புவா பாலா ஓவியக் கண்காட்சி

>> Monday, December 21, 2009



முத்தியாரா ஓவியக் கண்காட்சியகத்தின் ஏற்பாட்டில் நேற்றுபுவா பாலா நினைவலைகள்எனும் கருப்பொருளை தாங்கிய ஓவியக் கண்காட்சி தொடங்கியது. 20-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதிவரை நடைப்பெறவுள்ள இக்கண்காட்சியைக் காண பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். பினாங்கு இந்தியர்களின் பாரம்பரிய கிராமமான புவா பாலாவை கடந்த செப்தெம்பர் மாதமன்று மாநில அரசாங்கம் மற்றும் மேம்பாட்டாளர்கள் இணைந்து தரைமட்டமாக்கி அங்குள்ள மக்களை விரட்டியடித்தனர். இதன்வழி அங்கு பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய ஆடம்பர அடுக்குமாடி கட்டிட பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகின்றன.

200 ஆண்டுகளாய் பிரவுன் தோட்டத்தில் வியர்வையையும் உதிரத்தையும் உதிர்த்து வாழ்ந்த இந்திய மக்களுக்காக கொடுக்கப்பட்ட 6.2 ஏக்கர் நிலமும் அங்கு படர்ந்திருந்த பசுமையும், இயற்கையாய் தேங்கியிருந்த நிலத்தடி நீரும் முற்றிலும் அழிக்கப்பட்டதன் வழி ஒரு சரித்திரம் நம் புறக்கண்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. அச்சரித்திர சான்றுகள் இன்று ஓவியங்களின் வடிவில் உயிர்தெழுந்து நம் உணர்வலைகளை தட்டியெழுப்பப் புறப்பட்டிருக்கின்றன.

அப்பாரம்பரிய கிராமம் உடைபடுவதற்கு ஒருவாரம் முன்பாக, 13 ஓவியக் கலைஞர்கள் அக்கிராமத்தின் உயிரோட்டத்தை தூரிகையியால் வார்த்தெடுத்த ஓவியங்கள் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கண்காட்சியினை முனைவர் டத்தோ அன்வார் ஃபசால் அதிகாரப்பூர்வமாக நேற்று திறந்து வைத்தார். அந்நிகழ்வின் காணொளி காட்சி கீழே :



முத்தியாரா ஓவியக்கண்காட்சியகத்தின் முகவரி :


118, Lebuh Armenian,
10200 Pulau Pinang, Malaysia.

அலைப்பேசி எண்கள் : 604-262 0167

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP