மெழுகுவர்த்தி ஏந்தியப் பேரணி இனிதே நடந்தேறியது..

>> Sunday, September 28, 2008

மலேசியாவின் சனநாயகக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டுவரும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை அகற்றவும், மலேசிய இந்தியர்களுக்கு உரிமைக் குரல் கொடுத்த ஐந்து இண்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்கவும் கோரி நடத்தப்பட்ட இண்ட்ராஃபின் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி எந்த ஒரு தடங்கலும் இன்றி இனிதே நடைப்பெற்று முடிந்தது.

இரவு 7.30 மணியளவில் மெர்டேக்கா சதுக்கத்தில் கூடியிருந்த இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கு அச்சதுக்கத்தில் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்ட வேளையில் அனைவரும் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோர்ட்டுமலைப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாக நடந்தனர்.

இந்த ஊர்வலத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா கினி படச்சுருள்



போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP