மகஜரை ஒப்படைக்க மேல் முறையீட்டு மனுத் தாக்கல்..

>> Thursday, November 29, 2007

இந்து உரிமைப் பணிப்படையினர் பிரிட்டிஷ் தூதரகத்திற்கு கொடுக்கவிருந்த மகஜரை அரசாங்கம் பல வழிகளில் தடுத்து வருவதை எதிர்த்து நீதிமன்றத்தில் அத்தடைகளை நீக்குமாறுக் கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாக்கினி படச்சுருள்



இதற்கிடையில் இந்து உரிமைப்படையினரின் பேரணியில் கலந்துக் கொண்ட ஒரு இந்திய சகோதரனை போலீஸ்காரர்கள் ஒரு விலங்கை எட்டி உதைப்பதைப்போல் உதைத்து அடித்து கைது செய்யும் காட்சி இதோ உங்கள் பார்வைக்கு...



இந்த அராஜகக்காரர்களின் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது???


இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கணபதி ராவ் 8 மணி நேரத்திற்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை Section 4(1)(b) of the Sedition Act சட்டத்தின் கீழ் கைது செய்ததாக தெரிய வருகிறது. நவம்பர் 17-இல் சிரம்பானில் உள்ள பெய் உவா சீன ஆரம்பப் பள்ளியில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

உண்மையைக் கூறினால் இனவாதமா?

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP