திரு.செயதாசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

>> Thursday, December 18, 2008

மு. 00:25

கடந்த நான்கு நாட்களாக நடைப்பெற்று வந்த உண்ணாநோன்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட திரு.செயதாசு அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்சமயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாநோன்புப் போராட்டத்தின் இரண்டாவது நாளன்று மருத்துவ குழுவொன்று இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் மீது உடல் நலப்பரிசோதனை மேற்கொண்டபோது, சகோதரி சாந்தியும் திரு.செயதாசும் உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்க வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டது.

திரு.செயதாசு அவர்களின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வாரத்திற்கு மூன்றுமுறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இரு முறை சிறுநீரக சுத்திகரிப்பிற்குச் செல்லாததனால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று காலையில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த யாக நிகழ்வில் திரு.செயதாசு திடீரென மயக்கம்போட்டு விழுந்துள்ளார் என அறியப்படுகிறது.

இதற்கிடையில் இவ்வுண்ணாநோன்புப் போராட்டம் இன்று 18/12/08 முடிவுக்கு வரும் என உதயகுமாரின் சகோதரி வேதநாயகி தெரிவித்தார். இருப்பினும் இண்ட்ராஃப் தலைவர்கள் விடுதலையடையும்வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து இருந்து வரும் என அவர் கூறினார்.














திரு.செயதாசு அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைமையை இறைஞ்சுவோமாக..

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP