இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர்கள் இடைநீக்கம்!

>> Friday, April 17, 2009


தற்சமயம் நம் நாடு அரசியல் மற்றும் சமூக ரீதியில் பல்வகையான மாற்றங்களை எதிர்நோக்கியுள்ள வேளையில், இண்ட்ராஃப் இயக்கமும் தாம் முன்னெடுத்துள்ள போராட்டத்தை புதிய பரிணாமத்திற்கு இட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முன்னேறத் துடிக்கும் மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளும் தேவைகளும் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளையும் இசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இண்ட்ராஃப் வழக்கறிஞர்களின் விடுதலையையும் விஞ்சியுள்ளது.

நடப்புச் சூழலையும் மாற்றங்களையும் கருத்தில்கொண்டு, இண்ட்ராஃப்பின் 10 நடப்பு ஒருங்கிணைப்பாளர்கள் வகித்துவரும் பொறுப்புகளை தற்காலிகத்திற்கு நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இண்ட்ராஃபின் தேசிய ஒருங்கிணைப்பாளர், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர், தகவல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரின் பொறுப்புகளும் அடங்கும். இம்முடிவு உடனடியாக அமுலாக்கத்திற்கு வருகிறது. இண்ட்ராஃப்பின் அனைத்து ஆதரவாளர்களும் இயக்கத்தின் பெயரால் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.. அதேவேளை, அறிக்கை வெளியிட எண்ணம் கொண்டவர்கள் இயக்கத்தின் பெயரால் அல்லாமல், தனிமனிதனாக அறிக்கையை வெளியிடலாம்.

இவ்விடைப்பட்ட காலத்தில், ‘இண்ட்ராஃபின்’ கவனத்திற்கு உடனடியாக கொண்டுவர வேண்டிய விடயங்களை, தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கும் மூவரின் பார்வைக்கு கொண்டுவரவும்.

திரு.கண்ணன் : 012-2690024

திரு.கணேசன் வேலு : 012-5158762

திரு.தனா : 019- 3571820


அடுத்தகட்டமாக, இண்ட்ராஃப்
ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்தப் பின்பு, மலேசிய இந்தியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்வகையில், இயக்கத்தை ஏற்று வழிநடத்திச் செல்ல புதியவொரு நிர்வாகக் குழு நியமிக்கப்படும்.

வேதமூர்த்தி பொன்னுசாமி
இண்ட்ராஃப் தலைவர்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP