மலேசிய இந்தியர்களின் எழுச்சி நாள்

>> Monday, November 17, 2008

மலேசிய இந்தியர்களின் எழுச்சி நாளான நவம்பர் 25 ஓராண்டு நிறைவையொட்டி நாடுதழுவிய அளவில் ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு திரு.வேதமூர்த்தி அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார். நவம்பர் 25-ஆம் நாளன்று வடமாநிலங்களில் வசிப்போர் பினாங்கு பட்டவெர்த்து மகா மாரியம்மன் ஆலயத்திலும் தென் மாநிலங்களில் வசிப்போர் பத்துமலை ஆலயத்திலும் இரவு 7 மணியளவில் பிராத்தனைக்காக ஒன்றுகூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்விரு பிராத்தனைகளிலும் கலந்துக் கொள்ள இயலாதவர்கள், தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள ஆலயத்தில் பிராத்தனையை மேற்கொள்ளலாம். பிராத்தனையின்போது 18 நெய் விளக்குகளை ஏற்றி வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இப்பதினெட்டு நெய் விளக்குகளும் மலேசிய இந்தியர்களின் 18 கோரிக்கைகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

பிரார்த்தனைகளில் கலந்துக் கொள்ள விழையும் ஆதரவாளர்கள் தத்தம் வசிப்பிடத்தின் ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புக் கொண்டு பேருந்திற்கு முன்பதிவு செய்து கொள்ளவும்.

***



இதற்கிடையில் பினாங்குத் தீவு மக்கள் சக்தியினர், வருகின்ற 25 நவம்பர் அன்று பினாங்குத் தீவில் அமைந்துள்ள தண்ணீர் மலை விநாயகர் ஆலயத்தில் மாலை 4.30 மணியளவில் சிறப்பு யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சுற்றுவட்டார மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர். இந்த சிறப்பு யாகத்தில் கலந்துக் கொள்பவர்கள், பிராத்தனை முடிவுற்றதும் பட்டவெர்த் மகா மாரியம்மன் ஆலய நிகழ்வில் கலந்துக் கொள்ள வரவேற்கப்படுகின்றனர்.

இந்நிகழ்வு தொடர்பாக மேலும் தகவல் அறிய : அலைப்பேசி - 016-4827974

அனைவரும் மீண்டுமொருமுறை நம் ஒற்றுமையைப் புலப்படுத்துவோமாக!

வாழ்க மக்கள் சக்தி!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP