திரேசா கோக் விடுதலை..!

>> Friday, September 19, 2008


இன்று பிற்பகல் மணி 1 அளவில் செபுத்தே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். திரேவர்சு காவல் நிலையத்தில் விடுதலைக்கான சமாச்சாரங்களை முடித்துக் கொண்டு தனது வழக்கறிஞரான சங்கரா நாயருடனும், தனது உதவியாளரான மேண்டி ஊய்யுடன் பிற்பகல் 1.40 மணியளவில் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தார்.

ஈப்போவில் மதிய உணவை உட்கொண்டிருந்த வேளையில், மதியம் 12.56 மணியளவில் தமக்கு திரேசா கோக் கைப்பேசியிலிருந்து அழைப்பு வந்ததாக திரு.லிம் கிட் சியாங் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். திரேசா கோக்கை விரைவில் விடுதலை செய்தது தமக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சின் சியூ நாளிதழ் நிருபருக்கு அடுத்து திரேசா கோக் ஒருவாரக் காவலில் இருந்து இன்று விடுதலையாகியிருக்கும் வேளையில் ராஜா பெட்ராவின் நிலைமைதான் இன்னும் நமக்குத் தெரியவில்லை. கூடியவிரைவில் அவரும் இண்ட்ராஃப் தலைவர்களும் விடுதலையாக வேண்டும் என இறைவனைப் பிராத்திப்போம். நாடு முழுவதிலும் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் தொடர்ந்து நடைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விடுதலை அடைந்த திரேசா கோக்கிற்கு வாழ்த்துகள்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

3 கருத்து ஓலை(கள்):

Anonymous September 19, 2008 at 3:55 PM  

wow, very special, i like it.

Anonymous September 19, 2008 at 4:05 PM  

i think you add more info about it.

Anonymous September 19, 2008 at 4:14 PM  

what happened to the other one?

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP