, வெளியேற மறுத்த ஒரே மனிதன் அண்ணன் உதயா. இறுதியில் அடிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.

சிரம்பானுக்கு செல்லக் கூடாது!
ஊடக அறிக்கை கூடாது!
பொதுவிடத்தில் உரை நிகழ்த்தக் கூடாது!
பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்!

இது காவல்த்துறையினரின் ஆணை!

ஆனால், இவர்களின் எச்சரிக்கைகளைக் கண்டு அஞ்சாது, கமுந்திங் முதல் சிரம்பான்வரை ஒரு கலக்கு கலக்கிய அண்ணன் உதயாவின் மனோதிடம் இந்நாட்டிலுள்ள வேறெந்த தலைவர்களுக்கும் கிடையாது! அண்ணன் உதயாவின் விடுதலை என்பது அம்னோவினால் அரங்கேற்றப்பட்ட ஓர் அரசியல் நாடகம் என்பதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இனி தேவையில்லாத அறிக்கைகளை நம்பி குழம்பாமல், அண்ணன் உதயாவின் தலைமைத்துவத்தின்கிழ் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள்!

இனி இரண்டாவது அத்தியாயம் தொடங்குகிறது...

போராட்டம் தொடரும்...

Read more...

நண்பர் கலையரசுவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

>> Thursday, May 7, 2009

பலநாட்களாக நோய்வாப்பட்டிருந்த நண்பர் கலையரசுவின் தாயார் இன்று காலையில் இயற்கை எய்தினார். இவ்வேளையில் நண்பர் கலையரசுவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் கலையரசு எனக்கு 2007-ஆம் ஆண்டில் இணையம் மூலம் அறிமுகமானார். மலாக்காவில் நடைப்பெறும் இண்ட்ராஃப் மக்கள் சக்தி நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனது ஒளிப்படக்கருவியில் பதிவு செய்து ஓலைச்சுவடிக்கு அனுப்பியவர். அவரை ஓலைச்சுவடி நிருபர் எனவே எனது பதிவுகளில் குறிப்பிட்டுவந்தேன்.

வலதுபுறம் நிற்பவர் : நண்பர் கலையரசு


நண்பரை முதன்முதலாக பிப்ரவரி 16 இண்ட்ராஃப் பேரணியின்போது சந்தித்தேன். அப்பேரணிக்குச் செல்லும்வழியில் நெடுஞ்சாலை கட்டண சாவடியில் காவல்த்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுபுலாபோல்மையத்திற்கு கலையரசு அனுப்பப்பட்டார். அவருடன் வந்திருந்த மலாக்கா இண்ட்ராஃப் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் புடு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இடப்புறம் நிற்பவர் : நண்பர் கலையரசு


தொடர்ந்து பல போராட்டங்களில் பங்கெடுத்த நண்பர் கலையின் உதவிகளை இவ்வேளையில் நினைத்துப் பார்க்கிறேன்.

நண்பரே, மனதைத் திடப்படுத்துங்கள்! ஒவ்வொரு மனிதனும் கடந்தாக வேண்டிய ஓர் அனுபவம்தான் இது! மேலும் நீங்கள் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய உண்டு!”

அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.

Read more...

திருமதி சத்தியவதிக்கு நிதியுதவி தேவைப்படுகிறது!

>> Tuesday, May 5, 2009


சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்றுவரும் திருமதி சத்தியவதி மாடசாமி என்பவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக நிதி திரட்டும் ஒரு விருந்து நிகழ்வு எதிர்வரும் 9-ஆம் திகதி மே மாதம் சுங்கைபட்டாணி சரசுவதி தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அன்புள்ளங்கள் பலரும் திருமதி சத்தியவதி மாடசாமிக்கு உதவி புரிய முன்வர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய நபர் :

திரு.சேகர், 016-435 6853
மின்னஞ்சல் முகவரி : muniness@gmail.com

Read more...

இண்ட்ராஃப் குரல் - மனோகரன் பதவி விலகக்கூடாது.

>> Monday, May 4, 2009


அண்மைய காலமாக .சா கைதி எம்.மனோகரன் மலையாளம் தம் தொகுதி மக்களுக்கு முழுமையாக சேவையாற்ற இயலாததன் காரணத்தை முன்னிட்டு, கோத்தா அலாம் சா சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவிருப்பதாக அறிக்கைகள் வெளிவருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு, இண்ட்ராஃப் அவரை பதவி விலகக் கூடாது என கேட்டுக் கொள்கிறது.

எம்.மனோகரனைத் தேர்வு செய்த கோத்தா அலாம் சா தொகுதி மக்கள், அவரைத் தேர்வு செய்ததன் காரணத்தை நன்கு அறிவர். இனவாத அம்னோ அரசாங்கத்தின் கீழ் இருண்ட எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்துவிட்ட அம்மக்கள், ஓர் அரசியல் மாற்றத்தைக் காணவிரும்பி மார்ச் 8 2008-இல் முடிவெடுத்தனர்.

தற்கால நடப்புச் சூழலை கருத்தில் கொண்டு, மனோகரனின் இக்கட்டான நிலையை நன்கு அறிந்தவர்களாய் எதனையும் சந்திக்கக்கூடிய மனநிலையில் மக்கள் உள்ளனர். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி சிறையில் அடைக்கப்பட்டு முழுமையாக அத்தொகுதி மக்களுக்கு சேவையாற்ற இயலாது போனாலும், அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து மனோகரனுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர் கோத்தா அலாம் சா மக்கள்.

இண்ட்ராஃப் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இண்ட்ராஃப் ஐவரையும் பிற இசா கைதிகளையும் விடுவிக்கக்கோரி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கிவருகிறது. இந்நடவடிக்கைகள் நம்முடைய எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும்வரை தொடரப்பட வேண்டும்.

இதுகாறும் மனோகரனின் விடுதலை மற்றும் தொகுதி மக்களுக்கு முழுமையான சேவை வழங்குவதில் அவர் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலை குறித்த மக்கள் கூட்டணியின் நிலைப்பாடானது அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிடுவதோடு தொக்கி நிற்கிறது. இந்நிலைகுறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் மக்கள் கூட்டணி அரசாங்கம் இறங்காததுகண்டு இண்ட்ராஃப் அதிருப்தி கொள்கிறது.

இதுபோக, கணவரின் துணையின்றி தாம் ஒருவராகவே பல சுமையான பொறுப்புகளை ஏற்று தொகுதி மக்களுக்கு தொண்டாற்றிவரும் மனோகரனின் துணைவியாருக்கு பக்க பலமாக மக்கள் கூட்டணியினர் உதவி புரிந்திருக்க வேண்டும். மக்கள் கூட்டணி நினைத்திருந்தால் மற்ற மக்கள் பிரதிநிகளைக் கொண்டு சுழல் முறையில் அத்தொகுதிக்கு சேவையாற்றியிருக்கலாம். வழக்கறிஞர் பணி, குடும்பப் பொறுப்பு ஆகியவைகளால் சற்று சிரமப்பட்டுவரும் மனோகரனின் துணைவியாருக்கு உதவியாக இருந்திருக்கலாம்.

மக்கள் கூட்டணியின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக, மக்கள் கூட்டணியினர் சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும். மனோகரன் மற்றும் பிற இசா கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவர வேண்டும். மக்களால் சனநாயக ரீதியில் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான எம்.மனோகரன் விடுதலையாகி முழுமையாக தன் தொகுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனக் கோரும்வகையில் மக்கள் கூட்டணியினர் உடனடியாக மக்களவையில் ஒரு தீர்மானத்தினை கொண்டுவர வேண்டும். அத்தீர்மானமாது ஏற்றுக்கொள்ளப்படாவிடின், குறைந்தபட்ச நடவடிக்கையாக மக்களைவையிலிருந்து மக்கள் கூட்டணியினர் வெளிநடப்பு செய்ய வேண்டும்.

பொ.வேதமூர்த்தி
இலண்டன்
இண்ட்ராஃப் தலைவர்


போராட்டம் தொடரும்...

Read more...

திரு.செயதாசிற்காக திரண்டன நன்கொடைகள்!

>> Sunday, May 3, 2009


கடந்த 1-ஆம் திகதி மே மாதமன்று, நாடறிந்த போராட்டவாதியான திரு.செயதாசின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மேற்கொள்ளப்பட்ட நல்லெண்ண விருந்து நிகழ்வு இனிதே நிகழ்ந்தேறியது. கிள்ளான் ஒக்கியன் சீன மண்டபத்தில் நடந்தேறிய இந்நிகழ்வில் பலரும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கவாசகம், பூச்சோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கோபிந்த் சிங், வழக்கறிஞர் திரு.சுரேந்திரன், லத்திபா கோயா, மலேசிய சோசியலிச கட்சியின் தலைவர் , அக்கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அருட்செல்வன், ஓம்ஸ் தியாகராசன், ரத்னவள்ளி அம்மையார், செம்பருத்தி இதழின் ஆசிரியர் திரு.ஆறுமுகம் மற்றும் நாடு தழுவிய அளவில் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் இசை மற்றும் உணவு விருந்துகளுக்கிடையில் சில பிரமுகர்களின் உரைகளும் இடம்பெற்றன. திரு.செயதாசு 1998-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அவர் களமிறங்கிய போராட்ட நிகழ்வுகளைப் புகைப்படங்களாகத் தொகுத்து ஒளியிழையின்வழி காண்பிக்கப்பட்டது.

கிள்ளானில் அமைந்துள்ள ஓர் அனாதை இல்லத்து குழந்தைகளுக்கும் அன்று உணவு பரிமாறப்பட்டது சிறப்பு.

இந்நிகழ்வில் நானும் பினாங்கு மக்கள் சக்தி நண்பர்களுடன் கலந்துகொண்டேன். இந்நிகழ்வில் வலைப்பதிவர்கள் திரு.குமரன் மற்றும் மாதவன் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில் பெருமகிழ்ச்சி. ‘சயாம்- பர்மா மரண இரயில் பாதைஎனும் ஆய்வு நூலை வடித்த எழுத்தாளர் திரு.அருண் அவர்களையும் சந்திக்க வாய்ப்பு கிட்டியது.

இரவு 8 மணியளவில் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு சுமார் 11 மணியளவில் திரு.ஆறுமுகம் ஐயா அவர்களின் உரையோடு ஒரு நிறைவை அடைந்தது.

அன்றைய நிகழ்வில் திரு.செயதாசிற்காக நன்கொடைகள் சுமார் ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கு திரட்டப்பட்டது. விரைவில், அவர் இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, நலமுடன் நாடு திரும்பி தமது போராட்டத்தை தொடர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP