27 இண்ட்ராஃப் போராட்டவாதிகளுக்கு நிதியுதவித் தேவைப்படுகிறது..

>> Monday, September 22, 2008


மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளை உலகிற்கு படம்பிடித்துக் காட்டிய 25 நவம்பர் இண்ட்ராஃப் பேரணியன்று கைதான 27 போராட்டவாதிகளுக்கு, அண்மையில் தலா ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை நீதிமன்றம் விதித்திருக்கிறது. பலமுறை நீதிமன்றத்திற்கு சென்றுவர வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்ட இப்போராட்டவாதிகளுக்கு, நீதிபதியின் ஆணை மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், பலவிதமான மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கும் இவர்களுக்கு நிதிப் பிரச்சனையும் ஒருபுறம் வாட்டி வருகிறது.

இழந்த உரிமைகளை மீட்கப் போராட துணிந்தவர்களை மனோவியல் ரீதியில் பலவீனப்படுத்த அம்னோ கையாண்ட இழிவான உத்தி மிகவும் கண்டிக்கத்தக்கது. வீட்டிற்கும் நீதிமன்றத்திற்கும் பலமுறை அலையவிட்டு, நீதிமன்ற வழக்கை பல மாதங்களுக்கு இழுத்தடித்து, அபராதத்தை அவர்கள் தலையில் கட்டி அவர்களை பலவிதமான மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவர்கள் வேலையும் பறிபோகும் நிலைக்கு கொண்டுவந்துவிட்ட அம்னோவையும் அதன்கீழ் செயல்பட்டுவரும் நீதிமன்றத்தையும் நாம் மன்னிக்கவே கூடாது.

இவர்களை இப்படி தொடர்ந்து தண்டித்தால், இனி போராட்டம் மறியல் என வீட்டு வாசல் வெளியேகூட தலைக்காட்ட மாட்டார்கள் என்ற எண்ணம் அம்னோவிற்கு..!

அம்னோவின் பகல் கனவை நாம் உடைத்தாக வேண்டும்..! போராட்டம் என்று இறங்கிவிட்டாலே நாம் அனைவரும் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகி விட்டோம். எனவே, பேரணியில் கைதானவர்களை உங்களின் குடும்ப உறுப்பினராக நினைத்து அவர்களின் குடும்பச் சுமையைக் குறைக்க நிதியுதவி செய்யும்படி இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்.

27 போராட்டவாதிகளின் அபராதத் தொகையான ரி.ம 27,000-ஐ நீதிமன்றத்திற்குச் செலுத்த பொதுமக்களிடமிருந்து நிதியுதவி எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரி.ம27,0000க்கும் மேல் நிதி திரண்டால், அந்நிதியை பேரணியில் கைதாகி அபராதம் விதிக்கப்படாத மற்ற போராட்டவாதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். தொடர்ந்து நடைப்பெறவிருக்கும் இவ்வழக்கில் இண்ட்ராஃப் போராட்டவாதிகளுக்கு மேலும் என்னென்ன சோதனைகளை அம்னோ வழங்கவிருக்கின்றதோ தெரியவில்லை, எனவே அவர்களனைவருக்கும் நிதியுதவி கிடைத்தால், அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சற்று மனச்சாந்தியோடு அன்றாட வாழ்க்கையை நடத்துவர்.

கீழ்கண்ட வங்கிக் கணக்கில் உங்களின் நிதியுதவியை காசோலையாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.

வங்கிக் கணக்கில் திரளும் நிதிகளின் முழுத் தகவல்கள் தமிழ் நாளேடுகளில் இடம்பெறும். இந்நிதி திரட்டு குறித்த முதல் அறிக்கை வருகின்ற அக்டோபர் மாதம் 20-ஆம் திகதி தமிழ் நாளேடுகளில் பிரசுரிக்கப்படும்.

வங்கி : பப்ளிக் வங்கி (PUBLIC BANK)

பயனாளரின் பெயர் : – பி.தர்மராசு & அரிதாசு வேலு (இணை சேமிப்புக் கணக்கு)

வங்கி கணக்கு எண் – 4-5235622-34

அலைப்பேசி எண்கள் : 019- 330 5197 , 012-3323490


அம்னோ, அதன்கீழ் செயல்படும் நீதித்துறை, காவல்த்துறை போன்றத் தரப்பிலிருந்து அச்சுறுத்தலையும் உளவியல் ரீதியான தண்டனைகளையும் கண்டு அனைவரும் மனச்சோர்வு அடைந்துவிட வேண்டாம். நம்முடைய மனச்சோர்வு அம்னோவின் வெற்றியென ஒரு தெளிவு நமக்குள் வேண்டும்.

இதுவரை நீதிமன்ற வழக்கில் இண்ட்ராஃப் போராட்டவாதிகளுக்கு தங்கும் இடம், உணவு, பணம் கொடுத்து உதவிய நல்ல உள்ளங்களுக்கு இவ்வேளையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இண்ட்ராஃப் இயக்கத்தின் உயிர்ப்பை தொடர்ந்து தோல்கொடுத்து வழிநடத்துவோமாக....

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP