பூஜாங் பள்ளத்தாக்கை உலகப் பாரம்பரியச் சின்னமாக பிரகடனப்படுத்துக!

>> Saturday, December 28, 2013

அன்பின் வாசகர்களே, அண்மையில் பூஜாங் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த சண்டி 11-ஐ, பொறுப்பற்ற நில மேம்பாட்டாளர் நிறுவனத்தினர் சட்டவிரோதமாக உடைத்து அப்புறப்படுத்தியிருக்கின்றனர். 1970-ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு மறுசீரமைப்புச் செய்யப்பட்ட இந்த சண்டியானது கடந்த 43-ஆண்டுகளாக ரப்பர் மற்றும் செம்பனை பயிரிடும் தனியார் நிலத்தில் பாதுகாக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கெடா மாநில நில அலுவலகம் கொடுத்த அனுமதியின் பேரில் சௌஜானா செண்ட்.பெர்ஹாட் எனும் வீடமைப்பு மேம்பாட்டாளர் நிறுவனம் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சண்டியை சட்டவிரோதமாக உடைத்து தள்ளியிருக்கின்றனர். இன்றுவரை தேசிய பாரம்பரிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இச்சட்டவிரோத செயலுக்காக மேம்ப்பாட்டளர் நிறுவனம் மீது எந்தவொரு சட்ட வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பொதுமக்களிடமிருந்து எழுந்த எதிரொலிகளின் விளைவாக சண்டி 11 மீண்டும் அதே இடத்தில் எழுப்பப்படும் என கெடா மாநில அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை. தென் கிழக்காசியாவிலேயே மிகப் பழமையான நாகரிகமான கடாரத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் இந்த பூஜாங் பள்ளத்தாக்கை யுனேஸ்கோ உடனடியாக உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பதன்வழி, இப்பாரம்பரியங்களை நம் அடுத்த தலைமுறையினர்கள் பார்த்து அறித்துகொள்வதற்காக பாதுகாப்பாக விட்டுச் செல்ல முடியும். எனவே, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 2014-ல் பாரிஸ் நகரில் இயங்கும் யுனேஸ்கோ தலைமையகத்தில் ஒரு மனு அளிக்கப்படவுள்ளது. இந்த மனுவுக்கு ஆதரவாக 10,000 மலேசியர்களின் கையெழுத்துகளை வாங்குவதற்காக கையெழுத்து வேட்டையும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தகவல்களை கண்ணுறும் அன்பர்கள் உடனடியாக கீழ்காணும் பாரங்களை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு மலேசியர்களின் கையெழுத்துகளை வாங்கி, அந்த படிவங்களை savebujangvalley@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு 31 ஜனவரி 2014-குள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Dear Malaysian, We need you to be our pillar by tendering your signature to give support to our initiative to pursue petition for URGENT intervention by UNESCO to urge the Federal Government of Malaysia, Kedah State Government and Malaysia National Heritage Department to immediately initiate the necessary action plans to protect, preserve, conserve and listing theBujang Valley archaeological site in World Heritage List. And make all proactive efforts to revisit the UNESCO recommendation proposal which was submitted in 1987 to the Federal Government of Malaysia.

In the heart of all Malaysian, The Bujang Valley is wealth of our ancestors and it is our legacy from the past, what we live with today, and what we pass on to future generations. Our cultural and natural heritages are both irreplaceable sources of life and inspiration. Please feel pride of our heritage and come forward to save our heritage from taken away from us systematically. Before it is too late, let we act now! Let us together YOU & ME with support of our beloved family and friends regardless of race and religion to be part of this 10,000 signatures campaign.

The petition will be handed over to UNESCO in Paris by Mr.Saravanan from Belgium in February 2014. Please download the attached signature form and send us back the forms via email : savebujangvalley@gmail.com before 31st January 2014.

சயாம்-பர்மா மரண ரயில்வே திட்டத்தில் மலாயாத் தமிழர்களின் பங்கு

>> Wednesday, October 30, 2013

கடந்த அத்தோபர் 19-ஆம் தேதி பினாங்கு காந்திஜி மண்டபத்தில் சயாம் - பர்மா மரண ரயில்வே திட்டம் மற்றும் தேசிய இந்திய இராணுவத்தில் மலாயாத் தமிழர்களின் பங்கு எனும் தலைப்பில் உரை நிகழ்வு நடந்தேறியது. பினாங்கு பாரம்பரிய மையம் ஏற்று நடத்திய இந்நிகழ்வில் கியோட்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.டேவிட் போகட் சிறப்பு உரையாற்றினார். அவரின் உரையின் சில பகுதிகள் காணொளியாகத் தொகுக்கப்பட்டு இங்கு வழங்கப்பட்டுள்ளது.

மனித உரிமைக் கல்வி - தனி மனிதருக்கு உரிய உரிமைகள்

>> Friday, September 13, 2013



குடிமை உரிமைகள் (Civil Rights)


  • உயிர் வாழ்வதற்கான உரிமை
  • சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
  • தேசிய இனத்திற்கான உரிமை
  • நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை
  • வெளிப்படையான விசாரணைக்கான உரிமை
  • குற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை
  • (இலவச) சட்ட உதவிக்கான உரிமை
  • குற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை
  • உறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைத்தீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை.
  • ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை
  • மேல்முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை
  • மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை
  • தனது வீட்டில் தனியாக இருக்க உரிமை
  • தன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை
  • நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை
  • நீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை
  • தன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை
  • ஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமை
  • ஒரு நாட்டைவிட்டு வெளியேறுய்வதற்கான உரிமை

அரசியல் உரிமைகள்


  • கருத்துகளை வெளியிட உரிமை
  • கூட்டம் கூடுவதற்கான உரிமை
  • சங்கமாகச் சேருவதற்கான உரிமை
  • வாக்களிப்பதற்கான உரிமை
  • அரசியல் பங்கேற்புகான உரிமை
  • பொதுப்பணிகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான உரிமை

பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்

  • வேலைக்கான உரிமை
  • வேலையைத் தெரிவு செய்யும் உரிமை
  • சொத்து வைத்திருப்பதற்கான உரிமை
  • போதிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை
  • கல்வி பெறுவதற்கான உரிமை
  • சமூகப் பாதுகாப்புக்கான உரிமை
  • ஆயுள் காப்பீட்டுக்கான உரிமை
  • சமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை
  • அறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமை
  • சுகாதாரம், பாதுகாப்புக்கான உரிமை


குழுக்களின் உரிமைகள்

  • சமய ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)
  • கூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை
  • தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை
  • போராட்ட உரிமை
  • பணி நீக்கம் செய்யப்படுவதற்குமுன் முன்னறிவிப்புப் பெறும் உரிமை
  • பதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிப்புரிவதற்குமான உரிமை
  • வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி பெறும் உரிமை
  • சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை
  • நியாயமான ஊதியத்திற்கான உரிமை
  • வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை)


பெண்களுக்கான உரிமைகள்

  • சம ஊதியம் பெறுவதற்கான உரிமை
  • பாலியல் சமத்துவத்திற்கான உரிமை
  • தம்பதியருக்கிடையில் சமத்துவ உரிமை
  • சுரண்டலிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமை
  • கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை
குழந்தைகள், இளங்குற்றவாளிகளுக்கான உரிமைகள்

  • கல்விப் பெறுவதற்கான உரிமை
  • தொழிற்பயிற்சி மற்றும் வேலையிடைப் பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமை
  • கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புனர்வாழ்வுப் பெற உரிமை
  • மரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை
  • சித்திரவதை, சுரண்டல், கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை
  • வேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமை
  • விளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புப் பெறும் உரிமை
  • சமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமை
சிறைக்கைதிகளின் உரிமைகள்

  • சிறைக்கைதியாகப் பதிவு செய்யபடுவதற்கான உரிமை
  • சிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமை
  • சிறையில் தனியாகத் தங்கவைக்கப்படுவதற்கான உரிமை
  • போதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத் தேவையான வசதிகளுக்கான உரிமை
  • துணிமணிகள், படுக்கை, போதிய உணவு, தண்ணீர், மருத்துவ வசதி பெற உரிமை
  • பயிற்சி, விளையாட்டுக்கான உரிமை
  • கொடூரமான, கேவலமான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை
  • அதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும்  புகார்கள் கொடுப்பதற்கான உரிமை
  • குடும்பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதத் தொடர்பு, நேர்காணல் மூலம்)
  • வெளியுலகச் செய்திகளை தொடர்ந்து பெறுவதற்கான உரிமை
  • சிறைச்சாலையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை
  • மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை
  • சொந்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவதற்கான உரிமை
  • பெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை

கொஞ்சம் விவேகத்தைக் கையாளுங்கள் - இண்ட்ராஃப் நினைவுறுத்தல்

>> Wednesday, September 11, 2013

மேலும் பல ஆலயங்களை தகர்ப்பதன்வழி இந்து ஆலயங்களின் பிரச்சனைகளை கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தீர்த்துவிடப்போவதில்லை. தலைநகர் ஜாலான் பி.ரம்லியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலய விவகாரத்தை கவனமாகவும் விவேகமாகவும் கையாள வேண்டியுள்ளது. இல்லையென்றால் அது தெங்கு அட்னானை மட்டுமல்லாது அவரின் முதலாளியான பிரதமர் நஜீப் துன் ரசாக்கையும் வெகுவாக பாதித்துவிடும்.

இன்று இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு கடந்தகாலங்களில் வகுக்கபட்ட தவறான கொள்கைகளே காரணம் என்பதனை பிரதமரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி அவர் சுட்டிக்காட்டிய தவறான கொள்கைகளில் ஒன்று இந்து ஆலய விவகாரங்கள் குறித்த கவனமான புரிதல் இல்லாததாகும். ஓர் ஆலத்தை உடைக்கும்பொழுது அங்குள்ள கற்கள், சுண்ணாம்பு மற்றும் சிலைகளை மட்டும் நீங்கள் அகற்றவில்லை, மாறாக நாட்டிலுள்ள பல லட்சம் சாதாரண மக்களின் அடிமனங்களையும் நீங்கள் துளைக்கிறீர்கள்.

 2008-ஆம் ஆண்டுவரை எண்ணிலடங்கா இந்து ஆலயங்கள் உடைப்பட்டதன்வழி இந்திய சமூகத்தின் ஆதரவு வெகுமளவில் சரியத் தொடங்கியது. 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு பாரிசான் நேசனல் நல்ல பாடத்தையும் கற்றுக் கொண்டது. அதே சாதாரண இந்தியனின் வாக்குதான் பாரிசான் நேசனல் 2013-ஆம் ஆண்டு புத்ரா ஜெயாவை கைப்பற்ற உதவியும் புரிந்தது. ஆனால் அவையனைத்தும் இன்று மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் ஏன் இந்து ஆலயங்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது? ஏன் தேவாலயத்திறோ, மசூதிக்கோ, சீனர் கோயிலுக்கோ இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதில்லை என ஆராயும்போது பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாததே அதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.

 இந்த காரணங்களினால்தான் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் திரு.வேதமூர்த்தியும் அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றார்.
இப்பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து வைத்திருக்கும் திரு.வேதமூர்த்தி, அதற்கான சிறந்த தீர்வுகளையும் அறிந்து வைத்திருக்கிறார். எனவே பதவியில் இருக்கும் அவரை கடமையாற்ற வழிவிடவேண்டும்.

அதைவிடுத்து, பல்வேறு பிரச்சனைகள் முறையாகக் கவனிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் கூட்டுப் பொறுப்பு என்ற பெயரில் அவரை வாய்மூடி இருக்கச் சொல்வது நியாயமில்லை.



 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு ஹிண்ட்ராஃப் உடனான கையெழுத்து உடன்படிக்கையின்படி தெங்கு அட்னான் இந்தியர்களுக்கான சிறப்புக் குழுவின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தி நாட்டில் உள்ள இந்து ஆலய மற்றும் இடுகாட்டுப் பிரச்சனைகளை கவனிக்க ஆவண செய்ய வேண்டும்.

 ஹிண்ட்ராஃப் செயல்திட்டத்தில் கையெழுத்திட்ட தெங்கு அட்னான் அதன் உள்ளடக்கங்கள் என்னவென்று குறைந்தபட்சம் படித்தாவது தெரிந்திருப்பார். இருப்பினும், ஹிண்ட்ராஃப் செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டுமொருமுறை நினைவுறுத்துகிறேன்.

 1.4 - இடப்பெயர்வுக்கு ஆளான இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வழிப்பாட்டுத் தளங்களும் இடுகாடுகளும்

 இடப்பெயர்வுக்கு ஆளான இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் இடுகாடுகள் எதிர்நோக்கும் சவால்களை களையும் சிறப்புத் திட்டங்கள் :

 1. முதன்மைக் குழுவின் கீழ் ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டு ESC-யின் மேற்பார்வையில் நாட்டிலுள்ள இந்து வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் இடுகாடுகள் அனைத்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அதன்பின் விவரமான பரிந்துரைகளின்படி அவை எதிர்நோக்கும் பிரச்சனைகளை களைய ஆவண செய்ய வேண்டும். 

2. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் யாதெனில், 2018-ஆம் ஆண்டிற்குள் எந்தவொரு இந்து வழிப்பாட்டுத் தளமும் இடுகாடும் சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் மட்டுமே அமைந்திருப்பதை உறுதி செய்வதாகும்.

  அமைதி கொள்ளுங்கள்

 தெங்கு அட்னான் அவர்களே, இப்பிரச்சனைகளுக்கான தீர்வு நீங்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கையிலேயே உள்ளது. எனவே அரசாங்கத்திடம் உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி இப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி செயல்படுங்கள். திரு.வேதமூர்த்தியை பணியில் அமர்த்துங்கள். அவர் அரசாங்கத்தில் இணைந்ததே இத்தகைய காரணங்களினால்தான்.

மீண்டும் ஒருமுறை ஹிண்ட்ராஃப் - பாரிசான் நேசனல் உடனான உடன்படிக்கையின் ஒரு சரத்தை உங்களுக்கு நினைவுறுத்துகிறேன்.

 பிரிவு 3 : ஐந்தாண்டுகால செயல்திட்ட பரிந்துரைகளை செயல்படுத்தும் கட்டுமானம். ”பிரதமர் துறையின் கீழ் ஒரு பிரத்தியேக குழு அமைக்கபட்டு, போதுமான நிதி ஒதுக்கிடுகளை வழங்கி அதனை முறையாகவும் விவேகமாகவும் செயல்திட்டங்களுக்காகப் பயன்படுத்த முழு அதிகாரம் வழங்கப்படும்.”

 “இந்த சிறப்புக் குழுவானது செயல்திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முழு பொறுப்பினையும் ஏற்று கண்காணிப்பாளாரகவும் மேற்பார்வையாளராகவும் இருந்து சம்பந்தபட்ட அரசாங்கத்தின் துறைகளின் வழி செயல்திட்டம் செயல்படுவதை உறுதி செய்யும்.”

 எனவே, தெங்கு அட்னான் அவர்களே, இந்து வழிப்பாட்டுத் தளங்களினால் உங்களுக்கு பிரச்சனை எழக்கூடாது என்று கருதினீர்கள் என்றால், இப்போது நீங்கள் கையாளும் முறையைக் கைவிடுங்கள். அமைதி பெறுங்கள். சற்று விவேகத்தைப் பயன்படுத்தி சரியான முறையைக் கையாளுங்கள்.

 இனியும் இந்நாடு இதுபோன்ற உணர்வுகளை மதிக்காத சம்பவங்களை தாங்கிக் கொள்ளாது.

நா.கணேசன்
ஹிண்ட்ராஃப் ஆலோசகர்

நலிந்துவரும் தமிழர் இசைக் கலை

>> Saturday, March 2, 2013

முக்கியப் புள்ளிகளின் தலைகளின் மீது கைவத்த திரு.குணாளம்.

பாரம்பரிய ‘சொங்கொக்’ தொப்பி தயாரிப்பாளர்

கதிஜாவிற்கு உதவுங்கள்!

>> Saturday, February 23, 2013

மகிழ்ச்சியான கால்கள் - தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு புதிய காலணிகள்

பினாங்கு வாடகை வண்டி ஓட்டுநர் எதிர்நோக்கும் சவால்கள்.

இருநூறு வெள்ளிக்காகவா இந்த அமளி துமளி?

தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மையை குலைக்கும் மலேசியக் கல்விப் பெருந்திட்டம்!

>> Friday, February 15, 2013

கடந்தாண்டு கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025, தமிழ்ப்பள்ளிகளின் நிலைத்தன்மையை குலைக்ககூடியது என தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் திரு.க.ஆறுமுகம் அண்மையில் மக்கள் நிருபர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார். இதோ அப்பேட்டியின் காணொளி :

வீதியில் படுத்துறங்கும் தூதர்

>> Thursday, February 7, 2013

பினாங்கு மாநிலத்தை பொருத்தமட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு பினாங்கை அறிமுகப்படுத்தும் தூதர்களாக இந்த முச்சக்கர சைக்கிளை ஓட்டிவருபவர்கள் திகழ்கிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு ஒதுங்குவதற்க்குக் கூட ஒரு கூரை இல்லாதது மனதிற்கு வேதனையளிக்கும் ஒரு விடயமாகும். திரு.முனியாண்டி (வயது 64) கடந்த 42 வருடங்களாக முச்சக்கர சைக்கிளை ஓட்டி வருகிறார். அவர் மக்கள் நிருபருக்கு அளித்த பேட்டி இதோ..

முருகனுக்கு காவடியேந்தும் ஆஸ்த்ரேலியர்

>> Monday, February 4, 2013

வருடந்தோரும் தைப்பூசத்தன்று பத்து மலையில் காவடியெடுக்கும் ஆஸ்த்ரேலியரான முனைவர் கார்ல் வடிவேலா பெல் உடனான ஒரு நேர்க்காணல்.

.

காணொளி - விஸ்வரூப திரைப்பட தடை குறித்து மலேசியத் தமிழர்கள் அதிருப்தி!

>> Wednesday, January 30, 2013

பினாங்கில் இடைநிலைத் தமிழ்ப் பள்ளி அமைக்கக்கோரி கையெழுத்து வேட்டை

>> Tuesday, January 29, 2013



 பினாங்கு இந்து சங்கத்தின் அறிக்கை தொடக்கத் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து இடைநிலைப்பள்ளிகளுக்குப் போகும் தமிழ் மாணவர்கள் தமிழைத் தொடர்ந்து படிப்பதற்குப் பலவகையில் தடைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை :-

 1. எல்லா இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ் வகுப்புகள் நடைப்பெறுவதில்லை.

 2. ஒரு சில பள்ளிகளில் தான் வகுப்பு நேரத்திலேயே தமிழ் பாடங்கள் போதிக்கப்படுகின்றன.

 3. அப்படியே நடைப்பெற்றாலும் ஏனோ தானோ என்றுதான் நடைபெறுகிறது. 

4. POL வகுப்புகள் மார்ச் மாதத்திற்குப் பிறகுதான் நடத்தப்படுகின்றன. மூன்று மாத காலம் நேர விரையம் செய்யப்படுகிறது.

 5. ஒரு சில இடைநிலைப்பள்ளிகள் தமிழ் மாணவர்கள் தமிழ் மொழிப் பாடம் PMR/SPM தேர்வில் எடுப்பதை ஆதரிப்பதில்லை.

 6. SPM இலக்கிய பாடம் பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படுவதில்லை. அதனால் இலக்கிய பாடம் எடுக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

 7. SPM தேர்வில் 10 + 2 தமிழ் இலக்கணம் மற்றும் தமிழ் இலக்கியம் சேர்ந்து 12 பாடம் எடுத்தாலும் JPA உபகாரக் கல்வி நிதிக்கு தமிழ் பாடத்திற்கு அங்கீகாரம் தரப்படுவதில்லை.

 இவை யாவையும் கருத்தில் கொண்டு தமிழை மேம்படுத்தும் பொருட்டும் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் பினாங்கு மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமையுமானால் ஆர்வமுள்ள மாணவர்கள் இதைப் பயன்படுத்தி இடைநிலைத் தமிழ்க் கல்வியைத் தொடர பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே மத்திய அரசு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டுமாய் பொதுமக்களும் அரசு சாரா இயக்கங்களும் கேட்டுக் கொள்கிறோம். இதை பினாங்கு இந்து சங்க முழுமனதோடு முன்மொழிகிறது.

ஆஸ்கார் விருதிற்காக முதன்முறையாக தமிழ்ப்பாடல் தேர்வு!

>> Friday, January 11, 2013

அண்மையில் உலகெங்கிலும் வெளியீடு கண்டு மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்ற ’லைஃப் ஒப் பாய்’ எனும் திரைப்படம் 2013-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுப் பட்டியலில் 11 வித பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ளது. 

சிறந்த இயக்குனர்

 சிறந்த திரைப்படம்

 சிறந்த திரைப்படவியல்

 சிறந்த திரைப்பட ஒளிப்பதிவு

 சிறந்த அசல் இசை

 சிறந்த அசல் திரைப்பாடல்

 சிறந்த உற்பத்தி வடிவமைப்பு

 சிறந்த திரைப்பட ஒலிப்பதிவு

சிறந்த ஒலிகலப்பு

 சிறந்த திரைப்பட காட்சி வடிவமைப்பு

 சிறந்த ’தழுவல் செய்யப்பட்ட’ திரைக்கதை

 இதில் சிறந்த அசல் திரைப்பாடலுக்காக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதிப் பாடிய ‘கண்ணே கண்மணியே’ எனும் தமிழர்களின் தாலாட்டுப் பாடல் ஆஸ்கார் விருதிற்காக முன்மொழியப்பட்டுள்ளது. இதன்வழி ஆஸ்கார் விருதிற்காக முன்மொழியப்பட்ட முதல் தமிழ்ப்பாடல் எனும் பெருமையை பாம்பே ஜெயஸ்ரீ தமிழர்களுக்காகப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதே சமயம் சிறந்த அசல் இசைக்காகவும் இப்பாடல் முன்மொழியப்பட்டுள்ளது. இப்பாடல் ஆஸ்கார் விருதினைப் பெற வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம். மைக்கல் டானா இசையமைப்பில் பாம்பே ஜெயஸ்ரீயின் மயங்க வைக்கும் குரலில் இதோ தமிழர்களின் தாலாட்டுப் பாடல்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP