பிரித்தானிய மக்களவையில் மலேசிய இந்தியர்கள் மற்றும் கிழக்கு மலேசிய பழங்குடியினர் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்தான இண்ட்ராஃபின் விளக்கக்கூட்டம்.

>> Wednesday, March 10, 2010

10/03/10 திகதியன்று லண்டனில் பிரித்தானிய மக்களவை உறுப்பினர் திரு.வீரேந்திர சர்மாவின் துணையோடு இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி, இண்ட்ராஃப்பின் தேசிய ஆலோசகர் திரு. என்.கணேசன் ஒரு விளக்கக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

மலேசிய இந்தியர்கள் மற்றும் கிழக்கு மலேசிய பூர்வீகக் குடினருக்கு எதிராக தொடர்ச்சியாக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அக்கூட்டத்தில் திரு.கணேசன் மற்றும் திரு.வேதமூர்த்தியால் விளக்கப்பட்டது. தொடர்ந்து அம்னோ அரசாங்கத்தின்கீழ் நிகழ்ந்துவரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து அனைத்துலக ரீதியில் அதற்கான தீர்வினை விவாதிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக இவ்விளக்ககூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.







மேலும் படங்களைக் காண்பதற்கு இந்த இணைப்பைச் சுட்டவும் : பிரித்தானிய மக்களவையில் இண்ட்ராஃப்

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP