மனித உரிமைப் போராளி தீக்குளிப்பு!

>> Friday, January 30, 2009


இலங்கைத் தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவெறி இராணுவம் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில், தமிழகத்தைச் சார்ந்த திரு.முத்துகுமார் எனும் மனித உரிமைப் போராளி, சென்னை நுங்கம்பாக்கம் சாசுத்திரி பவன் எதிர்புறம் நேற்று தீக்குளித்து மாண்டுள்ளார். இவர் தீக்குளிப்பதற்கு முன்பு அங்குள்ளவர்களிடம் தான் தயாரித்த ஓர் துண்டு அறிக்கையையும் விநியோகித்துள்ளார். அவ்வறிக்கையைப் படிக்க கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டவும்.

தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

தமிழ் சமுதாயத்தின்பால் தான் கொண்டுள்ள பற்றை இதுபோன்ற செயல்களின் மூலம்தான் நிரூபிக்க வேண்டும், அல்லது கண்டனம் தெரிவிக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. மனித உரிமைப் போராளிகள் விடுதலையை நோக்கி கடைசிவரை போராடுவதுதான் அழகு. அதுதான் தாம் சார்ந்துள்ள சமுதாயத்திற்கும் நன்மை.

அன்னாரின் உயிர் துறப்பு சமூகத்திற்கு ஏற்பட்ட ஓர் இழப்பாகும். மனித உரிமைப் போராளிகள் இனி இதுபோன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்.


நக்கீரன் படச்சுருள்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP