'சிறீ லங்கா - கொலைக்களம்' - வாக்களியுங்கள்!

>> Wednesday, May 2, 2012

தொலைக்காட்சி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன்று செய்தி ஆவணப்படங்களில் ஒன்றான 'அலைவரிசை நான்கின் 'சிறீ லங்கா - கொலைக்களம்' எனும் செய்தி ஆவணப்படத்திற்கு உங்களின் வாக்குகளை அளியுங்கள். இச்செய்தியை முகநூல், மின்னஞ்சல் போன்ற மின்னூடகங்களின் வழி மக்களுக்கு அறியப்படுத்துங்கள். இதோ இந்த இணைப்பைச் சுட்டுங்கள் : http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

Read more...

இந்தோனேசிய நிலநடுக்கம் பினாங்கில் எதிரொலி!

>> Thursday, April 12, 2012

Read more...

தடியப்பனுக்கு சமூக நல இலாகா உதவி

>> Thursday, March 8, 2012

கடந்த நான்கு ஆண்டுகளாக கொள்கலனில் வாழ்க்கை நடத்திவந்த முதியவர் தடியப்பனுக்கு கடந்த 29-ஆம் திகதி பிப்ரவரியன்று சமூக நல இலாகாவின் உதவி கிடைத்தது. மாதத் தவணையில் அவருக்கு ரிம 300 கிடைக்கும்படி ஏற்பாடு செய்து கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றிகளை நவில்கிறோம்.



கொள்கலனில் வாழ்க்கை நடத்தும் முதியவர் குறித்த முந்தைய பதிவினைப் படிக்க இணைப்பைச் சுட்டுக : http://olaichuvadi.blogspot.com/2011/12/blog-post.html

Read more...

உரிமைக் குரல் - இண்ட்ராஃப் எழுச்சிப் பாடல்

>> Monday, February 20, 2012

Read more...

பினாங்குத் தமிழ்ப் பள்ளிகளுக்கு ‘பள்ளி மேலாளர் வாரியம்’

>> Thursday, February 9, 2012

சொந்த நிலம் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட கட்டிடங்கள் அமையாத தமிழ்ப்பள்ளிகளுக்கு ‘பள்ளி மேலாளர் வாரியம்’ அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த 54 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சித்து விளையாட்டுகளில் சிக்குண்டு கிடக்கும் தமிழ்ப்பள்ளிகளை விடுவித்து உரிய உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் ஒரு களமாக பள்ளி மேலாளர் வாரியம் விளங்கவிருக்கின்றது. பள்ளிகளின் நில மற்றும் மானிய விவகாரங்களை பொது மக்களின் துணைகொண்டு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கும் ஒரு குரலாக பள்ளி வாரியம் உருவாக்கம் காணவுள்ளது. இம்முயற்சியின் முதற்கட்டமாக பினாங்கிலுள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் வாரியம் அமைப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறுவதற்கு ஒரு விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பினாங்கு இண்ட்ராஃப், தமிழியல் நடுவம் மற்றும் தமிழ் அறவாரியம் இணைந்து நடத்தும் இவ்விளக்கக்கூட்டத்தில் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பொது நல இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர். இத்தகவலை பொதுமக்களுக்கு கொண்டுச் சேர்ப்பிக்கும் வகையில் கீழ்காணும் அறிக்கைகளை நகலெடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.




Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP