மனித உரிமைக் கல்வி - தனி மனிதருக்கு உரிய உரிமைகள்

>> Friday, September 13, 2013



குடிமை உரிமைகள் (Civil Rights)


  • உயிர் வாழ்வதற்கான உரிமை
  • சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
  • தேசிய இனத்திற்கான உரிமை
  • நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை
  • வெளிப்படையான விசாரணைக்கான உரிமை
  • குற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை
  • (இலவச) சட்ட உதவிக்கான உரிமை
  • குற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை
  • உறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைத்தீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை.
  • ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை
  • மேல்முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை
  • மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை
  • தனது வீட்டில் தனியாக இருக்க உரிமை
  • தன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை
  • நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை
  • நீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை
  • தன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை
  • ஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமை
  • ஒரு நாட்டைவிட்டு வெளியேறுய்வதற்கான உரிமை

அரசியல் உரிமைகள்


  • கருத்துகளை வெளியிட உரிமை
  • கூட்டம் கூடுவதற்கான உரிமை
  • சங்கமாகச் சேருவதற்கான உரிமை
  • வாக்களிப்பதற்கான உரிமை
  • அரசியல் பங்கேற்புகான உரிமை
  • பொதுப்பணிகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான உரிமை

பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்

  • வேலைக்கான உரிமை
  • வேலையைத் தெரிவு செய்யும் உரிமை
  • சொத்து வைத்திருப்பதற்கான உரிமை
  • போதிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை
  • கல்வி பெறுவதற்கான உரிமை
  • சமூகப் பாதுகாப்புக்கான உரிமை
  • ஆயுள் காப்பீட்டுக்கான உரிமை
  • சமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை
  • அறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமை
  • சுகாதாரம், பாதுகாப்புக்கான உரிமை


குழுக்களின் உரிமைகள்

  • சமய ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)
  • கூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை
  • தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை
  • போராட்ட உரிமை
  • பணி நீக்கம் செய்யப்படுவதற்குமுன் முன்னறிவிப்புப் பெறும் உரிமை
  • பதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிப்புரிவதற்குமான உரிமை
  • வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி பெறும் உரிமை
  • சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை
  • நியாயமான ஊதியத்திற்கான உரிமை
  • வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை)


பெண்களுக்கான உரிமைகள்

  • சம ஊதியம் பெறுவதற்கான உரிமை
  • பாலியல் சமத்துவத்திற்கான உரிமை
  • தம்பதியருக்கிடையில் சமத்துவ உரிமை
  • சுரண்டலிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமை
  • கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை
குழந்தைகள், இளங்குற்றவாளிகளுக்கான உரிமைகள்

  • கல்விப் பெறுவதற்கான உரிமை
  • தொழிற்பயிற்சி மற்றும் வேலையிடைப் பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமை
  • கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புனர்வாழ்வுப் பெற உரிமை
  • மரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை
  • சித்திரவதை, சுரண்டல், கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை
  • வேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமை
  • விளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புப் பெறும் உரிமை
  • சமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமை
சிறைக்கைதிகளின் உரிமைகள்

  • சிறைக்கைதியாகப் பதிவு செய்யபடுவதற்கான உரிமை
  • சிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமை
  • சிறையில் தனியாகத் தங்கவைக்கப்படுவதற்கான உரிமை
  • போதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத் தேவையான வசதிகளுக்கான உரிமை
  • துணிமணிகள், படுக்கை, போதிய உணவு, தண்ணீர், மருத்துவ வசதி பெற உரிமை
  • பயிற்சி, விளையாட்டுக்கான உரிமை
  • கொடூரமான, கேவலமான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை
  • அதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும்  புகார்கள் கொடுப்பதற்கான உரிமை
  • குடும்பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதத் தொடர்பு, நேர்காணல் மூலம்)
  • வெளியுலகச் செய்திகளை தொடர்ந்து பெறுவதற்கான உரிமை
  • சிறைச்சாலையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை
  • மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை
  • சொந்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவதற்கான உரிமை
  • பெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை

Read more...

கொஞ்சம் விவேகத்தைக் கையாளுங்கள் - இண்ட்ராஃப் நினைவுறுத்தல்

>> Wednesday, September 11, 2013

மேலும் பல ஆலயங்களை தகர்ப்பதன்வழி இந்து ஆலயங்களின் பிரச்சனைகளை கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தீர்த்துவிடப்போவதில்லை. தலைநகர் ஜாலான் பி.ரம்லியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலய விவகாரத்தை கவனமாகவும் விவேகமாகவும் கையாள வேண்டியுள்ளது. இல்லையென்றால் அது தெங்கு அட்னானை மட்டுமல்லாது அவரின் முதலாளியான பிரதமர் நஜீப் துன் ரசாக்கையும் வெகுவாக பாதித்துவிடும்.

இன்று இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு கடந்தகாலங்களில் வகுக்கபட்ட தவறான கொள்கைகளே காரணம் என்பதனை பிரதமரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி அவர் சுட்டிக்காட்டிய தவறான கொள்கைகளில் ஒன்று இந்து ஆலய விவகாரங்கள் குறித்த கவனமான புரிதல் இல்லாததாகும். ஓர் ஆலத்தை உடைக்கும்பொழுது அங்குள்ள கற்கள், சுண்ணாம்பு மற்றும் சிலைகளை மட்டும் நீங்கள் அகற்றவில்லை, மாறாக நாட்டிலுள்ள பல லட்சம் சாதாரண மக்களின் அடிமனங்களையும் நீங்கள் துளைக்கிறீர்கள்.

 2008-ஆம் ஆண்டுவரை எண்ணிலடங்கா இந்து ஆலயங்கள் உடைப்பட்டதன்வழி இந்திய சமூகத்தின் ஆதரவு வெகுமளவில் சரியத் தொடங்கியது. 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு பாரிசான் நேசனல் நல்ல பாடத்தையும் கற்றுக் கொண்டது. அதே சாதாரண இந்தியனின் வாக்குதான் பாரிசான் நேசனல் 2013-ஆம் ஆண்டு புத்ரா ஜெயாவை கைப்பற்ற உதவியும் புரிந்தது. ஆனால் அவையனைத்தும் இன்று மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் ஏன் இந்து ஆலயங்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது? ஏன் தேவாலயத்திறோ, மசூதிக்கோ, சீனர் கோயிலுக்கோ இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதில்லை என ஆராயும்போது பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாததே அதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.

 இந்த காரணங்களினால்தான் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் திரு.வேதமூர்த்தியும் அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றார்.
இப்பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து வைத்திருக்கும் திரு.வேதமூர்த்தி, அதற்கான சிறந்த தீர்வுகளையும் அறிந்து வைத்திருக்கிறார். எனவே பதவியில் இருக்கும் அவரை கடமையாற்ற வழிவிடவேண்டும்.

அதைவிடுத்து, பல்வேறு பிரச்சனைகள் முறையாகக் கவனிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் கூட்டுப் பொறுப்பு என்ற பெயரில் அவரை வாய்மூடி இருக்கச் சொல்வது நியாயமில்லை.



 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு ஹிண்ட்ராஃப் உடனான கையெழுத்து உடன்படிக்கையின்படி தெங்கு அட்னான் இந்தியர்களுக்கான சிறப்புக் குழுவின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தி நாட்டில் உள்ள இந்து ஆலய மற்றும் இடுகாட்டுப் பிரச்சனைகளை கவனிக்க ஆவண செய்ய வேண்டும்.

 ஹிண்ட்ராஃப் செயல்திட்டத்தில் கையெழுத்திட்ட தெங்கு அட்னான் அதன் உள்ளடக்கங்கள் என்னவென்று குறைந்தபட்சம் படித்தாவது தெரிந்திருப்பார். இருப்பினும், ஹிண்ட்ராஃப் செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டுமொருமுறை நினைவுறுத்துகிறேன்.

 1.4 - இடப்பெயர்வுக்கு ஆளான இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வழிப்பாட்டுத் தளங்களும் இடுகாடுகளும்

 இடப்பெயர்வுக்கு ஆளான இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் இடுகாடுகள் எதிர்நோக்கும் சவால்களை களையும் சிறப்புத் திட்டங்கள் :

 1. முதன்மைக் குழுவின் கீழ் ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டு ESC-யின் மேற்பார்வையில் நாட்டிலுள்ள இந்து வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் இடுகாடுகள் அனைத்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அதன்பின் விவரமான பரிந்துரைகளின்படி அவை எதிர்நோக்கும் பிரச்சனைகளை களைய ஆவண செய்ய வேண்டும். 

2. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் யாதெனில், 2018-ஆம் ஆண்டிற்குள் எந்தவொரு இந்து வழிப்பாட்டுத் தளமும் இடுகாடும் சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் மட்டுமே அமைந்திருப்பதை உறுதி செய்வதாகும்.

  அமைதி கொள்ளுங்கள்

 தெங்கு அட்னான் அவர்களே, இப்பிரச்சனைகளுக்கான தீர்வு நீங்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கையிலேயே உள்ளது. எனவே அரசாங்கத்திடம் உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி இப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி செயல்படுங்கள். திரு.வேதமூர்த்தியை பணியில் அமர்த்துங்கள். அவர் அரசாங்கத்தில் இணைந்ததே இத்தகைய காரணங்களினால்தான்.

மீண்டும் ஒருமுறை ஹிண்ட்ராஃப் - பாரிசான் நேசனல் உடனான உடன்படிக்கையின் ஒரு சரத்தை உங்களுக்கு நினைவுறுத்துகிறேன்.

 பிரிவு 3 : ஐந்தாண்டுகால செயல்திட்ட பரிந்துரைகளை செயல்படுத்தும் கட்டுமானம். ”பிரதமர் துறையின் கீழ் ஒரு பிரத்தியேக குழு அமைக்கபட்டு, போதுமான நிதி ஒதுக்கிடுகளை வழங்கி அதனை முறையாகவும் விவேகமாகவும் செயல்திட்டங்களுக்காகப் பயன்படுத்த முழு அதிகாரம் வழங்கப்படும்.”

 “இந்த சிறப்புக் குழுவானது செயல்திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முழு பொறுப்பினையும் ஏற்று கண்காணிப்பாளாரகவும் மேற்பார்வையாளராகவும் இருந்து சம்பந்தபட்ட அரசாங்கத்தின் துறைகளின் வழி செயல்திட்டம் செயல்படுவதை உறுதி செய்யும்.”

 எனவே, தெங்கு அட்னான் அவர்களே, இந்து வழிப்பாட்டுத் தளங்களினால் உங்களுக்கு பிரச்சனை எழக்கூடாது என்று கருதினீர்கள் என்றால், இப்போது நீங்கள் கையாளும் முறையைக் கைவிடுங்கள். அமைதி பெறுங்கள். சற்று விவேகத்தைப் பயன்படுத்தி சரியான முறையைக் கையாளுங்கள்.

 இனியும் இந்நாடு இதுபோன்ற உணர்வுகளை மதிக்காத சம்பவங்களை தாங்கிக் கொள்ளாது.

நா.கணேசன்
ஹிண்ட்ராஃப் ஆலோசகர்

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP