வழக்கறிஞர் உதயகுமார் மீது குற்றச்சாட்டு, சிறையில் அடைப்பு !!!!

>> Thursday, December 13, 2007


கடந்த 11-ஆம் திகதி வழக்கறிஞர் உதயகுமார் காலையில் கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாலான் டூத்தா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டப் பின்னர் ரி.ம 50,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவரை மீண்டும் கைது செய்து புடு சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளனர். இது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதற்காக உதயகுமார் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. நவம்பர் 15-ஆம் திகதிக்கும் டிசம்பர் 8-ஆம் திகதிக்கும் இடையில் எழுதப்பட்டு " போலிஸ் வாட்ச் " என்னும் இணைய பக்கத்தில் இடம்பெற வைக்கப்பட்ட ஒரு கடிதத்தில் தேச நிந்தனைக்குரிய விஷயங்களை வெளியிட்டதாக அவர்மீது ஜாலான் டூத்தா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.









குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரினார். 15.11.2007-ஆம் திகதி இடப்பட்ட இந்து உரிமைப் பணிப்படையின் அக்கடிதம் எண் : 135, 3- ஜாலான் தோமான் 7, கெமாயான் ஸ்குவேர், சிரம்பான் நெகிரி செம்பிலான் எனும் முகவரியிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. எண் 10, டவுனிங் ஸ்தீரிட் லண்டன் எனும் முகவரியிலுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு அது விலாசமிடப்பட்டுள்ளது.

மலேசியாக்கினி படச்சுருள்


Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP