மலேசிய இந்துக்கள் பயத்துடன் வாழ்கின்றனர்!

>> Tuesday, November 4, 2008

இந்திய பாரதீய சனதா கட்சியின் சமய, கலாச்சார பிரிவின் அமைப்பான விசுவ இந்து பரிசத்து(கேரளா கிளை) மலேசிய இந்துக்கள் தொடர்பாக இன்றுவொரு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது. விசுவ இந்து பரிசத்தின் கேரளா கிளை ஏற்பாடு செய்த ஒரு நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் திரு.உன்னிகிருஷ்ணன், மலேசியவாழ் இந்துக்கள் பயத்துடன் வாழ்வதாகவும் ஏறக்குறைய ஆயிரம் இந்துக் கோயில்கள் மலேசியாவில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்து உரிமைப் பணிப்படையின் மீது விதிக்கப்பட்டுள்ளத் தடையை நீக்கக் கோரி இந்திய கூட்டணி அரசாங்கம் மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என அவ்வியக்கம் கேட்டுக் கொள்வதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமருக்கும் ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளருக்கும் மகசர் ஒன்றினைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் பார்க்கவும்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP