நாடாளும‌ன்ற‌ வ‌ளாக‌த்தில் இ.சா குறித்து ப‌ர‌ப்புரை..

>> Wednesday, April 30, 2008

இன்று நாடாளும‌ன்ற‌ வ‌ளாக‌த்தில் இ.சா வை துடைத்தொழிக்கும் இய‌க்க‌த்தின் த‌லைவ‌ர் ம‌ற்றும் அத‌ன் உறுப்பின‌ர்க‌ள், ம‌க்க‌ள் கூட்ட‌ணியின் த‌லைவி திரும‌தி வான் அசீசா வான் இசுமாயில், காப்பார் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் திரு.மாணிக்க‌வாச‌க‌ம் போன்றோர் உள்நாட்டு பாதுகாப்புச் ச‌ட்ட‌த்தை நீக்க‌ வேண்டும் என‌ நிருப‌ர்க‌ள் கூட்ட‌த்தில் கேட்டுக் கொண்ட‌ன‌ர். அத‌ன் பிற‌கு 'இ.சா வை துடைத்தொழிப்போம்' எனும் எழுத்துக‌ள் கொண்ட‌ அடையாள‌ சின்ன‌ங்க‌ள், நாடாளும‌ன்ற‌ வ‌ளாக‌த்தில் கூடியிருந்த‌ ம‌க்க‌ள் பிர‌திநிக‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

ம‌லேசியா கீனி ப‌ட‌ச்சுருள்


Read more...

நாடாளும‌ன்ற‌ம் கேலிம‌ன்ற‌மான‌து...!

இன்று (30-04-2008) காலையில் தொலைக்காட்சியைப் பார்த்த‌ சில‌ருக்கு சிரிப்பு வ‌ந்திருக்க‌லாம், சில‌ருக்கு க‌வ‌லை வ‌ந்திருக்க‌லாம், சில‌ர் ' இது எப்போதும் ந‌ட‌க்குற‌துதானே...' என‌ அங்க‌லாய்த்துக் கொண்டிருக்க‌லாம்..



நாடாளும‌ன்ற‌த்தின் முத‌ல் கூட்ட‌த் தொட‌ர் அரை ம‌ணி நேர‌த்திற்கு ம‌லேசிய‌ வானொலி தொலைக்காட்சி நிறுவ‌ன‌மான‌ ஆர்.டி.எம் ஒன்றில் இன்று காலை ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து. இந்நிக‌ழ்வை நேர‌லையின் வாயிலாக‌ப் பார்க்க‌க் கொடுத்து வைக்காத‌வ‌ர்க‌ள் கீழே உள்ள‌ ப‌ட‌ச்சுருளை பார்த்து ந‌ம்முடைய‌ உல‌க முத‌ல் த‌ர‌ம் வாய்ந்த‌ ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ள் உரையாடுவ‌த‌ப் பாருங்க‌ள்..





நீயா நானா..ஒரு கை பாத்துருவோம்டியோ...!

வாழ்க‌ ஜ‌ன‌நாய‌க‌ம்...!

நாடாளும‌ன்ற‌த்தில் இன்று பேச‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக‌ள் குறித்து மேலும் த‌க‌வ‌ல்க‌ளுக்கு இங்கு சுட்டுங்க‌ள் : ம‌லேசியா இன்று

Read more...

ஐயா ப‌ண்டித‌னை நினைத்து பார்ப்போம்..




மலேசிய இந்தியர் முன்னேற்றக் கட்சித் தலைவர் (ஐபிஎப்) டத்தோ பண்டிதன், இன்று காலை எட்டரை மணியளவில் கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் காலமானார். நீண்ட காலமாக இரத்தப் புற்று நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 68. இத‌ற்கிடையில் க‌ட‌ந்த‌ ஒரு வார‌த்திற்கு முன்பு ஐபிஎப் கட்சியின் இடைக் காலத்திற்கு புவான்சிறீ செயசிறீயையை தேசியத் தலைவராக டான்சிறீ பண்டிதன் மத்திய செயலவை உறுப்பினர்கள் முன்னிலையில் மருத்துவமனை சிகிச்சை அறையில் நியமித்தார் என்று ஐபிஎப் உதவித் தலைவரும் தேசியத் தகவல் பிரிவு தலைவருமான எம்.சம்பந்தன் கூறினார்.

க‌ட‌ந்த‌ 12‍வ‌து பொதுத் தேர்த‌லுக்கு முன்பிருந்தே ம‌ருத்துவ‌ம‌னையில் இர‌த்த‌ புற்றுநோய்க் கார‌ண‌மாக‌ அனும‌திக்க‌ப்பட்டிருந்த‌ ட‌த்தோ ப‌ண்டித‌னைப் ப‌ற்றி ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌. அவ‌ர் இற‌ந்துவிட்ட‌தாக‌வும், இய‌ந்திர‌ங்க‌ள் பொறுத்த‌ப்ப‌ட்டு ம‌ருத்துவ‌ம‌னையில் கிட‌த்தி வைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌வும் மின்ன‌ஞ்ச‌ல் ம‌ற்றும் குறுந்த‌க‌வ‌ல்க‌ளின் வ‌ழி செய்திக‌ள் ப‌ர‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ன‌.

ஆனால், இன்றுதான் ட‌த்தோ ப‌ண்டித‌ன் உயிர் நீத்தார் என‌ அதிகார‌ப்பூர்வ‌மாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அன்னாரின் ஆத்துமா சாந்திய‌டைய‌ அனைவ‌ரும் பிரார்த்திக் கொள்வோம். குறிப்பாக‌ அவ‌ர் ம‌லேசிய‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்காக‌ ந‌ட‌த்திய‌ போராட்ட‌த்தை ம‌ன‌தில் நினைவில் கொண்டு அவ‌ரின் பெய‌ர் வ‌ர‌லாற்றுச் சுவ‌ட்டிலிருந்து ம‌றைந்து போகாம‌ல் பார்த்துக் கொள்ள‌ வேண்டிய‌து, இன்றும் இனி என்றும் வ‌ருகின்ற‌ த‌லைமுறையின‌ரின் க‌ட‌மையாகும்.

ம‌றைந்த‌ அன்னாரின் குடும்ப‌த்திற்கு ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள்...

ஓம் ந‌ம‌சிவாய‌..

Read more...

இருட்டு அறையில் 24 வருடங்கள் !! மகளை தந்தையே… !!


( கொடூரத்தை தனக்குள் புதைத்திருந்த வீடு )

இப்படிக் கூட உலகில் மனிதர்கள் இருக்கின்றார்களா எனுமளவுக்கு உறைய வைக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. எனினும், இந்தச் செய்தி போல உறைய வைத்த செய்தியை சமீபகாலமாக நான் கேள்விப்பட்டதே இல்லை.

இருபத்து நான்கு வருடங்களாக தனது மகளை (எலிசபெத்) குகை போன்ற வெளிச்சமே நுழைய முடியாத அறைகளில் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்திருக்கிறான் ஒரு தந்தை.

சின்னச் சின்ன குறுகலான குகைகள் போன்ற ஐந்தடி உயரமே உள்ள, முழுவதும் அடைக்கப்பட்ட உறுதியான அறைகளில் அவள் அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறாள். ரகசிய அறை மூலம் தந்தை அந்த அறைகளுக்குச் செல்ல முடியும். அதற்கான நவீன கதவையும், அதைத் திறக்கும் சங்கேத எண்ணையும் யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த அந்த கொடூரமான தந்தைக்கு இப்போது வயது 73.



இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது வியன்னாவிலிருந்து 80 மைல் தொலைவில் இருக்கும் ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் பகுதியில்.

எலிசபெத் பதினெட்டு வயது சுட்டிப் பெண்ணாக இருந்தபோது அவளுடைய கைகளை கட்டி ஒரு இருட்டு அறைக்குள் பூட்டி அவளை பலாத்காரம் செய்த தந்தை, அவள் வீட்டை விட்டு ஓடி விட்டதாக நாடகமாடி எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறான்.

அதன்பின் அவளைக் கொண்டே, “ என்னைத் தேடாதீர்கள் “என்று ஒரு கடிதம் எழுதி வாங்கி அதை அனைவரிடமும் காண்பித்து இருட்டு வாழ்க்கையை அவளுக்கு நிரந்தரமாக்கியிருக்கிறான்.

அந்த மனிதாபிமானமற்ற விலங்கு, கடந்த இருபத்து நான்கு வருடங்களாக அவளை தொடர்ந்து பாலியல் கொடுமை செய்து எட்டு குழந்தைகளுக்குத் தாயாக்கி இருக்கிறது. வெளிச்சமே இல்லாத இருட்டு அறைகளில் அவள் தாய்மை நிலையில் பிரசவத்தை எதிர்கொள்ளும் கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.



அவற்றில் ஒருமுறை பிறந்த இரட்டைக் குழந்தைகள் மருத்துவ கவனிப்புகள் இன்றி பிறந்த சில நாட்களிலேயே இறந்திருக்கின்றன.

தாயுடன் மூன்று குழந்தைகளையும் சன்னலோ, கதவோ, வெளிச்சமோ, வெளிக்காற்றோ இல்லாத அந்த அறைகளில் அடைத்து வைத்திருந்த கொடூர தந்தை மூன்று குழந்தைகளை தன்னுடன் வைத்து வளர்த்தியிருக்கிறான்.

வீட்டு வாசலில் பச்சைக் குழந்தையைப் போட்டு விட்டு மகள் கைப்பட “ எனக்கு வாழ வசதி இல்லை இந்தக் குழந்தையைக் காப்பாற்றுங்கள் “ என ஒரு கடிதம் எழுதி வாங்கி அதையும் குழந்தையுடன் வாசலில் வைத்து விட்டு மனைவியையும் ஏமாற்றி, சுற்றியிருப்பவர்களையும் ஏமாற்றியிருக்கிறான்.


(பதினெட்டு வயதில் எலிசபெத் vs மகள் மோனிகா வயது 14 )

அவனுடைய மனைவி, அதே வீட்டின் மாடியில் இந்த கொடுமைகள் குறித்த எந்த ஒரு அறிவும் இன்றி கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக பேரன், பேத்திகளுடன் தனது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார் என்பது வலியை இன்னும் அதிகப்படுத்துகிறது.

அறைகளில் தாயுடன் அடைபட்டுக் கிடந்த மூத்த மகள் கெர்ஸ்டினுக்கு, தீமையில் நிகழ்ந்த நன்மையாக, உடல் நிலை மிகவும் சீர் குலைந்திருக்கிறது. 19 வருடங்களாக் ஒரு சொட்டு சூரிய ஒளியைக் கூட காணாத அவளை தந்தை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றிருக்கிறான். அங்கே தான் இந்த பதற வைக்கும் உண்மை வெளி வந்திருக்கிறது.

மகளை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமெனில் தாயிடமிருந்து சில தகவல்கள் பெற வேண்டுமென மருத்துவமனை வற்புறுத்தியதால் அந்தக் கொடூரத் தந்தை தனது மகளை இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் அறைச் சிறையை விட்டு வெளியே கொண்டு வந்திருக்கிறான்.

மருத்துவமனையில் உடலும் மனமும் பாதிக்கப்பட்ட நிலையில் தந்தையின் கொடுமைக்கு ஆளான மகள் சொன்ன கதைகளைக் கேட்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. இனிமேல் தந்தையை நான் பார்க்கவே கூடாது எனும் கதறல் விண்ணப்பத்துக்கு உறுதி அளித்த பிறகே அந்த 42 வயது மகள் பேசியிருக்கிறார்.

11 வயது முதலே தன்னிடம் பாலியல் தவறுகள் செய்து வந்த தந்தை 1984 ஆகஸ்ட் 28ம் தியதி கைகளில் விலங்கிட்டு அறைகளுக்கு இழுத்துச் சென்றபோது இத்தனைக் கொடுமைகளைச் சந்திப்போம் என கனவிலும் நினைக்கவில்லை என்ற அவளுடைய கதறல் மனிதத்தின் மேல் அவமானமாய் படிகிறது.



பதினெட்டு வயதான ஸ்டீபன், ஐந்து வயதான பெலிக்ஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 19 வயதான கெர்ஸ்டன் மற்றும் அந்தக் குழந்தைகளின் தாய் அனைவருமே உளவியல் ரீதியான அழுத்தத்தில் இருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1993, 1994 மற்றும் 1997 களில் மூன்று குழந்தைகளை (அலெக்சாண்டர், மோனிகா, லிசா) கொடூரத் தந்தையே வாசலில் போட்டு விட்டு மகள் போட்டு விட்டுச் சென்றதாக எடுத்து வளர்த்தியிருக்கிறான்.

அந்த பரபரப்பான சாலையும், சுற்றியிருக்கும் மக்களும் பேரன் பேத்திகளுடன் வாழ்ந்த இந்த வயதானத் தம்பதியினரின் பின்னால் இப்படி ஒரு கொடூரத்தின் உச்சம் புதைந்து கிடக்கும் என தங்களது கனவின் ஓரத்திலும் கருதியிருக்க வாய்ப்பே இல்லை.



அறைகளில் அடைபட்டுக் கிடந்த எலிசபெத்தின் ஐந்து சகோதர சகோதரிகளும் தங்கள் சகோதரிக்கு இப்படி ஒரு கொடூரமான நிலையில் இருப்பதைத் தெரியாமல் வசதியான இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

தினமும் தனது பேரன், பேத்திகளை பள்ளிக்கூடத்திற்கு கூட்டிச் செல்லும் வயதான பாட்டிக்கு தனது மகள், தான் குடியிருந்த வீட்டிலேலே இப்படி ஓர் அதிர்ச்சி வாழ்க்கையை வாழ்ந்து வந்தது தெரிந்திருக்கவில்லை.



புனிதத்தின் உயர்நிலையில் வைத்து நாம் போற்றும் தந்தை மகள் உறவில் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருப்பது உயிரை உறைய வைக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது மகள் மீது தந்தை கொள்ளும் பலாத்கார நிகழ்வுகள் அவமானச் சின்னங்களாக முளைத்தெழுந்தாலும், 24 வருடங்களாக இருட்டு அறைகளில், குழந்தைகளோடு ஒரு அடிமையை விட அதிகபட்ச கேவலமான வாழ்க்கையை வழங்கியிருக்கும் தந்தை ஒட்டு மொத்த மனித குலத்தின் அவமானச் சின்னமாக உருவெடுத்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

மரணத்தை நோக்கிய பயணத்தில் முதுமையையும் கடந்து 73 வது வயதில் இருக்கும் கொடூரத் தந்தையை சட்டம் எப்படி தண்டித்தாலும் அது குறைவானதாகவே இருக்க முடியும். உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், வாழ்வின் முக்கியமான வருடங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்ட மகளுக்கு இனி வரும் காலமேனும் சற்று நிம்மதியான வாழ்க்கை அமைய பிரார்த்திப்பதை விட வேறென்ன செய்ய முடியும் நாம் ?

த‌க‌வ‌ல் : அல‌ச‌ல் (ந‌ன்றி)

Read more...

இப்ப‌டிக்கு, சொல்ல‌மாட்டேன்...

>> Tuesday, April 29, 2008


(நீ யாருனு என‌க்குத் தெரியும்.. நான் யாருனு உன‌க்குத் தெரியாது..!)

அண்மையில் ஒரு த‌மிழ்ப் பள்ளி ஆசிரியை என்னிட‌ம் ஒரு க‌டித‌த்தை நீட்டினார்.

அவ‌ர் சிரித்துக் கொண்டே,

"சார் இத‌ ப‌டிச்சு பாருங்க‌ளேன்"

என்று என்னிட‌ம் நீட்ட‌ப்ப‌ட்ட‌ க‌டித‌த்தை ப‌டித்தேன். என‌க்கும் சிரிப்பு வ‌ந்துவிட்ட‌து..

"என்ன‌ கொடும‌ டீச்ச‌ர் இது.."

"அதான் சார், என் கிளாசு பிள்ளை ஒண்ணு இப்ப‌டி எழுதியிருக்கு, கேட்ட‌துக்கு இல்ல‌வே இல்லேன்னுருச்சி.."

அப்ப‌டி அந்த‌ க‌டித‌த்தில் என்ன‌தான் இருக்கிற‌து? ஒன்றும் பெரியதாக‌ சொல்வ‌த‌ற்கில்லை..

ஒரு மாண‌வி, த‌ன்னுடைய‌ தோழி ம‌ற்ற‌ மாண‌வியிட‌ம் நெருக்க‌மாக‌ ப‌ழ‌குவ‌து பொறுக்காம‌ல் எழுதிய‌ க‌டித‌மே அது..

சில‌ எழுத்துப் பிழைக‌ளோடு உண‌ர்ச்சி பூர்வ‌மாக‌ திட்டி எழுத‌ப்ப‌ட்ட‌ க‌டித‌ம் உங்க‌ள் பார்வைக்கு.. ப‌ட‌த்தை சுட்டி பெரிதாக்கி ப‌டித்துப் பாருங்க‌ள்..

ப‌க்க‌ம் 1



ப‌க்க‌ம் 2



இத‌ற்கு சில‌ க‌ருத்துக‌ளை சொல்ல‌ நினைத்த‌போது, வாச‌க‌ர்க‌ளிட‌மே கேட்டால் என்ன‌ என்று தோன்றிய‌து?

என‌வே கேட்கிறேன்..

நீங்க‌ள் ஒரு ஆசிரிய‌ராக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில், இக்க‌டித‌த்தைப் பார்த்த‌தும் உங்க‌ளின் அடுத்த‌க் க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை என்ன‌வாயிருக்கும்?

வாச‌க‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ சொந்த‌ க‌ருத்துக்க‌ளை மின்ன‌ஞ்ச‌ல் வ‌ழியாக‌வோ, அல்ல‌து க‌ருத்து ஓலையிலோ தெரிவிக்க‌லாம். இப்ப‌குதியில், ஆசிரிய‌ர் ப‌ணியில் இருப்ப‌வ‌ர்க‌ளும் த‌ங்க‌ளுடைய‌ க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்துக் கொள்ள‌ வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். அனைத்து க‌ருத்துக‌ளும் ப‌திவிட‌ப்ப‌டும். இதை ஒரு சுய‌சோத‌னையாக‌வும், உங்க‌ள் ம‌னோவிய‌ல் திற‌னை சோதித்துக் கொள்ளும் க‌ள‌மாக‌வும் ஏற்றுக் கொண்டு சிற‌ந்த‌ ப‌திலைக் கொடுக்க‌வும்.

ப‌திலுக்காக‌ காத்திருக்கிறேன்...

Read more...

தைப்பிங்கை நோக்கி கார்க‌ளில் ஊர்வ‌ல‌ம்

>> Monday, April 28, 2008




ப‌ட‌க்காட்சிக‌ளை மின்ன‌ஞ்ச‌லில் அனுப்பிய‌வ‌ர் : இராவாங்கைச் சேர்ந்த‌ ச‌ந்திர‌சேக‌ர், (ந‌ன்றி)

இந்து உரிமைப் ப‌ணிப்ப‌டையின் த‌லைவ‌ரான‌ பி.உத‌ய‌குமார் உட்ப‌ட‌ ஐவ‌ர் உள்நாட்டு பாதுகாப்புச் ச‌ட்ட‌த்தின் கீழ் த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ அனைவ‌ரையும் விடுத‌லை செய்ய‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்தினை முன்வைத்து நேற்று (27-04-2008)ஈப்போவிலிருந்து ம‌க்க‌ள் ச‌க்தியின‌ர் தைப்பிங் த‌டுப்பு முகாமை நோக்கி கார்க‌ளில் ஊர்வ‌ல‌ம் சென்ற‌ன‌ர்.

பேராக்கில் ப‌ல‌ ஊர்க‌ளிலிருந்தும் காலை 10 ம‌ணி முத‌ல் ஈப்போ சிறீ சுப்பிர‌ம‌ணிய‌ர் கோயில் (க‌ல்லும‌லை) வ‌ளாக‌த்திற்கு கார்க‌ள் வ‌ர‌த் தொட‌ங்கின‌. சொகூர், ம‌லாக்கா, சிலாங்கூர் ஆகிய‌ மாநில‌ங்க‌ளைச் சேர்ந்த‌ கார்க‌ள் ஈப்போ க‌ல்லும‌லை கோயிலை வ‌ந்த‌டைந்த‌ன‌. சுமார் ஒரு ம‌ணிய‌ள‌வில் கோயிலில் சிற‌ப்புப் பிரார்த்த‌னையை முடித்துக் கொண்ட ம‌க்க‌ள் ச‌க்தி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் பிற்ப‌க‌ல் 1.30 ம‌ணிய‌ள‌வில் அங்கிருந்து தைப்பிங் நோக்கி 60க்கும் மேற்ப‌ட்ட‌ கார்க‌ளில் ஊர்வ‌ல‌மாகச் சென்ற‌ன‌ர்.

முன்ன‌தாக‌ப் பேசிய‌ பேராக் இந்துராப்பு ஒருங்கிணைப்பாள‌ர் திரு.வேத‌மூர்த்தி , இந்துராப்பு த‌லைவ‌ர்க‌ள் உட்ப‌ட‌ இசா ச‌ட்ட‌த்தில் த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் அனைவ‌ரும் விடுத‌லை செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் எனும் நோக்க‌த்தில் தைப்பிங் மெக்குசுவ‌ல் ம‌லைக்கோவிலில் ஆயிர‌த்திற்கும் அதிக‌மானோர் கூடி பிரார்த்த‌னையை மேற்கொள்ள‌விருப்ப‌தாக‌க் கூறினார்.

நேற்று ந‌டைப்பெற்ற‌ இந்த‌ ஊர்வ‌ல‌த்தில் வ‌ட‌க்கு (பினாங்கு) ம‌ற்றும் தெற்கிலிருந்து சுமார் 500க்கும் மேற்ப‌ட்ட‌ கார்க‌ள் ஊர்வ‌ல‌மாக‌ச் சென்று த‌டுப்பு முகாம் முன் அமைதி ம‌றிய‌லில் ஈடுப‌ட்ட‌ன‌ர். 200 க‌ல‌க‌த் த‌டுப்பு காவ‌ல்கார‌ர்க‌ள் முகாமின் முன் நிறுத்தி வைக்க‌ப்பட்ட‌ன‌ர். இவ்வ‌மைதி ம‌றிய‌ல் மாலை 4 ம‌ணிய‌ள‌வில் முடிவ‌டைந்துள்ள‌து.

த‌க‌வ‌ல் : ம‌க்க‌ள் ஓசை, ம‌லேசியா கீனி



போராட்ட‌ம் தொட‌ரும்...

Read more...

எகிப்தில் த‌மிழ் பிராமி எழுத்துக‌ள் க‌ண்டுபிடிப்பு..!

>> Saturday, April 26, 2008


சென்னை : த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ ஓர் உடைந்த‌ சாடியொன்று அண்மையில் எகிப்தில் க‌சீர் அல் க‌டீம் எனும் செங்க‌ட‌லின் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் வ‌சிப்பிட‌த்தில், அக‌ழ்வாராய்ச்சியின் மூல‌ம் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு வ‌ழி இவ்வெழுத்துக‌ள் கி.மு முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌வையாக‌ இருக்கும் என‌வும் இது ஒரு ம‌கிழ்ச்சியூட்டும் க‌ண்டுபிடிப்பு என‌வும் வேதியிய‌லாள‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள்.

இத்த‌மிழ் பிராமி லிபிக‌ள் சாடியின் இருபுற‌த்தில் இருமுறை பொறிக்க‌ப்ப‌ட்டு காட்சிய‌ளிக்கின்ற‌ன‌. பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள் 'பானை ஒரி' (பானையை தொங்க‌விடுவ‌த‌ற்காக‌ க‌யிற்றால் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை)எனும் அர்த்த‌ங்க‌ளைக் கொண்டிருக்கின்ற‌ன‌. பிரிட்ட‌னில் உள்ள‌ 'ச‌வுத்தாம்த‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தைச் சார்ந்த‌ தொல்பொருளாராய்ச்சிக் குழுவில் அட‌ங்கிய‌ பேராசிரிய‌ர் டீ.பீகோக்கு ம‌ற்றும் முனைவ‌ர் எல்.புளூ ஆகியோர், அண்மையில் எகிப்திலுள்ள‌ க‌சீர் அல் க‌டீம் எனும் ப‌ழமைவாய்ந்த‌ இட‌த்தில் அக‌ழ்வாராய்ச்சிப் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டிருக்கும்பொழுது, ப‌ழ‌ங்கால‌ எழுத்துக்க‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ உடைந்த‌ சாடியைக் க‌ண்டெடுத்துள்ள‌ன‌ர்.


இல‌ண்ட‌னில் அமைந்துள்ள‌ பிரிட்டிசு அருங்காட்சிய‌க‌த்தில் ப‌ழ‌ங்கால‌ பானை,க‌ல‌ன்க‌ள் குறித்த‌ ஆராய்ச்சியில் நிபுண‌த்துவ‌ம் வாய்ந்த‌ முனைவ‌ர் ரோபேர்த்தா தோம்பேரு, க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ இவ்வுடைந்த‌ சாடி இந்தியாவில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌தென்றும், இச்சாடி கொல்க‌ல‌ன் வ‌கையைச் சார்ந்த‌து என‌வும் அடையாள‌ம் க‌ண்டுபிடித்துள்ளார்.

தொல்லிய‌ல் நிபுண‌ரான‌ ஐராவ‌த‌ம் ம‌காதேவ‌ன், க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துக‌ள் கி.மு ஒன்றாம் நூற்றாண்டின் த‌மிழ் பிராமி லிபி வ‌கையை சார்ந்த‌வை என‌ அறுதியிட்டுக் கூறுகிறார். இக்கூற்றிற்கான‌ ஆதார‌ங்க‌ளை திர‌ட்டுவ‌தில் அவ‌ர், பாண்டிச்சேரியில் அமைந்துள்ள‌ பிரென்சு க‌ல்வி க‌‌ழ‌க‌த்தில் ப‌ணியாற்றும் மொழியிய‌ல் நிபுண‌ரான‌ பேராசிரிய‌ர் சுப்ப‌ராயுலு, புதுச்சேரியில் அமைந்துள்ள‌ ம‌த்திய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் ப‌ணியாற்றும் பேராசிரிய‌ர் கே.இராச‌ன், ம‌ற்றும் த‌ஞ்சாவூர் த‌மிழ்ப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தின் பேராசிரிய‌ர் வீ.செல்வ‌குமார் போன்றோரின் நிபுண‌த்துவ‌ங்க‌ளை உத‌வியாக‌ப் பெற்றுள்ளார்.

அக‌ழ்வாராய்ச்சியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ எழுத்துகள் 'பானை ஒரி' என‌ ஒலிப்ப‌தாக‌வும், 'ஒரி' எனும் சொல் த‌மிழில் 'உரி' (க‌யிற்றில் நெய்ய‌ப்ப‌ட்ட‌ வ‌லை) என அழைக்க‌ப்ப‌டுவ‌தாக‌வும், அது ம‌ருவி 'ஒரி' என‌ ப‌ர்சி எனும் ம‌த்திய‌ திராவிட‌ மொழியில் இன்று வ‌ழ‌க்கில் இருப்ப‌தாக‌வும் திரு.ம‌காதேவ‌ன் தெரிவித்தார். த‌ற்கால‌த்தில் க‌ன்ன‌ட‌ மொழியில் 'ஒட்டி' என‌ புழ‌ங்கிவ‌ரும் சொல் 'ஒர்ரி' எனும் சொல்லின் ம‌ருவ‌லாக‌ இருக்க‌க் கூடும் என‌ அவ‌ர் தெரிவித்தார்.

க‌சீர் அல் க‌டீமில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ சாடியில் பொறிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ த‌மிழ் பிராமி எழுத்துக்க‌ளை 'ஒர்ரி' என‌வும் வாசிக்க‌லாம், ஆனால் பெரும்பாலும் த‌மிழ் பிராமி லிபியை பொறுத்த‌ம‌ட்டில் ஒரே வித‌மான‌ ஒலிக‌ளை இர‌ட்டிப்புப் செய்யாது என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

இதேப் போன்ற அக‌ழ்வாராய்ச்சியொன்று க‌சீர் அல் க‌டீமில் 30 ஆண்டுக‌ளுக்கு முன்பு ந‌ட‌த்த‌ப்பெற்று, த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ கி.பி முத‌லாம் நூற்றாண்டைச் சார்ந்த‌ இர‌ண்டு சாடிக‌ள் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

இதேப் போன்ற‌ த‌மிழ் பிராமி லிபிக‌ள் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ சாடிக‌ள் 1995ஆம் ஆண்டில் எகிப்தின் செங்க‌ட‌ல் க‌ரையோர‌ம் அமைந்துள்ள‌ பெரேனிக்கே எனும் ப‌ழ‌ங்கால‌ ரோமானிய‌ர்க‌ளின் குடியிருப்புப் ப‌குதியில் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ திரு.ம‌காதேவ‌ன் கூறினார்.

மேற்கத்திய‌ இல‌க்கிய‌ங்க‌ளிலும், த‌மிழ் ச‌ங்க‌ கால‌ இல‌க்கிய‌ங்க‌ளிலும் குறிப்பிட்டுள்ள‌துபோல‌ ரோமானிய‌ர்க‌ளுக்கும் த‌மிழ‌ர்க‌ளுக்கும் செங்க‌ட‌ல் வ‌ழி வ‌ணிக‌த் தொட‌ர்பான‌து நூற்றாண்டின் ஆர‌ம்ப‌க் கால‌க்க‌ட்ட‌த்திலேயே கொடிக்க‌ட்டி ப‌ற‌ந்த‌தை இத்த‌கு க‌ண்டுபிடிப்புக‌ள் ஆதார‌ப்பூர்வ‌மாக‌ நிரூபித்துள்ள‌ன‌.

'திரைக‌ட‌ல் ஓடியும் திர‌விய‌ம் தேடு' என்று சும்மாக‌வா கூறினார்க‌ள் ந‌ம் முன்னோர்க‌ள்.. வெறும் வெற்றிலையை வாயில் போட்டு மென்று, திண்ணையில் வேலை வெட்டி இல்லாம‌ல் அம‌ர்ந்துக் கொண்டு கூறிய‌ ப‌ழ‌மொழிய‌ல்ல‌ இது. அனுப‌வ‌ப்பூர்வ‌மாக‌வே சாதித்துக் காட்டியிருக்கிறார்க‌ள் ந‌ம் முன்னோர்க‌ள்.

வாழ்க‌ த‌மிழ‌ர்.. வ‌ள‌ர்க‌ அவ‌ர்த‌ம் மாண்பு..!



* தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப்பயன்பட்ட எழுத்து முறைமை. இது தமிழி எனவும் அழைக்கப்படுகிறது. இது அசோகனின் பிராமி எழுத்து முறையில் இருந்து உருவானது. தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாக பின்னர் உருமாறின

த‌க‌வ‌ல் : த‌மிழ் வீக்கிப்பீடியா

Read more...

ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் எழுச்சி..

>> Friday, April 25, 2008

க‌ட‌ந்த‌ ஏப்ர‌ல் 23ஆம் திக‌தி எசு.பி.எசு ஆசுத்துரேலியா எனும் ஊட‌க‌ம் 'ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் எழுச்சி' எனும் ஆவ‌ண‌ப்ப‌ட‌த்தை த‌ன‌து இணைய‌த்த‌ள‌த்தில் வெளியிட்ட‌து. ஒளிப்ப‌ட‌ நிருப‌ர் டேவிட்டு ஒசே என்ப‌வ‌ர் ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலைக‌ளையும், எழுச்சிப் போராட்ட‌ங்க‌ளையும், சிறுபான்மை என‌க் க‌ருத‌ப்ப‌ட்ட‌ இந்திய‌ ச‌முதாய‌ம் ம‌லேசிய‌ அர‌சிய‌லையே புர‌ட்டிப்போட்ட‌ நிக‌ழ்வுக‌ளையும் கீழ்காணும் ஆவ‌ண‌ப்ப‌ட‌ங்க‌ளில் சித்த‌ரிக்கிறார்...

ப‌குதி 1



ப‌குதி 2



ப‌குதி 3



போராட்ட‌ம் தொட‌ரும்...

Read more...

மீண்டும் 'மக்கள் ஓசை' ...


மலேசியாவில் தடை செய்யப்பட்ட மக்கள் ஓசை தமிழ் நாளிதழுக்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. இதனால் மக்கள் ஓசை பத்திரிகை சனிக்கிழமை முதல் மீண்டும் வாசகர்களின் கைகளில் தவழ இருக்கிறது.

மக்கள் ஓசை தமிழ் நாளிதழ் மலேசியாவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது.தினமும் 55 ஆயிரம் பிரதிகளும் ஞாயிற்றுக் கிழமைகளில் 95 ஆயிரம் பிரதிகளும் விற்பனை நடைபெறக்கூடிய தமிழ் தினசரியாக மக்கள் ஓசை விளங்கி வருகிறது.இதில் 102பேர் பணிபுரிகின்றனர்.

1981- ல் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இப்பத்திரிகை 2005-ல் மக்கள் ஓசை தினசரியாக நாளிதழ் எனும் வடிவம் பெற்றது. இப்பதிரிகை காலஞ்சென்ற பத்திரிகையாளர் ஆதி.குமணனின் கனவுப் பத்திரிகையாகும்.

தேர்தல சமயத்தில் இப்பத்திரிகை எதிர்க்கட்சிக்கு ஆதரவாக ஏராளமான செய்திகளை வெளியிட்டது. இதனால் தேர்தலில் பல இடங்களை பறிகொடுத்த ஆளும் தேசிய முன்னணி மக்கள் ஓசை பத்திரிகை மீது கோபம் கொண்டது. அதனை பழி தீர்க்கும் வகையாக அதன் வருடாந்திர உரிமத்தைப் புதுப்பிக்க மலேசய அரசு மறுத்துவிட்டது. இதனால் பத்திரிகையை வெளியிடக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் மக்கள் ஓசைக்கு உத்தரவிட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக மக்கள் ஓசை பத்திரிகை நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து மலேசியாவின் பத்திரிகை சுதந்திரம் பற்றி உலகத் தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பல்வேறு நாடுகளும் தமது எதிர்ப்பை மலேசிய அரசுக்கு எதிராக காட்டத் தொடங்கின.

மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோ சையட் ஹமிட் அல்பார், மலேசியாவின் ஊடகத் துறைக்கான வழிகாட்டு முறைகளை மக்கள் ஓசை பின்பற்றவில்லை என குற்றஞ்சாட்டினார். மக்கள் ஓசை பத்திரிகை சார்பாக கடந்த திங்கட்கிழமை அன்று உள்துறை அமைச்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனைப் பரிசீலித்த மலேசிய அரசு மக்கள் ஓசை பத்திரிகையின் வருடாந்திர உரிமத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது. மக்கள் ஓசை பத்திரிகை நிர்வாகம் ரிங்.3,000 செலுத்தி தமது வருடாந்திர உரிமத்தை புதுப்பித்துள்ளது.எனவே மக்கள் ஓசை பத்திரிகையை மீண்டும் வெளியிட அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

எனவே மலேசிய இந்திய சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தமிழ் தினசரியான மக்கள் ஓசை,சனிக்கிழமை முதல் மேலும் கூடுதலாக வாசகர் எண்ணிக்கையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூல‌ம் : அதிகாலை.காம்

Read more...

எங்க‌ளுக்கு ச‌ம‌ய‌ சுத‌ந்திர‌ம் கிடைக்குமா..?

>> Tuesday, April 22, 2008

ப‌ண்டார் ம‌லாக்கா பாலாய் ப‌ஞ்சாங் எனுமிட‌த்தில் 6 உறுப்பின‌ர்க‌ள் கொண்ட‌ ஓர் முஸ்லீம் இந்திய‌க் குடும்ப‌ம் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்து வ‌ழிப்பாட்டு முறைக‌ளை க‌டைப்பிடித்து வ‌ந்துள்ள‌ன‌ர். பிற‌ப்பில் தாய் த‌ந்தைய‌ர் இந்துவாக‌ இருந்து பின் ம‌த‌ம் மாறிய‌தால், அவ‌ர்க‌ள‌து 6 பிள்ளைக‌ளும் முஸ்லீம் ம‌த‌த்தைத் த‌ழுவ‌ நேர்ந்த‌து. இப்போது அக்குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் அனைவ‌ரும் முஸ்லீம் ம‌த‌த்திலிருந்து அதிகார‌ப் பூர்வ‌மாக‌ இந்து ம‌த‌த்திற்கு மாறிட‌ வேண்டும் என‌ ஆசைப்ப‌டுகிறார்க‌ள். அத‌ற்காக‌ ஜ‌ன‌நாய‌க‌ செய‌ல் க‌ட்சியியைச் சார்ந்த‌ ஆயேர் குரோ ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் திரு.கூ அவ‌ர்க‌ளின் உத‌வியை இக்குடும்ப‌ம் நாடியுள்ள‌து. இவ‌ர்க‌ள‌து ஆசை நிறைவேறுமா? இவ்விட‌ய‌ம் தொட‌ர்பாக‌ அர‌சாங்க‌ம் என்ன‌ முடிவு எடுக்க‌வுள்ள‌து என‌ பொறுத்திருந்து பார்ப்போம்...

ப‌குதி 1



ப‌குதி 2

Read more...

ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னைக‌ள் ஐ.நாவில் வேத‌மூர்த்தி விள‌க்க‌ம்..

>> Monday, April 21, 2008



இண்ராப்பிற்கு அனைத்துல‌க‌ அங்கீகார‌ம்

ஜெனிவாவிலிருந்து
மோக‌ன‌ன் பெருமாள்,

உள்நாட்டுப் பாதுகாப்புச் ச‌ட்ட‌த்தின் கீழ் த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ஐந்து இண்ராப் தலைவ‌ர்க‌ள் விடுத‌லை உட்ப‌ட‌ சிறுபாண்மை இந்திய‌ ச‌மூக‌ம் எதிர்நோக்கிவ‌ரும் ப‌ல்வேறு வித‌மான‌ ச‌மூக‌ப் பொருளாதார‌ பிர‌ச்ச‌னைக‌ள் குறித்து ஜெனிவாவில் உள்ள ஐ.நா பேர‌வையின் ம‌னித‌ உரிமை ஆணைய‌த்திற்கு இண்ராப்பின் த‌லைவ‌ர் திரு.வேத‌மூர்த்தி விள‌க்க‌ம‌ளித்தார்.

க‌ட‌ந்த‌ ஆண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் தொட‌ங்கி இல‌ண்ட‌னில் த‌ங்கிவ‌ரும் இவ‌ர், இண்ராப் இய‌க்க‌த்திற்கு அனைத்துல‌க‌ ஆத‌ர‌வை திர‌ட்டும் ந‌ட‌வ‌டிக்கையை மேற்கொண்டு வ‌ருகிறார். அம்முய‌ற்சியின் ஓர் அங்க‌மாக‌ ஜெனிவாவில் உள்ள‌ ஐ.நா பேர‌வையின் ம‌னித‌ உரிமை ஆணைய‌த்திட‌ம் விள‌க்க‌ம‌ளிக்க‌ கோரிக்கையை முன்வைத்தார். அவ‌ர‌து கோரிக்கையை ஏற்று அவ‌ரை ச‌ந்திக்க‌ ஐ.நா பேர‌வை இண‌க்க‌ம் அளித்த‌து.

அத‌ன் தொட‌ர்பில் க‌ட‌ந்த‌ வியாழ‌க்கிழ‌மை மாலை 2.30 ம‌ணிக்கு (ம‌லேசிய‌ நேர‌ப்ப‌டி இர‌வு 9.30 ம‌ணிய‌ள‌வில் ) ஜெனிவாவில் உள்ள‌ ஐ.நா பேர‌வையின் ம‌னித‌ உரிமை ஆணைய‌த்தின் எட்டுப் பிரிவுத் த‌லைவ‌ர்க‌ளுட‌ன் அவ‌ர் ச‌ந்திப்பு ந‌ட‌த்தி விள‌க்க‌ம‌ளித்தார்.

நாட்டின் வ‌ள‌ர்ச்சிக்கு ஏற்ப‌ சிறுபாண்மை இந்திய‌ ச‌மூக‌ம் முன்னேற‌வில்லை. ப‌ல்வேறு துறைக‌ளில் அவ‌ர்க‌ள் எதிர்நோக்கிவ‌ரும் பிர‌ச்ச‌னைக‌ள் குறித்து நூற்றுக்க‌ண‌க்கான‌ ஆய்வ‌றிக்கைக‌ள், ப‌ரிந்துரைக‌ள் முன்வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ போதிலும் ம‌லேசிய‌ அர‌சாங்க‌ம் இந்திய‌ ச‌மூக‌த்தின் பிர‌ச்ச‌னைக‌ளுக்கு தொட‌ர்ந்து செவிசாய்க்க‌ ம‌றுத்து வ‌ந்துள்ள‌து.

நூறு ஆண்டுக‌ளுக்கு மேற்ப‌ட்ட இந்து ஆல‌ய‌ங்க‌ள் அர‌சாங்க‌ நில‌த்தில் அமைந்துள்ள‌ன‌ என‌ கார‌ண‌ம் சொல்லி உடைத்து த‌ரைம‌ட்ட‌ம் ஆக்குவ‌தில் அர‌சு துடிப்புட‌ன் செய‌ல்ப‌டுகிற‌து. ஆனால் த‌மிழ்ப்ப‌ள்ளிக‌ள் த‌னியார் நில‌த்தில் உள்ள‌ன‌ என‌ கார‌ண‌ம் கூறி அவ‌ற்றின் மேம்பாட்டை முட‌க்கி வ‌ருகிற‌து என்ப‌ன‌ போன்ற‌ ப‌ல்வேறு அம்ச‌ங்க‌ள் குறித்தும் அவ‌ர் விள‌க்க‌ம‌ளித்தார்.

இத‌ன் தொட‌ர்பில் க‌ட‌ந்த‌ ஆண்டு ந‌வ‌ம்ப‌ர் 25ஆம் திக‌தி ஒரு மாபெரும் பேர‌ணி ந‌டைப்பெற்ற‌து. அந்த‌ப் பேர‌ணிக்கு த‌லைமையேற்றிருந்த‌ ஐவ‌ரை போலீசார் உள்நாட்டுப் பாதுகாப்புச் ச‌ட்ட‌த்தின்கீழ் கைது செய்த‌ன‌ர். இவ‌ர்க‌ள் விடுத‌லைப்புலிக‌ளின் ஆத‌ர‌வை நாடியுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளுக்கு ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌த்தோடு தொட‌ர்புக‌ள் இருக்கிற‌து. நாட்டின் பாதுகாப்பிற்கு இவ‌ர்க‌ளால் பெரும் மிர‌ட்ட‌ல் இருக்கிற‌து என‌ அர‌சு த‌ர‌ப்பு விள‌க்க‌ம‌ளித்த‌து. ஆனால் இந்த‌க் குற்ற‌ச்சாட்டுக‌ள் தொட‌ர்பாக‌ இதுவ‌ரை எவ்வித‌மான‌ ஆதார‌ங்க‌ளையும் அர‌சாங்க‌ம் முன்வைக்க‌வில்லை என்றும் அவ‌ர் ஐ.நா அதிகாரிக‌ளுக்கு விள‌க்க‌ம‌ளித்தார்.



சாமான்ய‌ ம‌க்க‌ளின் உரிமைக்குப் போராடிய‌தால் இன்று சிறைக் கைதிக‌ளாக‌ ப‌ல்வேறு இன்ன‌ல்க‌ளை அனுப‌வித்துவ‌ரும் அவ‌ர்க‌ளின் விடுத‌லைக்கு ஐ.நா உத‌வ‌ வேண்டும் என்ற‌ கோரிக்கையையும் வேத‌மூர்த்தி வ‌லியுறுத்தியுள்ளார்.

ச‌ர‌மாரியான‌ கேள்வி

உல‌க‌ அர‌ங்கில் ச‌மூக‌ப் பொருளாதார‌த்துறை ம‌ற்றும் இன‌, ச‌ம‌ய‌, ஒற்றுமை குறித்து ந‌ன்ம‌திப்பையும் அங்கீகார‌த்தையும் பெற்றுள்ள‌ ம‌லேசிய‌ அர‌சாங்க‌த்தின்மீது திரு.வேத‌மூர்த்தி குறிப்பிட்டுள்ள‌ குற்ற‌ச்சாட்டுக‌ள் குறித்து ஐ.நா அதிகாரிக‌ள் ச‌ர‌மாரியான‌ கேள்விக் க‌ணைக‌ளை எழுப்பின‌ர்.

வெளி உல‌கிற்கு தெரியாம‌ல் ம‌லேசிய‌ இந்திய‌ ச‌மூக‌ம் எதிர்நோக்கிவ‌ரும் பிர‌ச்ச‌னைக‌ள், அவ‌ர்க‌ள் அனுப‌வித்துவ‌ரும் ஊமைவ‌லிக‌ள், கேள்விக‌ள் கேட்க‌க்கூடாது என‌ ம‌றைமுக‌மாக‌ விடுக்க‌ப்ப‌ட்டுவ‌ரும் மிர‌ட்ட‌ல் ஆகிய‌வைக் குறித்து வ‌ர‌லாற்றுப்பூர்வ‌மான‌ ஆதார‌ங்க‌ளையும் புள்ளி விப‌ர‌ங்க‌ளையும் முன்வைத்து மிக‌ நேர்த்தியான‌ முறையில் அவ‌ர் விள‌க்க‌ம‌ளித்தார்.

அவ‌ர‌து விள‌க்க‌ங்க‌ளை முழுமையாக‌ செவிம‌டுத்த‌ ஐ.நா அதிகாரிக‌ள், ம‌லேசிய‌ அர‌சாங்க‌த்திட‌ம் முறையான‌ விள‌க்க‌ம், விசார‌ணை கோர‌ப்ப‌டும் என‌ உறுதிய‌ளித்த‌ன‌ர்.

இத‌னிடையே ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌த்துட‌ன் தொட‌ர்புள்ள‌துட‌ன் ச‌ட்ட‌விரோத‌ இய‌க்க‌ம் என‌ ம‌லேசிய‌ அர‌சாங்க‌த்தால் த‌டைசெய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ இண்ராப்பின் த‌லைவ‌ர் திரு.வேத‌மூர்த்தியை ச‌ந்திக்க‌வும் அவ‌ரின் விள‌க்க‌த்தை செவிம‌டுக்க‌வும் ஐ.நா பேர‌வை அனும‌தி அளித்துள்ள‌ இந்த‌ வாய்ப்பு, இண்ராப் இய‌க்க‌த்திற்கு அனைத்துல‌க‌ அங்கீகார‌ம் கிடைத்துள்ள‌தாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

போராட்ட‌ம் தொட‌ரும்...

Read more...

'இ.சா வை துடைத்தொழிப்போம்' க‌ருத்த‌ர‌ங்கு பினாங்கில் இனிதே ந‌ட‌ந்தேறிய‌து..

>> Sunday, April 20, 2008

நேற்றிர‌வு (19-04-2008) பினாங்கு குட்டி இந்தியா அருகே உள்ள‌ சீன‌ர் ம‌ண்ட‌ப‌த்தில் "இ.சா வை துடைத்தொழிப்போம்" எனும் க‌ருத்தை மைய‌மாக‌க் கொண்டு ந‌டைப்பெற்ற‌ நிக‌ழ்வில், பினாங்கு சுற்றுவ‌ட்டார‌ ம‌க்க‌ள் சுமார் 2000ற்கும் மேற்ப‌ட்டோர் க‌ல‌ந்துக் கொண்டு த‌ங்க‌ளுடைய‌ ஆத‌ர‌வை புல‌ப்ப‌டுத்தின‌ர். இந்நிக‌ழ்வில் சீன‌ர்க‌ளும், ம‌லாய்க்கார‌ர்க‌ளும் க‌ல‌ந்துக் கொண்ட‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. முன்பே குறிப்பிட்ட‌து போல‌ இந்நிக‌ழ்விற்கு ப‌ல‌ முக்கிய‌ பிர‌முக‌ர்க‌ள் வ‌ந்திருந்து த‌ங்க‌ளுடைய‌ எழுச்சி உரைக‌ளை ஆற்றிச் சென்ற‌ன‌ர். இந்நிக‌ழ்வின் முத‌ல் பேசாள‌ராக‌ ஜி.எம்.ஐ இய‌க்க‌த்தின் த‌லைவ‌ர் திரு.சாயிட் இப்ராகிம், க‌முந்திங் த‌டுப்புக் காவ‌லில் கைதிக‌ளுக்கு எதிராக‌ ந‌டைப்பெறும் கொடுமைக‌ளை அர‌ங்கின் திரையில் ப‌ட‌க்காட்சிக‌ளோடு திரையிட்டு விள‌க்கினார்.

Read this doc on Scribd: Forum ISA P Pinang 190408


இவ‌ருக்குப் பின், மாநில‌ முத‌ல்வ‌ர் திரு.லிம் குவான் எங், மாநில‌ துணை முத‌ல்வ‌ர் திரு.இராம‌சாமி, பினாங்கு மாநில‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் திரு.இர‌வீன், ம‌னித‌ உரிமை வ‌ழ‌க்க‌றிஞ‌ர் குமார் ல‌த்திபா கோயா, ம‌க்க‌ள் ச‌க்தி தேசிய‌ ஒருங்கிணைப்பாள‌ர் திரு.த‌னேந்திர‌ன் போன்றோர் த‌ங்க‌ளுடைய‌ ப‌ங்கிற்கு, உள்நாட்டு பாதுகாப்புச் ச‌ட்ட‌த்திற்கு எதிராக‌ குர‌ல் எழுப்பி ம‌க்க‌ளை ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்தின‌ர். திரு.வேத‌மூர்த்தி, திரு.உத‌ய‌குமார் ஆகிய‌ இவ்விரு ம‌காத்மாக்க‌ளை ஈன்றெடுத்த‌ தாயார் க‌லைவாணி அவ‌ர்க‌ள் த‌ம‌து உரையில் ச‌பையோரை நெகிழ‌ வைத்தார். முத‌ல‌மைச்ச‌ர் உரை நிக‌ழ்த்திய‌ப் பின் 5 த‌லைவ‌ர்க‌ளின் முக‌மூடிக‌ளை அணிந்த‌ ஐந்து இளைஞ‌ர்க‌ள் முத‌ல‌மைச்ச‌ரிட‌ம் ஒரு ம‌னுவை ச‌ம‌ர்ப்பித்த‌ன‌ர். அத‌ன் பின் அவ‌ர் ஐந்து த‌லைவ‌ர்க‌ளை விடுவிக்க‌க் கோரும் ப‌தாகையில் கையெழுத்திட்டார்.

இந்நிக‌ழ்விற்கு இந்து உரிமைப் ப‌ணிப்ப‌டையின் த‌லைவ‌ர் திரு.வேத‌மூர்த்தி அவ‌ர்க‌ளை இணைய‌ம் வ‌ழி நேர‌டி தொட‌ர்பு கொண்டு ம‌க்க‌ளிட‌ம் சில‌ வார்த்தைக‌ளைப் பேச‌ முய‌ற்சிக்க‌ப்ப‌ட்ட‌து, ஆனால் திரு.வேத‌மூர்த்தி அவ‌ர்க‌ள் ஜெனிவாவிலிருந்து ல‌ண்ட‌னுக்கு வ‌ந்துக் கொண்டிருப்ப‌தாக‌வும், இன்னும் வீட்டிற்கு அவ‌ர் வ‌ந்துச் சேர‌வில்லை என‌வும் த‌க‌வ‌ல் கிடைத்து. நிக‌ழ்ச்சியின் இறுதிவ‌ரை அவ‌ரைத் தொட‌ர்புக் கொள்ள‌ முடியாம‌ல் போன‌து.







கீழே கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ இணைய‌ இணைப்பு செய்தியாள‌ர்க‌ளுக்கு ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்ட‌ அறிக்கையாகும், ஆனால் இணைய‌த்தைத் த‌விர்த்து வேறெந்த‌ ஊட‌க‌ங்க‌ளிலும் இவ்வ‌றிக்கை இட‌ம்பெற‌வில்லை என்ப‌து வ‌ருத்த‌த்திற்குரிய‌ விஷ‌ய‌மாகும்.

ஊட‌க‌ அறிக்கை

Read more...

சாசனம்....

>> Friday, April 18, 2008

கதவைத் தட்டினேன், சிறிது நேரம் கழித்து ஒரு சிவத்த மனிதர் கதவைத் திறந்தார்.

"வணக்கம் சார்!"..

பதிலுக்கு அவரும்,

"வணக்கம், என்ன வேண்டும்..?"

"சார், கவிதை புத்தகம் விக்கிறதா கேள்விப்பட்டேன்... அதான் வாங்க வந்தேன்.."

முகத்தில் புன்னகையுடன்

"ஓ, நண்பன்லே பாத்தீங்களா.."

நானும் தலையாட்டினேன்.

"இருங்க கொண்டு வரேன்.. உள்ள வரீங்கலா..?"

'பரவால சார், நான் இங்கையே நிக்கிறேன், நீங்க கொண்டு வாங்க.."

சற்று நேரம் கழித்து சாசனம் என் கையில் வந்தது. ஆம், அதுதான் கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் இயற்றிய கவிதை தொகுப்பு நூல். குறிப்பாக இந்நூலை நான் வாங்கியதற்குக் காரணம், அந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளும் மலேசிய இந்தியர்கள் தற்காலத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போராட்டத்தை உணர்ச்சிப்பூர்வமாக சித்தரிப்பதாக இருக்கின்றன.




சாசனத்தை கையில் பெற்றுக் கொண்டப் பிறகு கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் அவர்கள் 'மக்கள் சக்தி' எனும் இன்னொரு புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார். இரு புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன்.

"இந்த ரெண்டு புத்தகங்களையும் என் அன்பளிப்பா வெச்சிகுங்க.."

என்று 'கரை கடந்த கனவு' மற்றும் 'ஊசிப்போன உறவுகள்' எனும் இரு கவிதை நூல்களை அன்போடு கொடுத்தார். மகிழ்ச்சியில் பெற்றுக் கொண்டேன்.



வீட்டிற்குச் சென்ற‌தும் புத்த‌க‌த்தை திற‌ந்தேன்.. முக‌வுரை தென்ப‌ட்ட‌து..
அதில் சாச‌ன‌த்திற்கு க‌விஞ‌ர் இப்ப‌டி இல‌க்க‌ண‌ம் க‌ற்பிக்கிறார்...

" தூக்கு மேடைக்கு த‌ந்திர‌மாக‌, செல்ல‌மாக‌ அழைத்துச் செல்ல‌ப்ப‌டுகிற‌து ஓரின‌ம், மூக்க‌ணாங்க‌யிறு மாட்ட‌ப்ப‌ட்ட‌ காளையாக‌ ச‌மூக‌ம், த‌ன‌து ச‌க்தியை, வ‌ல்ல‌மையை அறியாது சாதுவான‌ப் ப‌சுவாக‌த் த‌லையாட்டி நிற்கிற‌து, "ந‌ல்ல‌ உழைப்புப் பால் த‌ரும் ச‌மூக‌ம்" என‌ச் சிரித்துக் கொண்டே த‌ட்டிக் கொடுக்கிறார்க‌ள் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள்.

செல்வ‌ நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் ச‌ரிச‌ம‌மாக‌த் த‌ர‌ப்ப‌டும்; நாட்டின் வ‌ள‌ம் குடிம‌க்க‌ள் அனைவ‌ருக்கும் நியாய‌மான‌ வ‌ர‌மாகும் என்ற‌ வாக்குறுதிக‌ள் த‌ன் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கின்ற‌ன‌.

ம‌ன்ன‌ராட்சி ம‌ணிம‌குட‌ம், ம‌லையேறிவிட்ட‌ பின்பு, ம‌க்க‌ளாட்சி சிம்மாச‌ன‌த்தில் அம‌ர்ந்து ம‌ணிம‌குட‌ம் சூடிய‌து. ம‌க்க‌ளாட்சி அர‌சிய‌ல் ம‌க்க‌ளை ம‌ந்தைக‌ளாக‌ ஓட்டி ந‌ட‌த்துவ‌தில் ம‌கிழ்ச்சி கொள்கிற‌து. சிந்திப்ப‌வ‌ர்க‌ளை, சிற‌ந்த‌ க‌ருத்து உரைப்ப‌வ‌ர்க‌ளைத் த‌னிமைச் சிறைக‌ளில் வாழ‌ குடியுரிமை த‌ருகிற‌து.

இன்றைய‌ நாட்டு அர‌சிய‌ல், குடிம‌க்க‌ளின் நியாய‌மான‌ உரிமைக‌ளுக்கு வில‌ங்கிட்டு அவ‌ர்க‌ள‌து சுத‌ந்திர‌ச் சிந்த‌னையைத் தேயிலை இலையென‌க் கிள்ளி சுடு சாத‌ன‌ங்க‌ளில் உல‌ர‌ வைக்கிற‌து.

ஏழைக‌ள் ப‌ர‌ம‌ ஏழைக‌ளாக‌ இழிப‌ட‌வும், ப‌ண‌க்கார‌ர்க‌ள் கொழுத்த‌ ப‌ண‌க்கார‌ர்க‌ளாக‌ எடுப‌ட‌வும் இங்கே ச‌ட்ட‌ங்க‌ள் அனும‌திக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. ப‌ண‌க்கார‌ர்க‌ளின் ச‌ட்டைப் பையில் அமைதியாக‌ உற‌க்க‌ம் கொண்டுள்ள‌து ச‌மூக‌ நீதி.

ப‌ண‌முத‌லை முத‌லாளிக‌ளுக்கு கைகக‌ட்டி சேவ‌க‌ம் செய்ய‌, முன்வ‌ந்து ப‌ணிந்து நிற்கிற‌து அர‌சிய‌ல் ச‌ட்ட‌ங்க‌ள்.

நாட்டில் அமைதி த‌வ‌ழ்கிற‌து; இண‌க்க‌ம் வ‌ள‌ர்கிற‌து; ப‌சிக்கு சோறு இருக்கிற‌து; பொருளாதார‌ம் பீடுந‌டை போடுகிற‌து. இருந்தென்ன‌? ம‌க்க‌ளின் ச‌ம‌த‌ர்ம‌ப் போராட்ட‌த் த‌லைக‌ள் கொய்யாப்ப‌ழ‌ங்க‌ளாக‌ கொய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌.

போராட்ட‌ம்தான் ம‌னித‌ உரிமையை காக்கும். ம‌னித‌ மாண்பை ம‌திக்கும், ச‌ம‌த‌ர்ம‌ அர‌சு கோலோச்ச‌, எதிர்ப்பின் உச்ச‌ம்தான் போராட்ட‌ம். இது ஒதுக்க‌ப்பாட்ட உல‌க‌ம் அறிந்த‌ ஒரே மொழி. ச‌ரித்திர‌ம் சொல்லும் ச‌ன்மார்க்க‌ மொழி.

போராட்ட‌ ச‌மூக‌த்தில்தான் மாற்ற‌ம்‍ம‌றும‌லர்ச்சி த‌ழைத்தோங்கும். ம‌னித‌ சாச‌ன‌ம் ம‌திக்க‌ப்ப‌ட‌, இன‌ங்க‌ளின் உரிமைக‌ள் காக்க‌ப்ப‌ட‌ த‌னி ம‌னித‌ உள்ள‌த்தில் எரிம‌லையாக‌க் கொதித்துக் கொண்டிருக்க‌ வேண்டும் போராட்ட‌ம்..."

என்றும் அன்புட‌ன்,

ஏ.எசஸ்.பிரான்சிஸ்


சாச‌ன‌ம்

செத்துக் கொண்டிருக்கும்
ச‌மூக‌ ஓல‌ம்!

காய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மூக‌த்தின்
இறுதிக் கால‌ம்!!

ந‌சுக்க‌ப்ப‌ட்ட‌ நீதியின்
தூக்குக் கோல‌ம்!!!

'சாசனம்', 'ம‌க்க‌ள் ச‌க்தி' க‌விதைக‌ளோடு உற‌வாட‌ நினைக்கும் வாச‌க‌ர்க‌ள், கீழ்க‌ண்ட‌ முக‌வ‌ரியில் க‌விஞ‌ர் ஏ.எஸ்.பிரான்சிஸ் அவ‌ர்க‌ளைத் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

ஏ.எஸ்.பிரான்சிஸ்,
க‌விஞ‌ர் & எழுத்தாள‌ர்,
60b, Punchak Bukit Mutiara Satu,
Pearl Hill Villa
11200, Tanjung Bunga, Penang

H/P : 016-4892496 / 04-8900293
E-mail : khileefrancis@yahoo.com

போராட்ட‌ம் தொட‌ரும்...

Read more...

பினாங்கில் சித்திரா பௌர்ண‌மி முன்னிட்டு ம‌க்க‌ள் ச‌க்தி பிரார்த்த‌னை..

வ‌ண‌க்கம், பினாங்குவாழ் ம‌ற்றும் சுற்று வ‌ட்டார‌ ம‌க்க‌ள் அனைவ‌ருக்கும் ஒரு முக்கிய‌ அறிவிப்பு. 'இ.சா வை துடைத்தொழிப்போம்' எனும் க‌ருத்த‌ர‌ங்கு முடிந்து ம‌றுநாள் (20-04-2008) சித்திரா பௌர்ண‌மியை முன்னிட்டு அன்று மாலை நான்கு ம‌ணிய‌ள‌வில் பினாங்கு ம‌க்க‌ள் ச‌க்தியின‌ர் ஏற்பாட்டில் த‌ண்ணீர்ம‌லை முனீஸ்வ‌ர‌ன் ஆல‌ய‌த்தில் இந்து உரிமைப் ப‌ணிப்ப‌டையின் 5 த‌லைவ‌ர்க‌ளுக்காக‌ சிற‌ப்பு பிரார்த்த‌னை ம‌ற்றும் மெழுகுவ‌ர்த்தி ஏந்திய‌ ஊர்வ‌ல‌ம் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிக‌ழ்வில் இந்திய‌ர்க‌ள் அனைவ‌ரும் க‌ல‌ந்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டாள‌ர்க‌ள் கேட்டுக் கொள்கின்ற‌ன‌ர்.

இந்நிக‌ழ்வு தொட‌ர்பாக‌ ம‌க்க‌ளுக்கு அறிக்கைக‌ள் த‌யார் செய்ய‌ப்ப‌ட்டு விநியோகிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. அவ்வ‌றிக்கையின் ப‌டிவ‌த்தை இங்கு இணைத்துள்ளோம். மேலும் த‌க‌வ‌ல்க‌ளுக்கும் ம‌ற்றும் இப்ப‌டிவ‌த்தை விநியோகிப்ப‌த‌ற்கும் கீழே கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ இணைய‌ இணைப்பைச் சுட்டி ப‌திவிற‌க்க‌ம் செய்து கொள்ள‌வும்.

பினாங்குவாழ் இந்திய‌ர்க‌ள் இந்நிக‌ழ்வை வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌த்துவ‌த‌ற்கு துணையாக‌வும் ஆத‌ர‌வாக‌வும் இருப்ப‌ர் என‌ ந‌ம்புகிறோம். ஒற்றுமையே ந‌ம‌து வ‌லிமை, வாழ்க‌ ம‌க்க‌ள் ச‌க்தி..!

ம‌க்க‌ள் ச‌க்தி த‌மிழ‌றிக்கை


ம‌க்க‌ள் ச‌க்தி ஆங்கில‌ அறிக்கை

போராட்ட‌ம் தொட‌ரும்...

Read more...

நேற்று உரிமை, இன்று ம‌ருந்து, நாளை என்ன‌?

>> Thursday, April 17, 2008


நேற்று என‌து உரிமையை ப‌றித்தாய் ! இன்று என் ம‌ருந்தை ம‌றுத்தாய் ! நாளை என்ன‌? இப்ப‌டிப்ப‌ட்ட‌ வாச‌க‌ங்க‌ள் கொண்ட‌ ப‌தாகைக‌ள் இன்று ஆங்காங்கே ஒட்ட‌ப‌ட்டிருப்ப‌தைக் காண‌ நேர்ந்த‌து. இவ்வாச‌க‌ங்க‌ளுக்கு ந‌டுவே திரு.உத‌ய‌குமார் முக‌த்தில் தாடியுட‌ன் காண‌ப்ப‌டுகிறார்.

ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌தில் இப்ப‌தாகைக‌ள் நான்கு மொழிக‌ளில் நாடு த‌ழுவிய‌ நிலையில் ஆங்காங்கே ஒட்ட‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் கிடைத்த‌ன‌. மார‌டைப்பு ம‌ற்றும் நீரிழிவு நோயினாலும் க‌முந்திங் த‌டுப்புக் காவ‌லில் அவ‌திப்ப‌ட்டு வ‌ரும் இந்து உரிமைப் ப‌ணிப்ப‌டையின் த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ திரு.உத‌ய‌குமார் அவ‌ர்க‌ளுக்கு முறையான‌ ம‌ருத்துவ‌ சிகிச்சையும், முறையான‌ ம‌ருந்துக‌ளும் அளிக்க‌ப்ப‌ட‌வில்லை என‌ குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. இவ்விவ‌கார‌த்தில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு ப‌தில‌டி கொடுக்கும் வ‌கையில் இப்ப‌தாகைக‌ள் நாடு த‌ழுவிய‌ நிலையில் ஒட்ட‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ க‌ருதுகிறோம்.

இந்நிலையில் அர‌சாங்க‌ம் திரு.உத‌ய‌குமார் விவ‌கார‌ம் தொட‌ர்பாக‌ இன்னும் மௌன‌ம் சாதிப்ப‌து ஏன்?

அவ‌ரும் ஒரு ம‌னித‌ர்தானே? ஒரு த‌னி ம‌னித‌ன் த‌ன‌க்கு முறையான‌ சிகிச்சைக் கேட்ப‌து த‌வ‌றா? ஐக்கிய நாடுக‌ள் அமைப்பின் பொதுச் ச‌பையால் பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ உல‌க‌ளாவிய‌ ம‌னித‌ உரிமைக‌ள் பிர‌க‌ட‌ன‌த்தில் ஐந்து வ‌கையான‌ பிரிவுக‌ள் உள்ள‌ன‌. அப்பிரிவில் 'குடிமை உரிமை' கீழ் வ‌ரும் துணைப்பிரிவு ஒன்றில் 'உயிர்வாழ்வ‌த‌ற்கான‌ உரிமை', ம‌ற்றும் 'பொருளாதார‌, ச‌மூக‌, ப‌ண்பாட்டு உரிமைக‌ள்' பிரிவின் கீழ் வ‌ரும் துணைப்பிரிவு ஒன்றில் 'ச‌மூக‌, ம‌ருத்துவ‌ உத‌வி பெறும் உரிமை' என்று ஐ.நா ம‌னித‌ உரிமை பிர‌க‌ட‌ன‌த்தில் வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ஐ.நா ச‌பையின் உறுப்பின‌ராக‌ இருக்கும் ம‌லேசியா, அச்ச‌பை த‌னிம‌னித‌ உரிமைக‌ளுக்காக‌ வ‌ரைய‌றுத்திருக்கும் ச‌ட்ட‌ங்க‌ளை ஏன் பின்ப‌ற்ற‌வில்லை....?

Read more...

ஜெனிவாவில் இந்து உரிமைப் ப‌ணிப்ப‌டை, வேத‌மூர்த்தி ஐ.நா அதிகாரிக‌ளை ச‌ந்திப்பார்.

>> Wednesday, April 16, 2008

ஹிண்ட்ராப் த‌லைவ‌ர்க‌ளின் விடுத‌லை உட்ப‌ட‌ ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னைக‌ளை விவாதிக்க‌ ஐ.நாவின் ம‌னித‌ உரிமை ஆணைய‌ம் ஹிண்ட்ராப்புக்கு வாய்ப்பு வ‌ழ‌ங்கியுள்ள‌து ! ஜெனிவா வ‌ந்தடைந்தார் வேத‌மூர்த்தி.. !

(ஜெனிவாவிலிருந்து மோக‌ன‌ன் பெருமாள்)

ஜெனிவா, ஏப்ர‌ல் 17 ,

இ.சாவில் த‌டுத்து வைக்க‌ப்பட்டுள்ள‌ ஹிண்ட்ராப் த‌லைவ‌ர்க‌ளின் விடுத‌லை உட்ப‌ட‌ சிறுபான்மை இந்திய‌ ச‌மூக‌ம் எதிர்நோக்கும் ப‌ல்வேறு ச‌மூக‌ பொருளாதார‌ பிர‌ச்ச‌னைக‌ள் குறித்து ஐ.நா பேர‌வையின் ம‌னித‌ உரிமை ஆணைய‌த்திற்கு விள‌க்க‌ம் அளிக்க‌ ஹிண்ட்ராப் த‌லைவ‌ர் திரு.வேத‌மூர்த்தி இன்று ஜெனிவா வ‌ந்து சேர்ந்தார்.

க‌ட‌ந்த‌ டிச‌ம்ப‌ர் மாத‌ம் தொட‌ங்கி இல‌ண்ட‌னில் த‌ங்கி, இண்ட்ராப் இய‌க்க‌த்திற்கு அனைத்துல‌க‌ ஆத‌ர‌வை திர‌ட்டி வ‌ரும் திரு.வேத‌மூர்த்தியின் கோரிக்கையை ஏற்று அவ‌ரை ச‌ந்திக்க‌ ஐ.நா பேர‌வை அனும‌தி அளித்துள்ள‌து.

இன்று வியாழ‌க்கிழ‌மை மாலை 2.30 ம‌ணிக்கு ( ம‌லேசிய‌ நேர‌ம் இர‌வு 9.30 ம‌ணிக்கு ) ஜெனிவாவில் உள்ள‌ ஐ.நா பேர‌வையின் த‌ல‌மைய‌க‌த்தின், ம‌னித‌ உரிமை ஆணைய‌த்தின் எட்டுப் பிரிவுத் த‌லைவ‌ர்க‌ளுட‌ன் ச‌ந்திப்பு ந‌ட‌த்துவார்.

க‌ட‌ந்த‌ 50 ஆண்டுக‌ளில் ம‌லேசியா அடைந்துள்ள‌ வ‌ள‌ர்ச்சிக்கும் வ‌ன‌ப்ப‌த்திற்கும் ஏற்ப‌ சிறுபான்மை இந்திய‌ ச‌மூக‌ம் வ‌ள‌ர்ச்சி அடைய‌வில்லை. மூன்று த‌லைமுறை கால‌ம் உட‌ல் உழைப்புத் தொழிலாள‌ர்க‌ளாக‌ வாழும் இந்திய‌ ச‌மூக‌த்தின் உண‌ர்வுக‌ளை பிர‌திப‌லிக்கும் வ‌கையில், க‌ட‌ந்த‌ ந‌வ‌ம்ப‌ர் 25ம் தேதி, கோலால‌ம்பூரில் ந‌டைப்பெற்ற‌ மாபெரும் ம‌க்க‌ள் பேர‌ணியை க‌ல‌க‌த் த‌டுப்பு போலீசார் இர‌சாய‌ன‌ நீர் ம‌ற்றும் க‌ண்ணீர் புகை வீசி க‌லைத்த‌ன‌ர்.

அன்று முத‌ல் ஹிண்ட்ராப் உல‌க‌ ம‌க்க‌ளின் க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌த் தொட‌ங்கிய‌து.

தீவிர‌வாதிக‌ளா?

அப்பேர‌ணிக்கு ஏற்பாடு செய்த‌ ஐந்து முக்கிய‌ த‌லைவ‌ர்க‌ளான திரு.உத‌ய‌குமார், திரு.ம‌னோக‌ர‌ன், திரு.க‌ண‌ப‌திராவ், ஆகியோரை போலீசார் இ.சாவில் கைது செய்த‌ன‌ர். விடுத‌லை புலிக‌ளின் ஆத‌ர‌வை நாடினார்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு தீவிர‌வாத‌ இய‌க்க‌த்தோடு தொட‌ர்பு இருக்கிற‌து, அவ‌ர்க‌ளால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் மிர‌ட்ட‌ல் இருக்கிற‌து என‌ அர‌சு த‌ர‌ப்பில் விள‌க்க‌ம் அளிக்கப்ப‌ட்ட‌து.

இத‌னிடையே தீவிர‌வாத‌ இய‌க்க‌த்துட‌ன் தொட‌ர்புள்ள‌ ச‌ட்ட‌விரோத‌ இய‌க்க‌ம் என‌ ம‌லேசிய‌ அர‌சாங்க‌த்தால் த‌டை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ ஹிண்ட்ராப்பின் த‌லைவ‌ர் திரு.வேத‌மூர்த்தியை ச‌ந்திக்க‌வும் அவ‌ர‌து விள‌க்க‌ங்க‌ளை செவிம‌டுக்க‌வும் ஐ.நா பேர‌வை அனும‌தி அளித்துள்ள‌து.

ம‌லேசிய‌ இந்திய‌ ச‌மூக‌த்தின் ச‌மூக‌ பொருளாதார‌ பிர‌ச்ச‌னைக‌ள் குறித்து அர‌சாங்க‌த்திற்கு ஹிண்ட்ராப் ச‌ம‌ர்ப்பித்த‌ 18 அம்ச‌ அறிக்கையை விவாதிக்க‌ அர‌சு அனும‌தி அளித்திருந்தால், இந்த‌ விவ‌கார‌ம் மிக‌ சுமூக‌மான‌ முறையில் உள்நாட்டிலேயே தீர்க்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ திரு.வேத‌மூர்த்தி தெரிவித்தார்.

Read more...

ம‌க்க‌ள் ஓசையின் உரிமம் ப‌றிக்க‌ப்ப‌ட்டது..!

அன்வாரின் 'பிளேக் 14' நிக‌ழ்வை பிர‌சுரித்த‌தால் ம‌க்க‌ள் ஓசையின் உரிமம் அர‌சாங்க‌த்தால் ப‌றிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ த‌க‌வ‌ல் கிடைத்துள்ள‌து. ஏற்க‌ன‌வே, ம‌க்க‌ள் ஓசை நாளித‌ழுக்கு அர‌சாங்க‌ம் க‌ட‌ந்த‌ ஆண்டு யேசு கிருத்துவ‌ர் கையில் வெண்சுருட்டும் ம‌ற்றொரு கையில் ம‌துபான‌மும் வைத்திருந்த பட‌த்தை பிர‌சுரித்த‌தால் ஒரு மாத‌கால‌ இடைநீக்க‌ம் செய்த‌து. அதோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் ம‌க்க‌ள் ஓசையின் உரிமம் காலாவ‌தியாகி விட்டிருந்த‌தும் ந‌ம‌க்குத் தெரிந்த‌தே..

ம‌லேசியா இன்று



நாளொன்றுக்கு 52 ஆயிரம் பிரதிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் 90 ஆயிரம் பிரதிகளும் விற்பனையாகும் மக்கள் ஓசை நாளிதழ் முறையான காரணங்கள் கூறப்படாமல் நாளையிலிருந்து தடை செய்யப் பட்டிருக்கிறது என்று அதன் நிர்வாகி எஸ். எம். பெரியசாமி இன்று மாலை 7.10 திற்கு மக்கள் ஓசை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மலேசியாஇன்றுவிடம் கூறினார்.

நண்பகல் 12 மணிக்கு தொலைநகல் வழியாக மக்கள் ஓசை தடை செய்யப்பட்டிருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று பெரியசாமி தெரிவித்தார்.

இத்தடைக்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்று கேட்டதற்கு, “இண்ட்ராப், மக்கள் சக்தி ஆகியவை தொடர்பான செய்திகளை விரிவாக வெளியிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

“இந்தியர்களைப் பற்றிய செய்திகளை ஒரு தமிழ் நாளிதழான நாங்கள் வெளியிடாவிட்டால், யார் வெளியிடுவது”, என்று பெரியசாமி வினவினார்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாத இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இப்போது இருக்கிறோம் என்று கூறிய பெரியசாமி, அரசாங்கம் எங்களது மேல்முறையீட்டை பரிசீலித்து சாதகமான பதிலைத் தரும் என்று நம்புகிறோம் என்றார்.

மக்கள் ஓசையின் தலைமை ஆசிரியர் எம். இராஜேந்திரன், “நாங்கள் செய்த தவறு என்ன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல், திடீரென தடை விதித்திருப்பதால் மக்கள் ஓசையை நம்பியிருக்கும் ஊழியர்களின் கதி என்னவாகும்”, என்று கேள்வி எழுப்பினார்.

ம‌லேசியா கினீ ப‌ட‌ச்சுருள்


Read more...

"இ.சா ச‌ட்ட‌த்தை துடைத்தொழிப்போம்...!"

>> Monday, April 14, 2008

வ‌ருகின்ற‌ 19-04-2008 ச‌னிக்கிழ‌மைய‌ன்று "இ.சா ச‌ட்ட‌த்தை அக‌ற்றுக‌" எனும் க‌ருப்பொருளில் ஒரு ம‌க‌த்தான‌ க‌ருத்த‌ர‌ங்கு பினாங்கு குட்டி இந்தியா அருகே அமைந்திருக்கும் சீன‌ர் ம‌ண்ட‌ப‌த்தில் ந‌டைப்பெற‌வுள்ள‌து.

இக்க‌ருத்த‌ர‌ங்கிற்கு சிற‌ப்பு வ‌ருகையாள‌ர்க‌ளாக‌ பினாங்கு முத‌ல‌மைச்ச‌ர் லிம் குவான் எங், பினாங்கு மாநில‌த்தின் 2-ஆம் துணை முத‌ல‌மைச்ச‌ர் பேராசிரிய‌ர் திரு.இராம‌சாமி, 'இ.சா'வை துடைத்தொழிக்கும் இய‌க்க‌த்திலிருந்து அத‌ன் த‌லைவ‌ர் திரு.ஷேட் இப்ராகிம், குமாரி ல‌த்திப்பா கோயா, செய‌லாள‌ர் குமாரி ந‌ளினி, வ‌ழ‌க்க‌றிஞ‌ர் திரு.க‌ர்பால் சிங், திரு.ஆர்.எஸ்.என் இராய‌ர், திரு.இரவீன் ம‌ற்றும் ம‌க்க‌ள் ச‌க்தி ஒருங்கிணைப்பாள‌ர் திரு.த‌னேந்திர‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் வ‌ருகை புரிவார்க‌ள்.

இந்நிக‌ழ்வு தொட‌ர்பாக‌ மேலும் த‌க‌வ‌ல்க‌ளுக்கு கீழ்க‌ண்ட‌ இணைய‌ இணைப்பைச் சுட்டி, அறிக்கையை ப‌திவிற‌க்க‌ம் செய்து கொள்ளுங்க‌ள்.

குறிப்பு : அறிக்கையை ப‌திவிற‌க்க‌ம் செய்து ந‌க‌ல் ப‌ல‌ எடுத்து ப‌ல‌ருக்கு விநியோகிக்க‌வும்.

அல்ல‌து,

இந்நிக‌ழ்வு தொட‌ர்பாக‌ மேலும் நீங்க‌ள் தெரிந்துக் கொள்ள‌ வேண்டுமென்றால் கீழ்க‌ண்ட‌ நிக‌ழ்வின் செய‌ற்பாட்டாள‌ர்க‌ளை கைத்தொலைபேசியின் வ‌ழி அழைக்க‌லாம் :

திரு.ஸ்டான்லி : 016 - 498 2125

திரு.க‌லை : 012 - 563 7614

திரு.செல்வா : 016 - 489 4830

குமாரி.வ‌ச‌ந்தா : 012 - 462 8353 ( பினாங்கு ஹிண்ட்ராப் ஒருங்கிணைப்பாள‌ர் )

'இ.சா'வை துடைத்தொழிப்போம்!

வாருங்க‌ள் ஒற்றுமையாக‌ ச‌ம‌ர்ப்பிப்போம் ந‌ம‌து கோரிக்கையை...!

போராட்ட‌ம் தொட‌ரும்...

Read more...

இன்றைய‌ ப‌திவிற‌க்க‌ம்..

>> Friday, April 11, 2008


ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ள் புனைந்துள்ள‌ 'ச‌ரித்திர‌ க‌தைக‌ள்' எனும் மென்நூல் உங்க‌ள் ப‌திவிற‌க்க‌த்திற்காக‌.. ப‌திவிற‌க்க‌ம் செய்திட‌ கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ இணைய‌ இணைப்பைச் சுட்டுங்க‌ள் : ச‌ரித்திர‌ க‌தைக‌ள்

ச‌ரித்திர‌ க‌தைக‌ளைப் ப‌டிப்ப‌த‌ன்வ‌ழி வாச‌க‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ க‌ற்ப‌னா ச‌க்தியையும் மொழி வ‌ள‌த்தையும் பெருக்கிக் கொள்ள‌ வ‌ழிவ‌குக்கும். ப‌டித்து இன்புறுங்க‌ள்...

Read more...

ஷா கிரிட்டிற்கு எதிராக மலாக்காவில் தொடர்ச்சியான புகார்கள்...!!

>> Thursday, April 10, 2008


கடந்த செவ்வாய் கிழமை (08-04-2008) அன்று 'மலாக்கா தெங்கா' காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட இந்துக்கள் ஷா கிரிட் கோகுலால் கோவிந்ஜி என்கிற இசுலாமிய சமய அதிகாரியின்மீது, இந்து மதத்தை கீழ்த்தரமாக பேசிய காரணத்தால் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதன் படக்காட்சி இதோ :



நேற்றிரவு புதன்கிழமை (09-04-2008) மலாக்காவில் சுமார் 100 பேர்கள் ஷா கிரிட்டிற்கு எதிராக ஞாலாஸ் காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றிருக்கின்றனர். சென்றவர்களில் ஒரு சிலரை மட்டுமே காவல் நிலையத்தினுள் அனுமதித்த காவல் துறையினர் எஞ்சியவர்களை காவல் நிலையத்தின் வெளியே இருக்கவிட்டு இரும்புக் கதவை இழுத்து மூடியுள்ளனர். அதனால் அங்கு கூட்டத்தின் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் படக்காட்சி இதோ :



போராட்டம் தொடரும்...

Read more...

ஷா கிரிட் கோகுலால் கோவிந்ஜி வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்..!!!

>> Wednesday, April 9, 2008

நேற்று (08-04-2008) மாலை 3.30 மணியளவில் பினாங்கு இந்திய வலைப்பதிவர்களான நான், இராஜா, கோபிராஜ் மற்றும் உமாபரன் ஆகியோர் ஷா கிரீட் கோகுலால் கோவிந்ஜிக்கு எதிராக பினாங்கு பட்டாணி சாலையில் அமைந்துள்ள பினாங்கு காவல்துறை தலைமையகத்தில் ஒரு புகார் செய்தோம். இந்நிகழ்வில் இந்து உரிமைப் பணிப்படையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரன், பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஷண்முகநாதன் அவர்களும் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.




அதன்பின் பினாங்கு மாநில 2-ஆம் துணை முதலமைச்சர் பேராசிரியர் திரு.இராமசாமி் அவர்களையும் சந்தித்து ஷா கிரீட்டின் கருத்தரங்கு படக்காட்சிகள் அடங்கிய ஒரு குறுவட்டை ஒப்படைத்து, அவரிடம் இதுத் தொடர்பாக கலந்துரையாடினோம்.

அதே வேளையில் மலாக்கா தெங்கா காவல் நிலையத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்ட மக்கள் சக்தியினர் முன்னால் மலாக்கா தமிழ் பள்ளிகளின் கண்காணிப்பாளரான திரு.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஷா கிரீட்டிற்கு எதிராக நேற்று புகார் செய்தனர். ஓலைச்சுவடி நிருபர் திரு.கலையரசுவும் அங்குச் சென்றிருந்தார்.

இன்று (09-04-2008) மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமி்ழ் நேசன், 'ஸ்டார்', 'சைனா பிரஸ்' ஆகிய நாளேடுகளில் இப்புகார் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

புகார் செய்யப்பட்ட படிவம்

புகாரில் இணைக்கப்பட்ட இரு படிவங்கள்



மக்கள் ஓசை செய்தி



மலேசிய நண்பன் செய்தி


தமிழ் நேசன் செய்தி


'ஸ்டார்' ஆங்கில நாளேட்டின் செய்தி


'சைனா பிரஸ்' செய்தி


மலேசிய நண்பன் செய்தி (மலாக்கா)




'மலாக்கா தெங்கா' காவல் நிலையத்தில்...







இவ்விடயம் தொடர்பாக இன்றும் நாளையும் நாடு தழுவிய நிலையில், இந்துக்கள் ஷா கிரீட்டிற்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் செய்யவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் அறிவிக்கின்றன.

இனி யாரும் கைவசம் அப்படக்காட்சிகளை வைத்திருந்தால் தயவு செய்து 'யூ டியூப்'ப்லோ அல்லது மற்ற எந்தவொரு இணையத்தளத்திலோ பதிவேற்றம் செய்ய வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்விடயம் தொடர்பாக வெளிவந்த மற்றுமொரு பதிவு.. இங்கே சுட்டவும் : இந்துக்களை கேலி செய்வதா?

தற்போது அடிக்கடி காவல் நிலையத்தில் விசாரணையின் பேரில் அழைக்கபடுகிறேன். காவல்துறையினர் எந்நேரமும் ஷா கிரீட்டை கைது செய்துவிடுவர் என காவல்துறையினர் கூறுகின்றனர். என்னை விசாரணை செய்யும் காவல் அதிகாரி அனைத்து படக்காட்சிகளையும் பார்த்துவிட்டு ஷா கிரீட் இ.சா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவன் என கருத்து கூறினார்.

தற்போதைய நிலவரப்படி ஈப்போவில் மக்கள் சக்தியினர் இப்படக்காட்சிகளைக் கண்டு வெகுண்டு எழுந்ததன் காரணமாக, ஈப்போ சுற்றுவட்டார காவல் நிலையங்களில் ஷா கிரீட்டிற்கு எதிராக புகார்கள் செய்யப்படும் என ஈப்போ அன்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போராட்டம் தொடரும்...

Read more...

வேண்டுமென்றே உதயகுமாருக்கு மருந்து கொடுக்கப்படவில்லை!!!





கமுண்டின் தடுப்புக்காவல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயகுமார் நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக அவருக்கு வேண்டுமென்றே மருந்து கொடுக்கப்படவில்லை. அவரது இனிப்பு நீர் அளவு 18.8 ஆகும். உதயகுமாரின் வழக்கறிஞர் மலேசியகினியிடம் வழங்கியத் தகவல்.

டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து இண்ட்ராப்பினர்களில் ஒருவரான உதயகுமாருக்கு கடந்த ஒரு மாத காலமாக வேண்டுமென்றே அவருக்கு தேவைப்படும் நீரிழிவு நோய்க்கான மருந்து கொடுக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞரான என்.சுரேந்தரன் இன்று மாலை மலேசியகினியிடம் கூறினார்.

இப்போது உதயகுமார் தைப்பிங் பொது மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிறுநீரின் இனிப்பு அளவு 18.8 ஆக இருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் கைவிலங்கிடப்பட்டுள்ளார்.

உதயகுமார் தான் நன்றாக இருப்பதாக கூறினாலும் அவர் மிக சோர்ந்த நிலையில் இருக்கிறார் என்று கண்ணீர் சிந்தியவாறு அவரது மனைவி மலேசியகினியிடம் கூறினார்.

“அவர் ஒரு குற்றமும் செய்யவில்லை. அவர் நிரபராதி. அவரை ஏன் இவ்வாறு கொடுமைப் படுத்துகிறார்கள்? அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் யார் பொறுப்பு? எனக்கு நீதி வேண்டும், ” என்று தழுதழுத்தக் குரலில் நீதி கேட்டார் உதய குமாரின் மனைவி!

பிரதமருக்கு எச்சரிக்கை

“உதயகுமாருக்கு நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், பிரதமர் அப்துல்லா படாவிதான் அதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்தார் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரான மா.மனோகரன்.

“சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மலேசியா முழுவதிலும் ஆட்சேப பேரணியும் நடக்கும்”, என்று மனோகரன் மேலும் கூறினார்.

உதயகுமாரின் வழக்கறிஞர் என். சுரேந்திரன் ஏன் உதயகுமார் ஒரு கிரிமினல் குற்றவாளியைப்போல் நடத்தப்பட வேண்டும் என்று வினவினார்.

உதயகுமாரின் உடல்நிலை மோசமாகிக்கொண்டிருப்பதோடு கவலைக்குரியதாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

கமுண்டின் தடுப்புக்காவல் மைய அதிகாரிக்கு உதயகுமாரின் உடல்நிலை குறித்து கடிதம் எழுதியிருந்ததாகவும், ஆனால் அதற்கு எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் இப்போது உதயகுமார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வழக்கறிஞர் என். சுரேந்திரன் மேலும் கூறினார்.

உதயகுமாருக்கு உடனடியாக சிறப்பு மருத்துவ சிகிட்சை அளிக்கப்பட வேண்டும். அத்துடன் உதயகுமாரின் குடும்பத்தினர் அவருக்கு சிறப்பு மருத்துவ சிகிட்சை அளிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், இசா சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஐந்து இண்ட்ராப்பினரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்று மா. மனோகரன் கேட்டுக்கொண்டார்.

தகவல் : மலேசியாகினீ

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP