இ.சா சட்டத்தை ஒழிப்போம், இன்றிரவு அமைதிப் பேரணி தள்ளிவைக்கப்பட்டது..

>> Saturday, December 22, 2007



உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் சர்வசாதாரணமாக பொது மக்கள் மீது பாயும் நிலைமை இன்று மலேசியாவில் இருந்து வருகிறது. Gerakan Mansuhkan ISA (GMI)எனும் ஓர் இயக்கம் இன்றிரவு சரித்திர புகழ் வாய்ந்த டதாரான் மேர்டேக்கா சதுக்கத்தில் அமைதிப் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இவ்வமைதிப்பேரணி வரும் ஜனவரி 5 ஆம் திகதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவ்வியக்கத்தின்(GMI)செயலாளரான நளினி அவர்கள் அமைதிப் பேரணி தொடர்பாக கருத்துரைக்கும்பொழுது இ.சா சட்டம் மக்களின் உரிமைகளைக் காக்கத் தவறிவிட்டதாகவும், இந்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.இவ்வமைதிப் பேரணி கமுந்திங்கில் உள்ள இ.சா கைதிகளுக்காவும், இப்பேரணிக்கு அனுமதி யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை எனவும் தெரிவித்தார். அமைதியான முறையில் கூடுவது என்பது மக்களின் உரிமை. இவ்வமைதி பேரணியில் அனல் பறக்கும் பேச்சுக்கள் இருக்காது, அமைதியே எங்களது பாஷை என அவர் கூறினார். இதற்கிடையில் காவல் துறையினர் இவ்வமைதிப் பேரணியில் பொது மக்கள் யாரும் கலந்துக் கொள்ளக் கூடாது, மீறி கலந்துக் கொண்டால் கைதாவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரின் இந்த அறிக்கையானது மனித உரிமைக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்நாட்டில் மனித உரிமை கேள்விக்குறியாகும் நிலை தொடராமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் அமைதியான முறையில் பேரணியில் கலந்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே 5-ஆம் திகதி ஜனவரியில் மலேசிய வரலாற்றில் புது சரித்திரம் எழுதப்படட்டும்...

இதற்கிடையில் சிங்கப்பூர் ஜனநாயக கட்சி மலேசிய அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மனித உரிமைகளை மலேசிய அரசாங்கம் மதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் படக்காட்சி கீழே :



போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Anonymous December 22, 2007 at 3:00 PM  

Saturday December 22, 2007

Candlelight vigil postponed

KUALA LUMPUR: The candlelight vigil organised by Gerakan Mansuhkan ISA, planned tonight, will not take place.

GMI said the event has been postponed to Jan 5.

Its secretary E. Nalini, when contacted, confirmed the postponement, and said this was because there was shortage of lawyers to defend them should they be arrested.

"Most of the lawyers who volunteered to help us are out of town because of the holidays," she said.

Nalini said the police have asked it to re-apply for the new date.

The vigil was supposed to have been held at 8pm at Dataran Merdeka on Saturday.

Sathis Kumar December 22, 2007 at 3:06 PM  

thanks a lot for ur info, i hv made changes in my article..

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP