நாங்களும் படம் காட்டுவோம்..

>> Tuesday, October 27, 2009

அம்னோவைக்காட்டிலும் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நிரூபிக்கும் வகையில், பினாங்கு மாநில டி..பி தலைவர்களும் மண்டோர்களும் முன்னால் புவா பாலா கிராமவாசியான திருமதி சாந்தா ஏற்பாடு செய்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு நமக்கெல்லாம் படம் காட்டியிருக்கின்றனர். நுஸ்மெட்ரோ வழங்கிய சலுகையைப் பெற்றுக் கொண்டவர்களில் திருமதி சாந்தாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரவுன் கார்டனில் வசித்துவரும் திருமதி சாந்தா லிம் குவான் எங், இராமசாமி, ஆர்.எஸ்.என் இராயர், இரவீந்திரன், தனசேகரன் போன்றவர்களுக்கு பொன்னாடை இட்டு தீபாவளி விருந்து அளித்திருக்கிறார்.

புவா பாலா கிராம பக்கமே எட்டிப் பார்த்திடாத லிம் குவான் எங் மெனக்கெட்டு புவா பாலா அருகிலுள்ள பிரவுன் கார்டனுக்கு தீபாவளி விருந்துண்ண சென்றுள்ளது அவரின் தாராள மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

மக்கள் ஓசை (26 அத்தோபர் 2009, பக்கம் 14)


படம் காட்டுவது தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP