இந்திய சமூகத்தின் காலக் கண்ணாடி

>> Saturday, December 18, 2010


திரு.உதயகுமாரின் ’இண்ட்ராஃப் 25 நவம்பர் பேரணி’ நூல் குறித்து திரு.கணேசன் வர்ணிப்பு



அரசியல் வானில் மாற்றங்கள் நிகழும்போது அதற்கு முன்பாகவே அரசியல் சூழலில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அது நிகழும் பொழுது ஒரு சமூகத்தின் அரசியல் செயல்பாட்டை பழைய அச்சில் பார்ப்பது கடினமாகும். இந்த பழைய அச்சு சமூகத்தில் வேரூன்றி விட்டது.

பழைய அரசியலை தொடர்ந்து பேணி வர முயற்சித்த வண்ணம் இருப்பர். இருப்பினும் புதிய அரசியல் சக்திகள் இந்த பழைமைவாதத்தை எதிர்த்து போராடி வருவர். இந்தப் புதிய அரசியலைக் கொண்டு வரும் நபர்கள் மிகப் புதிய தகவல்களையும் அதைக் கொண்டு செல்லும் தகவல் சாதனங்களையும் தங்கள் வசம் வைத்திருப்பர். வரலாறு குறித்த புதிய கண்ணோட்டத்தை இவர்கள் கொண்டிருப்பர். ஒழுக்கத்தின் புதிய பரிணாமம் இவர்கள் வசம் இருக்கும். இவற்றைக் கொண்டு இவர்கள் மாபெரும் மாற்றத்திற்கு வித்திடுவர்.

ஒழுக்கத்தின் புதிய பரிணாமம் சமூகத்தின் ஓரங்களில் உணரப்படும், இது வலுமையான எதிர்ப்புக்கும் உட்படும். மெதுவாக இந்த புதிய பரிணாமம் சமூகத்தின் மையத்திற்கு ஊடுருவும். இந்த பரிணாமத்தில் உதயகுமார் கூறிச் செல்லும் சமயமே அதற்குள் இன்னொரு ஊடுருவல் நடப்பதை நாம் உணர முடிகிறது. ஒரு காலத்தில் செய்ய முடியாது, விவாதிக்க முடியாது, செயல்பட முடியாது என்று நமக்குள் நாம் விதித்திருந்த விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இந்த ஊடுருவலுக்குள் வரும் இன்னொரு ஊடுருவலில் மீறப்பட்டது குறித்தும் உதயகுமார் இங்கு விவரித்துள்ளார்.

சதையும் இரத்தமுமாக இருந்த ஊடுருவலை உதயகுமார் இப்புத்தகத்தில் வர்ணித்துள்ளார். பல விடயங்கள் பொதுவில் விவாதிக்கப்பட முடியாது என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. அவற்றை மீறி அந்தக் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து இருப்பது அரசியல் சூழலில் மாற்றங்களுக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை.

25-11-2007 அன்று நடைப்பெற்ற மாபெரும் இண்ட்ராஃப் பேரணியில் அதிகமானோர் கலந்து கொண்டனர். இது எப்படி சாத்தியப்பட்டது. இந்தப் பேரணிக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வுகளின் கோர்வைகளையும் எழுத்தாளர் ஆராய்ந்துள்ளார். இந்தப் பேரணி எப்படி உருவாகியது. அது எங்கே வளர்ந்தது. அதன் வித்து எங்கே தூவப்பட்டது. பெட்ரோனாசு இரட்டைக் கோபுரத்தின் வாயிலில் இந்தப் பேரணி எப்படி உச்சக் கட்டத்தை அடைந்தது என்றும் உதயகுமார் உணர்ச்சிப் பூர்வமாக இப்புத்தகத்தில் விவரித்துள்ளார். இந்த நூல் முகத்தின் காலக் கண்ணாடியாகும் என்று மனித உரிமைக் கட்சியின் ஆலோசகர் திரு.கணேசன் வர்ணித்துள்ளார். பி.உதயகுமாரின் இந்த நூல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு பத்து கேவ்ஸ் எஸ்டிசி உணவகத்தின் விருந்தினர் அரங்கில் நடைப்பெறுகிறது.

செய்தி : தமிழ் நேசன் 18-12-2010

Read more...

பினாங்கில் இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் முதல் மாநில அளவிலான மாநாடு!

>> Wednesday, December 15, 2010




கடந்த ஆகசுட்டு மாதம் 8-ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைப்பெற்ற இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் தேசிய மாநாட்டினையடுத்து, மாநில அளவிலான இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் முதல் மாநாடு எதிர்வரும் சனவரி மாதம் 30-ஆம் நாளன்று பினாங்கிலுள்ள செபராங் பிறை எனுமிடத்தில் நடத்தப்பெற திட்டமிடப்பட்டுள்ளது. மலேசிய சிறுபான்மை இந்தியர்களுக்கெதிரான 53 ஆண்டுகால அரசாங்கத்தின் ஓரங்கட்டுதலை முடிவுக்கு கொண்டுவர எழுந்த போராட்டம் எந்தவொரு சதிவலைக்கும் பலியாகாமல் தொடரப்பட வேண்டும் எனும் நோக்கில் நாடு தளுவிய நிலையில் சிதறிக்கிடக்கும் அடிமட்ட ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டும் எண்ணமே இம்மாநாட்டின் குறிக்கோளாகும்.

மனித உரிமை இயக்கமான இண்ட்ராஃப் அரசியல் ரீதியில் மலேசிய சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகளை மீட்டெடுத்து பாதுகாக்கவும், அரசியலில் கொள்கை ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், நாட்டின் வளர்ச்சி வெள்ளோட்டத்தில் இந்தியர்களை பங்குபெறச் செய்யவும் மனித உரிமைக் கட்சி எனும் அரசியல் களம் கடந்தாண்டு தொடங்கப்பட்டு ஆக்ககரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் நம் உரிமை எனும் ரீதியில் ’மலேசிய இந்தியர் அரசியல் தன்னாளுமை வியூகம்’ அமைக்கப்பெற்று மலேசிய இந்தியர்களுக்கான வலுவான குரல்கள் நாடாளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் நம்மை பிரதிநிதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இண்ட்ராஃப் போராட்டங்களில் தங்களை இணைத்துக்கொண்ட ஆதரவாளர்களின் பேராதரவோடு இயக்கப்பெற்றுவரும் மனித உரிமைக் கட்சி மலேசிய அரசியலில் இந்திய சமூகத்திற்கு உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக் கொடுக்க பொதுமக்களின் பேராதரவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பினாங்கு மாநில அளவிலான இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் மாநாட்டின் வெற்றிக்கு ஆதரவாளர்களின் பங்கினை மிகவும் எதிர்ப்பார்க்கிறோம். தன்னலம் கருதாது சமுதாய விடியலுக்காக உழைத்துவரும் இண்ட்ராஃப் இயக்கத்தின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு அளித்துவரும் பொதுமக்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர். இம்மாநாட்டு நிகழ்வின் பேராளர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தங்களின் பெயரை முன்பதிவு செய்துகொள்ள அழைக்கிறோம். மாநாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவதற்கு கட்டணங்கள் இல்லை, இந்நிகழ்வு முற்றிலும் இலவசமே. நீங்கள் முன்பதிவு செய்துகொள்ள கொடுக்கப்பட்டுள்ள பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளர் : திரு.கலைச்செல்வம் : 012-5637614

மேலும் இம்மாநாடு வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்ய நன்கொடைகளும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள், நேரடியாக மனித உரிமைக் கட்சியின் பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளரை தொடர்புகொண்டு சந்தித்து கொடுக்கலாம். மறவாமல் ரசீதினைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது, கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலும் அன்பர்கள் நன்கொடைகளை அளித்து உதவலாம். வங்கியின் மூலம் நன்கொடை அளிக்கும் அன்பர்கள் உடனடியாக மாநில பொறுப்பாளரிடம் குறுஞ்செய்தியோ அல்லது நேரடியாக அழைத்தோ தகவல் கொடுத்துவிடவும். வங்கியின் ரசீதினையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.

பினாங்கு மாநில பொறுப்பாளர் : திரு. ஜனார்தனன் துளசி

(MAYBANK 158060009715)


“நீ இவ்வுலகில் நிகழ்த்த விரும்பும் மாற்றங்களுக்கு நீயும் ஒரு காரணமாக இருக்க வேண்டும்” - மகாத்மா காந்தி

Read more...

தமிழ் நாளிதழ்களால் திசைதிருப்பப்படும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் போராட்டம்!

>> Saturday, November 27, 2010





தொடர்ந்து தமிழ் நாளிதழ்களால் புறக்கணிக்கப்பட்டுவரும் பினாங்கு மனித உரிமைக் கட்சியின் தமிழ்ப் பள்ளி போராட்ட நிகழ்வுகளை சிறு கோர்வையாக இங்கு அளிக்கிறேன். நடக்காதவற்றையெல்லாம் நடந்ததாகவும், நடந்தவற்றை மறைத்தும் திசைதிருப்பியும் தங்களின் தவறுகளை மறைக்கும் மத்திய அரசாங்கம், கல்வி அமைச்சு, மாநில அரசாங்கம், மாநில கல்வி இலாகா, பள்ளி நிருவாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி கட்டிடக் குழு, தமிழ் நாளிதழ்கள் போன்ற தரப்பினருக்கு இண்ட்ராஃப் நிச்சயம் பதிலடி கொடுக்கும்! ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு தருணத்திலும் செய்து முடிக்காத பல விடயங்களை மூன்றே மாதங்களில் பெர்றோர்களின் ஆதரவைக்கொண்டு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சி செய்து முடித்திருக்கிறது.அடிமட்ட மக்கள் சீறி எழுந்தால்தான் அதிகார வர்கத்தினரை திணறடிக்க முடியும் என்பது கண்கூடாக நாம் கண்டுவரும் உண்மை! எனவே, இதேப்போன்ற போராட்டங்களை நாடு தழுவிய நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர்கள் முன்னெடுக்க வேண்டும்! தொடர்ந்து தமிழ் நாளிதழ்களின் நேரடி ஆதரவோடு ‘கட்டப்படும்!’,'எழுப்பப்படும்!’, ’பேசப்படும்!’, ‘கொடுக்கப்படும்!’, ‘அறிவிக்கப்படும்!’ படும்! படும்! படும்! என படம் காட்டும் அதிகாரவர்கத்தினரின் ஏமாற்றுவித்தையை மக்கள் முன்னின்று முறியடிக்க வேண்டும்!




(22-08-2010)

கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதியன்று பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடந்தேறியது. பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பொருத்தமட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்நோக்கிவரும் புதிய கட்டிட நிர்மாணம் குறித்த பிரச்சனையை மையமாக வைத்து அன்றைய நிகழ்வில் பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டன.

சரியாக மாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் பத்து கவானைச் சார்ந்த இண்ட்ராஃப் அதரவாளரும் மனித உரிமைக் கட்சியின் உறுப்பினருமான திரு.அண்ணாதுரை சிறு உரையாற்றினார். தற்போது பத்து கவான் மக்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படை பிரச்சனைகளைத் தொட்டு அவர் உணர்ச்சிப்பொங்க கருத்துரைத்தார். அவரையடுத்து பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.கலைசெல்வம் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் இலக்கு குறித்து ஒளியிழையின்வழி காண்பித்து வந்திருந்த பொதுமக்களுக்கு அவர் விளக்கங்களையும் கொடுத்தார்.

அடுத்த அங்கமாக, நிகழ்வின் கருப்பொருளான ‘பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே?’ எனும் தலைப்பில் திரு.கலைச்செல்வம் அப்பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடலைத் தொடக்கி வைத்து வழிநடத்திச் சென்றார். மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் கடந்தகால மற்றும் தற்போதைய நிலை குறித்து ஒளியிழையின்வழி சிறப்பாக எடுத்துக் காட்டி உரையாற்றினார்.

பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் எழுவதற்கான அறிகுறிகள் இதுவரையில் தென்படவில்லை என பல பெற்றோர்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்தினர். அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு அறியப்படுத்தாமலேயே பள்ளியின் நிருவாகமும் ம.இ.காவினரும் சொந்தமாக கட்டிடக் குழுவினைத் தோற்றுவித்துக் கொண்டு இந்நாள்வரை மக்களை ஏமாற்றி வருவதாக அச்சங்கத்தின் முன்னால் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டினார். புதிய கட்டிட நிர்மாணிப்பிற்காக மத்திய அரசாங்கம் வழங்கிய இரண்டு லட்ச வெள்ளியை கட்டிடக் குழு என்ன செய்தார்கள் என ஒரு கேள்வியையும் எழுப்பினார். ’இனியும் நாங்கள் ஏமாறப்போவதில்லை’ என அனைவரும் ஒரு குரலாக முடிவெடுத்தனர்.

சுமார் 40 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்திய பின், இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகரான திரு.நா.கணேசன் கலந்துரையாடலின் அடுத்த கட்ட அங்கத்தை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார். பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த பெற்றோர்களின் உரிமைகளைத் தொட்டு அவர் விளக்கமளித்தார். அவ்வுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர்கள் எவ்வாறு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு உதவ முடியும் எனவும் எடுத்துக் கூறினார். உட்பூசல்களில் கவனத்தை சிதறடிக்காது நாம் திட்டமிட்டு வேலைகளைச் செய்து அடுத்தாண்டு சூன் மாத்த்திற்குள் அப்பள்ளியின் கட்டிட நிர்மாணிப்பு பணி தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் தற்போது கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 2 ஏக்கர் நிலத்தின் நிலப்பட்டாவையும் மற்ற முக்கியமான கோப்புகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும், 2 ஏக்கர் நிலத்தை 5 ஏக்கராக மாநில அரசாங்கத்திடமிருந்து கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முதற்கட்டமாக, பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் ’நடவடிக்கை குழு’ ஒன்றினை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படியே 10 பேர் கொண்ட பெற்றோர் நடவடிக்கை குழு ஒன்று திரு.அண்ணாதுரையின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அதோடு பத்து கவான்வாழ் பொதுமக்களாகிய 6 பேர் அக்குழுவிற்கு துணையாக இருந்து செயல்பட இணைக்கப்பட்டனர். இந்த 16 பேர் கொண்ட நடவடிக்கை குழு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஆதரவையும் உதவியையும் முழுமையாக ஏற்பதாகவும், வற்றாத ஆதரவினை தொடர்ந்து இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சிக்கு வழங்கப்போவதாகவும் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நடவடிக்கைக் குழு கையொப்பமிட்ட அவ்வுறுதிமொழிக் கடிதத்தை பெற்றோர்களிடமிருந்து திரு.நா.கணேசன் பெற்றுக் கொண்டார்.

இந்த ‘நடவடிக்கை குழு’ எதிர்வரும் ஆகஸ்ட் 26-ஆம் திகதியன்று பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குச் சென்று பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவோடு ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியரிடம் கோரிக்கை வைக்கப்போவதாக முடிவெடுக்கப்பட்டது.

இறுதியாக இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டு சுமார் 9 மணியளவில் இக்கலந்துரையாடல் நிகழ்வு இனிதே முடிவடைந்தது.

(25-08-2010)

ஆகசுட்டு 25-ஆம் நாளன்று பத்து கவானில் திரு.அண்ணாதுரையின் இல்லத்தில் பெற்றோர் நடவடிக்கை குழு ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தினர். அக்கூட்டத்தில் நாளை தலைமையாசிரியருடன் விவாதிக்க வேண்டிய விடயங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன. பின் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கப்படும் மனு அனைவருக்கும் வாசிக்கப்பட்டு, பின் அனைவரும் முழு சம்மதத்துடன் கையொப்ப படிவத்தில் கையொப்பமிட்டனர்.

(26-08-2010)

இதனிடையே திட்டமிட்டப்படி கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாளன்று காலை 8.45 மணியளவில் ‘பெற்றோர் நடவடிக்கைக் குழு’ இண்ட்ராஃபைச் சார்ந்த திரு.அண்ணாதுரையின் தலைமையில் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் அவர்களைச் சந்தித்து ஒரு விண்ணப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தனர். இக்கடிதம் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கப்படும்போது பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் திரு.கணேசன் அவர்களும் உடனிருந்தார்.

அக்கடிதத்தில் நடவடிக்கைக் குழுவிற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவிற்கும் மத்தியில் ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்தினை இரண்டு வாரத்திற்குள் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அச்சந்திப்புக் கூட்டம் நடைப்பெறுவதற்கு ஆவண செய்வதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் சம்மதம் தெரிவித்தார்.

(11.09.2010)

செப்தம்பர் 11-ஆம் நாளன்று பத்து கவானில் திரு.அண்ணாதுரையில் இல்லத்தில் பெற்றோர் நடவடிக்கைக் குழு சந்திப்புக் கூட்டத்தினை நடத்தினர். பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாசிடம் கொடுக்கப்பட்ட மனுவிற்கு இரண்டு வார காலக்கெடு கேட்டிருந்தும், பள்ளியிடமிருந்து எந்தவொரு பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. பள்ளியிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காத்தால், இவ்விவகாரம் தொடர்பில் பினாங்கு மாநில கல்வி இலாகாவிற்கு கடிதம் ஒன்றினை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டது.

(08.10.2010)

தலைமையாசிரியரின் பதிலுக்கு காத்திருந்தும் எந்தவொரு ஒத்துழைப்பையும் அவர் வழங்காததுகண்டு, அத்தோபர் 8-ஆம் நாளன்று பெற்றோர் நடவடிக்கைக் குழுவினைச் சேர்ந்த திரு.சிவபெருமாள் பினாங்கு மாநில கல்வி இலாகாவில் ஒரு புகார் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்தார். அக்கடிதத்தில் பள்ளி நிருவாகத்தின் ஒத்துழையாமையின் காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அதற்கு மாநில கல்வி இலாகா இவ்விடயத்தை ஆராய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.
இதே நாளன்று திரு.அண்ணாதுரை புத்ரா ஜெயாவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு சென்று கல்வி அமைச்சர் ட்த்தோ சிறீ முகிதீன் யாசினுக்கு ஒரு மனுவினை சமர்ப்பித்துள்ளார். கல்வி அமைச்சரின் மனுவை அமைச்சரின் உதவியாளர் பெற்றுக் கொண்டார்.

(14.10.2010)

கல்வி அமைச்சுக்கு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து, கல்வி அமைச்சின் The Education Planning and Research Department (EPRD)-யைச் சேர்ந்த கல்வி அதிகாரியான திரு.சுவர்மணி சுப்பன் திரு.அண்ணாதுரையை அலைப்பேசியின் வழி தொடர்புகொண்டு பள்ளியின் முழு விவரங்களையும் கேட்டறிந்தார். டத்தோ சிறீ முகிதீன் யாசினுக்கு இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கையை நேரடியாக சமர்ப்பிக்கப்போவதாகவும் கூறினார்.

(15.10.2010)

அத்தோபர் 15-ஆம் நாளன்று பினாங்கு மாநில கல்வி இலாகாவின் Unit Pembangunan Sekolah Bantuan Modal பிரிவிலிருந்து அப்பிரிவின் கண்காணிப்பாளர் திரு.ரோஸ்லி என்பவர் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வருகையளித்திருந்தார். அதிகாரியின் வருகையினையொட்டி பள்ளி நிருவாகம் பெற்றோர் நடவடிக்கை குழுவிடம் கருத்துரைக்க மறுத்துவிட்டது.

(17.10.2010)

பத்து கவானில் திரு.அண்ணாதுரையில் இல்லத்தில் பெற்றோர் நடவடிக்கை குழு சந்திப்புக் கூட்ட்த்தினை நடத்தினர். பெற்றோர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டது. திரு.அண்ணாதுரை எதிர்வரும் 20-ம் திகதியன்று மாநில கல்வி இலாகாவிடம் சமர்ப்பிக்கவிருக்கும் மனுவினை அனைவருக்கும் விளக்கினார். கூட்டத்தில் அம்முடிவிற்கு ஏகமனதாக அனைவரும் சம்மதித்தனர்.

(20.10.2010)

மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியுரைஞர் திரு.நா.கணேசன் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் சார்பாக புத்ரா ஜெயாவிலுள்ள கல்வி இலாகாவின் Unit Perancangan dan Peyelidikan Prestasi எனும் பிரிவிற்குச் சென்று பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்த நிகழ்நிலை அறிக்கையினையும், கல்வி அமைச்சு பள்ளி விவகாரத்தில் காலந்தாழ்த்தாது உரிய நடவடிக்கையினை விரைந்து எடுக்க்க் கோரி ஒரு மனுவினை சமர்ப்பித்தார். அதே சமயம் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு கடிதத்திற்கும் கல்வி அமைச்சு முறையாக அதிகாரப்பூர்வ பதில் கடிதம் கொடுக்க வேண்டும் எனவும், அலைப்பேசி தொடர்புகளின்வழி பிரச்சனையை தட்டிக்கழிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே நாளன்று திரு.அண்ணாதுரை பினாங்கு மாநில கல்வி இலாகாவில் ஒரு மனுவினை சமர்ப்பித்தார். அம்மனுவில் பள்ளியின் புதிய நிலத்தில் புதிய கட்டிடம் எழும்புவதற்கு மாநில கல்வி இலாகா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளியின் நிருவாகம் பெற்றோர்களுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்குவதற்கு கல்வி இலாகா ஆவண செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(22.10.2010)

அத்தோபர் 22-நாளன்று பத்து கவான் வட்டாரத்தில் வசிக்கும் 1 வயதிலிருந்து 12 வயதிற்குட்பட்ட ஆயிரம் பிள்ளைகளின் கையொப்பம் கொண்ட ஒரு ’கையெழுத்து வேட்டை’ ஆரம்பிக்கப்பட்டது. மலாய், சீனப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பாராபட்சமின்றி வழங்கப்பட்டால், நாங்களும் தமிழ்ப்பள்ளியில்தான் (குறிப்பாக பத்து கவான் புதிய தமிழ்ப்பள்ளி)யில் நிச்சயம் பயில்வோம் என உறுதிகூறும் வகையில் கோரிக்கை மனு தயார் செய்யப்பட்டுள்ளது. (இதுவரையில் சுமார் 500க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன)


(24.10.2010)

பத்து கவானில் திரு.அண்ணாதுரையின் இல்லத்தில் நான்காவது முறையாக நடத்தப்பெற்ற சந்திப்புக் கூட்டத்தில், இதுவரையில் பள்ளியின் விவகாரம் தொடர்பாக மனித உரிமைக் கட்சியின் ஆலோசனையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் எடுத்துக் கூறப்பட்டன. அடுத்தக்கட்ட நடவடிக்கையும் விவாதிக்கப்பட்டது. பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் விவகாரம் வெளிவரத் தொடங்கியவுடன் சில பொறுப்பற்ற அரசியல்வாதிகள் நாளிதழ்களில் சுயவிளம்பரத்திற்காக பல அறிக்கைகளைக் கொடுத்து வருகின்றனர். சிலர் பெற்றோர் நடவடிக்கைக் குழு எடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவும் விளங்கிவருகின்றனர். சமுதாயத்திற்கு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கும் இதுபோன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளை இவர்கள் தவிர்க்க வேண்டும் என பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.கலைசெல்வம் கூறினார்.

(22.11.2010)

மனித உரிமைக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் நடவடிக்கைக் குழுவினர் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு கடிதம் வழங்க கொம்தாருக்குச் சென்றனர். மாநில அரசாங்கத்தால் வழங்கப்பெற்ற 2 ஏக்கர் நிலத்தில் போதிய வசதிகளுடன் கூடிய பள்ளியைக் கட்ட இயலாது, எனவே மேலும் 3 ஏக்கர் நிலம் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்க வேண்டும் என மனித உரிமைக் கட்சியின் மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அம்மகஜரை கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் இங் வெய் எய்க் பெற்றுக் கொண்டார். இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தேசிய ஆலோசகர் தெள்ளத் தெளிவாக பத்து கவான் மக்களின் எதிர்ப்பார்ப்பை அச்சட்டமன்ற உறுப்பினரிடம் விளக்கிக்காட்டி மகஜரை ஒப்படைத்தார். அதன்பின் நிருபர்களுடன் நேர்க்காணலும் நடைப்பெற்றது.

(23.11.2010)

மனித உரிமைக் கட்சி மற்றும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் நடவடிக்கை குழுவின் தொடர் அழுத்தத்தின் பேரில் புத்ரா செயாவிலிருந்து கல்வி அமைச்சு அதிகாரிகளும் மாநில கல்வி இலாகாவின் கல்வி அதிகாரிகளும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். கல்வி அதிகாரிகளுடன் பள்ளி நிருவாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி கட்டிடக் குழு, பெற்றோர் நடவடிக்கைக் குழு மற்றும் பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியின் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பள்ளி நிலவரம் குறித்து விவாதித்தனர். கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் மனித உரிமைக் கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக பல கேள்விகளைக் கேட்டு பள்ளியின் நிலவரத்தை அறிந்தனர். கல்வி அமைச்சின் பதில்கள் மனித உரிமைக் கட்சிக்கு மனநிறைவளிக்கவில்லை. தற்சமயம் நான்கு பேரின் பேரில் உள்ள பள்ளியின் நிலம் மிக விரைவில் மத்திய அரசாங்கத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கைகள் சாக்கு போக்குகள் இல்லாமல் நடைப்பெற வேண்டும் என மனித உரிமைக் கட்சி கேட்டுக் கொண்டது.

போராட்டம் தொடரும்...

Read more...

இண்ட்ராஃப் தலைவருடன் ஒரு நேர்காணல்

>> Saturday, October 23, 2010

தற்போது நடைப்பெற்றுவரும் அம்னோ மாநாட்டில் பிரதமர் நஜீப் கருத்துரைத்துள்ள சில விடயங்கள் குறித்து அண்மையில் லண்டன் பிபிசி தமிழோசை வானொலி இண்ட்ராஃப் தலைவர் பொ.வேதமூர்த்தியிடம் நடத்திய நேர்க்காணல் உங்கள் செவிகளுக்காக..



போராட்டம் தொடரும்...

Read more...

நாடற்ற பல ஏழை இந்தியப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில்லை!

>> Tuesday, September 7, 2010



போராட்டம் தொடரும்...

Read more...

’மக்கள் சேவை தினம்’- பினாங்கு ம.உ.க ஊடக அறிக்கை

>> Sunday, September 5, 2010


இன்று (ஞாயிற்றுக்கிழமை 05-09-2010 ) பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியின் அலுவலகத்தில் பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டையின்றி குடியுரிமையற்றவர்களாக வாழும் இந்தியர்களுக்காக உதவும் வகையில் ‘மக்கள் சேவை தினம்’ எனும் நிகழ்வு நடந்தேறியது. இந்நிகழ்வில் பிறை, புக்கிட் மெர்தாஜாம், பாகன் செராய், பெர்மாத்தாங் பாவோ மற்றும் பினாங்குத் தீவு ஆகிய இடங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட நாடற்ற இந்திய குடும்பங்கள் வருகை புரிந்திருந்தனர். போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்நோக்கிய பல குடும்பங்களை மனித உரிமைக் கட்சியினர் ம.உ.க செயலகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தனர்.


மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகர் திரு.நா.கணேசன் தலைமையில் காலை 10.00 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் முதல் அங்கமாக செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது. 1,50 000 நாடற்ற மலேசிய இந்தியர்களின் தொடர்பிரச்சனைகளை அரசாங்கம் உடனடியாக களைவதற்கு ஆவண செய்ய வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் திரு.நா.கணேசன் வலியுறுத்தினார். இந்நாட்டில் எந்தவொரு பொருளை வாங்கினாலும் ரசீது கிடைக்கும். ஒரு வளர்ப்புப் பிராணியை வாங்குவதென்றாலும் அதற்கென்று உரிமம், சான்றிதழ் பெற்றாகவேண்டும். ஆனால், இந்நாட்டில் பிறந்த 1,50 000 இந்திய குடிமக்களுக்கு சான்றாக பிறப்புப் பத்திரம் இல்லாத அவல நிலை இன்றுவரை தொடர்ந்துவருவது வேதனைக்குறிய விஷயமாகும் என அவர் தெரிவித்தார்.


மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14(1)(b)-யின் படி இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய பிறப்புரிமையை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாட்டுச் சபையின் உலகலாவிய மனித உரிமைப் பிரகடனத்தை மீறக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். நாடற்ற மலேசிய இந்தியர்கள் இந்நாட்டில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்நோக்கிவருகின்றனர். ஏழ்மை நிலை, திருமணத் தடை, பாதுகாப்பற்ற மற்றும் அடிமைத் தொழில், சுகாதார மற்றும் மருத்துவச் சேவை புறக்கணிப்பு, ஆரம், இடைநிலை மற்றும் உயர்க்கல்வி நிராகரிப்பு, மலிவு விலை வீடு, அர்சாங்க வாடகை வீடு, அரசாங்க உதவிகள் நிராகரிப்பு, வங்கியில் கடனுதவி மறுப்பு, குடியுரிமையற்ற குழந்தைகள், காவல்த்துறையினரிடம் பிடிபடுதல், வாகனம், வியாபார உரிமம் மறுப்பு, காப்புறுதி, பங்குகளை வாங்க நிராகரிப்பு, சமய உரிமை புறக்கணிக்கப்பட்ட நிலை என பலவகையில் கள்ளக்குடியேறிகளைவிட மோசமாக வாழ்ந்து வரும் மலேசிய இந்திய மண்ணின் மைந்தர்களின் குடியுரிமைப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவேண்டும்.



மூன்றே வாரங்களில் ஓர் இந்திய குடும்பத்தில் உள்ள ஏழு குழந்தைகளுக்கு மனித உரிமைக் கட்சியின் தலையீட்டால் பதிவிலாகா பிறப்புப் பத்திரங்களைக் கொடுக்கும்போது, ஏன் 1,50000 மலேசிய இந்தியர்களுக்கு கொடுக்க்க்கூடாது என திரு.நா.கணேசன் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்நிகழ்விற்கு வந்திருந்த சுமார் 15 குழந்தைகள் பிறப்புப் பத்திரம் இல்லாததனால் பள்ளிக்குச் செல்லாமல் உணவகங்களில் பாத்திரம் கழுவுவது, கனரக வாகன உதவியாளராக வேலை செய்வது, கோழிப் பண்ணையில் எச்சங்களை அள்ளுவது போன்ற வேலைகளை செய்து வருவதை உருக்கமாக கூறியபோது வந்திருந்தோரை கவலையில் ஆழ்த்தியது. அதனையடுத்து 80 இந்திய குடும்பங்களுடன் இணைந்து மனித உரிமைக் கட்சியினர் பதாகையேந்தி புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்தது. அனைவரும் ஹிண்ட்ராஃப் வாழ்க! மனித உரிமை வாழ்க! என கோஷமிட்டனர்.

மதியம் 12.00 மணியளவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.மதிய உணவிற்குப்பின் மனித உரிமைக் கட்சியினர் 80 குடும்பங்களின் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கவனித்து உதவி செய்தனர். எதிர்வரும் 26-ஆம் திகதியன்று இவ்விந்திய குடும்பங்கள் மீண்டும் பினாங்கு மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் ஒன்றுகூடவிருக்கின்றனர். பினாங்கு மாநில பதிவிலாகா அதிகாரிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் பரிசீலித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமைக் கட்சி ஆவண செய்யும். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கும் வட மாநிலங்களைச் சார்ந்தவர்கள் பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியினரைத் தொடர்பு கொள்ளுமாறு திரு.நா.கணேசன் கேட்டுக் கொண்டார்.

தொடர்புக்கு : திரு.நா.கணேசன் 0124803284 திரு.கலைச்செல்வம் 0125637614 திரு.அண்ணாதுரை 0174107244

போராட்டம் தொடரும்...

Read more...

இண்ட்ராஃபின் மனு வீசியெறியப்பட்டது ! உதயகுமாரை குத்துவதற்கு கையோங்கிய காவல்த்துறை அதிகாரி!

>> Wednesday, September 1, 2010



போராட்டம் தொடரும்...

Read more...

பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் நடவடிக்கைக் குழு - நிகழ்நிலை அறிக்கை

>> Monday, August 30, 2010

கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதியன்று பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடந்தேறியது. பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பொருத்தமட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்நோக்கிவரும் புதிய கட்டிட நிர்மாணம் குறித்த பிரச்சனையை மையமாக வைத்து அன்றைய நிகழ்வில் பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டன.

சரியாக மாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் பத்து கவானைச் சார்ந்த இண்ட்ராஃப் அதரவாளரும் மனித உரிமைக் கட்சியின் உறுப்பினருமான திரு.அண்ணாதுரை சிறு உரையாற்றினார். தற்போது பத்து கவான் மக்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படை பிரச்சனைகளைத் தொட்டு அவர் உணர்ச்சிப்பொங்க கருத்துரைத்தார். அவரையடுத்து பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.கலைசெல்வம் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் இலக்கு குறித்து ஒளியிழையின்வழி காண்பித்து வந்திருந்த பொதுமக்களுக்கு அவர் விளக்கங்களையும் கொடுத்தார்.

அடுத்த அங்கமாக, நிகழ்வின் கருப்பொருளான ‘பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே?’ எனும் தலைப்பில் திரு.கலைச்செல்வம் அப்பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடலைத் தொடக்கி வைத்து வழிநடத்திச் சென்றார். மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் கடந்தகால மற்றும் தற்போதைய நிலை குறித்து ஒளியிழையின்வழி சிறப்பாக எடுத்துக் காட்டி உரையாற்றினார்.

பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் எழுவதற்கான அறிகுறிகள் இதுவரையில் தென்படவில்லை என பல பெற்றோர்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்தினர். அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு அறியப்படுத்தாமலேயே பள்ளியின் நிருவாகமும் ம.இ.காவினரும் சொந்தமாக கட்டிடக் குழுவினைத் தோற்றுவித்துக் கொண்டு இந்நாள்வரை மக்களை ஏமாற்றி வருவதாக அச்சங்கத்தின் முன்னால் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டினார். புதிய கட்டிட நிர்மாணிப்பிற்காக மத்திய அரசாங்கம் வழங்கிய இரண்டு லட்ச வெள்ளியை கட்டிடக் குழு என்ன செய்தார்கள் என ஒரு கேள்வியையும் எழுப்பினார். ’இனியும் நாங்கள் ஏமாறப்போவதில்லை’ என அனைவரும் ஒரு குரலாக முடிவெடுத்தனர்.

சுமார் 40 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்திய பின், இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகரான திரு.நா.கணேசன் கலந்துரையாடலின் அடுத்த கட்ட அங்கத்தை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார். பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த பெற்றோர்களின் உரிமைகளைத் தொட்டு அவர் விளக்கமளித்தார். அவ்வுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர்கள் எவ்வாறு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு உதவ முடியும் எனவும் எடுத்துக் கூறினார். உட்பூசல்களில் கவனத்தை சிதறடிக்காது நாம் திட்டமிட்டு வேலைகளைச் செய்து அடுத்தாண்டு சூன் மாத்த்திற்குள் அப்பள்ளியின் கட்டிட நிர்மாணிப்பு பணி தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் தற்போது கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 2 ஏக்கர் நிலத்தின் நிலப்பட்டாவையும் மற்ற முக்கியமான கோப்புகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும், 2 ஏக்கர் நிலத்தை 5 ஏக்கராக மாநில அரசாங்கத்திடமிருந்து கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முதற்கட்டமாக, பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் ’நடவடிக்கை குழு’ ஒன்றினை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படியே 10 பேர் கொண்ட பெற்றோர் நடவடிக்கை குழு ஒன்று திரு.அண்ணாதுரையின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அதோடு பத்து கவான்வாழ் பொதுமக்களாகிய 6 பேர் அக்குழுவிற்கு துணையாக இருந்து செயல்பட இணைக்கப்பட்டனர். இந்த 16 பேர் கொண்ட நடவடிக்கை குழு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஆதரவையும் உதவியையும் முழுமையாக ஏற்பதாகவும், வற்றாத ஆதரவினை தொடர்ந்து இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சிக்கு வழங்கப்போவதாகவும் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நடவடிக்கைக் குழு கையொப்பமிட்ட அவ்வுறுதிமொழிக் கடிதத்தை பெற்றோர்களிடமிருந்து திரு.நா.கணேசன் பெற்றுக் கொண்டார்.
இந்த ‘நடவடிக்கை குழு’ எதிர்வரும் ஆகஸ்ட் 26-ஆம் திகதியன்று பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குச் சென்று பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவோடு ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியரிடம் கோரிக்கை வைக்கப்போவதாக முடிவெடுக்கப்பட்டது.

இறுதியாக இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டு சுமார் 9 மணியளவில் இக்கலந்துரையாடல் நிகழ்வு இனிதே முடிவடைந்தது.


இதனிடையே திட்டமிட்டப்படி கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாளன்று காலை 8.45 மணியளவில் ‘பெற்றோர் நடவடிக்கைக் குழு’ இண்ட்ராஃபைச் சார்ந்த திரு.அண்ணாதுரையின் தலைமையில் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் அவர்களைச் சந்தித்து ஒரு விண்ணப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தனர். இக்கடிதம் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கப்படும்போது பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் திரு.கணேசன் அவர்களும் உடனிருந்தார்.


அக்கடிதத்தில் நடவடிக்கைக் குழுவிற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவிற்கும் மத்தியில் ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்தினை இரண்டு வாரத்திற்குள் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அச்சந்திப்புக் கூட்டம் நடைப்பெறுவதற்கு ஆவண செய்வதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 3-ஆம் நாளன்று திட்டமிட்டப்படி, திரு.அண்ணாதுரை தலைமையில் ‘நடவடிக்கைக் குழுவினர்’ மீண்டும் தலைமையாசிரியரைச் சந்தித்து தற்போதைய நிலவரங்களைப் பெற்றுக் கொள்ள செல்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.








போராட்டம் தொடரும்...

Read more...

காணொளி : பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே?

>> Monday, August 23, 2010

நேற்று (ஆகசுட்டு 22, 2010) ஞாயிற்றுக்கிழமையன்று பினாங்கு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்கள் மற்றும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்றுவரும் பிள்ளைகளின் பெற்றோர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளாக நீடித்துவரும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிலம் மற்றும் புதிய கட்டிடம் குறித்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக இண்ட்ராஃப் இயக்கம் பொதுமக்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது. அக்கலந்துரையாடலின் இறுதியில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அந்நிகழ்வின் ஒரு பகுதியை காணொளி வடிவில் இங்கு இணைத்துள்ளேன். அடுத்தாண்டு சூன் மாதத்திற்குள் அப்பள்ளியின் புதிய கட்டிட நிர்மாணப்பணி தொடங்க வேண்டுமென இண்ட்ராஃப் எதிர்ப்பார்க்கிறது.



போராட்டம் தொடரும்...

Read more...

பினாங்கு பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்

>> Friday, August 20, 2010

படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்.

Read more...

காணொளி : கெடா மாநில மனித உரிமைக் கட்சியின் செயலக திறப்புவிழா

>> Tuesday, July 20, 2010



போராட்டம் தொடரும்...

Read more...

ஒரு கோப்பை தேநீர்

>> Monday, June 21, 2010

நேற்று விமரிசையாக நடைப்பெற்று முடிந்த இண்ட்ராஃப் மக்கள் சக்தி / மனித உரிமை கட்சியின் பினாங்கு மாநில செயலக திறப்புவிழாவில் சிறப்பு அங்கமாக ‘ஒரு கோப்பை தேநீர்’ எனும் காணொளி அங்கம் இடம்பெற்று பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றது. அந்த காணொளியை உங்கள் சிந்தனைக்காக இங்கு பதிவிடுகிறேன்.

பாகம் 1



பாகம் 2

Read more...

அனைத்து மலேசியர்களுக்கும் பொதுவான தேர்வு முறை - இண்ட்ராஃப் கோரிக்கை

>> Wednesday, June 16, 2010

பாகம் 1



பாகம் 2



போராட்டம் தொடரும்...

Read more...

கல்வித்துறையில் எட்டி உதைக்கப்படும் இந்திய சமூகம்!

>> Saturday, June 12, 2010

Read more...

சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தும் இந்திய மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை!

>> Monday, May 31, 2010



பினாங்குவாழ் எ.சு.பி.எம் / எ.சு.தி.பி.எம் முடித்த மற்றும் மெட்ரிகுலேசனில் பயிலும் மாணவ மாணவியரின் கவனத்திற்கு..

எ.சு.பி.எம் மற்றும் எசு.தி.பி.எம் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தும், மெட்ரிகுலேசன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் அரசு உயர்கல்விக்கூடங்களில் பயின்றும் அரசு உபகாரச் சம்பளம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் உடனடியாக பினாங்கு மனித உரிமைகள் கட்சியினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த மே 29-ஆம் நாளன்று, மனித உரிமைகள் கட்சியின் தலைமையகத்தில் சிறப்பான தேர்ச்சி பெற்றும் மெட்ரிகுலேசன் மற்றும் அரசு உபகாரச் சம்பளம் கிடைக்கப்பெற்றிராத ஏழு இந்திய மாணவர்களை பேட்டி எடுத்து, அவர்களின் விண்ணப்பங்களை உடனடியாக அம்னோ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமாறு மூன்று நாட்கள் கெடு விதித்திருந்தனர்.




இதேப்போன்றதொரு நடவடிக்கையினை நாடு தழுவிய அளவில், மனித உரிமைகள் கட்சியினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். பினாங்கு மாநிலத்தில் இனவாதக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் தங்களின் பெற்றோரோடு துணிந்து உரிமையைக் கேட்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

நாடு தழுவிய நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களும் ஒன்று சேர்ந்தால், இந்த இனவாத அம்னோ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆவண செய்ய முடியும்.




காலங்காலமாக தகுதிபெற்ற நம் ஏழை இந்திய மாணவர்கள் தேர்வு செய்யும் கல்வித் துறைகளை தட்டிக்கழித்து நம் சமூகத்தை நடைப்பிணமாக்கிக் கொண்டு வரும் போக்கை நாம் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாது, இனியும் இக்கொடுமையான ஓரங்கட்டுதலைப் பார்த்து வாய்மூடி கிடக்காது துணிந்து உரிமையைக் கேட்க முன்வருமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் அழைக்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :-

திரு.கணேசன் : 012-4803284
திரு.கலைச்செல்வம் : 012-5637614
திரு. கனகசுந்தரம் : 017-4155449

பிற மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களும் எங்களோடு தொடர்பு கொள்ளலாம். நீங்கள் வசிக்கும் மாநிலத்தின் பொறுப்பாளர்கள் உங்களைத் தொடர்புகொள்ள ஆவண செய்வோம்.

போராட்டம் தொடரும்...

Read more...

சிறுபான்மை இந்திய மலேசிய வம்சாவளியினரின் பிரச்சனைகள் தனிப்பட்டவை! - பினாங்கு கருத்தரங்கு

>> Wednesday, May 5, 2010

அண்மையில் பினாங்கில்மலேசிய இந்தியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம், முன்னேறுவதற்கான வழிஎனும் கருப்பொருளில் நடைப்பெற்ற கருத்தரங்கின் காணொளி காட்சிகள் உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும் இங்கு இணைத்துள்ளேன். மலேசிய சிறுபான்மை இந்தியர்களின் தனிப்பட்ட அடிப்படைப் பிரச்சனைகளையும், அவைகளை அரசியல் ரீதியில் களையும் தனிப்பட்ட மாற்று அரசியல் அணுகுமுறைகளையும் இண்ட்ராஃப் வழக்கறிஞர் திரு.பி.உதயகுமாரும், இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.கணேசனும் விளக்கிக் காட்டியுள்ளனர். நாமெல்லோரும் அரசியல் பயனீட்டாளர்கள் எனும் விழிப்புணர்வை இக்காணொளிகள் உங்களுக்கு அறியப்படுத்த உதவும் என நம்புகிறேன்.

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 4


பாகம் 5


பாகம் 6


போராட்டம் தொடரும்...

Read more...

’இண்ட்ராஃப் குரல்’ ஏப்ரல் மாத இதழ்

>> Monday, April 26, 2010

Suara Hindraf edisi April 2010

Read more...

’இந்திய மலேசியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம்’- பினாங்கில் கருத்தரங்கு

>> Saturday, April 24, 2010


நாளை பினாங்குத் தீவில்இந்திய மலேசியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம், முன்னேறுவதற்கான வழிஎனும் கருவை மையமாகக் கொண்ட கருத்தரங்கு நிகழ்வு ஒன்றிற்கு பினாங்கு இண்ட்ராஃப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். நிகழ்வின் விபரங்கள் பின்வருமாறு :

திகதி : 25 ஏப்ரல் 2010 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணிவரை

இடம் : பினாங்குத் தீவு (நிகழ்வு நடைப்பெறும் இடம் அறிந்துகொள்ள நிகழ்வின் ஏற்பாட்டாளர்களைத் தொடர்புக் கொள்ளவும்)

பேச்சாளர்கள் : திரு.உதயகுமார் (இண்ட்ராஃப் ஆலோசகர், மனித உரிமைகள் கட்சியின் பொதுச் செயலாளர்)
திரு. கணேசன் (இண்ட்ராஃப் தேசிய ஆலோசகர், மனித உரிமைகள் கட்சியின் தேசிய ஆலோசகர்)

மேலும் தகவல்களுக்கு நீங்கள் அழைக்க வேண்டிய எண்கள் :

திரு.கலை : 012 5637614
திரு. கனகசுந்தரம் : 017 4155449

Read more...

ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை (தொடர்ச்சி)

>> Tuesday, April 20, 2010



முதல் பாகம் : ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை

பல்வகை திறன்களைக் கைவரப் பெறாத நிலையில், குறைந்த சேமிப்பை கொண்டு தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த தோட்டப்புற சமூகத்தினர், நகர்ப்புறங்களில் ஆங்காங்கே பெருமளவில் புறம்போக்கு நிலங்களிலுள்ள குடிசைகளிலும் மலிந்த விலை வீடுகளிலும் வாழத் தொடங்கினர். இச்சமூகத்தினரில் பெரும்பான்மையினர் கீழ் நிலையிலான தொழில்களில் ஈடுபட்டுவந்ததோடு மட்டுமல்லாது கிடைக்கும் குறைந்த வருமானத்திற்குக்கூட அந்நியத் தொழிலாளர்களுடன் போட்டிப் போடும் சூழ்நிலை ஏற்பட்டது. இவர்களில் இளையோர்கள் பலர் புதிய நகர் வாழ்க்கைச் சூழலிலிருந்து அந்நியப்பட்டு நிற்பதாக கருதி வந்தனர். குறைந்த கல்வி மற்றும் சரியான தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் அவர்களில் சிலர் சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

ஆகமொத்தத்தில், மலேசியர்களின் சராசரி வருமான ஈட்டுத் தொகையிலிருந்து 30 சதவிகிதம் மட்டுமே வருமானமாக ஈட்டும் ஏழை இந்தியர்களை இரு வகுப்பாகப் பிரிக்கலாம். முதல் வகுப்பைச் சார்ந்தவர்கள், தோட்டப்புறங்களில் வசித்துக்கொண்டும் அங்கேயே தொழில் செய்துகொண்டும் இருப்பவர்களாவர். இந்த வகுப்பினர் எந்தவொரு அரசாங்கத்தின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்களிலும் இணைக்கப்படாதவர்களாவர். இரண்டாம் வகுப்பைச் சார்ந்தவர்கள், ஆரம்ப வாழ்க்கையை ரப்பர் தோட்டங்களில் தொடங்கி தற்போது நகர்ப்புறங்களில் அல்லது நகர்ப்புற அருகில் வசித்து தொழில் புரிந்து வருபவர்களாவர். இக்கட்டான சூழ்நிலையிலுள்ள ஏழை நகர்ப்புற இந்தியர்களும் மற்றும் பிற இன நகர்ப்புற ஏழைகளுமே ஒன்பதாவது மலேசிய திட்டத்தின்கீழ் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய வகுப்பினர் ஆவர்.


இவ்விரு வகுப்பினரும் எதிர்நோக்கிவரும் இக்கட்டான சமூகப் பொருளாதார பிரச்சனைகளை அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருந்தபோதிலும், இச்சமூகத்தினரை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் திட்டங்களையோ அல்லது மானிய ஒதுக்கீடுகளையோ போதுமானதாக அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவில்லை. இச்சமூகத்தின் எதிர்ப்பார்ப்புகள் ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டியது அவசியமாகிறது. புறநகர் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளில் சிறப்புக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணித்திட்டங்கள் ஆகியன இவர்களை இலக்காகக் கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டும். இச்சமூகத்தினர் பலடனடையும் வகையில் புதிய திட்டங்களானது செயல்வடிவம் கொள்வதை உறுதிச் செய்தலும் திட்ட வளர்ச்சி குறித்த அளவீடும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதே சமயத்தில் முறையான செயலாக்கம் மற்றும் அமுலாக்கக் கண்காணிப்பு திட்ட வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன.

மலேசிய இந்திய சிறுபான்மையினரை நாட்டின் முக்கிய வளர்ச்சித் திட்டத்தில் பங்கெடுக்கவைக்கும் முக்கியத் திட்டங்களை பொதுக் கொள்கைகள் ஆய்வு மையம் முன்வைக்கின்றது. நாட்டின் முக்கியத் துறைகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிதி ஒதுக்கீடுகள் கொண்டுவரப்பட வேண்டும். அதோடு, அமைச்சின் நேரடிப் பார்வையில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் திட்டங்கள் பாதிக்கப்பட்ட இந்திய சமூகத்தைச் சென்றடைவதை உறுதிச் செய்ய வேண்டும். தோட்டப்புறங்கள் அருகிலுள்ள கையிருப்பு நிலங்களை தோட்டப்புறத் தொழிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக ஒதுக்கி அவர்கள் விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்புத் தொழிலை மேற்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும். அதோடு, தோட்டப்புற சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கூட்டு முறையிலான விவசாயத் திட்டங்கள், கால்நடை வளர்ப்புத் திட்டங்கள், உணவு உற்பத்தி, அழகுப் பூக்கள் நடவு மற்றும் விற்பனை போன்ற திட்டங்களுக்காக அரசாங்கம் சிறப்பு நிலத்திட்டங்களை கொண்டுவர வேண்டும்.

மேலும் இளையோர்கள் எதிர்நோக்கும் சமூகச் சீர்கேடுகளை குறைப்பதற்கு ஒன்பதவாது மலேசியத் திட்டத்தின்கீழ் சிறார் பராமரிப்பு மையங்களை எழுப்புவதற்கும், குறைந்த வருமானம் கொண்டவர்கள் வசிக்கும் இடங்களில் குறிப்பாக மலிவுவிலை மாடிக் குடியிருப்பு இடங்களில் பாலர்ப் பள்ளிகளை எழுப்புவதற்கும் அரசாங்கம் தாராள நிதி ஒதுக்கீட்டினைச் செய்ய வேண்டும். குறைந்த வருமானமுடைய குடும்பத்திலுள்ள இந்திய மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முழு மானியம் பெறாத அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் முழு மானியம் பெறும் பள்ளிகளாக அரசாங்கம் மாற்ற வேண்டும். இவற்றைத் தவிர்த்து, நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா இயக்கங்களைப் பயன்படுத்தி சிறப்புப் பயிற்சித் திட்டங்கள், வாழ்க்கைக் கல்விகளான தொழிற்திறன் மற்றும் வியாபாரத் திறன் குறித்த பயிற்சிகளை தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்த இளையோர்களுகு வழங்க வேண்டும்.

ஏழை இந்திய சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியப் பங்காற்றுவதால், தரமான ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேற்கல்விக்கான வாய்ப்புகள் இவர்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய இளையோர்களுக்கு கல்வி மேற்கொள்ள இடங்கள் மற்றும் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்திட அரசாங்கம் முறையான நிதி ஒதுகீடுகள் செய்ய வேண்டும். இதன்வழி இவர்கள் நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்கு சரிசமமான பங்கை ஆற்றமுடியும். இறுதியாக தொழில் முனைவர் மேம்பாட்டிற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு மிக முக்கியமாகும். ஒதுக்கப்படும் இந்நிதியின்வழி சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவர்கள் சுலபமாக ஊக்குவிப்புக் கடன் பெற்று வியாபாரம் தொடங்கி சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிக்கோல வாய்ப்பு உள்ளது. அதே சமயம், நாட்டின் மொத்த பொருளாதார சொத்து மதிப்பில் இந்திய சமுதாயத்தின் பங்கு விழுக்காடு 3 சதவிகிதத்தை எட்டுவதற்கு இத்திட்டங்கள் உதவி புரியும்.

Read more...

ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை



மூலம் : சிறுபான்மை இனத்தவருக்கான வெற்றிகரமான குறியிலக்கை உறுதிச் செய்தல் : குறைந்த வருமானம் பெறும் மலேசிய இந்தியர்கள், ஒரு பார்வை. (பொதுக் கொள்கைகள் ஆய்வு மையம்)

1970-ஆம் ஆண்டுகள் தொடங்கி செயல்முறைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் பெருந்திட்டங்களின் வரைவுகளை ஆய்வு செய்யும்பொழுது, குடிப்பெயர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஏழை கிராமப்புற இந்தியர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதை பலகாலமாகவே அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகக் காட்டுகிறது. இந்நிலைமை குறித்த விழிப்புணர்வு இருப்பினும், நாளுக்கு நாள் பெருகிவரும் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக குறைந்த அளவிலான சில திட்டங்களே அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அதே சமயம், குறைந்த வருமானம் பெரும் இந்திய சமுதாயத்தினரின் ஏற்றத்திற்கு மானியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிகளும் அவை சென்றடைந்த வழிகளும் நிலைமையை சரி செய்வதில் தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது.

பெரும்பான்மை இந்தியர்கள் சமூக-பொருளாதார ரீதியில் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் தோட்டப்புறங்களில் நிலவிய பொருளாதாரச் சூழ்நிலைதான். சில பரம்பரைகளாகவே வேலை வாய்ப்பிற்கும், குடியிருப்பு வசதிக்கும் இந்திய வம்சாவளியினர் தோட்டப்புற ஆலைகளை நம்பியிருந்த சூழ்நிலை இருந்து வந்தது. இந்த தோட்டப்புற தொழிலாளர்கள் குறைந்த வருமானம் பெருபவர்களாகவும், அடிப்படை வசதிகள் குறைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களாகவும், முறையான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் அற்றவர்களாகவும் அதே சமயம், அவர்களின் பிள்ளைகள் குறைந்த அடிப்படை வசதிகள் கொண்ட தமிழ்ப் பள்ளிகளில் தங்களின் ஆரம்பக் கல்வியைப் பெறும் சூழ்நிலையும் இருந்து வந்தது. தோட்டப்புறங்களும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என அரசாங்கத்தால் முத்திரைக் குத்தப்பட்டதன் விளைவாக, 70-ஆம் மற்றும் 80-ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்கள் தோட்டப்புற மக்களைச் சென்றடையவில்லை. இருப்பினும், தோட்டத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என அரசாங்கம் வகைப்படுத்தியிருந்ததால், தோட்டப்புற குடியிருப்பு வசதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டங்களை அமுல்படுத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டு மிகக் குறைந்த அளவிலேயே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

1980-ஆம் ஆண்டு தொடங்கி நாட்டின் பொருளாதாரம் அதிவேகத்தில் முன்னேற்றத்தைக் கண்டுவந்த வேளையில், தோட்டப்புற இந்திய சமூகம் நாட்டின் பொருளாதார வெள்ளோட்டத்திலிருந்து பின்தள்ளப்பட்டும் அனைத்துவிதமான மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து ஒதுக்கப்பட்டும் பாதிப்பிற்குள்ளாயினர். கடந்த 20 ஆண்டுகளில் புதிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கும் தோட்டப்புற நிலங்கள் துண்டாடப்பட்ட சமயங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை இந்தியர்கள் குடிப்பெயர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தோட்டப்புறங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இவர்கள் தங்களின் வருமானம் ஈட்டும் தொழிலை மட்டும் இழக்கவில்லை, மாறாக, மேலும் முக்கியமாக குடியிருப்பு, வாழ்ந்தச் சூழல், அடிப்படைச் சலுகைகள், சமூக-கலாச்சார தொடர்புடைய வசதிகள் மற்றும் காலங்காலமாக தோட்டத் தொழிலாளர் சமூகம் கட்டியெழுப்பிய சமூக வலுவாக்க அரண் போன்றவற்றை இழக்க நேரிட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாது, தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் குடும்ப வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக தோட்ட நிறுவனம் வழங்கிய சிறு விவசாய நிலங்கள், கால்நடை வளர்ப்புக்கு வழங்கிய நிலங்கள் போன்றவற்றையும் இழந்துள்ளனர். தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடியமர்வு செய்யப்படும் தோட்டத் தொழிலாளர்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்பது முன்பே அறியப்பட்ட விடயமாகும். பெருமளவிலான கட்டாயக் குடியமர்விற்கு ஆளான தோட்டத் தொழிலாளர்கள் உளவியல் ரீதியில் பல பிரச்சனைகளையும் எதிர்நோக்கிய வேளையில், இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எந்தவொரு திறன் பயிற்சிகளையும் வழங்கியோ அல்லது மேம்படுத்தப்பட்ட குடியிருப்புச் சூழலில் இவர்களை மறுகுடியமர்வு செய்ததோ கிடையாது.

தொடரும்...

Read more...

சைட் இப்ராஹிமா அல்லது கமலநாதனா? – வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளரையே தேர்ந்தெடுங்கள்

>> Monday, April 19, 2010


உலு சிலாங்கூர் வாக்காளர்களுக்கு மனித உரிமைகள் கட்சி வழங்கும் அறிவுரைவாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளருக்கு மட்டுமே வாக்களியுங்கள், வெற்று வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளருக்கு வாக்களிக்காதீர்கள்

இவ்வாண்டிலேயே பல நம்பிக்கை வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும் காலமாக உலு சிலாங்கூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் விளங்குகின்றது. இம்முறை உலு சிலாங்கூர் மக்கள் இருபக்க அரசியல் கட்சிகளிடமும் விவேகத்துடன் காயை நகர்த்திக்காட்ட வேண்டும். இல்லையெனில், வெற்று வாக்குறுதிகளையும் பொய்யான தேர்தல் பரப்புரைகளை மட்டுமே உலு சிலாங்கூர் மக்கள் பெறப்போவது உறுதி.

வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளர்களுக்கே இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.

அண்மையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் தனது வாராந்திர ஆட்சிக்குழு கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களிடம் ஓர் அறிக்கை விடுத்திருந்தார். அதாவது அரசாங்க நிலங்களில் 15 வருடங்களாக வசித்துவரும் 1 லட்சம் புறம்போக்கு குடிசைவாசிகள் மற்றும், தற்காலிக குடியிருப்பு லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு சிலாங்கூர் மாநில பக்காதான் அரசு நிலப்பட்டா வழங்கவுள்ளதாகவும், அதே சமயம் கூடிய விரைவில் சிலாங்கூர் மாநிலத்தில் நிலவிவரும் நிலம், வழிப்பாட்டுத் தளங்கள், பள்ளிகள் மற்றும் சாலைகள் குறித்த பிரச்சனைகளுக்கு மாநில பக்காதான் அரசு தீர்வு காணவிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

நில விவகாரம் குறித்த வாக்குறுதியானது பக்காதான் மாநில மந்திரி புசாரின் வாக்குறுதியாகும்.

உண்மையிலேயே மலேசிய இந்திய ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் யாதெனில், அவர்களது பெயரிலேயே சொந்த நிலப்பட்டாக்கள் கிடைக்கப்பெற வேண்டும், தேசியப் பள்ளிகளைப் போலவே தமிழ்ப்பள்ளிகள் அனைத்திற்கும் சொந்த நிலங்களும் நிலப்பட்டாக்களும் வழங்கப்படவேண்டும், வழிபாட்டுத் தளங்கள் உள்ள நிலங்கள் உள்ளபடியே மக்களுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டும். இவையனைத்தும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் நடக்க வேண்டும். இதனைத் தவிர்த்து எடுக்கப்படும் வேறெந்த முடிவுகளும் நிச்சயம் மாற்றத்தினைக் கொண்டுவரப்போவதில்லை. இடைத்தேர்தலுக்குப்பின் வழக்கம்போல் நாம் காதால் கேட்டுப் புளித்துப்போன வெற்று வாக்குறுதிகள்தான் எஞ்சியிருக்கும்.

சாயிட் இப்ராஹிம் தயவு செய்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதித்து மனித உரிமைகள் கட்சி முன்வைக்கும் கோரிக்கைகள் நிறையவே உள்ளன. ஆனால், முதல் கோரிக்கையாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப் பள்ளிகளில் சொந்த நிலம் இல்லாத தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலப்பட்டாக்களைக் கொடுங்கள். ஆனால் இதற்கு நாங்கள் காத்திருக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரிந்த ஒன்றே.

மஇகாவும் அம்னோவும் இணைந்து வழங்கியுள்ள வாக்குறுதிகளில் ஒன்றான மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்களின் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்பதாகும். இந்த வாக்குறுதியானது இடைத்தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றப்படாவிட்டால் அனைத்தும் தேர்தலை முன்னிட்டே வைக்கப்படும் வெற்று வாக்குறுதிகளாகிவிடும். தேர்தல் முடிந்த பின்பு, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு எந்தவொரு காரணத்தையும் அவர்கள் கூறலாம். ”மைக்கா நிறுவனத்திற்கு இத்தனை கடன்கள் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாதுஅல்லது பங்குகளை அதிகப்படியாக நிர்ணயத்திருக்கின்றனர். எங்களால் 1 ரிங்கிட்டிற்கு 25 சென் மட்டுமே வழங்க முடியும், காரணம் பல எதிர்மறை விளம்பரங்களால் மைக்கா நிறுவனம் கடுமையாக பாதிப்பிற்க்குள்ளாகிவிட்டதுஎன காரணங்களை அடுக்கி தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

மலேசிய இந்திய ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் யாதெனில், மைக்கா பங்குதாரர்கள் ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு முன்பே போட்டப் பணங்களை மீண்டும் பெற வேண்டும். மஇகா/அம்னோ அப்பணங்களை ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பங்குதாரர்களுக்கு கொடுக்காவிடில், இனி எப்பொழுதும் அப்பணம் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

கமலநாதன் தயவு செய்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

மனித உரிமைகள் கட்சியின் நிலைப்பாடு என்னவெனில், 1984-ஆம் ஆண்டில் ரிம 1 வெள்ளிக்கு விற்கப்பட்ட பங்கின் தற்போதைய (2010) மதிப்பு ரிம 4 வெள்ளியாகும். எனவே, மைக்கா பங்குதாரர்களுக்கு தற்போதைய மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு பங்கிற்கு 4 வெள்ளி வீதம் பணம் கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள எந்தவொரு பட்டயக் கணக்கரிடமும் இவ்விடயம் குறித்து விசாரித்தால் இதே பதிலைத்தான் அவர்களும் கூறுவார்கள். தற்போது ஒரு பங்கிற்கு ரிம 1 வெள்ளி மட்டுமே கொடுக்கப்படும் என்று மஇகா அறிவித்துள்ளது. அப்படியென்றால் உண்மையான மதிப்பிலிருந்து 25 சதவிகிதம் மட்டுமே பங்குதாரர்களுக்கு வழங்கப்படுமாம். அம்னோ 106 மில்லியனுக்கு வாங்கப்போவதாகக் கூறும் மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை தற்போதைய மதிப்பை அடிப்படையாகக் கொண்டு 450 மில்லியனுக்கு வாங்குவதே நியாயம்.

இந்தத் தொகையானது பல பில்லியன் மதிப்பிலான நிறுவனங்களை அரசாங்கம் மீட்டெடுத்த தொகையைவிடச் சிறியதுதான். சில நிறுவன்ங்களை உதாரணமாகச் சொல்லலாம். மல்டி பர்பர்ஸ் ஹோல்டிங்ஸ், கொண்சோர்டியும் பெர்காபாலான் பெர்ஹாட், முன்னால் பிரதமர் மகாதீரின் மகன் நிர்வகிக்கும் நீர்க்கப்பல் போக்குவரத்து நிறுவனம், மலேசிய விமான போக்குவரத்து நிறுவனம் (மாஸ்). ரெனோங் பெர்ஹாட், தேசிய கழிவு நிர்வகிப்பு நிறுவனம், கோலாலம்பூரின் இரு பொது போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள் ஆகியன இப்பட்டியலில் அடங்கும். சிங்கபூரின்மோகன் ஸ்டான்லிநிறுவனத்தில் தென்கிழக்காசிய பொருளாதார ஆய்வியலாளராக பணியாற்றும் டேனியல் லியன் கூறுகையில், மலேசிய நாடு கடந்த 1980-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே சுமார் ரிம 100 பில்லியன் வெள்ளியை இழந்திருக்கிறது என்கிறார். இந்தத் தொகையோடு ஒப்பிடுகையில் 450 மில்லியன் பெரிய தொகை என்று கூறிவிடமுடியாது.

சைட் இப்ராஹிமா அல்லது கமலநாதனா?வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளரையே தேர்ந்தெடுங்கள்

கொடுத்த வாக்குறுதிகளை ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் நிறைவேற்றாத எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காதீர்கள்.
வாக்குத் தேர்வினை சுலபமாக வைத்துக் கொள்ளுங்கள்

நரகன்.

Read more...

சட்டத்தை மீறும் காவல்த்துறை - இண்ட்ராஃப் மறியல்

>> Tuesday, April 13, 2010



போராட்டம் தொடரும்...

Read more...

இந்திய சமுதாயம் எதிர்ப்பார்ப்பது என்ன? - உதயகுமார், ஆறுமுகம் விளக்கம்

>> Monday, April 12, 2010



Read more...

சொந்த நாட்டிலேயே கள்ளக்குடியேறிகளைப்போல் வாழ்க்கை!

>> Wednesday, March 17, 2010

ஏழை இந்திய மலேசியர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சனைகளில் முதன்மையாகத் திகழ்வது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை எனும் பிரச்சனைதான். சொந்த நாட்டிலேயே சுமார் ஒரு லட்சம் இந்திய மலேசியர்கள் கள்ளக்குடியேறிகளைப் போல் வாழ்ந்து வருகிறார்கள் என புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன. நாளுக்கு நாள் இப்பிரச்சனை தொடர்ச் சங்கிலியைப்போல் நீண்டுகொண்டே செல்கிறது.

அண்மையில் இண்ட்ராஃப் தலைமையிலான பிரித்தானிய மக்களவை கருத்தரங்கு நிகழ்வில், ஒரு தமிழர் குடும்பத்தின் அவல நிலையினை திரு.நரகன் பங்கேற்பாளர்களிடம் விளக்கிக்காட்டி, ஏழை இந்திய மலேசியர்கள் எவ்வாறு ஓரங்கட்டுதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதனை நன்கு படம்பிடித்துக் காட்டியிருந்தார்.

பினாங்கில் கம்போங் பாகான் செராய், பெர்மாத்தாங் பாவோ எனுமிடத்தில் மிக வரிய நிலையில் வாழ்க்கையை ஓட்டிவரும் அக்குடும்பத்தினரின் நேர்க்காணலின் ஒரு பகுதி இதோ :-

பாகம் 1

பாகம் 2


போராட்டம் தொடரும்...

Read more...

பிரித்தானிய மக்களவையில் இண்ட்ராஃப் (காணொளி)

>> Sunday, March 14, 2010

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 4


பாகம் 5


பாகம் 6


பாகம் 7


போராட்டம் தொடரும்...

Read more...

பிரித்தானிய மக்களவையில் மலேசிய இந்தியர்கள் மற்றும் கிழக்கு மலேசிய பழங்குடியினர் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்தான இண்ட்ராஃபின் விளக்கக்கூட்டம்.

>> Wednesday, March 10, 2010

10/03/10 திகதியன்று லண்டனில் பிரித்தானிய மக்களவை உறுப்பினர் திரு.வீரேந்திர சர்மாவின் துணையோடு இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி, இண்ட்ராஃப்பின் தேசிய ஆலோசகர் திரு. என்.கணேசன் ஒரு விளக்கக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மலேசிய இந்தியர்கள் மற்றும் கிழக்கு மலேசிய பூர்வீகக் குடினருக்கு எதிராக தொடர்ச்சியாக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கூட்டத்தில் திரு.கணேசன் மற்றும் திரு.வேதமூர்த்தியால் விளக்கப்பட்டது. தொடர்ந்து அம்னோ அரசாங்கத்தின்கீழ் நிகழ்ந்துவரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து அனைத்துலக ரீதியில் அதற்கான தீர்வினை விவாதிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக இவ்விளக்ககூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.







மேலும் படங்களைக் காண்பதற்கு இந்த இணைப்பைச் சுட்டவும் : பிரித்தானிய மக்களவையில் இண்ட்ராஃப்

போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP