இண்ட்ராஃப் ஊடக அறிக்கை 15/01/09

>> Thursday, January 15, 2009



அம்னோ அரசும் அதன் குறுகியச் சிந்தனையும்

'2008-ஆம் ஆண்டில் மலேசிய இந்தியர்களின் நிலை ஓராய்வு மற்றும் மனித உரிமை மீறல்கள்' எனும் ஓர் ஆய்வறிக்கையை சென்னையில் இண்ட்ராஃப் விநியோகித்தது குறித்து காரசாரமான விமர்சனங்கள் சில நாட்களாகவே நாட்டின் பல முக்கிய ஊடகங்களில் சூடு பிடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, உண்மையை மூடி மறைப்பதில் அம்னோ தலைமையில் இயங்கிவரும் மக்களவை உறுப்பினர்கள் அதிக முனைப்பு காட்டிவருவதாய் தெரிகிறது.

அம்னோவின் ஊடகங்கள் கூறிவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் போல் அல்லாது, முறையான ஆய்வுகளுடனும் ஆதாரங்களின் அடிப்படையிலுமே இண்ட்ராஃப் இவ்வாய்வறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அம்னோவும் அதன் கைக்கூலிகளும் எடுத்துக்கொண்ட செயல்பாடுகளினால் நன்மையடைந்தவர்கள் மக்களா அல்லது இவர்களா என நமக்குள் கேள்விகள் எழுகின்றன?

இண்ட்ராஃப் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் முப்பதுக்கும் மேலான முறைக்கேடுகளும் அராஜகங்களும் ஆதாரப்பூர்வமாக படம்பிடித்துக் காட்டியிருக்கும்பொழுது, அம்னோ தலைமையில் இயங்கிவரும் மக்களவை உறுப்பினர்கள் அப்பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி பேசவேண்டுமே ஒழிய, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி உண்மைகளை மூடி மறைக்கலாகாது.

அண்மையில் அமைச்சர் டாக்டர் சுப்ரா வெளியிட்ட அறிக்கையில்திரு.வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கை பொறுப்பற்றச் செயலாகும். கடந்த சில மாதங்களில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கெல்லாம் பங்கம் விளைவித்துவிட்டது இவரது செயல்என்று கூறியிருப்பதைப் பார்க்கும்பொழுது, மிரட்டும் பாணியில் இவரது அறிக்கை அமைந்ததோடு மட்டுமல்லாது, 52 வருடங்களாக நமக்கு அம்னோ போடும் எலும்புத் துண்டுகளை பெற்றுக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்கிற பாணியிலும் பேசியிருக்கிறார்.

கங்காணிகளைப்போலவும் மேய்ப்பாளர்களைபோலவும் சாமிவேலுவும் சுப்ராவும் நடந்துக் கொள்வதை விட்டுவிட்டு மலேசிய இந்தியர்களின் நலன்களின்பால் அக்கறைக் கொண்டு, காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டுவரும் மலேசிய இந்தியர்களுக்காக குரல் கொடுக்க முனைவதோடு மக்களின் உண்மையான பிரதிநியாக இருப்பதுதான் சிறந்தது.

என் ஆய்வறிக்கையை புறக்கணிக்கும் அம்னோ அரசை என்னோடு திறந்த வாதத்திற்கு வருமாறு அதன் பிரதிநிதிகளை அழைக்கிறேன். இந்த திறந்த வாதமானது பிரித்தானியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ நடைப்பெற வேண்டும்.

காலங்காலமாக மக்களின் உரிமைக்குரலை அடக்குவதில் கைத்தேர்ந்த அம்னோ அரசு, தன்னுடைய அகம்பாவத்தால் நாட்டில் மலேசிய இந்தியர்களுக்கு எதிராக நடைப்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கண்டுங்காணாது இருந்துவருகிறது.

அரசாங்கத்தின் நடைமுறைக்கொள்கைகளால் பாதிக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட மலேசிய இந்தியர்களாகட்டும், அல்லது இன்னும் வறுமையில் வாடிவரும் மலாய் முசுலீம் இனத்தவராகட்டும், இவர்களுக்கு மக்களின் நலன்களில் அக்கறைக் கொண்ட, மக்களுக்காக பயமின்றி, வேறுபாடுகள் களைந்து செயலில் இறங்கக் கூடிய அரசாங்கம் கிடைத்திட வேண்டும் என்பதே எங்களின் அவா.

நாட்டின் எல்லா இனமக்களும் இன, சமய வேறுபாடுகள் களைந்து நம்மிடையே நிலவிவரும் உண்மைகளை ஆய்ந்து, மனிதத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டுமாய் இண்ட்ராஃப் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

திரு.வேதமூர்த்தி
இண்ட்ராஃப் தலைவர்
சென்னை

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP