இன்றைய மலேசிய நண்பனின் தலைப்புச் செய்தி !

>> Wednesday, October 31, 2007




பாடாங் ஜாவா தாமான் கருப்பையாவில் ஆலயம் உடைப்பு.

(ஜி.பரந்தாமன்)

ஷா ஆலாம் அக்.31-

ஷா ஆலாம், பாடங் ஜாவா தாமான் கருப்பையா மாரியம்மன் ஆலயம் நேற்றுக் மாலை ஷா ஆலாம் மாநகர் மன்றத்தினரால் உடைக்கப்பட்டது.

35 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை உடைப்பதற்கு காலை முதல் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காது மாலை 4.00 மணி வாக்கில் நிறைவேறியது.

ஆலயத்தை தற்காக்கும் போராட்டத்தில் பெண்மணி உட்பட அறுவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைகலப்பு மற்றும் கல் வீச்சில் போலீசார் ஒருவருக்கு மண்டையில் படுகாயமும் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் சிலருக்கு கை மற்றும் கால்கள் முறிந்ததாக தெரிய வருகிறது.

இதனிடையே ஆலய தற்காப்பு போராட்டத்தில் இறங்கிய இந்திய ஆடவர் ஒருவருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. ஆலயத்தை உடைக்க ஷா ஆலாம் மாநகர் மன்றம் சுபாங் ஜெயா நகராண்மைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்ப்பட்ட அமலாக்க பணியாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்களும் கலகத் தடுப்பு போலீசாரும் ஆலயத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர்.

காலை முதல் மாலை வரை நடந்தேறிய இந்த போராட்டத்தில் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் இப்பகுதியில் தலைகாட்டவில்லை எனும் தகவல் அறிந்து காலையிலேயே ஆலயப்பகுதிக்கு விரைந்த ஷா ஆலாம் தொகுதி காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.சுப்பையா, ஷா ஆலாம் மாநகர் மன்ற உறுப்பினர் சு.முருகவேல் மற்றும் இளைஞர் பகுதி தலைவரும் வழக்கறிஞருமான எம்.முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பல மணி நேரம் பேசியும் ஆலய உடைப்புக்கு கால அவகாசம் கோரியும் எவ்வித பயனும் அளிக்கவில்லை. இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மலேசிய இந்து முன்னணி இயக்கத்தின் (இண்ட்ராவ்) செயலாளர் ரகு, வழக்கறிஞர் கணபதி மற்றும் சிவநேசன் ஆகியோர் ஷா ஆலாம் மாநகர் மன்றத்தலைவர் ஆகியோரிடம் ஆலயத்தை தற்காக்கும் முயற்சி எதுவும் பயனின்றி போனது.






அப்பகுதியில் சட்டதிற்குப் புறம்பாக அமைத்திருந்த சுமார் 308 வீடுகளை மட்டுமே அகற்றக் கோரி ஷா ஆலாம் உயர்நீதி மன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நேற்று வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. வீடுகளை அகற்றும் நடவடிக்கையின்போது எவ்வித அசம்பாவிதமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை. ஏனெனில், புறம்போக்கு வீட்டில் வசித்து வந்தவர்கள் தொடர்ந்த வழக்கு தோல்வியைக் கண்டது. ஹரிராயாவுக்கு முன்னரே இப்பகுதி மக்களுக்கு ஷா ஆலாம் மாநகர் மன்றம் வீடுகளைக் காலி செய்துவிட்டனர்.

இறுதியாக ஆலய உடைப்பு பகுதிக்கு வந்து சேர்ந்த ம.இ.கா கிள்ளான் தொகுதி தலைவர் அலெக்ஸ் தியாகராஜன், பி.எஸ் மணியம் மற்றும் எஸ்.எஸ் மணியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேசியும் எவ்வித பயனளிக்காது போனது. ஆனால் உடைப்பின் போது இடையே கற்களும் மரக்கட்டைகளும் கண்ணாடித் துண்டுகளும் வீசப்பட்டன.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கடும் ஆட்சேபத்திற்கு மத்தியில் ஆலயம் உடைகப்பட்டது.

நேற்று முன் தினம் நடைப்பெற்ற சந்திப்பில் இந்த ஆலயம் உடைபடாது என்று மாநில மந்திரி புசார் கூறியதாகத் தெரிய வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர்களான மொக்தர் டஹலான் மற்றும் கமலா கணபதியும் கலந்துக் கொண்டுள்ளனர். இதற்கிடையே, ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ சிறீ ச்.சாமிவேலு, ஆட்சிக்குழு உறுப்பினர் கமலா கணபதி மற்றும் சிலர் மாலை 5.00 மணிக்கு ஆலயம் உடைப்பட்ட இடத்திற்கு விரைந்னர். ஆனால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதால், அவர் அங்கிருந்து பாதுகாப்புக் கருதி உடனே அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் கிள்ளான் பெரிய மருத்துவமனையில் காயமுற்ற போலீஸ்காரர் உட்பட மேலும் சிலரைச் சென்றுப் பார்த்தார்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP