பத்துமலையில் நம் மக்களுக்கு நேர்ந்த கதி..

>> Monday, November 26, 2007


அமைதிப் பேரணியில் கலந்துக் கொள்வதற்கு ஒரு நாள் முன்பே இந்துக்கள் பத்துமலை முருகன் திருத்தலத்தில் கார்த்திகை விசேஷ பூஜைகளைச் செய்து அங்கேயே தங்கியிருக்கின்றனர். அதற்குள் யாரொ தெரியவில்லை, பொறுப்பற்றச் சிலர் பத்துமலை வளாகத்தின் இரும்புக் கதவுகளை மூடிவிட்டிருந்தனர்.





இதனை அறிந்த இந்துக்கள் பல முறை கதவைத் திறக்கச் சொல்லி கேட்டிருக்கின்றனர். அதற்குள் கலகத் தடுப்புக்காரர்கள் அங்கு வந்துவிட கதவு திறக்கப்படாமல் அப்படியே இருந்தது. பொறுமை இழந்த இளைஞர்கள் கதவுகளை உடைத்து வெளிவர வேண்டியதாயிற்று. இதற்கிடையில் கலகத்தடுப்புக்காரர்களும் மலாய்க்கார குண்டர் கும்பலில் சேர்ந்தவர்களும் இந்தியர்களுடன் கடும் மோதலில் ஈடுப்பட்டதாக தெரிய வருகிறது.



பலப்பேர் இதன்வழி கைது செய்யப்பட்டனர்.



ஸ்டார் நாளிதழில் IGP மூசா பத்துமலையில் அமில நீரும், கண்ணீர் புகை குண்டுகளையும் போலீசார் பயன்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார், எனினும் இங்குள்ள படங்கள் அதற்கு எதிர்மாறாக நிலைமையை சித்தரிகின்றன.










முக்கியக் குறிப்பு : இதற்கிடையில் நம்முடைய மூன்று வழக்கறிஞர்கள் விடுதலை அடைந்துள்ளனர்.

வாழ்க இந்திய சமுதாயம் !!

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP