உலு லங்காட் ஆலயம் உடைப்பு!! மக்கள் கூட்டணியின் நாடகம்!!

>> Monday, September 22, 2008

எண் 3,சாலான் பாரு (உலு லங்காட் சாலை), உலு லங்காட், கம்போங் தாசேக், 68000 அம்பாங், சிலாங்கூர் எனும் முகவரியில் அமைந்திருந்த சிறீ மகா காளியம்மன் ஆலயம் கடந்த 9-ஆம் திகதி செப்தெம்பர் மாதம் அம்பாங் ஜெயா நகராட்சி மன்றத்தினரால் எந்தெவொரு முன்னறிவிப்புமின்றி உடைக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் மக்கள் கூட்டணியைச் சார்ந்தவர்கள் ஆலய நிர்வாகத்தினரிடம், "இவ்விடயத்தை இண்ட்ராஃப் இயக்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டாம், அவர்களுக்குத் தெரிந்தால் மக்கள் கூட்டணியின் செல்வாக்கு குறைந்துவிடும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். பூபாலன் சிறீதரன் அம்பாங் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளருக்கு இவ்விடயம் கடந்த 19-ஆம் திகதிதான் தெரியவந்துள்ளது. இண்ட்ராஃபிற்கு இவ்விடயம் தெரிய வந்ததும் மக்கள் கூட்டணியின் இந்தியப் பிரதிநிகள் சிலர் பூபாலனை அழைத்து பிரச்சனையை பெரிதுப்படுத்தாது கண்ணும் காதும் வைத்ததுபோல் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கேட்டுக் கொண்டதாக பூபாலன் தெரிவித்தார்.

தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.செயதாசு நேற்று ஆலய நிர்வாகத்தினரையும் மக்கள் கூட்டணியின் இந்தியப் பிரதிநிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் ஆலயத்திற்கு புதுநிலம் கொடுத்து புது ஆலயத்தை எழுப்பித்தருவார்கள் என மக்கள் கூட்டணியின் இந்தியப் பிரதிநிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

இனிமேல் இவர்களின் வாக்குறுதிகளை நம்பி புண்ணியம் இல்லை. எழுத்துப் பூர்வமாக எதையும் கேட்டால்தான் சரிபடும்..! பாரிசானுக்கு விழுந்த அடியை மக்கள் கூட்டணி மறக்க வேண்டாம்..!!


Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

VIKNESHWARAN ADAKKALAM September 22, 2008 at 1:25 PM  

:(

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP