அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க... ஜனநாயகமா.. பணநாயகமா..?

>> Sunday, March 2, 2008

மலேசியா ஒரு ஜனநாயக நாடு, அது பணநாயக நாடாக மாறிவிடக் கூடாது. பணத்தைக் கொண்டு ஓட்டை வாங்கிவிடலாம் என பல அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒருவகையில் அது உண்மையாகவே நடைமுறையில் இருந்து வருகின்றது. ஒரு சிலர் பணத்திற்காக தன்னுடைய வாக்குரிமையை குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிடுகின்றனர். இன்னும் சிலர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்துக் கொண்டு ஆளும் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டால் தன்னுடைய வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என பயந்துக் கொண்டு ஓட்டு போடுகிறார்கள். இது தேவை இல்லாத பயம், இது அவர்களுடைய தெளிவின்மையையே காட்டுகிறது. மலேசிய மக்களில் பலருக்கு உண்மையான ஜனநாயகம் என்றால் என்ன என்பது தெரியாமல் இருக்கின்றது. மக்களாகிய நம்மிடம் தான் சக்தி இப்போது, இல்லையென்றால் அரசியல்வாதிகள் நம் குடியிருப்பைத் தேடி வந்து ஓட்டு கேட்பார்களா?

எனவே, முதலில் நீங்கள் ஓட்டு போடுவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில
முக்கிய விஷயங்கள் உள்ளன. வேட்பாளரின் பின்னனி, மற்றும் அவர் சமுதாயத்திற்கு எவ்வாறு உழைத்திருக்கிறார், என்ன செய்திருக்கிறார், அதையும்விட ஒரு தலைமைத் துவத்திற்கு அச்சாணியாக விளங்கும் நல்ல பண்புகள் அவரிடம் உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவற்றிற்கிடையில் அரசாங்கத்தின் போக்குகளும், நடவடிக்கைகளும் மற்றும் எதிர்க்கட்சியினரின் சேவைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இதோ, தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் காலஞ்சென்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஜனநாயகத்தையும், தலைவனிடம் இருக்க வேண்டிய தகுதிகளையும் பற்றி ஓரிரு வரிகளில் நமக்குத் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.

Get this widget | Track details | eSnips Social DNA


யோசித்து வாக்களியுங்கள்...

மக்களாட்சி ஓங்கட்டும்...!

மக்கள் சக்தி...!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP