பத்துமலையில் சிறப்பு வழிபாடு

>> Saturday, December 1, 2007


நாளை 02/12/2007-ஆம் திகதி காலை மணி 9.00 மணியளவில் இந்து உரிமைப் பணிப்படை சிறப்பு வழிபாடு ஒன்று நடத்தவுள்ளது. மலேசிய இந்திய வாழ் மக்களை ஓரங்கட்டிய பல நிகழ்வுகள், மற்றும் இந்தியர்களின் வளர்ச்சிக்குத் தடைகளாக விளங்கிய சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் நடக்காமல் அதனை தகர்த்தெரியும் ஆற்றலை வழங்கக் கோரி அந்த பத்துமலை முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு 25/11/2007-ஆம் திகதியன்று அமைதிப் பேரணியில் கலந்துக் கொண்ட சகோதரர்களுக்கு, அதுவும் முக்கியமாக போலீசாரால் பிடிப்பட்டவர்களுக்கும், அடிக்கப்பட்டவர்களுக்கும், கோயில்கள் உடைபடுவதிலிருந்து தடுக்க தன்னை அர்பணித்த இளைஞர்களுக்கும் இந்த சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் இந்த சிறப்பு வழிபாடுகளில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

முக்கியக் குறிப்பு : இந்த வழிப்பாட்டு நிகழ்வை சிலர் வேண்டுமென்றே இன்னொரு பேரணியாக உருவகப்படுத்த நினைகின்றனர். இது போன்ற வதந்திகளை நம்பாமல் அனைவரும் கலந்துக் கொள்ள வாருங்கள்.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP