பினாங்கில் அம்னோ, பெர்காசா குண்டர் கும்பலின் அராஜகம்!

>> Wednesday, June 29, 2011

நேற்று இரவு 9.00 மணிக்கு பினாங்கு இண்ட்ராஃப் மக்கள் சக்திக்கு சோசலிச கட்சியிடமிருந்து ஓர் அவசர அழைப்பு வந்தது. அம்னோ மற்றும் பெர்காசா குண்டர் கும்பல் காவல் நிலையத்தின் வெளியே திரண்டிருக்கும் 40 சோசலிச கட்சியினருக்கும் கைதானவர்களின் குடும்பத்தினருக்கும் மருட்டல் விடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அச்சமயம் பிறை அலுவலகத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த இண்ட்ராஃபின் வாராந்திர சந்திப்புக் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு அனைவரும் கெப்பாலா பாதாசை நோக்கி விரைந்தோம்.

சுமார் 200க்கும் மேற்பட்ட அம்னோ மற்றும் பெர்காசா குண்டர்கள் காவல் நிலையத்தின் முன்பு கூச்சலிட்டுக் கொண்டு சாலையை வழிமறித்துத் திரண்டிருந்தனர். காவல்த்துறையினரோ வயதானவர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்காது நடப்பதைக் கண்டும்காணாதது போல் நின்றுகொண்டிருந்தனர்.

அன்று நடைப்பெற்ற அப்பரபரப்பான சம்பவத்தின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

vidivelli July 13, 2011 at 4:44 PM  

nalla pathuvu,,
vaalththukkal..

can you come my said?

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP