'கீக் த ஃபெல்லா' வலைப்பதிவாளர் கைது!!!

>> Wednesday, September 17, 2008


படாவி தற்காப்பு அமைச்சை எடுத்ததுதான் எடுத்தார், 'கீக்தஃபெல்லா' எனும் வலைப்பதிவின் பதிவர் சியேட் அசீடி கோத்தா பாரு கிளந்தானில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாரிசான் அரசாங்கத்தை தனது கேலிச் சித்திரங்களின் வழியும் சினிமா விளம்பரங்களில் அரசியல் பிரமுகர்களின் படங்களை இணைத்து வெளியிட்டும் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சியேட்டின் மனைவி பாரியா இசாக்கை அணுகிக் கேட்டதற்கு, தம் கணவரை தேசநிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்ததாகக் கூறினார். அண்மையில் அவர் மலேசியக் கொடியை தலைக் கீழாக வலைப்பதிவுகளில் இடம்பெறச் செய்யும் இயக்கம் ஒன்றினைத் தொடங்கி பலரை அவ்வாறு செய்யத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

சுப.நற்குணன்,மலேசியா. September 17, 2008 at 10:30 PM  

நண்பர் சதீசு,

செம்மொழி பதிவைப் பார்த்துள்ளேன். நல்ல முயற்சி. தமிழுக்கு செய்யும் அரும் பணி. அப்பதிவை நிருவகிக்கும் தங்களுக்கும் மற்ற வலைப்பதிவர்களுக்கும் பாராட்டுகள்.

தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி. என்னால் எந்த வகையில் பங்களிக்க முடியும் என தெரிவிக்கவும். இணையத்தில் இன்பத் தமிழை இணைந்து வளர்ப்போம்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP