உங்கள் சிந்தனைக்கு...

>> Thursday, September 4, 2008

தாராளமயக் கொள்கை

இனவெறி
மதவெறி
பணவெறி
எங்கள்
ஆட்சிக்கானக் கொள்கை...

அராஜகம்
சர்வதிகாரம்
அடக்குமுறை
எங்களின்
எழுதப்படாத சாசனம்

ஊடகச் சுதந்திரம்
மக்கள் சுதந்திரம்
எங்கள்
நரி தந்திரத் தணிக்கை...

ஆட்சியில் அமர்த்திய
உங்களை
ஆட்டிப் படைப்பதே
எங்கள் முழுமுதற் சேவை...

***

யானைக் காது

நீதிக் கேட்டு
வீதியிலே
பாமரர்களின் கூக்குரல்...

உரிமைக் கேட்டு
ஒடுக்கப்பட்டவர்கள்
ஒப்பாரி...

ஏழைகளின்
புலம்பலோசைத்
திக்கெங்கும் ஒலிக்கிறது...

"எனக்கு
யானைக் காது"...
என்ற பிரதமர்
செவிடராய் கும்பகர்ணன்!

***

இடைத்தேர்தல்

இத்துப் போன
பலகை வீடு
இளிச்சபடி இருக்க

பித்துப் பிடித்தச்
சொந்தக்காரன்
தீ வைத்தான்...

"அய்யோ... அய்யய்யோ
இருக்குற ஒடச்சல் வீட்ட
நெருப்புக்கு தர்றீயே
நீ என்ன பைத்தியமா?"
அலறினாள் பொண்டாட்டி...

"போடீ
போக்கத்தவளே
நடுரோட்டுல போய்
ஒப்பாரி வை.."

இடைத்தேர்தல்
வந்துருச்சி!!!

(ஏ.எஸ்.பிரான்சிஸ், சுவீடன்)
khileefrancis@yahoo.com

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP