புவா பாலா மக்களே! கொடுக்கறத வாங்கிட்டு போங்க..!

>> Thursday, August 13, 2009

இன்று பாமரர் முதல் படித்தவர்வரை புவா பாலா கிராம நில விவகாரம் குறித்து பெரும்பான்மையினர் கேட்கும் கேள்வி "கொடுக்கறத வாயமூடிக்கிட்டு வாங்கிட்டு போக வேண்டியதானே?"

சில நாட்களுக்குமுன், நான் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் மின் தூக்கியில் நுழைந்த சமயம் என் அண்டை வீட்டுக்காரைப் பார்க்க நேர்ந்தது.

நான் கைகளில் தமிழ் நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர் என்னிடம் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்.

"என்னையா இது அநியாயமா இருக்கு!"

அவர் எதைப்பற்றி கூறுகிறார் என்பதனை யூகித்தவனாய், ஏதும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு நாளிதழைப் புரட்டத் தொடங்கினேன்.

"சும்மா கொடுக்கறத வாங்கிட்டு போக வேண்டியதானே இவனுங்க..."

அவரை நிமிர்ந்துப் பார்த்தேன்.

சில நிமிடங்களில் மின் தூக்கி கீழ் மாடியை வந்தடைந்தது.

மின் தூக்கியிலிருந்து வேர்க்க விறுவிறுக்க என் அண்டை வீட்டுக்காரர் வெளியேறியக் காட்சியைக் கண்டு புன்னகைத்தவாரே மீண்டும் நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தேன்.

அவர் ஒருவேளை மனதில் நினைத்திருக்கக் கூடும்.

"இந்த சனியன் கிட்ட இப்படியொரு கேள்விய கேட்டு மாட்டிகிட்டோமே...!"

அவரிடம் அப்படி என்ன பேசினேன் என்று நான் கூற ஆரம்பித்தால் நிறைய தணிக்கைகள் செய்ய வேண்டும் என்பதனால், கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிப் பேட்டியைக் கேட்டு புரியாத சில விடயங்களை அறிந்து புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூடிய விரைவில் ஆங்கில மொழிப் பேட்டியும் வெளியிடப்படும்..

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 4


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. ( குறள் எண் : 423)

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP