51-வது சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் அமைதி போராட்டம்..

>> Wednesday, August 27, 2008


வருகின்ற ஆகசுட்டு 31-ஆம் திகதி மலேசியா தனது 51-வது சுதந்திர தின நாளைக் கொண்டாடும் அதே நாளில், இந்து உரிமைப் பணிப்படை தனது அமைதிப் போராட்டத்தை லண்டனில் நடத்தவுள்ளது. 51 வருடங்களாக மலேசிய இந்தியர்களை ஒடுக்கி, அவர்களின் உரிமையைக் காற்றில் பறக்கவிட்ட அம்னோ அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் லண்டன்வாழ் மலேசிய இந்தியர்கள் மற்றும் மனித உரிமைக் கழகங்கள் கலந்துக் கொண்டு, மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தையும், மனித உரிமைகளையும் முறையாகப் பேணிக் காத்திட வேண்டும் என மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளனர்.

இப்போராட்டத்தின் நிரல் பற்றிய தகவலை அறிந்துக் கொள்ள, கொடுக்கப்பட்டிருக்கும் இணைய இணைப்பைச் சுட்டவும் : லண்டன் அமைதிப் போராட்டம்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP