மக்கள் சக்தி பேரைக் கேட்டால் சும்மா அதிருதுல்லே...!

>> Sunday, March 9, 2008

பிரதமர் முகத்தில் ஈயாடவில்லை.. மக்களின் ஆதரவு முழுமையாக பாரிசானுக்கு உண்டு எனவும் இம்முறை அனைத்து மாநிலங்களையும் எங்கள் வசத்தில் கொண்டு வருவோம் என பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்த பிரதமரின் முகத்தில் நேற்று ஈயாடவில்லை. அம்னோவின் சகாப்தம் ஒரு முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் முகத்தைப் பார்த்ததும் கணிக்க முடிந்தது. நேற்று நடைப்பெற்ற 12-வது பொதுத் தேர்தலின் முடிவில் எதிர்க்கட்சியினரிடம் ஐந்து மாநிலங்கள் கைமாறியிருக்கின்றன. அவை முறையே பினாங்கு, கிளந்தான், கெடா, சிலாங்கூர், மற்றும் பேராக் ஆகும்.

"தைரியம் இருந்தால் சிங்கத்தின் குகையினுள் வந்து போட்டியிடு" என சவால் விட்ட நம் இந்தியர்களின் தானையத் தலைவர் என மார்தட்டிக் கொண்ட சாமிவேலுவின் சகாப்தம் நேற்றோடு ஒரு முடிவுக்கு வந்தது.

பி.62 சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் சாமிவேலுவை எதிர்த்து போட்டியிட்ட நீதிக் கட்சியின் சார்பாக நின்ற டாக்டர் மைக்கேல் ஜெயகுமார் தேவராஜ் 1,821 வாக்குகள் வித்தியாசத்தில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினார்.

டாக்டர் ஜெயகுமாருக்கு 16,874 வாக்குகளும் சாமிவேலுவிற்கு 14,408 வாக்குகளும் கிடைத்தன.

ஆக தற்போதைய நிலைமையில் மூன்றில் இரண்டு பங்கு அறுதி பெரும்பான்மையின்றி பாரிசான் தனது அரசாங்கத்தை தோற்றுவிக்கும் இக்கட்டான நிலைமையில் உள்ளது.

மேலும் பல தகவல்கள் பதிவிடப்படும்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Anonymous March 9, 2008 at 3:43 PM  

Inimeal athu Singgamillai....
Asinggam

Anonymous March 14, 2008 at 8:52 PM  

Inthiyargalaal enna seithu vidha mudiyum endru VIRAL SUNDIYARVAGALUKKU migavum arumaiyaana paadam intha therthal mudivu....Thamilanendru solladaa thalai nimirnthu nilladaa...vaalga makkal sakthi....

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP