சாமிவேலுவிற்கும் அவருடைய கோமாளிகளுக்கும் நமது நன்றி.. :)

>> Thursday, March 13, 2008



நேற்று பலரையும் சிரிக்க வைக்கும்படி ஓர் அதிர்ச்சிகரமான சம்பவத்தை கேள்விப்பட நேர்ந்தது. அதனால் தூக்கமும் சரியாக வரவில்லை. அதிர்ச்சியான சம்பவம் பெரும்பாலும் நமக்கு சோகத்தையே அளிக்கும் தன்மையைக் கொண்டிருந்தாலும், நேற்று சிரிப்பின் அலையை ஏற்படுத்தி நம்மை வயிறு குலுங்க வைத்துள்ளது.

காப்பிக் கடையில் சிலர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது..

"என்னையா, சாமிவேலு, கேவியஸ், சுப்ரா எல்லாம் ஒன்னா சேர போறாங்கலாம்.."

"என்னக் கொடுமை சரவணன் இது...!"

"நம்ப தாப்பா சரவணன் அண்ணாச்சியே சொல்லலீங்கோ..."

அதனைத் தொடர்ந்து சிரிப்பொலி பயங்கரமாகக் கேட்டது..

தொலைக்காட்சி டிவி3-ல் புல்லட்டின் உத்தாமாவில் அண்ணாச்சி சாமிவேலு நிருபர்களுக்கு பழைய ஸ்டைல் கொஞ்சம் கூட மாறாமல் குறையாமல் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து கடையில் அமர்ந்திருந்தவர்களின் வாய் நிறையப் பற்கள் தெரிந்துக் கொண்டிருந்தன.

" என்னையா இவனுங்க.. இப்பதான் அறிவு வந்துச்சா.. வெங்காயம்..!"

என்று ஒருவர் கூற மீண்டும் சிரிப்பின் ஒலி தொடர்ந்தது..

எனக்கும் அது நியாயமாகவே பட்டது..

இருந்தாலும் காலம் கடந்து விட்டதை அந்த மூன்று தலைவர்களும் மறந்துவிட்டதை அவர்களுக்கு நினைவுக் கூற வேண்டும்.

இவ்வளவு காமெடிக்கு மத்தியில் நம் நாட்டு லஞ்ச ஒழிப்பு நிறுவனம் சிரித்துக் கொண்டே சாமிவேலுவின் கையில் விலங்கை மாட்டியிருந்தால் 2008ற்கான மிகச் சிறந்த காமெடி என இச்சம்பவத்திற்கு மணிமகுடம் சூட்டியிருக்கலாம். "எங்கடா கட்சியோட பொறுப்ப விட்டுப்புட்டா மாட்டிக்குவோமே" என்று மீண்டும் தானே வலிய வந்து ம.இ.கா தலைவர் பதவியை மீண்டும் தன் இடுப்பின் கச்சையில் மாட்டிக் கொண்டு விட்டார். இவ்விஷயத்தில், அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கிறார்களாம். செனட்டர் பதவி கேட்பீர்களா எனக் கேட்டப் பொழுது, அந்த எண்ணமே தனக்கு இல்லை என்று இறுமாப்புடன் கூறியிருக்கிறார். "எதயும் பிலேன் பண்ணி செய்யனும்" என்கிற மாதிரி, அண்ணாச்சி உள்ளுக்கு ஏதோ ஒரு பிலேனோடெதான் இருக்காரு."

எது எப்படி இருந்தாலும், இவர்களுக்கு நம்முடைய ஓட்டு கிடையாது என்பது ஊர்ஜிதமாகிவிட்ட ஒன்று. அடுத்த தேர்தலில் எத்தனை ம.இ.கா, பிபிபி, ஐ.பி.எப் கட்சி உறுப்பினர்கள் கல்தா கொடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

எதையாவது பண்ணி தொலைக்கட்டும். எலியும் பூனையும் இன்று ஒரே மேசையில் அமர்ந்து மீன் துண்டைக் கவ்விக் கொண்டு இருக்கிறது. ஒரு நாள் மீண்டும் அது சண்டையிடக் கூடும், ஆனால் "நம்ப மக்கள் சக்தி" கலுவுற மீன்ல நலுவுற மீனு.. எந்த பொய் பித்தலாட்டத்துலேயும் மாட்டிக்க மாட்டாங்கனு சொல்லவறேன். நம்ப மக்கள் ரொம்பெ தெளிஞ்சிட்டாங்க. இனிமே மக்கள் சக்தி ராஜ்யம்தாயா.. மத்தவன்லாம் வாலை சுருட்டிக்கிட்டு போயா...!!!

பினாங்கு துணை மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள நம் பேராசிரியர் இராமசாமி ஐயாவிற்கு இவ்வேளையில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியர்கள் 50 ஆண்டுகளில் படைத்த முதல் சரித்திரம் இது.. அடுத்து பேராக் மாநிலம் என்ன சொல்கிறது என்றுப் பார்ப்போம்...!!!

நம்மை நேற்று வயிறு குலுங்க சிரிக்க வைத்த கோமாளி கூட்டத்திற்கு நமது நன்றி..

"சரி நம்ப பண்டிதன் ஐயா கதை என்னாச்சி...?"

போராட்டம் தொடரும்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP