Showing posts with label அறிவிப்பு ஓலை. Show all posts
Showing posts with label அறிவிப்பு ஓலை. Show all posts

பூஜாங் பள்ளத்தாக்கை உலகப் பாரம்பரியச் சின்னமாக பிரகடனப்படுத்துக!

>> Saturday, December 28, 2013

அன்பின் வாசகர்களே, அண்மையில் பூஜாங் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த சண்டி 11-ஐ, பொறுப்பற்ற நில மேம்பாட்டாளர் நிறுவனத்தினர் சட்டவிரோதமாக உடைத்து அப்புறப்படுத்தியிருக்கின்றனர். 1970-ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு மறுசீரமைப்புச் செய்யப்பட்ட இந்த சண்டியானது கடந்த 43-ஆண்டுகளாக ரப்பர் மற்றும் செம்பனை பயிரிடும் தனியார் நிலத்தில் பாதுகாக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கெடா மாநில நில அலுவலகம் கொடுத்த அனுமதியின் பேரில் சௌஜானா செண்ட்.பெர்ஹாட் எனும் வீடமைப்பு மேம்பாட்டாளர் நிறுவனம் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சண்டியை சட்டவிரோதமாக உடைத்து தள்ளியிருக்கின்றனர். இன்றுவரை தேசிய பாரம்பரிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இச்சட்டவிரோத செயலுக்காக மேம்ப்பாட்டளர் நிறுவனம் மீது எந்தவொரு சட்ட வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பொதுமக்களிடமிருந்து எழுந்த எதிரொலிகளின் விளைவாக சண்டி 11 மீண்டும் அதே இடத்தில் எழுப்பப்படும் என கெடா மாநில அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை. தென் கிழக்காசியாவிலேயே மிகப் பழமையான நாகரிகமான கடாரத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் இந்த பூஜாங் பள்ளத்தாக்கை யுனேஸ்கோ உடனடியாக உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பதன்வழி, இப்பாரம்பரியங்களை நம் அடுத்த தலைமுறையினர்கள் பார்த்து அறித்துகொள்வதற்காக பாதுகாப்பாக விட்டுச் செல்ல முடியும். எனவே, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 2014-ல் பாரிஸ் நகரில் இயங்கும் யுனேஸ்கோ தலைமையகத்தில் ஒரு மனு அளிக்கப்படவுள்ளது. இந்த மனுவுக்கு ஆதரவாக 10,000 மலேசியர்களின் கையெழுத்துகளை வாங்குவதற்காக கையெழுத்து வேட்டையும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தகவல்களை கண்ணுறும் அன்பர்கள் உடனடியாக கீழ்காணும் பாரங்களை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு மலேசியர்களின் கையெழுத்துகளை வாங்கி, அந்த படிவங்களை savebujangvalley@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு 31 ஜனவரி 2014-குள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Dear Malaysian, We need you to be our pillar by tendering your signature to give support to our initiative to pursue petition for URGENT intervention by UNESCO to urge the Federal Government of Malaysia, Kedah State Government and Malaysia National Heritage Department to immediately initiate the necessary action plans to protect, preserve, conserve and listing theBujang Valley archaeological site in World Heritage List. And make all proactive efforts to revisit the UNESCO recommendation proposal which was submitted in 1987 to the Federal Government of Malaysia.

In the heart of all Malaysian, The Bujang Valley is wealth of our ancestors and it is our legacy from the past, what we live with today, and what we pass on to future generations. Our cultural and natural heritages are both irreplaceable sources of life and inspiration. Please feel pride of our heritage and come forward to save our heritage from taken away from us systematically. Before it is too late, let we act now! Let us together YOU & ME with support of our beloved family and friends regardless of race and religion to be part of this 10,000 signatures campaign.

The petition will be handed over to UNESCO in Paris by Mr.Saravanan from Belgium in February 2014. Please download the attached signature form and send us back the forms via email : savebujangvalley@gmail.com before 31st January 2014.

Read more...

மலேசிய மக்கள் நிருபர்களின் வருடாந்திர மாநாடு 2012

>> Thursday, May 10, 2012

எதிர்வரும் மே 18 தொடங்கி மே 20 வரை மலேசிய மக்கள் நிருபர்களின் மூன்றாவது வருடாந்திர மாநாடு, பினாங்கு ரோயல் தங்கும் விடுதியில் நடைப்பெறவுள்ளது. நாடுதோறும் இயங்கி வரும் சுமார் 100 மக்கள் நிருபர்கள் இம்மாநாட்டில் பேராளர்களாகக் கலந்துகொள்ள வருகின்றனர். 2008-ஆம் ஆண்டில் மலேசியா கினி எனும் இணைய ஊடகத்தின் உதவியினால் தொடங்கப்பட்ட 'மக்கள் நிருபர்' எனும் இயக்கம் தற்சமயம் மிகவும் மும்முரமாக சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த செய்திகளை காணொளி, கட்டுரைகள், நிழற்படங்களின்வழி வழங்கிவருகின்றனர். மலேசிய மக்கள் நிருபர்கள் எனும் இயக்கம் நாடு தழுவிய நிலையில் பலதரப்பட்ட மக்களுக்கு இலவசமாக பயிற்சிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும். மலேசிய மக்கள் நிருபர் இணையத்தளம் : cj.my

Read more...

பினாங்குத் தமிழ்ப் பள்ளிகளுக்கு ‘பள்ளி மேலாளர் வாரியம்’

>> Thursday, February 9, 2012

சொந்த நிலம் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட கட்டிடங்கள் அமையாத தமிழ்ப்பள்ளிகளுக்கு ‘பள்ளி மேலாளர் வாரியம்’ அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த 54 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சித்து விளையாட்டுகளில் சிக்குண்டு கிடக்கும் தமிழ்ப்பள்ளிகளை விடுவித்து உரிய உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் ஒரு களமாக பள்ளி மேலாளர் வாரியம் விளங்கவிருக்கின்றது. பள்ளிகளின் நில மற்றும் மானிய விவகாரங்களை பொது மக்களின் துணைகொண்டு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கும் ஒரு குரலாக பள்ளி வாரியம் உருவாக்கம் காணவுள்ளது. இம்முயற்சியின் முதற்கட்டமாக பினாங்கிலுள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் வாரியம் அமைப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துக் கூறுவதற்கு ஒரு விளக்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பினாங்கு இண்ட்ராஃப், தமிழியல் நடுவம் மற்றும் தமிழ் அறவாரியம் இணைந்து நடத்தும் இவ்விளக்கக்கூட்டத்தில் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பொது நல இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர். இத்தகவலை பொதுமக்களுக்கு கொண்டுச் சேர்ப்பிக்கும் வகையில் கீழ்காணும் அறிக்கைகளை நகலெடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.




Read more...

திசம்பர் 4ஆம் திகதி இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் இரண்டாம் தேசிய பேராளர் மாநாடு

>> Friday, November 25, 2011



மலேசிய இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் இரண்டாவது தேசிய பேராளர் மாநாடு எதிர்வரும் திசம்பர் மாதம் 4ஆம் திகதி நடைபெற உள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட சுமார் 350 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.காலை மணி 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை கோலாலம்பூர் சீன அசம்பெளி மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெறும்.

லன்டனிலிருந்து இண்ட்ராஃப் இயக்கத் தலைவர் பொ.வேதமூர்த்தி அவர்களின் இணையம் மூலமான நேரடி உரையுடன் துவங்கும் இம்மாநாட்டில் கடந்த வருட இண்ட்ராஃப் நடவடிக்கைகளின் கண்ணோட்டம், எதிர்கால நடவடிக்கைகளின் அணுகுமுறைகள், 13வது பொது தேர்தலில் இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் நிலைபாடு போன்ற தலைப்புகளில் ஆக்ககரமான பேராளர்களின் உரைகளும் விவாதங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டிற்கான நிதி அறிக்கையும் முன் மொழியப்பட்டு விவாதங்களுக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடிய ஐந்து சிறந்த போராட்ட வாதிகளை இண்ட்ராஃப் உச்சமன்ற தேர்வுகுழுவின் பரிந்துறையின் பேரில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இவ்வாண்டிற்க்கான இண்ட்ராஃப் மனித உரிமை காவலன் ( HINDRAF HUMAN RIGHTS DEFENDER ) என்ற அங்கீகாரமும் இம்மாநாட்டில் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள்.


வி.சம்புலிங்கம்
மலேசிய இண்ட்ராஃப் தேசிய ஒறுங்கிணைப்பாளர்
010 277 4096

Read more...

பினாங்கில் இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் முதல் மாநில அளவிலான மாநாடு!

>> Wednesday, December 15, 2010




கடந்த ஆகசுட்டு மாதம் 8-ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைப்பெற்ற இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் தேசிய மாநாட்டினையடுத்து, மாநில அளவிலான இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் முதல் மாநாடு எதிர்வரும் சனவரி மாதம் 30-ஆம் நாளன்று பினாங்கிலுள்ள செபராங் பிறை எனுமிடத்தில் நடத்தப்பெற திட்டமிடப்பட்டுள்ளது. மலேசிய சிறுபான்மை இந்தியர்களுக்கெதிரான 53 ஆண்டுகால அரசாங்கத்தின் ஓரங்கட்டுதலை முடிவுக்கு கொண்டுவர எழுந்த போராட்டம் எந்தவொரு சதிவலைக்கும் பலியாகாமல் தொடரப்பட வேண்டும் எனும் நோக்கில் நாடு தளுவிய நிலையில் சிதறிக்கிடக்கும் அடிமட்ட ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டும் எண்ணமே இம்மாநாட்டின் குறிக்கோளாகும்.

மனித உரிமை இயக்கமான இண்ட்ராஃப் அரசியல் ரீதியில் மலேசிய சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகளை மீட்டெடுத்து பாதுகாக்கவும், அரசியலில் கொள்கை ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், நாட்டின் வளர்ச்சி வெள்ளோட்டத்தில் இந்தியர்களை பங்குபெறச் செய்யவும் மனித உரிமைக் கட்சி எனும் அரசியல் களம் கடந்தாண்டு தொடங்கப்பட்டு ஆக்ககரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் நம் உரிமை எனும் ரீதியில் ’மலேசிய இந்தியர் அரசியல் தன்னாளுமை வியூகம்’ அமைக்கப்பெற்று மலேசிய இந்தியர்களுக்கான வலுவான குரல்கள் நாடாளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் நம்மை பிரதிநிதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இண்ட்ராஃப் போராட்டங்களில் தங்களை இணைத்துக்கொண்ட ஆதரவாளர்களின் பேராதரவோடு இயக்கப்பெற்றுவரும் மனித உரிமைக் கட்சி மலேசிய அரசியலில் இந்திய சமூகத்திற்கு உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக் கொடுக்க பொதுமக்களின் பேராதரவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பினாங்கு மாநில அளவிலான இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் மாநாட்டின் வெற்றிக்கு ஆதரவாளர்களின் பங்கினை மிகவும் எதிர்ப்பார்க்கிறோம். தன்னலம் கருதாது சமுதாய விடியலுக்காக உழைத்துவரும் இண்ட்ராஃப் இயக்கத்தின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு அளித்துவரும் பொதுமக்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர். இம்மாநாட்டு நிகழ்வின் பேராளர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தங்களின் பெயரை முன்பதிவு செய்துகொள்ள அழைக்கிறோம். மாநாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவதற்கு கட்டணங்கள் இல்லை, இந்நிகழ்வு முற்றிலும் இலவசமே. நீங்கள் முன்பதிவு செய்துகொள்ள கொடுக்கப்பட்டுள்ள பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளர் : திரு.கலைச்செல்வம் : 012-5637614

மேலும் இம்மாநாடு வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்ய நன்கொடைகளும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள், நேரடியாக மனித உரிமைக் கட்சியின் பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளரை தொடர்புகொண்டு சந்தித்து கொடுக்கலாம். மறவாமல் ரசீதினைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது, கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலும் அன்பர்கள் நன்கொடைகளை அளித்து உதவலாம். வங்கியின் மூலம் நன்கொடை அளிக்கும் அன்பர்கள் உடனடியாக மாநில பொறுப்பாளரிடம் குறுஞ்செய்தியோ அல்லது நேரடியாக அழைத்தோ தகவல் கொடுத்துவிடவும். வங்கியின் ரசீதினையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.

பினாங்கு மாநில பொறுப்பாளர் : திரு. ஜனார்தனன் துளசி

(MAYBANK 158060009715)


“நீ இவ்வுலகில் நிகழ்த்த விரும்பும் மாற்றங்களுக்கு நீயும் ஒரு காரணமாக இருக்க வேண்டும்” - மகாத்மா காந்தி

Read more...

சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தும் இந்திய மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை!

>> Monday, May 31, 2010



பினாங்குவாழ் எ.சு.பி.எம் / எ.சு.தி.பி.எம் முடித்த மற்றும் மெட்ரிகுலேசனில் பயிலும் மாணவ மாணவியரின் கவனத்திற்கு..

எ.சு.பி.எம் மற்றும் எசு.தி.பி.எம் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தும், மெட்ரிகுலேசன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் அரசு உயர்கல்விக்கூடங்களில் பயின்றும் அரசு உபகாரச் சம்பளம் நிராகரிக்கப்பட்ட மாணவர்களும் உடனடியாக பினாங்கு மனித உரிமைகள் கட்சியினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த மே 29-ஆம் நாளன்று, மனித உரிமைகள் கட்சியின் தலைமையகத்தில் சிறப்பான தேர்ச்சி பெற்றும் மெட்ரிகுலேசன் மற்றும் அரசு உபகாரச் சம்பளம் கிடைக்கப்பெற்றிராத ஏழு இந்திய மாணவர்களை பேட்டி எடுத்து, அவர்களின் விண்ணப்பங்களை உடனடியாக அம்னோ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமாறு மூன்று நாட்கள் கெடு விதித்திருந்தனர்.




இதேப்போன்றதொரு நடவடிக்கையினை நாடு தழுவிய அளவில், மனித உரிமைகள் கட்சியினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். பினாங்கு மாநிலத்தில் இனவாதக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் தங்களின் பெற்றோரோடு துணிந்து உரிமையைக் கேட்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

நாடு தழுவிய நிலையில் பாதிக்கப்பட்ட அனைத்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களும் ஒன்று சேர்ந்தால், இந்த இனவாத அம்னோ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆவண செய்ய முடியும்.




காலங்காலமாக தகுதிபெற்ற நம் ஏழை இந்திய மாணவர்கள் தேர்வு செய்யும் கல்வித் துறைகளை தட்டிக்கழித்து நம் சமூகத்தை நடைப்பிணமாக்கிக் கொண்டு வரும் போக்கை நாம் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாது, இனியும் இக்கொடுமையான ஓரங்கட்டுதலைப் பார்த்து வாய்மூடி கிடக்காது துணிந்து உரிமையைக் கேட்க முன்வருமாறு பெற்றோர்களையும் மாணவர்களையும் அழைக்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :-

திரு.கணேசன் : 012-4803284
திரு.கலைச்செல்வம் : 012-5637614
திரு. கனகசுந்தரம் : 017-4155449

பிற மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களும் எங்களோடு தொடர்பு கொள்ளலாம். நீங்கள் வசிக்கும் மாநிலத்தின் பொறுப்பாளர்கள் உங்களைத் தொடர்புகொள்ள ஆவண செய்வோம்.

போராட்டம் தொடரும்...

Read more...

உரிமையா... சலுகையா... ? கூலிமில் கருத்தரங்கம்

>> Friday, January 22, 2010

உரிமையா, சலுகையா எனும் கருவைக் கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24/01/2010) பாயா பெசார் கூலிமில் அமைந்துள்ள அன்னை சிறீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைப்பெறவிருக்கும் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள சுற்று வட்டார மக்கள் அழைக்கப்படுகின்றனர். தவறாமல் கலந்துகொண்டு பயனடைவீர்களாக..

படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்


போராட்டம் தொடரும்...

Read more...

மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் நடைப்பெறாது - இண்ட்ராஃப்

>> Monday, January 11, 2010


சமய விடயங்களில் அம்னோ அரசாங்கத்தின் அலட்சியப் போக்கினைக் கண்டிக்கும்வகையிலும், கிருத்துவ நண்பர்களின் நம்பிக்கைகளை மதிக்காது அவர்கள்மீது இழைக்கப்பட்டிருக்கும் அரசியல் நோக்கங்கொண்ட வன்முறை தாக்குதல்களைக் நிறுத்தக் கோரியும் இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இருப்பினும், கிருத்துவ சமயத் தலைவர்களும் மற்றும் கிருத்துவ சமயத்தவர் சிலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க பெட்டாலிங் செயா அசம்சன்ஸ் கிருத்துவ தேவாலயத்தின் நுழைவாயிலில் எதிர்வரும் 13 சனவரியன்று நடைப்பெறவிருந்த அமைதி மறியல் கைவிடப்படுகிறது.

இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துவரும் மலேசிய கிருத்துவ சமயத்தவர்கள் மற்றும் அதன் தலைவர்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியலைக் கைவிடுகிறது என அறிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

பொ.வேதமூர்த்தி
இண்ட்ராஃப் தலைவர்

Read more...

தேவாலயங்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கும்வகையில் இண்ட்ராஃப் ஏற்று நடத்தும் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணி

>> Saturday, January 9, 2010



ஊடக அறிக்கை 10/01/10

கரு : அதிகாரத்துவத் தூண்டுதலின் பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசி தாக்கியதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல்

அண்மையில் மலேசியாவில் அரசியல் நோக்கங்கொண்ட அம்னோ அரசின் தூண்டுதலின்பேரில் நான்கு கிருத்துவ தேவாலயங்கள் தீக்குண்டுகள் கொண்டு தாக்கப்பட்டதை இண்ட்ராஃப் வன்மையாகக் கண்டிக்கிறது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அம்னோ அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சில தரப்பினரை தூண்டிவிட்டு தனது இருப்பினை அச்சுறுத்தலின் மூலம் மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக, பொதுமக்கள் மத்தியில் மதக்கலவரத்தை தூண்டிவிட எத்தனித்திருக்கிறது.

இத்தீக்குண்டு தாக்குதல்களைத் தவிர்த்து சென்ற வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப்பின் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மருட்டலாகவும், பகைமையைத் தூண்டும்வகையிலும் இருந்தன. தேசநிந்தனைக் குற்றச்சாட்டிற்காக இந்த் ஆர்ப்பாட்டக்காரர்களின்மீது அம்னோ அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இநநாட்டைப் பொறுத்தமட்டில், நம் அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கும் சமயச் சுதந்திரமானது இன்றுவரையில் கானல் நீராகவே இருந்துவருகிறது.

அம்னோ அரசாங்கத்தின் பக்கச் சார்புடைய நடைமுறைக்கொள்கைகளின் தொடர்பாதிப்புகளை எதிர்க்கொண்டுவரும் மலேசியச் சமுதாயம் முன்பைவிட பக்குவமடைந்திருப்பதை இன்றைய அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறியிருக்கின்றது.

மலேசிய கிருத்துவ நண்பர்களுக்கெதிராக அவர்களின் தேவாலயங்களின்மீது நடத்தப்பெற்ற தீக்குண்டு தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையிலும் இண்ட்ராஃப் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியை ஏற்று நடத்தவுள்ளது. அனைத்து அமைதி விரும்பிகளையும், சனநாயகத்தின்மீது நம்பிக்கைக் கொண்டுள்ள சகோதர சகோதரிகளையும் எங்களோடு இவ்வமைதிப் பேரணியில் இணைந்து, மலிந்துவரும் சமய சுதந்திரமும், சிறுபான்மை உரிமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்கான பலமிக்க குரலை எழுப்புவதற்கு அழைக்கிறோம். இந்நாட்டில் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளையும் அநியாயங்களையும் அரசாங்கம் கடுமையாகக் கருதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைப்போமாக.

திகதி : 13 சனவரி 2010

நேரம் : 8.00 pm

இடம் : அசம்சன்ஸ் தேவாலய நுழைவாயில் , டெம்ப்லர் சாலை பெட்டாலிங் ஜெயா (அசுந்தா மருத்துவமனை அருகில்)

இம்மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள எண்ணங்கொண்டவர்கள் எங்களுடைய தகவல் ஒருங்கிணைப்பாளர் திரு.செயதாசு அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

அலைப்பேசி எண்கள் : 012-6362287

நன்றி

பொ.வேதமூர்த்தி

தலைவர்

இண்ட்ராஃப்

போராட்டம் தொடரும்...

Read more...

புவா பாலா ஓவியக் கண்காட்சி

>> Monday, December 21, 2009



முத்தியாரா ஓவியக் கண்காட்சியகத்தின் ஏற்பாட்டில் நேற்றுபுவா பாலா நினைவலைகள்எனும் கருப்பொருளை தாங்கிய ஓவியக் கண்காட்சி தொடங்கியது. 20-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதிவரை நடைப்பெறவுள்ள இக்கண்காட்சியைக் காண பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். பினாங்கு இந்தியர்களின் பாரம்பரிய கிராமமான புவா பாலாவை கடந்த செப்தெம்பர் மாதமன்று மாநில அரசாங்கம் மற்றும் மேம்பாட்டாளர்கள் இணைந்து தரைமட்டமாக்கி அங்குள்ள மக்களை விரட்டியடித்தனர். இதன்வழி அங்கு பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய ஆடம்பர அடுக்குமாடி கட்டிட பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகின்றன.

200 ஆண்டுகளாய் பிரவுன் தோட்டத்தில் வியர்வையையும் உதிரத்தையும் உதிர்த்து வாழ்ந்த இந்திய மக்களுக்காக கொடுக்கப்பட்ட 6.2 ஏக்கர் நிலமும் அங்கு படர்ந்திருந்த பசுமையும், இயற்கையாய் தேங்கியிருந்த நிலத்தடி நீரும் முற்றிலும் அழிக்கப்பட்டதன் வழி ஒரு சரித்திரம் நம் புறக்கண்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. அச்சரித்திர சான்றுகள் இன்று ஓவியங்களின் வடிவில் உயிர்தெழுந்து நம் உணர்வலைகளை தட்டியெழுப்பப் புறப்பட்டிருக்கின்றன.

அப்பாரம்பரிய கிராமம் உடைபடுவதற்கு ஒருவாரம் முன்பாக, 13 ஓவியக் கலைஞர்கள் அக்கிராமத்தின் உயிரோட்டத்தை தூரிகையியால் வார்த்தெடுத்த ஓவியங்கள் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கண்காட்சியினை முனைவர் டத்தோ அன்வார் ஃபசால் அதிகாரப்பூர்வமாக நேற்று திறந்து வைத்தார். அந்நிகழ்வின் காணொளி காட்சி கீழே :



முத்தியாரா ஓவியக்கண்காட்சியகத்தின் முகவரி :


118, Lebuh Armenian,
10200 Pulau Pinang, Malaysia.

அலைப்பேசி எண்கள் : 604-262 0167

Read more...

மலேசிய இந்தியர்களின் எழுச்சி நாள் - பிரார்த்தனைகள்

>> Wednesday, November 25, 2009

HINDRAF’S NOVEMBER 25TH NEO DEMOCRATIC REVOLUTION
International/Nation wide Prayer- Temple List

ENGLAND/BELGIUM/AUSTRALIA/US

1. Highgate Murugan Temple London
2. Vinayagar Temple Wimbledon
3. Sri Thurgai Amman Temple Ealing
4.Sri Krishna Mandir Pales Straat Belgium
5. Sri Murugan Temple Brisbane Australia
6. Sri Sitti Vinayagar Temple New York

PENANG
Location Lead Contact #

1. Muniandy Temple, Jalan Baru, Perai Kumar 012-5390250
2. Muthalaaman Kovil, Bukit Tambun, Anna Turai 017-4107244
Simpang Empat, Batu Kawan
3. Sunderasa Meenachiamman Temple, Waterfall Maran 012-5557522
Penang
4. Queen Street Mariamman Temple, Penang Selvam 016-4827974
5. Vinayagar Temple, Fettes Park, Penang Raju 019-4574855
6. Muniandy Temple, Tanjong Court, Farlim, Penang Shankar 016-5656917
7. Sri Gada Muniswara Temple, Island Park, Penang Kumar 013-4745451
8. Krishnan Temple, Sungai Dua, Penang Rajan 012-4589835
9. Mariamman Temple Bukit Tengah Sundar 016-4907650
10. Kaliamman Temple , Gelugor, Penang Maran 012-5557522

11. Poomarthaman Temple , Gelugor, Penang Kalay 012-5637614

12. Sri Maha Mariamman Alayam,Simpang Est, Babu
Simpang Ampat,Penang

13. Sri Argasiamman Alayam,Jawi,N.tebal Letchumanan 012-25585758

14. Sri sithi Vinayar Temple,N.Tebal Letchumanan 012-25585758

15. Sri Maha Mariamman temple,Kalidonia,N.Tebal Letchumanan 012-25585758

16. Sri Maha Kaliamman Temple,Ldg Krian,N.Tebal Letchumanan 012-25585758

17. Sri Maha mariamman Alayam,Transkrian,N.tebal Letchumanan 012-25585758

18. Sri murugan temple kampong baru mak mandin Samy .
012 4125723

19. Muniandy temple, Permatang pauh Shanker
017 4693317 012-25585758

N.Sembilan

1. Murugan Alayam ,Lobak Siva 019-6944693
2. Sri Balathandayuthabani Alayam,Seremban Murugayah 016-2478830
3. Subramaniar Alayam,Nilai Mohan Rao 019-6211103
4. Sri Murugan Alayam,Mambau Mrs.Nayagi 019-2762511
5. Sri Selva Vinayagar Alayam,Temiang Param 013-2787176
6. Sri Muniswarar Alayam,Bt.5,Jln.Tampin Kannis 012-6323843
7. Sri Ambal Alayam,Lukut,PD Sivam 019-6621948
8. Sri Maha Mariamman Kovil Ragavan 016-2764859
9. Sri Karumariamman Alayam,Bt.6,Jln.PD komalam 012-3877352
10. Sri Mariamman Alayam,Bt.3 Jln.Labu uthayakumar 012-3749427
11. Sri Kaliamman Alayam,Bt.5,Kuala Sawah. Ramesh 019-6929984
12. Sri Mariamman Alayam,Jln.Rasah Navalan 016-6025269
13. Sri Muthumariamman Alayam,S’Ban Est Philomeena 014-3268114
14. Sri Maha Mariamman Temple, Bandar PD Krishnamoorthy 014-9331219
15. Balathandayutha Bani alayam,Rantau Chandrasegaran 019-6509159
16. Sri Maha Mariamman Alayam,Ldg.Linsum,Rantau S.P Nyana velan 016-6340659
17. Arulmigu Agilandakodi Bhrammana Nayagi
Sri Maha Mariammbigai,Kuala Sawah,Rantau Ragu Duraijaya 016-6511393
18. Sri Maha Mariamman Alayam,Ldg Atherton. Selvaraju 013-2550835
19. Sri Maha Mariamman Lukut,Dat.Segar,PD Veerapan 019-6220549
20. Sri Raja Rajeswarar,Tmn.Tuanku Jaafar,Swang. Bala 014-3247140

JOHOR -Murugesan (012-7792503) / Mohan (019-7102895)

1. Murugan Kovil (Skudai) JB.
2. Muniswaran Kovil (Tampoi) JB.
3. Murugan Kovil (Jalan wadiana) JB.
4. Maha mariayaman Kovil (JB Town)
5. Aman Kovil (Kulai Besar) Kulai JB.
6. Aman Kovil (Dato chelam) Ulu Tiram JB.
7. Murugan Kovil (Jalan Kolam Air) JB.
8. Mariayaman Kovil (Sutra Moll) Skudai JB.
9. Kaliyaman Kovil (Masai) JB.
10. Muniswaran Kovil (Pasir Gudang Hiway) JB.
11. Mariyaman Kovil Paloh (Kluang) JB.
12. Murugan Kovil (Masai) JB.
13. Muniswaran Kovil (Plentong) JB.
14. Raja Kaliyaman Kovil (JB)
15. Murugan Kovil (Taman Kota Yong Peng) JB.
16. Murugan Kovil (Segamat) JB.
17. Mariyaman Kovil (Chaah) Segamat JB.
18. Mariyaman Kovil (Jalan Hospital Kluang) JB.
19. Sri Sangili Karuppar Alayam,Tmn Skudai,JB (Karthik 016-7558457)

KEDAH Ramu (016-4919956)

1.St.Micheal Church, Alor Setar - Daniel
2.Karumariamman Temple, Alor Setar -Kanasingam
3.Sri Mariamman Temple,Alor Setar -kumaraguru

PERAK Ramesh (019-5235528)

1.Sri Sithi Vinayagar Devasthanam - Sitiawan
2.Maha Mariamman Alayam - Ladang Belham
3.Maha Mariamman Alayam - Ladang Sogomana
4.Sri Krishnar Alayam - Ayer Tawar
5.Maha Mariamman Alayam - Kg.Columbia
6.Kallumalai Sri Subramaniam Temple, Ipoh
7.Sri Mariamman Temple, Buntong
8.Sri Muniswarar temple, Buntong
9.Sri Nagambal Temple, Tmn.Rifah, Ipoh
10.Kanthan Kallumalai Temple, Chemor
11.Sri Maha Mariamman Temple, Kg.Chikkidi, Buntong
12.Vella Vinayagar Temple, Jln.Changkot Jong, Teluk Intan
13.Maha Mariamman Temple, Jln.Changkat Jong, Teluk Intan
14.Seethambal Mariamman Temple, Teluk Intan
15.Sri Naagama Temple,jln Sittambaram Pillai,Teluk Intan
16.Sri Mariamman Temple, Jln Kekabu,Teluk Intan
17.Sri Subramaniar Alayam, Batu Gajah,Perak (Bala)
18.Sri Kaliamman Alayam,Batu Gajah,Perak (Bala)
19.Sri Maha Mariamman Temple,Bidor,Teluk Intan,Perak (Arumugam)
20.Sri Sithi Vinayagar Alayam,Kubu Gajah,Perak (Nathan)
21.Sri Muniswarar Alayam,Hutan Melintang,Perak (Murthi)
22.Sri Maha Mariamman Alayam,Hutan Melintang Perak (Murthi)
23.Sri Maha Mariamman alayam,Bt.9,Bagan Datoh,Perak (Murthi)
24.Sri Maha Mariamman Alayam,Ladang Biji,Bagan Datoh,Perak (Murthi)
25.Sri Sivamuni Alayam,Ldg Gula Division 55,Bagan Serai,Perak (Muniandy,Ravi)
26.Sri Ramar Alayam,Ee Seng Est.Sg.Gedong,Bagan Serai,Perak (Muniandy,Ravi)
27.Sri Maha Mariamman Alayam,Semmangol,Bagan Serai Perak (Muniandy,Ravi)
28.Sri Subramaniar Alayam,Sg.Siput,Perak (Rachagan)
29.Sri Maha Mariamman Alayam,Kemunting,Sg.Siput,Perak (Rachagan)
30.Sri Maha Mariamman Alayam,Kampar Est,Kampar,Perak (Jega)
31.Sri Naga Muniswarar Alayam,Temoh,Kampar,Perak (Jega)
32.Sri Muniswarar Alayam,Batu Putih,Kampar,Perak (Jega)
33.Sri Maha Muthu Mariamman Alayam,Trb Est,Trong,Perak (Jega)
34.Sri Maha Mariamman Alayam,Beruas,Perak (Maniam)
35.Sri Maha Mariamman Alayam,Laurdardale Est,Bkt.Gantang,Perak (Thanarajan)
36.Sri Subramaniar Alayam,Selama,Perak (Siva)
37.Sri Maha Mariamman Alayam,Padang Rengas,Perak (Siva)
38.Sri Kaliamman Alayam,Kati Est,Kuala Kangsar,Perak (Sivasingam)
39.Sri Maha Mariamman Alayam,Senggang Est,Kuala Kangsar,Perak (Sivasingam)
40.Om Sri Sadamuniswarar Alayam,Simpang Halt,Taiping,Perak (Jeya Mohan)
41.Sri Subramaniar Alayam,Grik,Perak (Muniandy)
42.Sri Maha mariamman Temple,Parit Buntar,Perak (Sivakumar)
43.Sri Subramaniar Temple.Parit Buntar,Perak (Sivakumar)
44.Sri Muniswarar temple,Tg.Piandang,Parit Buntar,Perak (Sokalingam)
45.Sri Subramaniar Alayam,Kuala Kurau,Perak (Sokalingam)
46.Sri Tilai Kaliaman Temple,Bagan Serai,perak (Jeeva)
47.Sri Sivan Alayam,Bagan Serai,Perak (Jeeva)
48.Sri Vinayagar Alayam,Simpang Lima,Parit Buntar,Perak (Sundram)

Selangor

1. Sri Mahamariamman Temple, Tanjung Sepat ( Mani /Raja 017-8857619 )
2. Sri Kaligambal Temple ,Taman Sentosa ( Raja 017-8857619 )
3. Bala Subramaniam Temple , Port Klang ( Raja 017-8857619 )
4. Sri Rajamariamman Temple , Sentul ( Nava 016-6446885 )
5. Sri Thurgai Amman Temple , B.B Sentul ( Nava 016-6446885 )
6. Muniswarar Alayam , Sentul Jln Tanah Lapang ( Nava 016-6446885 )
7. Arulmigu Sri Thurgai Amman Temple, Selayang ( Siva 019-3418620 )
8. Sri Mahamariamman Temple , Midlands ( Thiagu 012-6195862 )
9. Sri Vada Bathrakali Amman ,Rawang ( Balan 012-2640478 )
10. Sri Maha Mariamman Temple , Rawang ( Hari 016-3197018 )
11. Sri Kanchi Kamathchi Amman Temple, Rawang ( Vicky 017-3032808)
12.Sri Veerapathy Vinayagar Temple, Rawang ( Sathish 014-6649730 )
13. Sri Subramaniam Temple, Ulu Yam Baru ( Kumar 016-9075657 )
14. Sri Mahamariamman Temple, Ladang Bukit Jalil ( Capt Bala 019-2166205 )
15. Sri Thandayuthabani Temple , Kapar ( Saamy 017-3469650)
16. Sri Agilandeswari Temple, Kapar ( Saamy 017-3469650 )
17. Sangali Karupan Temple, Rawang ( Selvam 016-3137840 )
18. Subramaniam Temple, Batu Caves ( Nava 016-6446885 )
19.Sivan Temple,Klang (R.Mohan 012 3122267)
20.Sri Maha Mariamman,Kg.Muhibah,Rawang (Kala 014-3318235)
21.Sri Vayuputra Alayam,Rawang ( Pugan 017-2785635)
22.Sri Muniswarar Alayam,Rawang (Saras 017-2554048)
23.Sri Kaliamman Alayam,Rawang (Nathan 017-3800596)
24.Sri Madurai Veeran Alayam,Rawang (Sundar 019-3733541)
25.Sri Sangili Karuppar Alayam,Tmn Awana,Cheras (Mani 013-6092699)
26.Sri Balathandayuthabani Temple,Kapar (Samy 017-3469650)
27.Sri Nagakanni Temple,Sementa,Kapar (Param 017-3469650)
28.Sri Maha Mariamman Alayam,Bt.Ampat,Klg (Mani 019-2463181)
29.Sri Sanggili Karuppar Alayam,Bkt.Jalil. (Shanti 012-3766433)
30.Sri Karumariamman Alayam,Banting (KM Raj 019-2295445)
31.Sri Mariamman Alayam.Golconda Est,Meru (Samy 017-3469650)
32.Sri Karpaga Vinayagar Kovil,Kg,Jawa,Klg (Mani 103-6092699)
33.St.Joseph Church,Sentul (Shanti 012-3766433)
34.Sri Maha Mariamman temple,Tmn.Sentosa,Kapar (Samy 017-3469650)
35.Sri Veerabatharar Kaliamman Temple,Tmn.Medan,PJ (Sree 012-2587345)

PAHANG

1. Sri Subramaniar Alayam,Tanah Rata,Cameron (Simattri)
2. Sri Murugan Alayam,Kuala Terlah,Cameron (Simattri)

Kelantan

1. Sri Sivasubramaniar Alayam,Kota Bahru,Kelantan (Tharman)
2. Sri Maha Mariamman Alayam,Kuala Kerla Est,Kelantan (Tharman

Read more...

புவா பாலாவில் மற்றுமொரு விசேசமுங்கோ..

>> Thursday, July 30, 2009

எதிர்வரும் (02-08-2009) ஞாயிற்றுக்கிழமை, புவா பாலா கிராமத்தில் பண்பாட்டு, கலாச்சார விழா நடைப்பெறவுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், கோலாட்டம் மற்றும் விளையாட்டுகளான உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் காலை 10 மணி தொடங்கி இரவு 8 மணிவரை நடைப்பெறவிருக்கின்றது. அன்றைய நிகழ்விற்கான மதிய, மாலை உணவினை கிராமத்துப் பெண்கள் சமைத்து பரிமாறவுள்ளனர்.

பினாங்கில் 200 வருடங்களாக நிலைப்பெற்றிருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமம் இனி இருக்குமா என்பது கேள்விக்குறியே! இந்நிகழ்வானது அக்கிராமத்தின் கடைசி நிகழ்வாகக் கூட இருக்கலாம். எனவே, இவ்வறிவிப்பை அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு புவா பாலா கிராம மக்களுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறோம்.

கீழ்காணும் அழைப்பிதழை உங்களுக்கு அறிமுகமானவர்களிடமும் இணைய நண்பர்களிடமும் மின்னஞ்சல்வழி, அச்சடித்து அனுப்பி தெரியபடுத்தவும்.





இக்கண்,

-உங்கள் வரவை பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் புவா பாலா தமிழ் மக்கள்-

போராட்டம் தொடரும்..

Read more...

கல்வி அமைச்சுக்கு ஒரு மின்னஞ்சல்..

>> Sunday, June 7, 2009





மேற்காணும் செய்தியைப் படித்தவுடன், உடனடி நடவடிக்கையாக இன்றே கல்வி அமைச்சுக்கு மின்னஞ்சல்வழி உங்களுடைய கோரிக்கையை அனுப்பவும்.

எசு.பி.எம் தேர்வில் அதிகபட்சம் 10 பாடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டால், தமிழிலக்கிய பாடம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை நினைவில் கொண்டு உடனடி நடவடிக்கையில் இறங்குங்கள்! தமிழை வாழ வையுங்கள்!

Read more...

புதிய பணிமனைக்குச் செல்லும் உதயகுமார்..

>> Saturday, June 6, 2009

இண்ட்ராஃப் வழக்கறிஞர் திரு.உதயகுமார் பங்சாரில் புதிய பணிமனை ஒன்றினை திறக்கவுள்ளார். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பங்சாரில் தன்னுடைய பழைய பணிமனையின் மாதக் கட்டணம் செலுத்தவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் இயலாது போனதால் மூட வேண்டியதாயிற்று. பல நல்லுள்ளங்கள் அவருக்கு பக்கபலமாக இருந்து நிதியுதவி அளிக்க முன்வந்தாலும், அப்பொழுது இசாவில் தடுத்து வைக்கப்படிருந்த உதயகுமார் அவ்வுதவியை மறுத்துவிட்டார்.

இருப்பினும், விடுதலைக்குப்பின் மீண்டும் 18 கோரிக்கைகளை முன்னெடுத்து போராடத் துவங்கியுள்ள உதயா அவர்கள், சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்து 25 பிரிவுகளாக பட்டியலிட்டு வைத்துள்ளார். இந்த ஆய்வுகளைக் கொண்டு உதயா முன்னெடுக்கவிருக்கும் உரிமைப் போராட்டத்திற்கு புதிய செயலகமாக அமையவுள்ளது இப்பணிமனை.

இதற்கிடையில் எதிர்வரும் 19-ஆம் திகதி சூலை மாதம், கிள்ளான் ஒக்கியன் மண்டபத்தில் உதயா தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை வெளியிடுவார் என நம்பப்படுகிறது. அதுவரை பொறுமைக்காக்கும்படி இண்ட்ராஃப் ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





படங்கள் : ரேம்போ ரவி (நன்றி)

போராட்டம் தொடரும்...

Read more...

பினாங்கு தண்ணீர்மலையில் திரு.உதயகுமார் சிறப்புப் பிரார்த்தனை

>> Thursday, June 4, 2009



எதிர்வரும் 13-ஆம் திகதி (சனிக்கிழமை) இரவு 7.00 மணியளவில், பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு சிறீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் திரு.உதயகுமார் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்ளவிருக்கிறார்.

பினாங்கு மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் இச்சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். 2007-ஆம் ஆண்டில் பினாங்கு இண்ட்ராஃப் கருத்தரங்கிற்கு வருகைப் புரிந்த திரு.உதயகுமார், இ.சா விடுதலைக்கு பின்பு முதன்முறையாக பினாங்கிற்கு வருகை புரிவது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகவலை குறுந்தகவல்வழி தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்கவும்


போராட்டம் தொடரும்...

Read more...

பத்துமலையில் உதயா முடிகாணிக்கை..

>> Tuesday, May 12, 2009


எதிர்வரும் 17-ஆம் திகதி மே மாதம் (ஞாயிற்றுக்கிழமை), பத்துமலை வளாகத்தில் அண்ணன் உதயா முடிகாணிக்கை மற்றும் சிறப்பு பிராத்தனை நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவிருக்கிறார். காலை 9 மணியளவில் நடைப்பெறவிருக்கும் இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி ஆதரவாளர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள அழைக்கப்படுகின்றனர். அன்றைய தினத்தில், உதயாவின் விடுதலையை முன்னிட்டு பல ஏராளமான மக்கள் சக்தி ஆதரவாளர்கள் முடிகாணிக்கை செலுத்தவிருப்பதாக அறியப்படுகிறது.

இந்நிகழ்வினை முன்னிட்டு பினாங்கு மக்கள் சக்தியினர் பத்துமலை செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தியிருக்கின்றனர். பினாங்கு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பத்துமலை செல்ல எண்ணம் கொண்டவர்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் : -

திரு.கலை 012-5637614

திரு.செல்வம் 016-4827974

ஆதரவாளர்கள் பேருந்துப் பயணத்திற்காக தங்களின் பெயரை விரைவாக பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

போராட்டம் தொடரும்..

Read more...

இண்ட்ராஃப் ஒருங்கிணைப்பாளர்கள் இடைநீக்கம்!

>> Friday, April 17, 2009


தற்சமயம் நம் நாடு அரசியல் மற்றும் சமூக ரீதியில் பல்வகையான மாற்றங்களை எதிர்நோக்கியுள்ள வேளையில், இண்ட்ராஃப் இயக்கமும் தாம் முன்னெடுத்துள்ள போராட்டத்தை புதிய பரிணாமத்திற்கு இட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முன்னேறத் துடிக்கும் மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளும் தேவைகளும் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளையும் இசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இண்ட்ராஃப் வழக்கறிஞர்களின் விடுதலையையும் விஞ்சியுள்ளது.

நடப்புச் சூழலையும் மாற்றங்களையும் கருத்தில்கொண்டு, இண்ட்ராஃப்பின் 10 நடப்பு ஒருங்கிணைப்பாளர்கள் வகித்துவரும் பொறுப்புகளை தற்காலிகத்திற்கு நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இண்ட்ராஃபின் தேசிய ஒருங்கிணைப்பாளர், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர், தகவல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரின் பொறுப்புகளும் அடங்கும். இம்முடிவு உடனடியாக அமுலாக்கத்திற்கு வருகிறது. இண்ட்ராஃப்பின் அனைத்து ஆதரவாளர்களும் இயக்கத்தின் பெயரால் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.. அதேவேளை, அறிக்கை வெளியிட எண்ணம் கொண்டவர்கள் இயக்கத்தின் பெயரால் அல்லாமல், தனிமனிதனாக அறிக்கையை வெளியிடலாம்.

இவ்விடைப்பட்ட காலத்தில், ‘இண்ட்ராஃபின்’ கவனத்திற்கு உடனடியாக கொண்டுவர வேண்டிய விடயங்களை, தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கும் மூவரின் பார்வைக்கு கொண்டுவரவும்.

திரு.கண்ணன் : 012-2690024

திரு.கணேசன் வேலு : 012-5158762

திரு.தனா : 019- 3571820


அடுத்தகட்டமாக, இண்ட்ராஃப்
ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்தப் பின்பு, மலேசிய இந்தியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்வகையில், இயக்கத்தை ஏற்று வழிநடத்திச் செல்ல புதியவொரு நிர்வாகக் குழு நியமிக்கப்படும்.

வேதமூர்த்தி பொன்னுசாமி
இண்ட்ராஃப் தலைவர்

Read more...

உத‌யாவிற்காக‌ காவ‌ல்நிலைய‌த்தில் புகார்!

>> Friday, February 27, 2009



நாளை (னிக்கிழமை 28/02/2009) காலை 10 ணியவில் பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் க்கள் க்தி ஆதவாளர்கள் ஒன்று திரண்டு, உதயாவிற்கு றுக்கப்படும் முறையானசிகிச்சையைக் ண்டிக்கும் கையில் அம்னோ, கெம்தா ற்றும் உள்துறை அமைச்சிற்கு எதிராகபுகார் அளிக்கவிருக்கின்றர்.

நாடு ழுவியநிலையில் க்கள் க்தி ஆதவாளர்கள் இந்நிகழ்வில் திரளாகஒன்று திரண்டு பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு திரு.செயதாசு அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்.

ற்சம், உதயாவின் கால்கள் வீக்கடைந்தும் நாளுக்கு நாள் றுத்துக்கொண்டும் போகிறது. தொடர்ந்து உதயாவிற்கு சிகிச்சை றுக்கப்பட்டு ந்தால் அவர் ன் கால் விரல்களை இழக்கும் நிலைமை ஏற்பலாம். எனவே, உதயா விரும்புவதுபோல் ஒரு னியார் நிபுணத்துவருத்துவனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பவேண்டும் எனபது அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

உரிமைப் போராட்டத்திற்காகஓயாது ந்தஅந்தகால்களை காப்பாற்றவேண்டியது ம்முடையமையெனஅறிக‌.. அனைவரும் திரண்டு வாரீர்!!

போராட்டம் தொடரும்...

Read more...

இண்ட்ராஃப் ஊடக அறிக்கை 15/01/09

>> Thursday, January 15, 2009



அம்னோ அரசும் அதன் குறுகியச் சிந்தனையும்

'2008-ஆம் ஆண்டில் மலேசிய இந்தியர்களின் நிலை ஓராய்வு மற்றும் மனித உரிமை மீறல்கள்' எனும் ஓர் ஆய்வறிக்கையை சென்னையில் இண்ட்ராஃப் விநியோகித்தது குறித்து காரசாரமான விமர்சனங்கள் சில நாட்களாகவே நாட்டின் பல முக்கிய ஊடகங்களில் சூடு பிடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, உண்மையை மூடி மறைப்பதில் அம்னோ தலைமையில் இயங்கிவரும் மக்களவை உறுப்பினர்கள் அதிக முனைப்பு காட்டிவருவதாய் தெரிகிறது.

அம்னோவின் ஊடகங்கள் கூறிவரும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் போல் அல்லாது, முறையான ஆய்வுகளுடனும் ஆதாரங்களின் அடிப்படையிலுமே இண்ட்ராஃப் இவ்வாய்வறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அம்னோவும் அதன் கைக்கூலிகளும் எடுத்துக்கொண்ட செயல்பாடுகளினால் நன்மையடைந்தவர்கள் மக்களா அல்லது இவர்களா என நமக்குள் கேள்விகள் எழுகின்றன?

இண்ட்ராஃப் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் முப்பதுக்கும் மேலான முறைக்கேடுகளும் அராஜகங்களும் ஆதாரப்பூர்வமாக படம்பிடித்துக் காட்டியிருக்கும்பொழுது, அம்னோ தலைமையில் இயங்கிவரும் மக்களவை உறுப்பினர்கள் அப்பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி பேசவேண்டுமே ஒழிய, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி உண்மைகளை மூடி மறைக்கலாகாது.

அண்மையில் அமைச்சர் டாக்டர் சுப்ரா வெளியிட்ட அறிக்கையில்திரு.வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கை பொறுப்பற்றச் செயலாகும். கடந்த சில மாதங்களில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கெல்லாம் பங்கம் விளைவித்துவிட்டது இவரது செயல்என்று கூறியிருப்பதைப் பார்க்கும்பொழுது, மிரட்டும் பாணியில் இவரது அறிக்கை அமைந்ததோடு மட்டுமல்லாது, 52 வருடங்களாக நமக்கு அம்னோ போடும் எலும்புத் துண்டுகளை பெற்றுக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்கிற பாணியிலும் பேசியிருக்கிறார்.

கங்காணிகளைப்போலவும் மேய்ப்பாளர்களைபோலவும் சாமிவேலுவும் சுப்ராவும் நடந்துக் கொள்வதை விட்டுவிட்டு மலேசிய இந்தியர்களின் நலன்களின்பால் அக்கறைக் கொண்டு, காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டுவரும் மலேசிய இந்தியர்களுக்காக குரல் கொடுக்க முனைவதோடு மக்களின் உண்மையான பிரதிநியாக இருப்பதுதான் சிறந்தது.

என் ஆய்வறிக்கையை புறக்கணிக்கும் அம்னோ அரசை என்னோடு திறந்த வாதத்திற்கு வருமாறு அதன் பிரதிநிதிகளை அழைக்கிறேன். இந்த திறந்த வாதமானது பிரித்தானியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ நடைப்பெற வேண்டும்.

காலங்காலமாக மக்களின் உரிமைக்குரலை அடக்குவதில் கைத்தேர்ந்த அம்னோ அரசு, தன்னுடைய அகம்பாவத்தால் நாட்டில் மலேசிய இந்தியர்களுக்கு எதிராக நடைப்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கண்டுங்காணாது இருந்துவருகிறது.

அரசாங்கத்தின் நடைமுறைக்கொள்கைகளால் பாதிக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட மலேசிய இந்தியர்களாகட்டும், அல்லது இன்னும் வறுமையில் வாடிவரும் மலாய் முசுலீம் இனத்தவராகட்டும், இவர்களுக்கு மக்களின் நலன்களில் அக்கறைக் கொண்ட, மக்களுக்காக பயமின்றி, வேறுபாடுகள் களைந்து செயலில் இறங்கக் கூடிய அரசாங்கம் கிடைத்திட வேண்டும் என்பதே எங்களின் அவா.

நாட்டின் எல்லா இனமக்களும் இன, சமய வேறுபாடுகள் களைந்து நம்மிடையே நிலவிவரும் உண்மைகளை ஆய்ந்து, மனிதத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டுமாய் இண்ட்ராஃப் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

திரு.வேதமூர்த்தி
இண்ட்ராஃப் தலைவர்
சென்னை

Read more...

சமூகத் தன்னார்வத் தொண்டூழியர்கள் தேவைப்படுகின்றனர்!

>> Thursday, December 18, 2008


எதிர்வரும் தைப்பூசத் திருநாளில் (07/02/09 , 08/02/09) பினாங்குத் தீவு மக்கள் சக்தியினர் சமுதாயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முனைந்துள்ளனர். பினாங்கில் பிரசித்திப்பெற்ற செட்டிப்பூசம் நடைப்பெறும் நாளன்றும் (07/02/09 சனிக்கிழமை), மறுநாள் தைப்பூசத் திருநாளன்றும் (08/02/09 ஞாயிற்றுக்கிழமை) பினாங்குத் தீவு மக்கள் சக்தியினர் தண்ணீர்மலையில் சமூகச்சேவைப் பந்தல் ஒன்றினை ஏற்படுத்தவுள்ளனர்.

இச்சமூகச் சேவைப் பந்தலில் வழங்கப்படவிருக்கும் சேவைகள் பின்வருமாறு :-

  • முறையான பிறப்புப்பத்திரம் மற்றும் அடையாள அட்டையிள்ளாதவர்களுக்குத் தேவையான உதவிகள்.
  • தனித்துவாழும் தாய்மார்களுக்கான உதவிகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள்.
  • குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஏற்ற நலனுதவிகள்
  • கைவிடப்பட்ட அல்லது குடும்ப பராமறிப்பற்ற முதியோர்களுக்கான நலனுதவிகள்.
  • அங்கவீனர்களுக்கான / உடல் ஊனமுற்றோருக்கான நலனுதவிகள்.
  • தேர்தல் வாக்காளர்களாக பதிவு செய்யாதவர்களுக்கு வாக்காளர் பதிவு

இச்சேவைகளை வழங்குவதற்காக சமூக நல இலாகா அதிகாரிகள் மக்கள் சக்தியினருடன் இணைந்து அன்றைய தினங்களில் பணியாற்றவுள்ளனர். இச்சேவையில் ஒன்றிணைந்து தோல்கொடுப்பதற்கு பல நல்லுள்ளங்களிடமிருந்து உதவிகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. குறைந்தது 75 தன்னார்வத் தொண்டூழியர்களாவது இச்சேவைக்குத் தேவைப்படுகின்றனர்.

இரு தினங்களிலும் உதவிநாடி வருபவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து தேவையான பாரங்களைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு தொண்டூழியர்கள் உதவி புரிய வேண்டும். இதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

கால அட்டவணையின்படி பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படும். ஓய்வு நேரங்களும் நிச்சயம் உண்டு.

ஒருவேளை, நீங்கள் பலகாலங்களாகவே சமுதாய முன்னேற்றத்திற்காக ஏதேனும் ஒருவகையில் உதவி புரிந்திட வேண்டும் என்றெண்ணம் கொண்டிருந்திருப்பீர்கள். அவ்வாய்ப்பு இன்று உங்கள் கதவைத் தட்டுகிறது. ஏன், நீங்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? உங்களின் உதவிகள் வழி பலரின் எதிர்கால வாழ்வு மலரவிருக்கிறது. பிறப்புப் பத்திரம் கிடைக்கப்பெற்ற குழந்தைக்கு கல்வி, அடையாள அட்டை கிடைக்கப்பெற்ற இளைஞனுக்கு முறையான வேலை, உதவிகள் கிட்டிய தனித்து வாழும் தாய்மார்களுக்கு சொந்தத் தொழில் வாய்ப்பு, ஆதரவற்ற முதியோர்களுக்கு அரவணைப்பு, அங்கவீனர்களுக்கு மறுவாழ்வு என உங்களின் வியர்வையில் அவர்களின் எதிர்காலம் உயரப்போகிறது.

அண்ணன் உதயகுமார் கூறியதுபோல இனி நாம் நம்மை சமுதாயக் கடமைகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான முதற்படிதான் இச்சமூகச் சேவைப் பந்தல்!

இம்மகத்தான சேவையில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள கீழ்கண்ட கைப்பேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும்.

  • 012 5637614 ( திரு.கலை )
  • 012 7162884 ( சரஸ்வதி )
  • 012 5557522 ( திரு.மாறன் )
  • 019 4586587 ( திரு.சுரேசு )

2009-ஆம் ஆண்டு சமூகத் தொண்டுகள் புரியும் ஆண்டாக மலரட்டும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP