தமிழன் ஊனமாக்கப்பட்டான்...!!

>> Thursday, May 22, 2008


அதிகார முறைக்கேடுகளுக்கு இச்சம்பவம் ஓர் அத்தாட்சி..! சனநாயக நாட்டில் ஓர் தமிழன் அதிகார வர்கத்தினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு இறுதியில் உடல் ஊனமாக்கப்பட்டுள்ளான். சஞ்சீவு குமார் என்ற தமிழனை கடந்த 28 சூலை 2007-இல் வெளிநாட்டிற்கான உளவுத்துறை அதிகாரி என குற்றம் சுமத்தி காவல் துறையினர் அவரை 55 நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த 55 நாட்களில் விசாரணை என்றப் பெயரில் சிறைச்சாலை அதிகாரிகள் சஞ்சீவு குமாரை ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்தியதாக, சஞ்சீவு குமாரின் மனைவி சர்மிளா உதயகுமார் கடந்த 20 மே அன்று டாங்கு வாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சுமார் இரண்டு மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டப்பின், 22 செப்டம்பர் 2007-இல் சஞ்சீவு குமாரை மலேசிய மக்கள் அதிகம் வெறுக்கும் இடமான கமுந்திங்கு தடுப்புக் காவல் முகாமிற்குக் கொண்டு சென்றனர். மனித வர்க்கத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் சஞ்சீவு குமார் ஆங்கே சிறைச்சாலை அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக, ஒருக் காவலாளியாகப் பணிப்புரியும் சர்மிளா தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பலமுறை காலணி அணிந்த கால்களால் எலும்புப் பகுதிகளில் உதைக்கப்பட்டும், தலைப்பகுதியில் தாக்கப்பட்டும், மரக்கட்டைகளால் இடதுகாலும், இடது கையும் அடிக்கடி சராமரியாகத் தாக்கப்பட்டும், தண்ணீர் புட்டிகளால் அடிக்கப்பட்டும் இன்று சஞ்சீவு குமார் உருக்குலைந்து போயிருப்பதாக திருமதி சர்மிளா அவர்கள் மனவேதனையோடு கூறியுள்ளார். கடினமான பொருட்காளால் தனது கணவரின் மர்ம உறுப்பு தாக்கப்பட்டதுடன், அவருடையச் சிறுநீரை பருகக் கோரி சிறைச்சாலை அதிகாரிகள் வற்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11 ஏப்ரல் 2008-இல் சஞ்சீவு குமார் இடது கால், கை வலியால் துடித்ததனால் தைப்பிங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், ஆங்கே முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமல் ஒரு வாரத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் எனவும் திருமதி சர்மிளா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சஞ்சீவு குமார் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதாகவும், இடது கை,கால் முற்றிலும் நிரந்தரமாகச் செயலிழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளுக்கு நாள் சஞ்சீவு குமார் தனது எடையை இழந்து வருவதாகவும், தினமும் வலுவிழந்து வலியோடு காணப்படுவதாகவும் சர்மிளா தனது புகாரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருமதி சர்மிளாவோடு உடன் புகார் செய்யச் சென்ற "இ.சாவை துடைத்தொழிப்போம்" இயக்கத்தின் தலைவர் திரு. சாயிட்டு இபுராகிமை நிருபர்கள் அணுகி கேட்டதற்கு, திரு.சஞ்சீவு குமாரை வெளிநாட்டிற்காக வேவு பார்த்ததாகச் சந்தேகித்து காவல் துறையினர் கைது செய்ததாகக் குறிப்பிட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கே சட்டத்தில் தமது உரிமைகளைக் காத்துக் கொள்வதற்கு உரிமை இருக்கும் பட்சத்தில், சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களைக் கொடுமைப்படுத்த சட்டத்தில் இடமே இல்லை. ஆனால் நடப்பது என்ன...?

இப்படிப்பட்ட முறைகேடுகளுக்கு மத்தியில்தான் உங்களுடைய வருங்கால சந்ததியினர் வாழப் போகின்றனரா? இன்று கவலையறியாது உங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு உங்களுடன் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் முகத்தை ஒரு முறைப் பாருங்கள். இக்கொடுமை இன்று தட்டிக் கேட்கப்படாவிட்டால், அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள்..! சஞ்சீவு குமாருக்கு நேர்ந்த இந்த கதியானது வருங்காலங்களில் யாருக்கும் நடக்காமல் இருப்பதற்கு நாம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டம் தொடரும்...

Read more...

இன்றைய பதிவிறக்கம்...

>> Wednesday, May 21, 2008


"குழலினிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதவர்" என்பது மழலைகளுக்குறியச் சிறப்பு. மழலை மொழிக்கு எவ்வளவு இனிமை உளதோ, அதேப்போன்று அமுத மொழியாம் தமிழ் மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உளது. தோண்டத் தோண்ட அமுத சுரபியாய், ஊற்றெடுக்கும் மணற்கேணியாய் விளங்கும் இனிய தமிழில் மழலைகளுக்கு பெயர் சூட்டினால் அது தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப் பெரிய சிறப்பு அல்லவோ.. தமிழர்களாய்ப் பிறந்த நாம் இன்று இனிய தமிழில் பெயர் வைப்பதைத் தவிர்த்து வருவது மிகவும் வருந்தத்தக்கச் செயலாகும்.

இனி வரும் காலங்களில், உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டித்தான் பாருங்களேன். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்ற மாட்டார்களா என்ன? தமிழில் பெயரிடுவதை ஒரு புரட்சியாகச் செய்வோமே..

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா? கீழ்கண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து தமிழ்ப் பெயர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

"குழந்தைகளின் செல்லப் பெயர்கள்"

Read more...

லீ குவான் யூவின் கீழ் ஒரு தேசம்..

>> Tuesday, May 20, 2008


தென்கிழக்காசிய நாடுகளிலேயே மிகவும் வளர்ச்சி அடைந்த நாடு எனக் கருதப்படுவது சிங்கப்பூர் எனும் குட்டித் தீவுதான். 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்று, 1963 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழு சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது.

இத்தகு வளர்ச்சிகளை அந்நாடு பெற்றிருப்பினும், குடிமக்களின் கருத்து சுதந்திரம் பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதை யாராலும் மறுக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்களை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் கைது செய்வது நம் நாட்டில் வழக்கமாகிவிட்டது என்றாலும், சிங்கப்பூரும் மலேசியாவிற்கு சளைத்தது அல்ல என கடந்த காலங்களில் அது நிரூபித்து வந்துள்ளது. அந்நாட்டிலும் இ.சா சட்டம் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது.

லீ குவான் யூவின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கிய நிரூபணங்கள் ஓர் ஆவணப்படமாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதோ அதன் படச்சுருள் :-

Read more...

துன் மகாதீர் 'அம்னோ'விலிருந்து விலகல்...!

>> Monday, May 19, 2008


(மேலே காணப்படும் படம், துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறுவதாக புத்ரா உலக வாணிப மையத்தில் 'அம்னோ' மாநாட்டின்போது அறிவித்தக் காட்சி)

கெடாவில் இன்று நடைப்பெற்ற ஒருக் கருத்தரங்கில் '12-வது பொதுத்தேர்தலுக்கு முன் மலாய்க்காரர்களின் நிலை' எனும் தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருந்த மலேசியாவின் முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தாம் 'அம்னோ'வை விட்டு விலகுவதாக பகிரங்கமாக அறிவித்து வந்திருந்தோரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளார். தம்முடைய விலகல் குறித்து கருத்துரைக்கையில், இந்த விலகலானது நிரந்தரமானது அல்ல எனவும், பிரதமர் அப்துல்லா அகமது படாவி பதவி விலகினால் மட்டுமே தாம் மீண்டும் 'அம்னோ'வில் மீண்டும் இணையப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய தலைமைத்துவத்தின் மீது அதிருப்தி கொண்டிருக்கும் அம்னோ உறுப்பினர்கள் தன்னுடைய அடிச்சுவட்டை பின்பற்றி கட்சி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இவருடைய இந்த அறிவிப்பானது 'அம்னோ'வின் தீவிரத் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12-வது பொதுத் தேர்தலில் பாரிசான் அடைந்த மோசமான நிலைக்கு பிரதமர் அப்துல்லா முழுப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனவும், இனியும் அப்துல்லாவின் தலைமைத்துவத்தின் மீது தாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லையெனவும் துன் மகாதீர் மேலும் கூறினார்.

துன் மகாதீர் 1964-ஆம் ஆண்டு முதன் முதலாக 'கோத்தா சிதார்' நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் 1969-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் தனது தொகுதியை இழந்தார். அதே ஆண்டில் அவர் அன்றையப் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரகுமானை தாக்கி பேசியதற்காக 'அம்னோ'விலிருந்து வெளியேற்றப்பட்டார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ல் அப்போதைய பிரதமராக விளங்கிய துன் அப்துல் ரசாக்கின் அழைப்பின் பேரில் மகாதீர் மீண்டும் 'அம்னோ'வில் சேர்த்துக் கொள்ளப்பட்டு குபாங்கு பாசு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளடைவில் அவருக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, அடுத்த நான்காண்டுகளில் கட்சியின் துணணத் தலைவர் பதவியை கைப்பற்றினார். 1981-ஆம் ஆண்டில் துன் மகாதீர் மலேசியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.

நாளடைவில் 'அம்னோ' உறுப்பினர்களிடையே உட்பூசல் அதிகரித்து அக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டபோது, துன் மகாதீர் 'அம்னோ பாரு' எனும் புதுக் கட்சியை பதிவு செய்து, அக்கட்சியின் முதல் உறுப்பினராகச் சேர்ந்தார்.



இதற்கிடையில் கட்சியின் தலைமைத்துவத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையில் மகாதீருக்கு எதிராகத் தோல்வி கண்ட தெங்கு ரசாலிக்கு அம்சா 'செமாங்காட்டு 46' எனும் புதுக் கட்சியை தோற்றுவித்தார். 1996-ஆம் ஆண்டு வாக்கில் தெங்கு ரசாலிக்கு மீண்டும் 'அம்னோ'வில் இணைந்தார். இவர் தற்போது கட்சியின் தலைமத்துவத் தேர்தலை வருகின்ற திசம்பர் மாதம் நடைப்பெற வேண்டும் என 'அம்னோ'வை வற்புறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

படச்சுருள்

Read more...

உதயாவின் நெகிழவைக்கும் தோற்றம்..

>> Sunday, May 18, 2008

கடந்த 15 மே அன்று தைப்பிங் மருத்துவமனைக்கு திரு.உதயகுமாரை சிகிச்சைக்காக கொண்டு சென்றிருந்தபொழுது எடுக்கப்பட்ட படங்கள்...

சப்பான் காலணியோடு காணப்படுகிறார்.



கிழிந்த கால்சட்டையுடன் காணப்படுகிறார்.





Read more...

பூமாதேவி சீற்றமடைந்தாள்.. உயிர்கள் பல செல்லாக் காசுகளாகின...!

>> Wednesday, May 14, 2008


அன்வாங், சீனா - அண்மையில்தான் நர்கீசு சூறாவளிப்புயலால் மியன்மார் புரட்டிப் போடப்பட்ட சம்பவம் நம்மை துயரத்தில் ஆழ்த்தியது. இதற்கு அடுத்தாற்போல் கடந்த திங்கட்கிழமை பூமாதேவியின் சீற்றத்தால் சீனாவில் பூகம்பம் ஒன்று ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளதைக் கேட்டு மனம் அதிகமாக கனக்கிறது. வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள சீசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பத்தில் தற்போதைய தகவலின்படி 15,000 பேர்களுக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். சீசுவான் மாகாணத்தில் மட்டும் 26,000 பேர்கள் இன்னும் நில மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இன்னும் உயிரோடு சிக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மற்ற நகரங்களின் கணக்கெடுப்பில் இவ்வெண்ணிக்கை இன்னும் உயரும் என சின்சுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மலை அடிவாரங்களில் உள்ள சிறு கிராமங்கள் கடுமையான வானிலையால் வெளியுலக தொடர்பு அற்று இருப்பதால், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகள் இராணுவ விசையுந்தின் உதவியோடு இன்று வானத்தின்வழியாக போடப்பட்டு வருகிறது.



இரண்டு நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்த பலர் இன்று உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். எனவே மற்றவர்களும் உயிரோடு இருக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணி மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மத்திய சீசுவான் மாகணத்தில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 178 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 23 சிறுவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்னும் இதுபோன்ற உயிரிழப்புச் செய்திகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் உள்ளன. திபேத்து நாட்டிற்கு சீனா செய்துவந்த அடக்குமுறைக்கு பூமாதேவி இப்படி ஒரு கடும் தண்டனையை வழங்கியிருக்கிறாள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் அப்பாவி மக்களின் துயரத்தை பார்த்துச் சகித்துக் கொள்ள முடியவில்லை. உலகில் சமாதானம் அற்றுப்போய் சண்டைகள் உருவெடுக்கும்பொழுது கடவுள் 'இயற்கை பேரிடர்' எனும் அவதாரம் கொண்டு மக்களுக்கு பாடம் கற்பிக்கிறார். அதன்வழி கருணையை பிறர்மீது நாம் பொழிய பாடம் கற்றுத் தருகிறார்.

ஆனால் மனிதர்கள் இதன்வழி பாடம் கற்றுக் கொள்கிறார்களா?

பல கேள்விகள் மனதைக் கேள்வி கேட்டு துளைத்துக் கொண்டிருக்கின்றன...

பல எண்ணங்கள் பூமியை பிளந்த வலியோடு மனதையும் பிளக்கின்றன...

பிளக்கப்பட்ட மனதில் மனிதநேயம் எனும் சொல் மட்டும் பற்றிக் கொண்டுள்ளது..

மனிதநேயம் இல்லையேல்.....???

Read more...

பினாங்கில் அமைதி ம‌றிய‌ல் (தொட‌ர்ச்சி)

>> Monday, May 12, 2008

பின்னால் திரும்பிப் பார்த்தேன், ஒரு காவ‌ல்துறை அதிகாரி நின்றுக்கொண்டிருந்தார்.

நான் இங்கு எத‌ற்கு நின்றுக் கொண்டிருப்ப‌தாக‌க் கேட்டார், அத‌ன்பின் என் அடையாள‌ அட்டையை வாங்கிக் கொண்டு என் முழுவிவ‌ர‌ங்க‌ளையும் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். விசார‌ணைக்கு உத‌வ‌ வேண்டும் என‌க் கூறி என்னை அழைத்துச் சென்றார்க‌ள். ந‌ட‌க்கும்பொழுது ஒரு சீன‌க் காவ‌ல்துறை என் முதுகில் கைவைத்து த‌ள்ளிக் கொண்டு வ‌ந்தார். கையை என் முதுகிலிருந்து எடுக்குமாறு சொன்னேன், அத‌ற்கு அவ‌ர் ப‌ரவாயில்லை நீ ந‌ட‌ என‌ப் பிடித்துத் த‌ள்ளினார். என‌க்கு சொந்த‌மாக‌ ந‌ட‌க்க‌த் தெரியும் என‌ அவ‌ர் கையை ஒதுக்கிவிட்டு ந‌ட‌ந்தேன்.

பேர‌ங்காடியிலிருந்து வெளியே வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ என்னை காவ‌ல்துறை வ‌ண்டியில் ஏறுமாறு வ‌ற்புறுத்தினார்க‌ள். நான், எத‌ற்காக‌ என்னை வ‌ண்டியில் ஏற‌ச் சொல்கிறீர்க‌ள், த‌குந்த‌ கார‌ண‌ம் கொடுங்க‌ள் என‌ வின‌விய‌ போது அவ‌ர்க‌ளிட‌மிருந்து ஒரு ப‌திலும் வ‌ர‌வில்லை. வ‌ண்டியில் ஏறு என‌ ஓர் அதிகாரி என்னை பிடித்துத் த‌ள்ள‌ முய‌ன்றார், நான் ந‌கர‌வில்லை. கார‌ண‌ம் சொல்லாமல் நான் வ‌ண்டியில் ஏற‌ப் போவ‌தில்லை என‌க் கூறினேன். இது எங்க‌ள் மேல‌திகாரியின் க‌ட்ட‌ளை என‌ ப‌தில் வ‌ந்த‌து. அந்த‌ மேல‌திகாரியை நான் ச‌ந்திக்க‌ வேண்டும் என்ற‌தும் அங்கிருந்த ஓர் அதிகாரியை அழைத்த‌ன‌ர். இவ‌ரிட‌ம் கேள் என்ற‌ன‌ர். என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்க‌ள், ஏன் வ‌ண்டியில் ஏற‌ச் சொல்கிறீர்க‌ள், த‌குந்த‌ கார‌ண‌ம் கொடுங்க‌ள் என‌ வின‌விய‌த‌ற்கு அதே ப‌தில்தான் வ‌ந்த‌து. இங்கு கேள்விக‌ள் கேட்காதே, ஏதுவாயினும் காவ‌ல் நிலைய‌த்தில் வ‌ந்து பேசிக் கொள் என்று கூறி என்னை வ‌ண்டியினுள் பிடித்துத் த‌ள்ளினார்க‌ள்.

வ‌ண்டியில் என்னுட‌ன் ஆறு காவ‌ல்துறை அதிகாரிக‌ள் அம‌ர்ந்துக் கொண்டார்க‌ள். வ‌ண்டி கிள‌ம்பிய‌தும் சில‌ கைப்பேசி அழைப்புக‌ள் வ‌ந்த‌ன‌.. க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டாம் உங்க‌ள் பின்னால் நாங்க‌ள் வ‌ருகின்றோம் என‌ சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூறினார்க‌ள். வ‌ண்டி ப‌ய‌னித்த‌து. சில‌ அதிகாரிக‌ள் என்னுட‌ன் பேச்சுக் கொடுத்த‌ன‌ர். நான் ப‌திலுக்கு வ‌சைப்பாடிக் கொண்டு வ‌ந்தேன், இந்திய‌ர்க‌ளைக் க‌ண்டாலே உங்க‌ளுக்கெல்லாம் கைது செய்ய‌ வேண்டும் என‌த் தோன்றுகிற‌தோ, இந்த‌ப் போக்கு என‌க்கு பிடிக்க‌வில்லை என‌ ஏசினேன். ப‌திலுக்கு அவ‌ர்க‌ள் நாங்க‌ள் யாரை வேண்டுமானாலும் பிடிப்போம், நீ அந்த‌ இட‌த்தில் இருந்திருக்க‌க் கூடாது, ஏன் நிழ‌ற்ப‌ட‌ங்க‌ளை எடுத்தாய் என‌ அறிவுசீவிக‌ளாக‌க் கேள்விக‌ளைக் கேட்டுக் கொண்டு வ‌ந்தார்க‌ள்.

வ‌ண்டியின் பின்னால் அம‌ர்ந்திருந்த‌ இந்திய‌ காவ‌ல்துறை அதிகாரியொருவ‌ர், "என‌க்கும் தெரியும்யா, இவ‌னுங்க‌ இப்டிதான், ந‌ம்ம‌ என்ன‌ ப‌ண்ற‌து? ஒன்னும் க‌வ‌ல் ப‌டாதெ ஒன்னும் இல்ல‌, சின்ன‌ மேட்ட‌ர்தான், கேள்வி கேட்டுட்டு விட்டுருவானுங்க‌.. கேட்டா ஃபோட்டோ எடுக்க‌ வ‌ந்தேனு ம‌ட்டும் சொல்லு, ஓகேவா..

அத‌ன் பின் ஒரு ம‌லாய் காவ‌ல்துறை அதிகாரி இடைம‌றித்து நான் கூறிய‌தை ஆட்சேபித்தார், தாங்க‌ள் இந்திய‌ர்க‌ளை ம‌ட்டும் குறிவைத்து பிடிக்க‌ வேண்டும் என‌ செய‌ல்ப‌ட‌ வில்லை என்று என்னிட‌ம் கூற‌ நான்,

"ஆனால் இந்த‌ நாட்டில் இந்திய‌ர்க‌ளைத்தானே ப‌லிக்க‌டாவாக்கிறீர்க‌ள்" என‌ ப‌திலுரைத்தேன்.


ஓர் ஆசிரிய‌ராக‌ இருந்துக்கொண்டு இப்ப‌டி நீ பேச‌லாமா என்று அவ‌ர் என்னை திரும்ப‌ கேட்டார். ப‌திலுக்கு நான்,

"ஓர் ஆசிரிய‌ர் உண்மையை எடுத்துரைக்க‌ வேண்டிய‌தும் க‌ட‌மைதான்.." என்றவுட‌ன் அவ‌ர் ஒன்றும் பேச‌வில்லை. சில‌ நிமிட‌ங்க‌ள் க‌ழித்து தேவை இல்லாத‌ வெட்டிக் க‌தைக‌ளைப் பேசிக் கெண்டே வ‌ந்த‌ன‌ர். வ‌ண்டி பினாங்கு காவ‌ல்துறை த‌லைமைய‌க‌த்தை அடைந்த‌து.


என்னை இர‌ண்டாவ‌து மாடியில் அமைந்துள்ள‌ குற்ற‌ப் புல‌னாய்வுப் பிரிவின் அறைக்கு அழைத்துச் சென்ற‌ன‌ர். அந்த அறை நீள‌மாக‌ இருந்த‌து. ஆங்கே இன்னும் சில‌ அதிகாரிக‌ள் அம‌ர்ந்திருந்த‌ன‌ர். சில‌ர் உண‌வ‌ருந்திக் கொண்டும் சில‌ர் நாளித‌ழ் ப‌டித்துக் கொண்டும், ம‌ற்றும் சில‌ அதிகாரிக‌ள் க‌தைப் பேசிக் கொண்டும் இருந்த‌தைப் பார்க்க‌ முடிந்த‌து. த‌ரையில் சுமார் 20 சீன‌ர்க‌ள் ஏதோ ஒரு குற்ற‌த்திற்காக‌ப் பிடிக்க‌ப்ப‌ட்டு த‌ரையில் அம‌ர்த்த‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர். முத‌லில் நாற்காலியில் என்னை அம‌ர‌ச் சொன்னார்க‌ள். சிறிது நேர‌ம் க‌ழித்து ஒரு ம‌லாய் காவ‌ல்துறை அதிகாரி வேண்டுமென்றே என்னை எழ‌ச் சொல்லி, த‌ரையில் அம‌ர்ந்திருந்த‌ சீன‌ர்க‌ளோடு அம‌ர‌ச் சொன்னார். நான் அந்த‌ சீன‌ர்க‌ள் அம‌ர்ந்திருந்த‌ இட‌த்திற்குச் சென்று நின்றுக் கொண்டேன். அப்பொழுது பி.கே ஓங் என்ன‌ருகே வ‌ந்து,

"என‌க்கு தாக‌மாக‌ இருக்கிற‌து, த‌ண்ணீர் கிடைக்குமா?" என‌ வின‌வினார்.

"நான் காவ‌ல்துறை அதிகாரி இல்லை ஓங், என்னையும் இப்பொழுதுதான் பிடித்து வ‌ந்தார்க‌ள்!" என‌க் கூறினேன்.

"ஓ, நீங்க‌ள்தானா..ச‌ரி ச‌ரி.. என்னை சில‌ர் கைப்பேசியின் வ‌ழி அழைத்து நீங்க‌ள் பிடிப்ப‌ட்ட‌தாக‌ச் சொன்னார்க‌ள்.." என‌க் ஓங் கூறினார்.

இதுவே எங்க‌ளுடைய‌ முத‌ல் ச‌ந்திப்பு ஆத‌லின் அவ‌ருக்கு என்னை அடையாள‌ம் க‌ண்டு கொள்ள‌ இய‌ல‌வில்லை.

இருவ‌ரும் நின்றுக் கொண்டிருக்கையில், ஓங் என்னை அழைத்து அதிகாரிக‌ளின் இருக்கையில் அம‌ர்ந்துக் கொள்வோம் என‌ சைகை காட்டிய‌தும் இருவ‌ரும் இருக்கையில் அம‌ர்ந்துக் கொண்டோம். அத‌ன்பின் நீண்ட‌ நேர‌ம் உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கிருந்த‌ ஒர் ம‌லாய்கார‌ காவ‌ல்துறை அதிகாரியொருவ‌ர், "நாங்க‌ள் எல்லாரும் அம்னோ புத்திர‌ர்க‌ள், நாங்க‌ள் அம்னோவின் ஊழிய‌ர்க‌ள், எங்க‌ளை ஒன்றும் செய்ய‌ முடியாது என‌ திமிரோடு பேசிக் கொண்டிருந்தார். அத‌ன்பின் ம‌ற்றொரு அதிகாரி எங்க‌ளை இன்னொரு அறைக்குச் சென்று அம‌ருமாறு அறையை நோக்கி கைக்காட்டினார்.

அறையில் அம‌ர்ந்திருந்த‌ சம‌ய‌ம் திரு.ஓங், அவ‌ருக்கு வ‌ந்த‌ குறுஞ்செய்திக‌ளையும் அவ‌ர் பிடித்த‌ ப‌ட‌ங்க‌ளையும் என‌க்குக் காட்டிக் கொண்டிருந்தார். நானும் அவ‌ரிட‌ம் நிக‌ழ்வு தொட‌ர்பான‌ நிழ‌ற்ப‌ட‌ங்க‌ளை காட்டிக் கொண்டிருந்தேன். அந்த‌ ச‌ம‌ய‌ம் ஓர் அதிகாரி இரு க‌றுப்பு நிற‌ பிளாசுடிக்கு பை கொண்டு வ‌ந்து எங்க‌ள் இருவ‌ரின் கைப்பேசிக‌ளையும் நிழ‌ற்ப‌ட‌க்க‌ருவிக‌ளையும் ப‌றிமுத‌ல் செய்தார். வெளியுல‌கோடு தொட‌ர்பு அற்ற‌ நிலையில் அந்த‌ அறையில் ம‌திய‌ம் 1 ம‌ணியிலிருந்து 3 ம‌ணிவ‌ரை அம‌ர்ந்திருந்தோம், இத‌ற்கிடையில் ஒரு ம‌லாய் காவ‌ல்துறை அதிகாரி எங்க‌ளிட‌ம் க‌தைப் பேசுவ‌த‌ற்கு வ‌ந்து அம‌ர்ந்துக் கொண்டார். திரு.ஓங்கை ப‌ற்றி அக்காவ‌ல்துறை அதிகாரி ம‌ட்ட‌ந்த‌ட்டி பேசத் தொட‌ங்கினார். திரு.ஓங் அத்த‌னையையும் பொறுமையாக‌ எடுத்துக் கொண்டு அதிகாரியிட‌ம் சிரித்த‌ முக‌த்துட‌ன் ப‌தில‌டி கொடுத்துக் கொண்டிருந்தார். இடையிடையே என்னையும் கிண்ட‌ல‌டிக்கும் பாணியில் அந்த‌ அதிகாரி கேள்விக‌ளை கேட்டுக் கொண்டிருந்தார். இடையே எங்க‌ளுக்கு உண‌வு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

இவ‌ர்க‌ள் வேலை நேர‌த்தில் இப்ப‌டி வெட்டிக் க‌தை பேசுவ‌த‌ற்கு, வாங்கும் ச‌ம்ப‌ள‌த்திற்கு ஏற்ப‌ வேறு ஏதாவ‌து வேலை செய்ய‌லாமே என‌ நினைத்துக் கொண்டேன். கையில் வெண்சுருட்டுப் பெட்டியோடு வ‌ந்த‌ அந்த‌ அதிகாரி 40 நிமிட‌ங்க‌ளுக்கு மேல் புகைத்துக் கொண்டே உரையாட‌ அந்த‌ அறையே புகை ம‌ண்ட‌ல‌மான‌து. ம‌ன‌ எரிச்ச‌லையும் க‌ண் எரிச்ச‌லையும் ஒருங்கே கொடுத்துவிட்டு அந்த‌ அதிகாரி சென்றுவிட்டார்.

இத‌ற்கிடையில் புக்கிட்டு பெண்டேரா நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் மாண்புமிகு லியூ சின் தோங் த‌லைமைய‌க‌த்திற்கு வ‌ந்து எங்களுக்கு ச‌ட்ட‌ ரீதியாக‌ உத‌வ‌ த‌யாராக‌ இருப்ப‌தாக‌க் கூறி ஆறுத‌ல் கூறினார்.

இப்ப‌டியாக‌, மாலை ஐந்து ம‌ணிவ‌ரையில் எங்க‌ளை அறையில் வைத்த‌ பின்ன‌ரே அதிகாரிக‌ள் ஒருவ‌ர்பின் ஒருவ‌ராக‌ விசார‌ணைக்கு அழைத்த‌ன‌ர். விசார‌ணை முடிவ‌த‌ற்கு ஒன்ற‌ரை ம‌ணி நேர‌ம் ஆகிவிட்ட‌து. விசார‌ணை முடிந்து வெளியே வ‌ந்த‌தும் இன்னும் ஐவ‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என‌ச் செய்தி அறிய‌ வ‌ந்த‌து. காவ‌ல் நிலைய‌த்தில் புகார் கொடுக்க‌ வ‌ந்த‌பொழுது ஐவ‌ரும் கைது செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். எழுவ‌ரையும் விசார‌ணை செய்து முடிக்க‌ இர‌வு ம‌ணி 7.30 ஆகிவிட்ட‌து. அத‌ன்பின் நாங்க‌ள் அனைவ‌ரும் பிணையில் விடுவிக்க‌ப்ப‌டுவோம் என‌ அதிகாரிக‌ள் தெரிவித்த‌ன‌ர்.

இறுதியாக‌ எங்க‌ளை பிர‌திநிதித்து சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் எங்க‌ளுக்காக‌ பிணை கையெழுத்து இட்டு எங்க‌ளை பிணையுறுதியில் விடுவிக்க‌ப்ப‌டுவ‌தற்கு உத‌வின‌ர். இர‌வு 8 ம‌ணிய‌ள‌வில் எங்க‌ளை விடுவித்த‌ன‌ர். இருப்பினும் ஐவ‌ரை ம‌ட்டுமே பிணையில் விடுவித்த‌ன‌ர், சுவாராம் உறுப்பின‌ர்க‌ள் இருவ‌ரை அன்றிர‌வு காவ‌ல் நிலைய‌ த‌டுப்பு அறையில் வைத்திருந்து ம‌றுநாள் பிணையில் வெளிக் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

வ‌ருகின்ற‌ 26ஆம் திக‌திய‌ன்று மீண்டும் காவ‌ல் நிலைய‌த்திற்குச் சென்று அதிகாரிக‌ளைச் ச‌ந்திக்க‌க் கூறி க‌டிதம் கொடுத்துள்ள‌ன‌ர். அன்றுதான் தெரியும் எங்க‌ள் மீது வ‌ழ‌க்கு போடப்ப‌ட்டு நீதிம‌ன்ற‌த்திற்கு கொண்டுச் செல்ல‌ப்ப‌டுவோமா என்று..

இவ்வேளையில் என‌க்கு நேர‌டியாக‌வும் ம‌றைமுக‌மாக‌வும் ஆத‌ர‌வு அளித்த‌ ப‌ல‌ ந‌ல்லுள்ள‌ங்க‌ளுக்கு என‌து ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், முக்கிய‌மாக‌ என‌க்காக‌ காவ‌ல் நிலைய‌த்திற்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள், பிணை கையெழுத்திட்ட‌வ‌ர்க‌ள், கைப்பேசியின்வ‌ழி தொட‌ர்பு கொண்டு உற்சாக‌ம் ஊட்டிய‌ வ‌லைப்ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ற்றும் வெளியுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ருக்கு என‌து ந‌ன்றிக‌ள் உரித்தாக‌ட்டும். தொட‌ர்ந்து உண்மைக்காக‌ போராடுவோம்...

விரைவில் அண்ண‌ன் உத‌யா அவ‌ர்க‌ளுக்கு தேசிய‌ இருத‌ய‌ சிகிச்சைக் க‌ழ‌க‌த்தில் சிகிச்சை அளிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ இறைவ‌னை பிரார்த்தித்துக் கொள்வோம்..

*நிக‌ழ்வு தொட‌ர்பான‌ ஒளிப்ப‌ட‌க்காட்சிக‌ள் விரைவில் இட‌ம்பெறும்..

போராட்ட‌ம் தொட‌ரும்...

Read more...

நிழ‌ற்ப‌ட‌ங்க‌ள் எடுத்த‌த‌ற்காக கைது செய்ய‌ப்ப‌ட்டேன்...

நேற்று (11-05-2008) காலை 11 ம‌ணிய‌ள‌வில் பினாங்கில் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் அதிக‌ம் வ‌ந்துபோகும் இட‌மான‌ க‌ர்னி டிரைவு எனுமிட‌த்தில் அமைதி ம‌றிய‌லில் ஈடுப‌டுவ‌த‌ற்காக‌ சுமார் 30 பேர்க‌ள் திர‌ண்டிருந்த‌ன‌ர். ப‌ல‌ரும் ப‌ல‌வ‌கையான‌ வாச‌க‌ங்க‌ளைக் கொண்ட‌ ப‌தாகைக‌ளைத் தாங்கிக் கொண்டு "இ.சா ச‌ட்ட‌த்தை ஒழிப்போம்", "இந்துராப்பு வாழ்க‌", "ம‌க்க‌ள் ச‌க்தி வாழ்க‌", "உத‌யாவிற்கு உரிய‌ சிகிச்சைக் கொடு" என‌ ப‌ல‌வ‌கையான‌ முழ‌க்க‌ங்க‌ளையிட்டுக் கொண்டிருந்த‌ன‌ர். அவ்வேளையில் நான் என் நிழ‌ற்ப‌ட‌க்க‌ருவியுட‌ன் அங்கு ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளை ப‌திவு செய்துக் கொண்டிருந்தேன்.

ம‌றிய‌ல் ந‌ட‌க்கும் இட‌த்திலிருந்து சுமார் 20 மீட்ட‌ர் தொலைவில் காவ‌ல்துறையின் ரோந்து வாக‌ன‌ம் ஒன்று நின்றுக் கொண்டிருந்த‌து. அமைதி ம‌றிய‌லில் ஈடுப‌ட்டுக்கொண்டிருந்தோரை ரோந்து வாக‌ன‌த்தில் அம‌ர்ந்திருந்த‌ காவ‌ல் துறையின‌ர் 15 நிமிட‌த்திற்கு நோட்ட‌மிட்டுக் கொண்டிருந்த‌ன‌ர். அத‌ன் பிற‌கு காவ‌ல் துறையின் ரோந்து வாக‌ன‌ம் மின்ன‌ல் வேக‌த்தில் சென்று ம‌றைந்த‌து. "இ.சா ச‌ட்ட‌த்தை துடைத்தொழிப்போம்" இய‌க்க‌த்தின் அங்க‌த்தின‌ர்க‌ள், சுவாராம் ம‌ற்றும் இந்து உரிமைப் ப‌ணிப்ப‌டையின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் சாலையில் செல்லும் வாக‌ன‌மோட்டிக‌ளுக்கு அறிக்கைக‌ளை விநியோகித்துக் கொண்டிருந்த‌ன‌ர். அச்சாலையைக் க‌ட‌ந்த‌ பொதும‌க்க‌ள் நிறைய‌ பேர் ஆத‌ர‌வு தெரிவித்து அறிக்கையைப் பெற்றுக் கொண்ட‌ன‌ர். ஆத‌ர‌வு தெரிவிக்கும் வ‌கையில் வாக‌ன‌மோட்டிக‌ள் ஒலி ச‌மிஞ்சை செய்து கைய‌சைத்துச் சென்ற‌ன‌ர். வாக‌ன‌ நெரிச‌ல் ஏதும் இல்லாம‌ல் இந்நிக‌ழ்வு அமைதியாக‌ ந‌டைப்பெற்றுக் கொண்டிருந்த‌ வேளையில், ம‌ணி 11.30 அள‌வில் திடீரென‌ காவ‌ல் துறையின் இரு வாக‌ன‌ங்க‌ள் பாதுகாப்பு க‌வ‌ச‌ம் அணிந்த‌ 20 காவ‌ல் துறையின‌ரைக் கொண்டு வ‌ந்து இற‌க்கின‌. அவ‌ர்க‌ள் கையில் த‌டி, க‌ண்ணீர்ப் புகை குண்டு எய்தும் துப்பாக்கி போன்ற‌வைக் காண‌ப்ப‌ட்ட‌ன‌.



காவ‌ல் துறையின‌ரிட‌ம் பேச்சு வார்த்தை ந‌ட‌த்துவ‌த‌ற்கு பி.கே வோங் எனும் ம‌னித‌ உரிமைப் போராளி சென்றார், அவ‌ரோடு சில‌ரும் அப்பேச்சு வார்த்தையில் க‌ல‌ந்துக் கொண்ட‌ன‌ர். ஆனால் காவ‌ல் துறையின‌ர் அனைவ‌ரையும் உட‌ன‌டியாக‌ க‌லைந்துவிடும் ப‌டி எச்ச‌ரிக்கை கொடுத்துவிட்டு அனைவ‌ரும் த‌டுப்புக் க‌வ‌ச‌ம், துப்பாக்கி, த‌டி போன்ற‌வ‌ற்றோடு த‌யாராகின‌ர்.

இத‌னைக் க‌ண்ட‌ இந்துராப்பு, சுவாராம், சி.எம்.ஐ உறுப்பின‌ர்க‌ள் அங்கிருந்து ந‌ட‌ப்ப‌தென்று முடிவெடுத்து, ப‌தாகைக‌ளை ஏந்திக் கொண்டு க‌ர்னி பேர‌ங்காடியை நோக்கி ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். காவ‌ல்துறையின‌ரும் அவ‌ர்க‌ளைப் பின்தொட‌ர்ந்து வ‌ர‌ ம‌றிய‌லில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் சாலையில் செல்லும் வாக‌ன‌மோட்டிக‌ளுக்கு அறிக்கைக‌ளை விநியோகித்துக் கொண்டு வ‌ந்த‌ன‌ர். க‌ர்னி பேர‌ங்காடியை நெருங்கிய‌தும் காவ‌ல் துறை அதிகாரியொருவ‌ர் ஒலிப்பெருக்கியின் வ‌ழி அனைவ‌ரையும் க‌லைந்துச் செல்லுமாறு எச்ச‌ரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்.

இத‌னைத் தொட‌ர்ந்து ம‌றிய‌லில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் க‌ர்னி பேர‌ங்காடிக்குள் நுழைய‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். க‌ர்னி பேர‌ங்காடி வ‌ளாக‌த்தில் நுழைந்த‌ நிறிது நேர‌த்தில் அனைவ‌ரும் கும்ப‌ல் கும்ப‌லாக‌ பிரிந்து சென்றுவிட்ட‌ன‌ர். இவ‌ர்க‌ளைப் பின் தொட‌ர்ந்த‌ காவ‌ல் துறைப் ப‌டையின‌ர் க‌ர்னி பேர‌ங்காடி வெளியே சாலையோர‌த்தில் குவிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். ம‌னித‌ உரிமை போராளி பி.கே வோங் பேர‌ங்காடியின் முன் வ‌ளாக‌த்தில் சுவார‌ம் உறுப்பின‌ர்க‌ளுட‌ன் நின்றுக் கொண்டிருப்ப‌தைக் காண‌ முடிந்த‌து. அவ்வேளை ஒரு சில‌ காவ‌ல் துறையின‌ர் பேர‌ங்காடியினுள் நுழைந்த‌ன‌ர்.

பேர‌ங்காடியின் வெளியே நின்றுக் கொண்டிருந்த‌ சில‌ காவ‌ல்துறை அதிகாரிக‌ள் பி.கே வோங்கை மொய்க்க‌ ஆர‌ம்பித்துவிட்ட‌ன‌ர். அவ‌ரிட‌ம் சில‌ கேள்விக‌ளைக் கேட்ட‌ப் பின்ன‌ர் அவ‌ரை விசார‌ணைக்கு உத‌வுமாறுக் கூறி அவ‌ரை காவ‌ல் துறையின் வாக‌ன‌ம் ஒன்றின் அருகே அழைத்துச் சென்ற‌ன‌ர். அவ‌ரை அங்கே நிறுத்தி வைத்து ப‌ல‌ கேள்விக‌ள் கேட்க‌ப்ப‌ட்ட‌ன‌. திரு வோங் மிக‌வும் சாந்த‌மான‌ முறையில் ப‌தில‌ளித்துக் கொண்டிருந்தார். ம‌றிய‌ல் ஒரு முடிவுக்கு வ‌ந்த‌தாக‌வும் அனைவ‌ரும் க‌லைந்து சென்றுவிட்ட‌தாக‌வும் கூறிய‌ வோங்கின் ப‌திலை ஏற்றுக் கொள்ளாத‌ காவ‌ல் துறையின‌ர், அவ‌ரை மேல்விசார‌ணைக்குக் கொண்டு செல்ல‌ப்போவ‌தாக‌க் கூறி அவ‌ரை காவ‌ல்துறை வாக‌ன‌த்தில் ஏற்றிக் கொண்டுச் சென்ற‌ன‌ர்.

இச்ச‌ம்ப‌வ‌ங்க‌ளை நிழ‌ற்ப‌ட‌த்தில் ப‌திவு செய்து கொண்டிருந்த‌ என்னை சில‌ காவ‌ல் துறை அதிகாரிக‌ள் நோட்ட‌மிடுவ‌து என‌க்கு புல‌ப்ப‌ட்ட‌து. அடுத்த‌ ப‌டியாக‌ பேர‌ங்காடியின் உள்ளே என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என‌ப் பார்க்க‌ச் சென்ற‌போது, ஆங்கே ம‌றிய‌லில் ஈடுப‌ட்டவ‌ர்க‌ள் முக‌ங்க‌ள் தென்ப‌ட‌வில்லை. காவ‌ல் துறை அதிகாரிக‌ள் சில‌ர் ம‌ட்டும் பேர‌ங்காடியின் உள்ளே நின்றுக் கொண்டிருந்த‌ன‌ர். நான் அவ‌ர்க‌ளையும் நிழ‌ற்ப‌ட‌த்தில் ப‌திவு செய்ய‌ அவர்க‌ள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்க‌ள். ம‌ணி ம‌திய‌ம் 12.30 இருக்கும், என் தோல்ப‌ட்டையில் ஒருவ‌ர் கைவ‌த்து அழைப்ப‌தை உண‌ர்ந்தேன்.

தொட‌ரும்...

Read more...

ஈப்போ, பினாங்கு,கோலாலம்பூர் ஆகிய இடங்களில் அமைதி மறியல்..

>> Saturday, May 10, 2008


இருதய நோயால் அவதிபட்டு வரும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் பி.உதயகுமார் அவர்களை உடனடியாக தேசிய இருதய சிகிச்சைக் கழகத்திற்கு அனுப்பி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்தைக் கோரும் வகையில், நாடுதழுவிய நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களான ஈப்போ, பினாங்கு, கோலாலம்பூர் ஆகிய இடங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(11-05-2008) மக்கள் சக்தியினர் அமைதி மறியல் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இருதய நோயால் அவதிபட்டு வந்த திரு.உதயகுமார் கடந்த திங்கட்கிழமையன்று தைப்பிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்குப்பின் அம்மருத்துவமனையால் தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் அவருக்கு உடனடி சிகிச்சை வழங்க வேண்டும் என பரிந்துரைக் கடிதம் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் கடந்த ஒரு மாத காலமாக பிரதமர் துறைக்கும், உள்நாட்டு விவகார அமைச்சிற்கும் திரு.உதயகுமார் அவர்களுடைய குடும்பத்தினர் கோரிக்கை மனுக்கள் சமர்ப்பித்திருந்தனர். ஆனால், இன்றுவரை அவர்களுக்கு பதில் ஏதும் கிடைக்காததாலும், மருத்துவமனை பரிந்துரைக் கடிதம் கொடுத்தும் திரு.உதயகுமாரை தேசிய இருதய சிகிச்சைக் கழகத்திற்கு இன்றுவரை அழைத்துச் செல்லாததனாலும் இவ்வமைதி மறியல் நாளை நடைப்பெறவுள்ளது.

கீழ்காணும் இடங்களில் நாளை அமைதி மறியல் நடைப்பெறவுள்ளது.

1. ஈப்போ சசுக்கோ (JUSCO Area)
2. பினாங்கு கர்னி டிரைவு (Gurney Drive Roundabout)
3.கோலாலம்பூர் கே.எல்.சி.சி முற்புற நுழைவாசல் (KLCC Front Entrance)


நேரம் : காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை (From 11am to 1pm)

இந்திய குமுகாயத்தின் நலனில் அக்கறைக் கொண்டு போராடிய மாமனிதர் திரு.உதயகுமார் இன்று தடுப்பு முகாமில் பல அவதிகளை சந்தித்து வருகின்றார். அவருக்கு விரைவில் தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் முறையான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என நினைக்கும் அன்பர்கள் இவ்வமைதி மறியலில் கலந்துக் கொண்டு நிச்சயம் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். நம்முள் இருந்த தீயை மெல்ல மெல்ல அழிக்க நினைக்கும் அம்னோ அரசாங்கத்திற்கு மீண்டும் நம்முடைய சக்தி என்ன என்று காட்டவேண்டிய தருணம் இது.

வாழ்க இந்துராப்பு மக்கள் சக்தி!!

* முடிந்த மட்டும் இந்நிகழ்வு தொடர்பான தகவல்களை நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவோ மின்னஞ்சல் வழியாகவோ தெரிவியுங்கள்.


வழக்கம்போல ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்கு, அனைவரும் அமைதியான முறையில் மறியலில் கலந்துக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கிறோம். சாலைவிதிமுறைகளை மீறாமல் நடந்துக் கொள்வதோடு, தங்களுடைய வாகனங்களை வாகனம் நிறுத்துமிடத்தில் மட்டுமே நிறுத்தி வையுங்கள். காவல் துறையினரும், கலகத் தடுப்புக்காரர்களும் கூட்டத்தைக் களைப்பதற்கு கண்ணீர் புகை குண்டுகளையும், அமிலம் கலந்த நீரைப் பாய்ச்சுவதற்கும் தயாராக இருக்கலாம். எனவே, கைவசம் முகமூடி, மாற்று உடைகள், அருந்துவதற்கு நீர், உப்பு கொண்டு வந்தால் சிறப்பு.

போராட்டம் தொடரும்...

Read more...

மரத்தடியில் பிறந்த மறத்தமிழர்கள் (பகுதி 8)

>> Wednesday, May 7, 2008

-பாவலர் சங்கு சண்முகம்-

இன்று திராவிட இயக்கங்களைத் தவிர வேறு எவராலும் ஆட்சியைப் பிடிக்கக் கூடும் என எதிர்பார்க்க முடியாத நிலை!

சாதாரணமானவர்களும் , அரசோச்ச வாய்ப்பளிப்பதே சனநாயகத்தின் அழகு!

சாதாரணமானவர்களாக மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சாமிவேலுவும், கோவிந்தராசும் நாளிதழ் நிருபராக நம்முடன் பணியாற்றிக்கொண்டிருந்த பண்டிதனும், பி.பி.என் மாணவர் இல்ல நிர்வாகியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சுப்பிரமணியமும் மக்கள் சபை உறுப்பினராக அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும், நாடாளுமன்றச் செயலாளர்களான போதும்தான் நாம் வியப்படைந்தோம்! இன்று? கடந்த மாதம் காப்பிக்கடையில் அமர்ந்து என்னுடன் கதைபேசிய சிவராசா மக்கள் சபை உறுப்பினர்.

இந்த மாற்றங்கள் நாட்டில் சனநாயகம் செழித்து வளர உதவும். தேர்தல் தில்லுமுல்லுகள் சில தேசங்களில் எழுதப்படாத சட்டமாகிவிட்டது! அதையும் மீறி ஆட்சியைப் பிடித்த கட்சிகளை ஆட்சி நடத்தவிடாமல் வீட்டுக்காவலில் வைக்கின்றனர்.

ஆனால், நம் நாட்டில் வெளிப்படையான சனநாயகத் தேர்தல் நடைப்பெற்றிருக்கிறது! ஐந்து மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த எதிர்கட்சிகளிடம் அமைதியான முறையில் ஆட்சிமாற்றம் நடைப்பெற்றுள்ளது! எந்த நெருக்குதலுக்கும் அடிபணியாமல் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு எனச் செயல்பட்ட நமது பிரதமரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். துங்குவை சுதந்திரத் தந்தை எனப் போற்றுவதுபோல் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி "சனநாயகத் தந்தை" என்னும் விருதை நமது பிரதமருக்கு நாம் வழங்க வேண்டும். பிரதமரின் முன்னுதாரணத்தை நம் நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பின்பற்ற வேண்டும். இவற்றின் தலைவர்கள் சுயநல நோக்கத்துடன் மக்கள் கருத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்றால் இனி அது படுதோல்வியில் முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.

* இவ்விடயத்தில் வாசகர்கள் பிரதமர் அப்துல்லாவின் ஆட்சி காலத்தில் மனித உரிமைகள் பறிக்கப்படுகின்ற சம்பவங்களையும் நினைவுகூற வேண்டும். நமது இந்து உரிமைப் பணிப்படையின் 5 தலைவர்கள் அநியாயமாக எந்த ஒரு விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டு முறையான கவனிப்பு இல்லாமல் இருக்கும் நிலைமை இவரின் காலத்தில்தான் நடந்து வருகிறது.

இதற்கு இந்த இயக்கங்கள் சார்ந்த அங்கத்தினர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. பல பொது இயக்கங்களின் அங்கத்தினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களின் அமைப்புச்சட்ட விதிமுறைகளையோ அரசாங்கம் வகுத்துத் தந்திருக்கும் சட்டங்களையோ கண்ணால் கூடப் பார்த்திருப்பதில்லை. அப்படிப் பார்த்துப் படித்தவர்கள் மீறப்பட்ட சட்டவிதிமுறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அதிகாரத்தில் இருப்போர் அலட்சியம் செய்கின்றனர். அப்புகார்களை சம்பந்தப்பட்ட அரசாங்க இலாகாக்களுக்குக் கொண்டு சென்றாலும் தீர்வு கிடைக்கப் பல ஆண்டுகள் பிடிக்கின்றன. இந்நிலையை மாற்றி அமைக்க அந்தந்த இயக்கங்களின் நிர்வாக சபையோ, நிர்வாக வாரியத்தின் அங்கத்தினர்களோ முன்வர அஞ்சுகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்களைக் குறை கூறினால் அடுத்த நிர்வாக சபைத் தேர்தலில் தங்களுக்கு ஆணி அடிக்கப்பட்டுவிடும். தங்களது வருமானத்திற்கு 'ஆப்பு' வைக்கப்பட்டுவிடும் என்று அஞ்சும் நிலை.

விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை கையில் வைத்துக்கொண்டு இயக்கங்களைச் சுரண்டும் போக்கு தொடர்வதாலும் அந்தச் சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்த எல்லா அதிகாரங்களும் பெற்ற சில அரசாங்க அதிகாரிகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் இறங்காததாலும் மக்கள் வெறுப்படைகின்றனர். அந்த வெறுப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்பாகத் திரும்பி வாக்குப் பெட்டியில் எதிரொலிக்கிறது.

இந்தக் குறைகளைத் தீர்க்க நம் மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அரசாங்கத்தின் அம்முயற்சிக்கு எதிர்கட்சிகள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்.

தமிழர் கதை தொடரும்...

Read more...

நெல்லும் க‌ல்லும் (ப‌குதி 2)

>> Sunday, May 4, 2008

தாய்த் த‌மிழைத் தூய்மை செய்வோம்

-க‌ம்பார் க‌னிமொழி குப்புசாமி-

வ‌ட‌மொழி - த‌மிழ்

அத‌ம்செய்த‌து யானை - அழிவுசெய்த‌து யானை
அத‌ர்ம‌ம் செய்ய‌ற்க‌! - தீமை செய்ய‌ற்க‌!
அதிச‌ய‌மாய் இருக்கிற‌து - விய‌ப்பாய் இருக்கிற‌து
அதிப‌தியானான் - பெருந்த‌லைவ‌னானான்
அதிப‌ர் வ‌ந்தார் - த‌லைவ‌ர் வ‌ந்தார்
அதிர்ஷ்ட‌மாக‌க் கிடைத்த‌து - ந‌ல்வாய்ப்பாக‌க் கிடைத்த‌து
அதிர‌ச‌ம் வேண்டுமா? - ப‌ண்ணியார‌ம் வேண்டுமா?
அதிருப்தி த‌ந்த‌து - ம‌ன‌க்குறை த‌ந்த‌து
அதோக‌தி அடைந்தான் - கீழ்நிலை அடைந்தான்
அந்த‌ர‌ங்க‌மாக‌ப் பேசினான் - ச‌முக்க‌மாக‌ப் பேசினான்
அந்த‌மில்லாத‌து அறிவு - முடிவில்லாத‌து அறிவு
அந்த‌ஸ்தைப் பார்ப்ப‌தில்லை - த‌ர‌த்தை பார்ப்ப‌தில்லை
அந்தாதிப் பாடல்க‌ள் - க‌டைமுத‌ல் பாட‌ல்க‌ள்
அந்திம‌க் கால‌ம்வ‌ரையில் - இறுதிக் கால‌ம்வ‌ரை
அந்நிய‌னாக‌ எண்ணாதே - வேற்றாளாக‌ எண்ணாதே
அநாதையாய்த் திரிகிறான் - எதிலியாய்த் திரிகிறான்
அநாம‌தேய‌ அறிக்கை - பெயர‌ற்ற‌ அறிக்கை
அநியாய‌மாக‌ப் பேசாதே! - நேர்மையின்றிப் பேசாதே!
அநீதி இழைக்காதே! - தீங்கு இழைக்காதே!
அப்பாவி ம‌க்க‌ள் - குற்ற‌ம‌ற்ற‌ ம‌க்க‌ள்
அப்பாவி அவ‌ன் - வெள்ளைம‌ன‌த்தான் அவ‌ன்
அப்பியாச‌ம் செய்தான் - ப‌யிற்சி செய்தான்
அப்பிராய‌ம் உண்டு - எண்ண‌ம் உண்டு
அப்பிராய‌ம் கூறினான் - க‌ருத்துக் கூறினான்
அப்பிராணி இவ‌ன் - அறியாத‌வ‌ன் இவ‌ன்
அப‌க‌ரிக்காதே பொருளை - ப‌றிக்காதே, பொருளை
அப‌ச்சார‌மான‌ செய‌ல் - ம‌திப்ப‌ற்ற‌ செய‌ல‌து
அப‌த்த‌மாய்ப் பேசாதே - பொய்மொழி பேசாதே
அப‌ய‌ம் அளித்தான் - த‌ஞ்ச‌ம‌ளித்தான்
அப‌ராத‌ம் க‌ட்டினான் - த‌ண்ட‌ம் க‌ட்டினான்
அப‌ரிமித‌ விளைச்ச‌ல் - அள‌வில்லா விளைச்ச‌ல்
அப‌லைப் பெண்ண‌வ‌ள் - பேதைப் பெண்ண‌வ‌ள்
அபாய‌த்திற்குரிய‌ இட‌ம் - பேரிட‌ர்க்குரிய‌ இட‌ம்
அபாய‌ம் வ‌ர‌லாம் - கேடு வ‌ர‌லாம்
அபாய‌த்திற்கு வ‌ழியாகும் - ஏத‌த்திற்கு வ‌ழியாகும்
அபாய‌ம் வ‌ருமா? - இட‌ர் வ‌ருமா?
அபார‌ வெற்றி - பெரு (நிலை) வெற்றி
அபார‌மான‌ விளையாட்டு - மிக‌ச்சிற‌ப்பான‌ விளையாட்டு
அபிந‌ய‌த்தோடு ஆடினாள் - ந‌ளிந‌ய‌த்தோடு ஆடினாள்
அபிப்பிராய‌ம் என்ன‌? - க‌ருத்து என்ன‌?
அபிப்பிராய‌ப்ப‌ட்டான் - விருப்ப‌ப்ப‌ட்டான்
அபிப்பிராய‌ம் கேட்டாயா? - க‌ருத்துக் கேட்டாயா?
அபிமான‌முண்டு உன்னிட‌ம் - ம‌திப்புண்டு உன்னிட‌ம்
அபிமான‌ம் உண்டு - ந‌ன்ம‌திப்புண்டு
அபிமானியான‌வ‌ன் - ப‌ற்றாள‌னான‌வ‌ன்
அபிவிருத்தி க‌ண்ட‌து - வ‌ள‌ர்ச்சி க‌ண்ட‌து

ஞாயிறு ந‌ண்ப‌ன் (04.05.2008)

தொட‌ரும்...

Read more...

தாய்த் த‌மிழை தூய்மை செய்வோம்..

நெல்லும்‍ க‌ல்லும் - அறிமுக‌ம்

-க‌ம்பார் க‌னிமொழி குப்புசாமி-

முன்னுரை:

ந‌ம் த‌மிழ் மொழியில் ச‌ம‌ற்கிருத‌ம், உருது, ஆங்கில‌ம், அர‌பி, ம‌ராத்தி, பிர‌ஞ்சு, இந்தி, பிராகிருத‌ம், பார‌சீக‌ம், போர்த்துகீசிய‌ம், த‌ச்சு ஆகிய‌ பிற‌மொழிச்சொற்க‌ளும் ந‌ம் திராவிட‌மொழிக் குடும்ப‌ச் சொற்க‌ளும் மிகுதியாக‌க் க‌ல‌ந்துள்ள‌ன‌.

ந‌ம்மில் சில‌ர் அறிந்தும் ப‌ல‌ர் அறியாம‌லும் இச்சொற்க‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்றோம். ப‌ல்லின‌ ம‌க்க‌ள் கூடி வாழும் சூழ‌லில் மொழியில் க‌ல‌ப்பு ஏற்ப‌டுவ‌து இய‌ல்பு. ஏற்ப‌டும் க‌ல‌ப்பைத் த‌விர்த்து மொழியைத் தூய்மைப‌டுத்த‌ வேண்டிய‌து ந‌ம‌து க‌ட‌மை. அது ந‌ம்மால் முடியும். அந்த‌க் க‌ட‌மையில் ஈடுப‌ட‌ வேண்டிய‌து ந‌ம் ஒவ்வொருவ‌ருடைய‌ பொறுப்பாகும். அத‌ற்கு இந்த‌த் தொட‌ர் சிறிதாவ‌து துணைசெய்யும் என்று ந‌ம்ப‌லாம்.

பிற‌மொழிச் சொற்க‌ளைத் த‌னித்த‌னியாக‌ப் பிரித்தெடுத்துச் சிறுசிறு தொட‌ர்க‌ளாக‌த் தொகுத்து இப்ப‌குதியில் தொட‌ர்ந்து வெளியிடப்ப‌டும்.

இத்தொகுப்பிற்கு மொழியிய‌ற்றுமை அறிஞ‌ர் ப‌ல‌ரின் ஆய்விய‌ல் நூல்க‌ளும் த‌னிக் க‌ட்டுரைக‌ளும் தொகுப்புக் க‌ட்டுரைக‌ளும் துணைக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ன‌. அவ‌ற்றில் குறிப்பாக‌ மொழிய‌றிஞ‌ர் அருளியாரின் அய‌ற்சொல் அக‌ராதி, முனைவ‌ர் இரா.ம‌திவாண‌ரின் அய‌ற்சொல் கையேடு, தி.நீலம்பிகை அம்மையாரின் 'வ‌ட‌சொற்ற‌மிழ் அக‌ர‌வ‌ரிசை' ஆகிய‌வ‌ற்றைக் குறிப்பிட‌லாம்.

இத்தொகுப்பை உருவாக்க‌க் க‌ருவியாக‌ இருந்த‌, இருக்கின்ற‌ அனைத்துப் பெரும‌க்க‌ளுக்கும் ந‌ன்றி.

க‌ல‌ப்ப‌து என்ப‌து இய‌ல்பாகும் - அதைக்
க‌ளைந்திட‌ முய‌ல்வ‌தே க‌ட‌னாகும் - இது
மொழியைக் காத்திடும் வ‌ழியாகும் - இன‌
விழிப்பைக் காட்டிடும் நெறியாகும்.


ஞாயிறு ந‌ண்ப‌ன் (20.04.2008)

நெல்லும் க‌ல்லும் (தொட‌ர் 1)

க‌ம்பார் க‌னிமொழி குப்புசாமி

உருதுமொழி க‌ல‌ப்புத்தொட‌ர் - த‌மிழ்த்தொட‌ர்

அக்க‌ப்போராக‌ இருக்கு - வீண்வ‌ம்பாக‌ இருக்கு
அக்குதொக்கு இல்லாத‌வ‌ன் - உரிமைப‌ற்று இல்லாத‌வ‌ன்
அக‌ர்ப‌த்தி வாங்கி வா - அகில் ம‌ண‌த்தி வாங்கி வா
அக‌ஸ்மாத்தா நட‌ந்த‌து - த‌ற்செய‌லாய் ந‌ட‌ந்த‌து
அச்சா ப‌குத‌ச்சா - ந‌ன்று மிக‌ந‌ன்று
அச‌ல் கொடுத்தால் போதும் - முத‌ல் கொடுத்தால் போதும்
அண்டாவில் நீர் ஊற்று - பெருங்க‌ல‌த்தில் நீர் ஊற்று
அண்டா கொண்டு வா - பெருங்க‌ல‌ம் கொண்டு வா
அணா கொடுத்தான் - காசு கொடுத்தான்
அத்து மீறாதே - வ‌ர‌ம்பு மீறாதே
அபின் ப‌ழ‌க்க‌ம் தீது - க‌சினிப் ப‌ழ‌க்க‌ம் தீது
அம்பாரியில் அம‌ர்க‌ - மேலிருக்கையில் அம‌ர்க‌
அமுல் ப‌டுத்தினார் - ந‌டைமுறைப் ப‌டுத்தினார்
அமீனா இவ‌ர் - ந‌ய‌ன‌க‌க் க‌ட்ட‌ளைய‌ர் இவ‌ர்
அலாக்கா தூக்கினான் - த‌னியாக‌த் தூக்கினான்
அலாக்கா எடுத்தான் - அப்ப‌டியே எடுத்தான்
ஆசாமி போகிறான் - ஆள் போகிறான்
ஆஜ‌ர் என்றான் - வ‌ந்தேன் என்றான்
ஆஜ‌ரானார் அவ‌ர் - நேர்முன்வ‌ந்தார் அவ‌ர்
அனும‌தி கிடைத்த‌து - ஒப்புத‌ல் கிடைத்த‌து
அபினி தீமைத‌ருவ‌து - க‌சினி தீமைத‌ருவ‌து
அமுல் ப‌டுத்தின‌ர் - ந‌டைமுறைப் ப‌டுத்தின‌ர்
அர்த்த‌ல் ந‌ட‌ந்த‌து - க‌டைய‌டைப்பு ந‌ட‌ந்த‌து
அலாதியான‌து - த‌னித்த‌ன்மையான‌து
ஆசாமி பிடிப்ப‌ட்டான் - ஆள் பிடிப்ப‌ட்டான்
ஆஜ‌ரானார் - வ‌ருகை த‌ந்தார்
ஆஜ‌ர் என்றார் - வ‌ந்தேன் என்றார்
ஆஜ‌ர் ப‌டுத்தினார் - முன்னிலைப் ப‌டுத்தினார்
இலாக்கா இல்லாத‌வ‌ர் - துறை இல்லாத‌வ‌ர்
இலாக்கா எங்கே? - திணைக்க‌ள‌ம் எங்கே?
இனாம் கொடுத்தார் - ந‌ன்கொடை கொடுத்தார்
இஸ்திரி பெட்டியை எடு - தேய்ப்ப‌த்தை எடு
உருட்டா ப‌ண்ணாதே - க‌ப‌டி ப‌ண்ணாதே
உஷார் ப‌டுத்தினான் - எச்ச‌ரிக்கைப் ப‌டுத்தினான்
உஷாராக்கினான் - விழிப்புற‌ச் செய்தான்
உதா வ‌ண்ண‌ம‌ல‌ர் - செந்நீல‌ வ‌ண்ண‌ம‌ல‌ர்
ஐசாபைசா என்றான் - இர‌ண்டிலொன்று என்றான்
க‌ச்ச‌டா ப‌ண்ணாதே - அழுக்குப் ப‌ண்ணாதே
க‌ச்சா பொருள் - மூல‌ப்பொருள்
க‌ச்சா எண்ணெய் - தூய்மைப்ப‌டுத்தா எண்ணெய்

தொட‌ரும்..

ஞாயிறு ந‌ண்ப‌ன் (27.04.2008)


Read more...

ஓர் எழுத்தாள‌னுக்கு இருக்க‌ வேண்டிய‌ த‌குதிக‌ள்..


'வேங்கையின் மைந்த‌ன்' எனும் சிற‌ந்த‌ நாவ‌லின் வ‌ழி இந்திய அர‌சின் சாகித்திய‌ அகாத‌மி ப‌ரிசுப் பெற்ற‌ சிற‌ந்த‌ எழுத்தாள‌ரான‌ அகில‌ன் அவ‌ர்க‌ள், ஓர் எழுத்தாள‌னுக்கு இருக்க‌ வேண்டிய‌ த‌குதிக‌ளைப் ப‌ற்றி த‌ன‌து உரையினூடே ஆற்றும் ஒலிப்பேழைப் ப‌திவு கீழே :

ஒலிப்பேழை


Get Music Tracks! Create A Playlist!

Read more...

த‌னித்த‌மிழ் இய‌க்க‌ங்க‌ண்ட‌ த‌ந்தை ம‌றைம‌லைய‌டிக‌ள்..

ம‌றைம‌லைய‌டிக‌ளைப் ப‌ற்றிய‌ சிறு குறிப்புகள்..

ம‌றைம‌லைய‌டிக‌ள் (1875-1950)


" சோழ‌ நாட்டிலே நாக‌ப்ப‌ட்டின‌த்துக்கு அருகிலே காட‌ம்பாடி என்னும் ஊரிலே தோன்றிக் க‌ல்வியொழுக்க‌ங்க‌ளில் த‌லைசிற‌ந்து, சென்னைக் கிறித்த‌வ‌க் க‌ல்லூரியில் த‌மிழாசிரிய‌ராய்த் திக‌ழ்ந்து, துற‌வு நிலையுற்று, ப‌ல்லாவ‌ர‌த்தில் பொதுநிலைக் க‌ழ‌க‌த் த‌லைவ‌ராய் வீற்றிருந்த‌ சுவாமி வேதாச‌ல‌ம் என்னும் ம‌றைம‌லைய‌டிக‌ள் த‌மிழ்நாடு செய்த‌ பெருந்த‌வ‌வுருவின‌ர்.

இவ‌ர் 'மாணிக்க‌வாச‌க‌ர் வ‌ர‌லாறும் கால‌மும்' 'திருக்குர‌ளாராய்ச்சி' முத‌லிய‌ நாற்ப‌துக்கு மேற்ப‌ட்ட‌ நூல்க‌ளை எழுதியுள்ளார்.

"முகிழ்ந்து ம‌ண‌ங்க‌ம‌ழ்ந்து அழ‌காய் ம‌ல‌ரும் ப‌ருவ‌த்தே ஓர் அரிய‌ செங்க‌ழுநீர்ப்பூ அத‌ன‌ருமைய‌றியான் ஒருவ‌னாற்கிள்ளியெறிய‌ப் ப‌ட்டு அழிந்தாற் போல‌வும், ம‌றைநிலாக் கால‌த்தே திணிந்து ப‌ர‌ந்த‌ இருளின்க‌ட் செல்லும் நெறி இதுவென‌க் காட்டுத‌ற்கு ஏற்றி வைத்த‌ பேரொளி விள‌க்கு ச‌டுதியில் வீசிய‌ சூறைக் காற்றினால் அவிந்து ம‌றைந்தாற் போல‌வும், நீண்ட‌நாள் வ‌றுமையால் வ‌ருந்திய‌ ஒருவ‌ன் புதைய‌லாய்க் க‌ண்டெடுத்த‌ பொன் நிறைந்த‌ குட‌ம் ஒன்று வ‌ன்நெஞ்ச‌க் க‌ள்வ‌னொருவ‌னாற் க‌வ‌ர்ந்து கொள்ள‌ப்ப‌ட்டாற் போல‌வும் இத்த‌மிழ் நாட்டுக்கு ஒரு க‌ல்வி ம‌ல‌ராய் ஓர் அறிவு விள‌க்காய் ஓர் அருங்குண‌ப் புதைய‌லாய்த் தோன்றிய‌ இவ்விளைஞர் த‌ம‌து 43‍ஆம் ஆண்டில் க‌துமென‌க் கூற்றுவ‌னாற் க‌வ‌ர‌ப்ப‌ட்ட‌து ஒரு பெருங்கொடுமைய‌ன்றோ?"


த‌மிழ் மொழி த‌னித்திய‌ங்கும் வ‌ல்ல‌மைய‌ற்ற‌து. அது வ‌ட‌மொழி இல‌க்கிய‌ங்க‌ளையும் இல‌க்க‌ண‌ங்க‌ளையும் க‌ட‌ன்பெற்றுத்தான் இய‌ங்குகிற‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கு அறிவில்லை. அப்ப‌டி அறிவுப்பெற்றிருக்கின்றார்க‌ள் என்றால் அவ‌ர்க‌ள் ஆரிய‌வ‌ழிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌த்தான் இருக்க‌ வேண்டும் என்ற‌ க‌ருத்துக‌ள் ப‌ர‌வி இருந்த‌ கால‌ம். த‌மிழ்ப்புல‌வ‌ர்க‌ளே த‌மிழைத் தாழ்த்தி வ‌ட‌மொழியை உய‌ர்த்திக் கொண்டாடிக் கொண்டிருந்தார்க‌ள். இந்நிலையில், த‌மிழ் உண‌ர்வுமிக்க‌ அறிஞ‌பெரும‌க்க‌ள் துடித்தெழுந்து த‌மிழின் பெருமையை எடுத்துக்காட்டிப் போராடின‌ர். ஆனாலும், பிற‌மொழி க‌ல‌வாத‌ உரைந‌டை வ‌ழ‌க்கை, பேச்சு வ‌ழ‌க்கை செய‌ற்ப‌டுத்திக் காட்டா நிலையே அன்று இருந்து வ‌ந்த‌து.

இந்த‌ நிலையில் ஒரு மாற்ற‌ம், பெருமாற்ற‌ம் உருவான‌து. தித்த‌மிழ் இய‌க்க‌ம் தோற்ற‌ம் பெற்ற‌து. இது எப்ப‌டி ந‌ட‌ந்த‌து என்ப‌து குறித்து 1937இல் வெளிவ‌ந்த‌ வ‌ட‌ச்சொற்ற‌மிழ் அக‌ர‌வ‌ரிசை என்னும் த‌ம் நூலிலே, ம‌றைம‌லைய‌டிக‌ள் அவ‌ர்க‌ளின் ம‌க‌ளார் ம‌திப்புமிகு நீலாம்பிகைய‌ம்மையார் எடுத்துரைத்துள்ளார்.

"யான் ப‌தின்மூன்றாண்டுச் சிறுமியாய் இருந்த‌போது, 1916 ஆம் ஆண்டில் ஒருநாட் சாயுங்கால‌ம் என் த‌ந்தையாருட‌ன் தோட்ட‌த்தில் உலாவிக் கொண்டுவ‌ருகையில், த‌ந்தையார் இராம‌லிங்க‌ அடிக‌ளார் அருளிச் செய்த‌ திருவ‌ருட்பாவிலுள்ள‌, "பெற்ற‌ தாய்த‌னை ம‌க‌ம‌ற‌ந்தாலும் பிள்ளையைப்பெறுந் தாய்ம‌ற‌ந்தாலும் உற்ற‌ தேக‌த்தை உயிர் ம‌ற‌ந்தாலும்..."

என்னும் பாட்டைப் பாடினார்க‌ள். அப்பாட்டின் இர‌ண்டாம் அடியாகிய‌ உற்ற‌ தேக‌த்தை உயிர் ம‌ற‌ந்தாலும் என்ப‌த‌னைச் சொன்ன‌போது, என் த‌ந்தையார‌வ‌ர்க‌ள் என்னை நோக்கி, "அம்மா! இப்போது நான் பாடிய‌ பாட்டைத் தூய‌த‌மிழில் இராம‌லிங்க‌ அடிக‌ள் எவ்வ‌ள‌வு அழ‌காக‌ப் பாடியிருக்கிறார்க‌ள்! ஆனால், அப்பாட்டின் இர‌ண்டாம‌டியிலுள்ள‌ 'தேக‌ம்' என்னும் வ‌ட‌ச்சொல்லை நீக்கி, 'யாக்கை' என்னும் த‌னித்த‌மிழ்ச் சொல்லை அவ‌ர்க‌ள் அங்கே அமைத்துப் பாடி இருந்தால் இன்னும் எவ்வ‌ள‌வோ ந‌ன்றாயிருக்கும்.

த‌மிழில் பிற‌மொழிச்சொற்க‌ளைச் சேர்ப்ப‌தால், த‌மிழ் த‌ன் இனிமையை இழ‌ந்துபோவ‌தோடு, ப‌ல‌ த‌மிழ்ச் சொற்க‌ளும் வ‌ழ‌க்கில் இல்லாம‌ல் இற‌ந்து போகின்ற‌ன‌" என்றார்க‌ள். இது கேட்ட‌ அன்று முத‌ல் த‌னித்த‌மிழிலேயே பேச‌வும் எழுத‌வும் த‌ந்தையாரும் யானும் உறுதிகொண்டோம்." த‌னித்த‌மிழ் இய‌க்க‌ம் தொட‌ங்கிய‌ வ‌ர‌லாறு இது.

சுவாமி வேதாச‌ல‌ம் என்னும் த‌ம் வ‌ட‌மொழிப்பெய‌ரை ம‌றைம‌லைய‌டிக‌ளார் என்று தூய‌த்த‌மிழ்ப்பெய‌ராக‌ மாற்ற‌ஞ்செய்துகொண்டார்.. 'ச‌ம‌ர‌ச‌ ச‌ன்மார்க்க‌ம்' என்னும் த‌ம் இல்ல‌த்தின் பெயரை 'பொதுநிலைக் க‌ழ‌க‌ம்' என்றும், தாம் ந‌ட‌த்திவ‌ந்த‌ 'ஞான‌சாக‌ர‌ம்' திங்க‌ளித‌ழை 'அறிவுக்க‌ட‌ல்' என்றும் மாற்றிக்கொண்ட‌தோடு தாம் முன்ன‌ம் எழுதி வெளியிட்டிருந்த‌ நூல்க‌ளில் அமைந்திருந்த‌ பிற‌மொழிச்சொற்க‌ளைப் புதிய‌ ப‌திப்புக‌ளில் த‌மிழாக்கி வெளியிட்டார். த‌ம் உரையாட‌லில், மேடைப்பேச்சில், எழுத்தில் இல‌க்கிய‌ ம‌ண‌ங்க‌ம‌ழும் இல‌க்க‌ண‌ப் பிழைய‌ற்ற‌ தூய‌த்த‌மிழ் ந‌டையையே க‌டைப்பிடித்தார். த‌மிழ், வ‌ட‌மொழி, ஆங்கில‌ம் என‌ மும்மொழியில் புல‌மைபெற்றிருந்த‌ அடிக‌ளார், அம்மொழி இல‌க்கிய‌ங்க‌ளையும் ஆராய்ந்து த‌மிழின் த‌னித்த‌ன்மையை உல‌கிற்கு உண‌ர்த்தினார். ச‌ம‌ய‌ நெறிக‌ளை அறிவுநிலையில் ஆராய்ந்து வ‌ர‌லாற்று உண்மைக‌ளை எடுத்துரைத்தார்.

த‌மிழ்த் த‌ழைத்தோங்கி நிற்ப‌த‌ற்கு, அப்பெரும‌க‌னார் ஆற்றிய‌ தொண்டு, அள‌ப்ப‌ரிய‌து. த‌மிழோடு இணைந்துவாழும் பெருவாழ்வே அவ‌ர் வாழ்வு. அவ‌ர் க‌ண்ட‌ த‌னித்த‌மிழ் இய‌க்க‌த்தைப் போற்றி, அவ‌ரைப் பின்ப‌ற்றிய‌வ‌ர் எண்ணில‌ட‌ங்கார்.

-க‌ம்பார் க‌னிமொழி-

த‌க‌வ‌ல் : ஞாயிறு ந‌ண்ப‌ன் (4.5.2008)

Read more...

தொழிலாள‌ர்க‌ளின் போராட்ட‌ங்க‌ள்.. (மே தின‌ சிற‌ப்புக் க‌ட்டுரை)

>> Thursday, May 1, 2008

க‌ண‌ப‌தி தூக்கிலிட‌ப்ப‌ட்டார் ‍ வீர‌சேன‌ன் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார்

1950ஆம் ஆண்டு வ‌ரை ம‌லாயாவில் தொழிலாள‌ர்க‌ள் வாழ்வில் பெரும் ம‌றும‌ல‌ர்ச்சி சிந்த‌னையை ஏற்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் ம‌லாயா பொது தொழிலாள‌ர் ச‌ங்க‌த்தின் த‌லைவ‌ர்க‌ள் ம‌ற்றும் ப‌த்திரிக்கை ஆசிரிய‌ர்க‌ளும் ஆவ‌ர். 1948ஆம் ஆண்டு அவ‌ச‌ர‌க் கால‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி, ம‌லாயா கூட்ட‌ர‌சு ஆட்சியின‌ர் க‌ம்யூனிசுக‌ளுட‌ன் தொழிற்ச‌ங்க‌த் த‌லைவ‌ர்க‌ளுக்கும் தொழிலாள‌ர்க‌ளுக்கும் தொட‌ர்பு இருப்ப‌தாக‌க் கூறி ப‌ல‌ரைச் சுட்டுக் கொன்றுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் ஆங்கிலேய‌ ஆட்சியாள‌ர்க‌ளால் புடு சிறையில் தூக்கிலிட‌ப்ப‌ட்ட‌ ம‌றைந்த‌ எசு.ஏ.க‌ண‌ப‌தி, ர‌வாங் காட்டுப்ப‌குதி சாலையில் த‌ற்காப்பு ப‌டையின‌ரால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்ட‌ வீர‌சேன‌ன், இந்தியாவுக்கு நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ப‌த்திரிக்கை ஆசிரிய‌ர் ஆர்.எச்.நாத‌ன், இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளின் தொழிற்ச‌ங்க‌ அமைப்பாள‌ர் ஆர்.ச‌.பால‌ன் போன்றோர் த‌லைமையேற்று ந‌ட‌த்திய‌ போராட்ட‌ங்க‌ள் தோட்ட‌ வ‌ர‌லாற்றில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌.



1998ஆம் ஆண்டு த‌மிழ் நாட்டில் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் இரா.உத‌ய‌குமார் அவ‌ர்க‌ள் எழுதி வெளியிட்ட‌ மாவீர‌ன் ம‌லேயா க‌ண‌ப‌தி என்ற‌ நூலுக்கு, த‌மிழ‌ர் தேசிய‌ இய‌க்க‌த்தின் த‌லைவ‌ர் ப‌ழ‌.நெடுமாற‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ அணிந்துரையின் ஒரு ப‌குதி :‍

எதிர்பாராத‌வித‌மாக‌ ச‌ப்பான் மீது அணுகுண்டுக‌ள் வீச‌ப்ப‌ட்டு அர‌சு ச‌ர‌ண‌டைந்த‌ பிற‌கு இந்திய‌ தேசிய‌ இராணுவ‌த்தின் எதிர்கால‌ம் கேள்விக்குறியாக‌ மாறிய‌து. வேறு ஒரு நாட்டிற்குத் த‌ப்பிச் சென்று நேதாசி த‌ன‌து போராட்ட‌த்தைத் தொட‌ர‌ வேண்டும் என‌ இந்திய‌ இராணுவ‌த் த‌ள‌ப‌திக‌ள் அவ‌ரை வ‌ற்புறுத்தினார்க‌ள். அத‌ன் விளைவாக‌ விமான‌ம் மூல‌ம் புற‌ப்ப‌ட்ட‌ நேதாசி விப‌த்தில் சிக்கி மாண்டார் என்று ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌ செய்தி இந்திய‌ தேசிய‌ இராணுவ‌ வீர‌ர்க‌ளைத் திகைக்க‌ச் செய்த‌து. ம‌லேயாவில் மீண்டும் பிரிட்டிசு ஆதிக்க‌ம் ஏற்ப‌ட்ட‌து. இந்திய‌ தேசிய‌ இராணுவ‌ம் க‌லைக்க‌ப்ப‌ட்ட‌து. அதிலிருந்து பெரும்பாலான‌ வீர‌ர்க‌ள் ம‌லேயா க‌ம்யூனிசுட்டு க‌ட்சியில் சேர்ந்த‌ன‌ர். இத‌ன் த‌லைமையில் தொழிற்ச‌ங்க‌ வேலைக‌ள் விரிவுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. இந்த‌ப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட‌ க‌ண்ப‌தி வ‌லிமை வாய்ந்த‌ தொழிற்ச‌ங்க‌ இய‌க்க‌த்தை உருவாக்கி அருந்தொண்டாற்றினார். அவ‌ர‌து அள‌ப்ப‌ரிய‌ தொண்டின் மூல‌மாக‌ ம‌லேயாவில் தொழிலாள‌ர்க‌ள் எந்த‌ இன‌த்த‌வ‌ராக‌ இருந்தாலும் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் க‌ண‌ப‌தியின் த‌ல‌மையில் திர‌ண்டார்க‌ள். ப‌ல்வேறு தொழிற்ச‌ங்க‌ப் போராட்ட‌ங்க‌ளை அவ‌ர் ந‌ட‌த்தி முத‌லாளிக‌ளுக்கும் பிரிட்டிசு அரசுக்கும் சிம்ம‌சொப்ப‌ன‌மாக‌ விள‌ங்கினார். அகில‌ ம‌லேயா தொழிற்ச‌ங்க‌க் கூட்ட‌மைப்பு உருவான‌து. ம‌லேயாவில் வாழ்ந்த‌ ம‌லாய், சீன‌, த‌மிழ் இணைய‌மாக‌வும் அது திக‌ழ்ந்த‌து. மேலும் இந்த‌ மூன்று தேசிய‌ இன‌ ம‌க்க‌ளையும் ஒன்றிணைந்து ஐக்கிய‌ முன்ன‌னி ஒன்று அமைக்கும் முய‌ற்சியிலும் அவ‌ரின் ப‌ங்கு ம‌க‌த்தான‌து.

இதுபோன்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளினால் ஆத்திர‌ம் அடைந்த‌ பிரிட்டிசு அர‌சு அவ‌ச‌ர‌கால‌ச் ச‌ட்ட‌த்தை பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்திற்று. க‌டும் அட‌க்குமுறையை ஏவிவிட்ட‌து. இதை எதிர்த்துப் போராட‌ த‌லைம‌றைவு வாழ்வை க‌ண‌ப‌தியும் அவ‌ர‌து தோழ‌ர்க‌ளும் மேற்கொண்டார்க‌ள். இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் க‌ண‌ப்தி ஆற்றிய‌ அய‌ராத‌ தொண்டு ம‌க்க‌ளை ஒரு புர‌ட்சிக்குத் த‌யார்ப‌டுத்திய‌து. க‌ண‌ப‌தியை உயிருட‌னோ அல்ல‌து பிண‌மாக‌வோ பிடித்தால்தான் ம‌க்க‌ள் புர‌ட்சியை ஒடுக்க‌ முடியும் என்ப‌தை உண‌ர்ந்த‌ பிரிட்டிசு அர‌சு த‌ன‌து போலீசு ப‌டையை அவ‌ருக்கு எதிராக‌ ஏவிவிட்ட‌து.

க‌டுமையான‌ அட‌க்குமுறைக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌. எண்ண‌ற்ற‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். இறுதியில் எதிர்பாராத‌ வித‌மாக‌ க‌ண‌ப‌தியையும் பிரிட்டிசு இராணுவ‌ம் சிறைபிடித்த‌து. க‌ண‌ப‌தி கைதானார் என்ற‌ செய்தி காட்டுத் தீப் போல ம‌க்க‌ள் ம‌த்தியில் ப‌ர‌விய‌து. அத‌ன் விளைவாக‌ ம‌க்க‌ள் கொதித்து எழுந்தார்க‌ள். வெள்ளை முத‌லாளிக‌ள் உயிர் த‌ப்ப‌ ஓடி ஒளிந்தார்க‌ள். க‌ண‌ப‌தி உயிருட‌ன் இருக்கும்வ‌ரை ம‌க்க‌ள் கிள‌ர்ச்சியை அட‌க்க‌முடியாது என்ப‌தை உண‌ர்ந்த‌ பிரிட்டிசு அர‌சு போலியான‌ விசார‌ணை ஒன்றினை அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ந‌ட‌த்தி அவ‌ருக்கு ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை விதித்த‌து. இத‌ற்கு எதிராக‌ ம‌லேயா நாட்டில் ம‌ட்டும‌ல்ல‌, உல‌க‌ நாடுக‌ளிலெல்லாம் க‌ண்ட‌ன‌க்குர‌ல் எழுந்த‌து. ம‌லேயாவில் இருந்த‌ தூதுவ‌ர். ஏ.வி.திவி அவ‌ர்க‌ள் க‌ண‌ப‌தியைச் சிறைச்சாலையில் ச‌ந்தித்துப் பேச‌ வேண்டிய‌ சூழ்நிலை உருவான‌து.

இந்தியாவிலும் அத‌ன் எதிரொலி கேட்ட‌து. த‌மிழ்நாட்டில் க‌ண்ட‌ன‌க்குர‌ல் எழுந்த‌து. எனினும் க‌ண‌ப‌தியைக் காப்பாற்ற‌க்கூடிய‌ அள‌வுக்குப் பெரும் கொந்த‌ளிப்பு த‌மிழ் நாட்டில் ஏற்ப‌ட‌வில்லை. இந்திய‌ அர‌சு த‌லையிட்டு எப்ப‌டியாவ‌து க‌ண‌ப‌தியைக் காப்பாற்றும் என்ற‌ ந‌ம்பிக்கை ஏற்ப‌ட்ட‌து. ஆனால் அந்த‌ ந‌ம்பிக்கை பொய்த்த‌து. க‌ண‌பதி தூக்கிலிட‌ப்ப‌ட்டார்.


ஆதார‌ம் : மாவீர‌ன் ம‌லேயா க‌ண‌ப‌தி ‍ (ப‌க்க‌ம் 7-17)
ஆய்வு நூல் த‌மிழ‌க‌த்தில் வெளியிட‌ப்ப‌ட்ட‌து.
(திச‌ம்ப‌ர், 1998)


காரிருளால் சூரிய‌ன்தான்
ம‌றைவ‌துண்டோ?
க‌றைச் சேற்றால் தாம‌ரையின்
வாச‌ம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான்
இன்மை யாமோ?
பிற‌ர் சூழ்ச்சி செந்த‌மிழை
அழிப்ப‌துண்டோ?
நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச்
சிறையிற் போட்டால்!
நிறை தொழிலாள‌ர்க‌ளுண‌ர்வு
ம‌றைந்து போமோ?

-புர‌ட்சி க‌விஞ‌ர் பார‌திதாச‌ன்-


இவ‌ர்க‌ளைப்போல் தொழிலாள‌ர்க‌ளின் அடிப்ப‌டை உரிமைக்காக‌ போராடிய‌ முற்போக்குத் த‌லைவ‌ர்க‌ள், ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள், தொழிற்ச‌ங்க‌த் த‌லைவ‌ர்க‌ள் சிறையில் த‌ள்ள‌ப்ப‌ட்ட‌ன‌ர். பல‌ர் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். பெரும்பான்மையோர் நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌ர். இன்று செழித்தோங்கியிருக்கும் இந்த‌ நாட்டையும், ப‌சுமையான‌ தோட்ட‌ங்க‌ளையும் உருவாக்குவ‌தற்கு அடித்த‌ள‌மாக‌ இருந்த‌ ச‌ஞ்சிக் கூலிக‌ள் த‌ங்க‌ளின் இர‌த்த‌த்தைக் காணிக்கையாக்கி மாண்ட‌துட‌ன், தாங்க‌ள் ந‌ட்ட‌ இர‌ப்ப‌ர் ம‌ர‌த்திற்கே உர‌மாக‌வும் ஆகிவிட்ட‌தாக‌ ப‌ல்வேறு ஆய்வுக‌ள் கூறுகின்ற‌ன‌.

1909ஆம் ஆண்டு முத‌ல் 1940 வ‌ரை இந்திய‌ சீன‌ தொழிலாள‌ர்க‌ளின் எண்ணிக்கை 16 இல‌ட்ச‌மாகும். இந்திய‌ர்க‌ளைப் பொறுத்த‌ம‌ட்டில் 1860 ஆண்டு முத‌ல் 1957ஆம் ஆண்டுக்கு இடையில் நான்கு இல‌ட்ச‌ம் பேர் த‌ங்க‌ளின் தாய் நாட்டிற்கே திரும்பி சென்றுவிட்ட‌ன‌ர்.

க‌ட‌ந்த‌ 2002 ஆம் ஆண்டு கோலால‌ம்பூரில் ந‌டைப்பெற்ற‌ ம‌லேசிய‌ க‌விதை மாநாட்டில் ம‌லாயாப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ இந்திய‌ ஆய்விய‌ல் துறை இணைப்பேராசிரிய‌ர் முனைவ‌ர் வே.ச‌பாப‌தி அவ‌ர்க‌ள் விடுத‌லைக்கு முந்திய‌ ம‌லேசிய‌த் த‌மிழ் க‌விதைக‌ள் என்ற‌ த‌லைப்பில் ச‌ம‌ர்ப்பித்த‌ ஆய்வுக் க‌ட்டுரையில் ப‌த்திரிக்கைக‌ளின் ப‌ங்கு என்ற‌ பிரிவில் சிந்திக்க‌த்த‌க்க‌ க‌விதை ஒன்றினை மேற்கோள் காட்டியுள்ளார்.

ப‌த்திரிக்கைக‌ளில் வெளிவ‌ந்துள்ள‌ க‌விதைக‌ள் தோட்ட‌ப்புற‌ ச‌முதாய‌த்தையும் அங்குள்ள‌ வாழ்விய‌ல் நிலைக‌ளையும் ந‌ன்கு ப‌ட‌ம் பிடித்துக் காட்டியுள்ள‌ன‌. அவ‌ற்றுள் 6.1.1932ல் த‌மிழ் நேச‌னில் (புத‌ன் கிழமை) வெளிவ‌ந்த‌ க‌விதை ஒன்று குறிப்பிட‌த்த‌க்க‌து. அக்க‌விதை அன்றைய‌ ம‌லாயாவின் இர‌ப்ப‌ர் தோட்ட‌த் தொழிலாளியின் ப‌ரிதாப‌க் குர‌லாக‌வே வெளிப்ப‌ட்டுள்ள‌து. ம‌லாயாவின் பொருளாதார‌ம் முப்ப‌துக‌ளில் ப‌டுவீழ்ச்சி க‌ண்டிருந்த‌து. இர‌ப்ப‌ரின் விலை மிக‌ மோச‌மாக‌ வீழ்ச்சி க‌ண்டிருந்த‌தால், அத‌ன் உற்ப‌த்தியை அதிக‌மாக‌வே குறைத்துவிட‌ நேர்ந்த‌து. அதனால் த‌மிழ்த் தொழிலாள‌ர்க‌ள் ப‌ல‌ர் திரும்ப‌ இந்திய‌ நாட்டிற்கே க‌ட்டாய‌மாக‌ அனுப்பி வைக்க‌ நேர்ந்த‌து. அந்நிலையில் பால்ம‌ர‌ம் சீவும் தொழிலாளி ஒருவ‌ன் துரையையும் கிராணியையும் க‌ங்காணியையும் ம‌க்க‌ளையும் விட்டுப் பிரிய‌ ம‌ன‌மில்லாம‌ல் க‌ண்ணீர் சிந்துவ‌தாக‌ ஒரு தொழிலாளியின் நோக்கு நிலையில் ரா.சுப்பிர‌ம‌ணி ஐய‌ர் என்ப‌வ‌ர் ஒரு க‌விதையை இய‌ற்றியுள்ளார். இக்க‌விதையில் தோட்ட‌புற‌ பின்ன‌னி, வாழ்விய‌ல் கூறுக‌ள், ம‌ண்ணின் ம‌ன‌ம் ஆகிய‌ன‌ சிற‌ப்பாக‌ வெளிப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே
போய்வாரேன் பால்ம‌ர‌மே போய்வாரேன் பால்ம‌ர‌மே

க‌ண்ணாடித்துரையும் போனார் க‌ங்காணி வீர‌ன் போனார்
பின்னாடி கிராணி போனார் தாங்காம‌ல் நானும் போரேன்
என்ன‌மோ பின்னாலே எப்போதூன்னை காண‌ப்போரேன்
(போய்)

ப‌வுனுக்கு ப‌வுன்விலையாய் பாலுவித்த‌க் கால‌ம் போச்சே
புளிவிலைக்கும் தோற்றுப் போச்சே பாலுவெட்டும் நிறுத்த‌லாச்சே
யார்செய்த‌ மோச‌ம் பாராய் எவ‌ரிட்ட‌சாப‌ம் கூறாய்
(போய்)

ரொட்டிப்பால் ஒருவிலையும் ஒட்டுப்பால் ஒருவிலையும்
ப‌ட்டைக்கு ஒருவிலையும் (பாலு) கொட்டைக்கு ஒருவிலையும்
த‌ங்க‌ம்போல் விலைத‌ந்தாய் ப‌ங்க‌மாய் நிலைகுலைந்தாய்
(போய்)

தீபாவ‌ளி ப‌டியென்றும் பொங்க‌லுக்குப் பொடியென்றும்
சீராய்கொடுத்த‌ எந்த‌ன் சிரித்த‌முக‌த்துத் துரை
கையைத்தான் விரிகிறாரே காசென்று கேட்டாலிப்போ
(போய்)

க‌ற்ப‌க‌மென்று சொல்வார் க‌ண்ட‌தில்லை இவ்வுல‌கில்
க‌ற்ப‌க‌ம் என்று சொல்ல‌ க‌ண்க‌ண்ட‌ ம‌ர‌மும் நீயே
கால‌மே கோல‌மோ காப்பாற்றுவார் இல்லையே
(போய்)

உன்னைந‌ம்பி வாழ்ந்த‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேர்க‌ளுண்டு
அத்த‌னை பேர்க‌ளுமே அழுதுகொண்டு போகுறாரே
உயிர‌ள‌வும் ம‌ற‌க்க‌மாட்டேன் ஊருக்குப் போய்வாரேன்
(போய்)

ஆதார‌ம் ம‌லேசிய‌த் த‌மிழ் க‌விதை மாநாடு
ம‌ல‌ர் 2000 ப‌க்க‌ம் 153

ந‌ன்றி : திரு.சான‌கிராம‌ன் (ம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை)

முற்றும்...

Read more...

தொழிலாள‌ர் தின‌ம்.. - வ‌ர‌லாறு


மே தின வரலாறு

தொழிலாளர் போராட்டம்


18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.


பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோசத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.


ஆசுத்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

ஆசுத்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.


ரசியாவில் மே தினம்

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரசியத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரசியத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரசியத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரசியப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில்


அமெரிக்காவில் 1832இல் பொசுடனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க்கு, சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோரு என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.


சிக்காகோ பேரெழுச்சி


மே 3, 1886 அன்று “மெக்கார்மிக்கு ஆர் வசுடிங் மெசின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஏமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.


அமெரிக்காவின் கறுப்பு தினம்


நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப்பு ஃபிச‌ர், சார்ச்சு ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.


அனைத்து நாடுகளிலும் மே தினம்


1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக்கு ஏங்கெல்சு உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்சு வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

த‌க‌வ‌ல் : த‌மிழ் வீக்கிப்பீடியா


இவ்வேளையில், குறைந்த‌ வ‌ருமான‌ம் ஈட்டும் இந்நாட்டு தோட்ட‌ப் பாட்டாளிக‌ளுக்கு விடிய‌ல் பிற‌ந்திட‌ இறைவ‌னை பிரார்த்தித்துக் கொள்வோம்! இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் தோட்ட‌ப் பாட்டாளிக‌ள் த‌ங்க‌ளுக்குள் புத்தாக்க‌ சிந்த‌னையை ஏற்ப‌டுத்தி, செய‌லில் இற‌ங்கி வெற்றிக் க‌னியை ஈட்டுவ‌தற்கு முய‌ல‌ வேண்டும்!

உழைக்கும் வ‌ர்க்க‌ம் க‌ண்ணீர் சிந்தினால், மானுட‌ குல‌ம் அழிவை நோக்குகிற‌து என‌ அறிக‌! இன்று மே தின‌ம் முன்னிட்டு ம‌லேசிய‌ தோட்ட‌ப் பாட்டாளிக‌ளின் வ‌ர‌லாற்று சிற‌ப்பு க‌ட்டுரை இட‌ம்பெறும்..

அனைத்து தொழிலாள‌ர்க‌ளுக்கும் தொழிலாள‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக‌ள்..

Read more...

மரத்தடியில் பிறந்த மறத்தமி்ழர்கள் (தொடர் 7)

யாதும் ஊரே யாவ‌ரும் கேளிர்

-பாவ‌ல‌ர் ச‌ங்கு ச‌ண்முக‌ம்‍-

ச‌கோத‌ர‌த்துவ‌த்தை வ‌லியுறுத்த‌த்தான் 'யாதும் ஊரே யாவ‌ரும் கேளிர்' என்னும் த‌த்துவ‌த்தை ந‌ம‌க்குக் க‌ற்பித்த‌ன‌ர் ந‌ம‌து முன்னோர்க‌ள்!

ந‌ம‌து நாட்டில் பேராசிரிய‌ர் த‌னிநாய‌க‌ அடிக‌ளார் முன்னின்று ந‌ட‌த்திய‌ முத‌லாவ‌து த‌மிழாராய்ச்சி மாநாட்டின் க‌ருப்பொருளாக‌ அமைந்த‌து இந்த‌ 'யாதும் ஊரே யாவ‌ரும் கேளிர்' த‌த்துவ‌ம்தான்!

ப‌ண்டைகால‌த்திலேயே த‌மிழ‌ர்க‌ள் எந்த‌ அள‌வுக்கு உய‌ர்ந்த‌ ப‌ண்பாட்டு நாக‌ரீக‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ இருந்திருக்கின்ற‌ன‌ர் என்ப‌தை அக்க‌ருப்பொருளின் அர்த்த‌ம் க‌ண்டு சுத‌ந்திர‌த் த‌ந்தை துங்கு அப்துல் ர‌குமான் போன்ற‌ பெரும் த‌லைவ‌ர்க‌ள் விய‌ந்த‌ன‌ர்.

இன‌ ச‌ம‌ய‌ எல்லைக‌ளைக் க‌ட‌ந்த‌து ந‌ம் ப‌ண்பாடு. கால‌ ஓட்ட‌த்தில் இன‌ம் என்ப‌தே ஒரு க‌ற்ப‌னையாகிவிடும்.

இந்திய‌ தேசிய‌ கீத‌த்தை எழுதிய‌ க‌விஞர் தாகூர் தென் இந்திய‌ர்க‌ள் அனைவ‌ரையுமே 'திராவிட‌ர்க‌ள்' என்ற‌ ஓர் அடைப்புக் குறிக்குள்தான் அட‌க்குகிறார்.

"ச‌ன‌ க‌ன‌ ம‌னஅதி நாய‌க‌ ஜெய‌கே,
பார‌தி பாக்கிய‌ விதாதா
ப‌ஞ்சாப‌ சிந்து குச‌ராட்டா ம‌ராட்டா
திராவிட‌ உத்துக‌ல‌ வ‌ங்கா!" என்று!

அந்த‌ ஒரே திராவிட‌ இன‌த்துக்குள் த‌மிழ், ம‌லையாள‌ம், தெலுங்கு, க‌ன்ன‌ட‌ம் என‌ எத்த‌னை இன‌ப்பிரிவுக‌ள்! இன்னும் எதிர்கால‌த்தில் இவ‌ற்றுக்குள்ளும் எத்த‌னை உட்பிரிவு இன‌ங்க‌ள் பிரியும் என்ப‌தையும் எவ‌ரும் உறுதிப‌டுத்த‌ முடியாது! குறிப்பாக‌ ப‌ல‌ இன‌ம‌க்க‌ள் வாழும் ந‌ம் நாட்டைப் போன்ற‌ தேச‌ங்க‌ளில் இன‌க் க‌ல‌ப்பு என்ப‌து எவ‌ராலும் த‌விர்க்க‌ப்ப‌ட‌ முடியாத‌ ஒன்று!

திராவிட‌ர்க‌ள் எப்ப‌டி இருப்பார்க‌ள் என‌ப் பிரிட்டானிய‌ க‌லைக் க‌ள‌ஞ்சிய‌ம் குறிப்பிடும் எல்லைக்குள்ளாக‌வா நாம் எல்லோரும் பிற‌ந்திருக்கின்றோம். காங்கோ குழ‌ந்தைக‌ளையும் ஈரானிய‌க் குழ‌ந்தைக‌ளையும் ஒரே குடும்ப‌த்திற்குள் பார்க்க‌ முடிகிற‌து ந‌ம்மிடையே!

நீக்குரோடிக்கு, திராவிட‌ம், ஆரிய‌ம், ம‌ங்கோலிய‌ம் ஆகிய‌ நான்கு இன‌ங்க‌ளும் க‌ல‌ந்துதான் உல‌க‌ இன‌ங்க‌ள் அனைத்தும் உருவாகியுள்ள‌ன‌ என்ப‌து சில‌ ஆராய்ச்சிக‌ளின் முடிவு.

இன‌வாத‌ம் எடுப‌டாது

என‌வே, இன்னும் இன‌வாத‌ம் பேசிக்கொண்டிருப்ப‌து ஏற்புடைய‌த‌ன்று!

திராவிட‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ நிற‌ம் க‌ருப்பு! அந்த‌ நிற‌த்தையே பார்த்து வெறுக்கும் முக‌ம் சுளிக்கும் ப‌ல‌ர் ந‌ம்மிடையே உள்ள‌ன‌ர்! இவ‌ர்க‌ளே இன‌ம் என்றும் ச‌ம‌ய‌ம் என்றும் வீராப்புப் பேசுவ‌து வேடிக்கையான‌ ஒன்று!

அண்மையில் என் உற‌வின‌ர் வீட்டில் ந‌ட‌ந்த‌ ஒரு துக்க‌க் காரிய‌த்திற்குச் சென்றிருந்தேன். அத்ற்குக் கூட்டிவ‌ர‌ப்ப‌ட்டிருந்த‌ ஒரு மூன்று வ‌ய‌துச் சிறுமி, ஒரு அழ‌கான‌ க‌றுப்பு நிற‌ப் பெண்ணைப் பார்த்து "ஆன்டி நீங்க‌ள் க‌றுப்பாக‌ இருக்கிறீர்க‌ள் என‌க்கு உங்க‌ளைப் பிடிக்க‌லே! என‌க்கு சிவ‌ப்பு நிற‌ம்தான் பிடிக்கும்" என்ற‌து.

இந்த‌ச் சின்ன‌ஞ்சிறு சிறுமிக்கு த‌ன் சொந்த‌ இன‌த்திற்கே உரிய‌ க‌றுப்பு நிற‌த்தின் மீது எப்ப‌டி வ‌ந்த‌து இந்த‌ வெறுப்பு! வீடுக‌ளில் பெரிய‌வ‌ர்க‌ள் க‌றுப்பு நிற‌த்தை வெறுத்துப் பேசுகிறார்க‌ள். அதைக் கேட்டுக் கேட்டு அதையே எதிரொலிக்கிறாள் அச்சிறுமி. பெரிசுக‌ள் திருந்தாத‌ வ‌ரை பிள்ளைக‌ள் திருந்த‌மாட்டார்க‌ள்!

ந‌ம் பார‌ம்ப‌ரிய‌ நிறமான‌ க‌றுப்பையே நாம் வெறுக்கிறோம். கேலி செய்கிறோம் ந‌கைச்சுவை என்னும் பெய‌ரில் திரைப்ப‌ட‌ங்க‌ளில் க‌றுமை நிற‌க் க‌ண்ண‌னைக் கூட‌ க‌றுப்ப‌ன் என‌ ஒப்புக்கொள்ள‌ ம‌றுக்கிற‌து ந‌ம் உள்ள‌ம். "நீல‌ வ‌ண்ண‌க் க‌ண்ண‌ன்" என்கிறோம் 'புளு பேபிக‌ள்' பிழைப்ப‌து இல்லையே!

பாட்டாளிக‌ளிடையே பாகுபாடில்லை

தோட்ட‌ப்பாட்டாளி ம‌க்க‌ளிடையே இத்த‌கைய‌ இன‌,நிற‌ ம‌த‌ வேறுபாடுக‌ள் இல்லை. ஒரு த‌லைவ‌ர் சீனராகினும், ம‌லாய்க்கார‌ரானாலும் எல்லாத் தோட்ட‌த் தொழிலாள‌ர்க‌ளுமே அவ‌ரை ஏற்றுக் கொண்டிருந்த‌ன‌ர். ட‌ப்ளின் தோட்ட‌த்து இராம‌சாமியின் த‌லைமைத்துவ‌த்தை கிள‌ந்தான் மாநில‌ இசுமாயில் அலி ஏற்றுக் கொண்டிருந்தார். உண்மையான‌ ம‌லேசிய‌ ம‌லேசிய‌ர்க‌ள் கொள்கையை 50 ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ரே பின்ப‌ற்றின‌ர் தோட்ட‌ப்பாட்டாளிக‌ள். இந்திய‌ர்க‌ளுக்குள்ளேயே இன‌வேற்றுமை க‌ண்ட‌ ஒருசில‌ தொழிலாள‌ர்க‌ள் த‌லைவ‌ர்க‌ளும் தோட்ட‌த் தொழிலாள‌ர்க‌ளிடையே இல்லாம‌ல் இல்லை. ஆனால் சாதார‌ண‌ப் பாட்டாளி ம‌க்க‌ள் ம‌லேசிய‌ ம‌க்க‌ள் அத்த‌கைய‌ அழுக்காறுக‌ளைக் கொண்டிருக்க‌வில்லை! இதை அண்மைய‌ அர‌சிய‌ல் சுனாமி நிரூபித்து விட்ட‌து!

ப‌ல‌ இன‌ ம‌க்க‌ள் வ‌சிக்கும் நாட்டில்தான் இத்த‌கைய‌ அர‌சிய‌ல் சுனாமிக‌ளால் மாபெரும் அதிர்ச்சி அலைக‌ள் ஏற்ப‌டும். ஒரே இன‌ம‌க்க‌ள் வ‌சிக்கும் நாடுக‌ளில் இத்த்கைய‌ பேர‌திர்ச்சி பொங்காது என‌ என்ண‌ முடியாது. 90 விழுக்காடு த‌மிழ‌ர்க‌ள் வாழும் த‌மிழ் நாட்டில் கூட‌ யாரும் எதிர்பாராத‌ வ‌கையில் திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ம் ஆட்சியைப் பிடித்த‌ 60ஆம் ஆண்டுக‌ளின் துவ‌க்க‌த்தில் கூட‌ ப‌ட்ட‌ம் ப‌த‌விக்குப் ப‌ழ‌கிப்போன‌ காங்கிர‌சுகார‌ர்க‌ளால் அதை ஏற்றுக் கொள்ள‌ முடிய‌வில்லை.

அண்ணாதுரையும் க‌ருணாநிதியும், நெடுஞ்செழிய‌னும் ம‌திய‌ழ‌க‌னும், அன்ப‌ழ‌க‌னும் என்.வி ந‌ட‌ராச‌னும், சி.பி சிற்ற‌ர‌சும், தென்ன‌ர‌சும் ச‌ட்ட‌ ச‌பைக்குப் போவ‌தையும், அமைச்ச‌ர்க‌ளாவ‌தையும் காங்கிர‌சுகார‌ர்க‌ளால் சீர‌ணிக்க‌ முடிய‌வில்லை! முத‌ல் தேர்த‌லில் 16 இட‌ங்க‌ளைப் பிடித்து அடுத்த‌ தேர்த‌லில் 50 இட‌ங்க‌ளைப் பிடித்து அத‌ற்கு அடுத்த‌ தேர்த‌லில் ஆட்சியையும் பிடித்துவிட்ட‌ன‌ர் தி.மு.க‌வின‌ர்! அந்த‌ அர‌சிய‌ல் அலையில் பெருந்த‌லைவ‌ர் என‌ப் போற்ற‌ப்ப‌ட்ட‌ க‌ர்ம‌வீர‌ர் காம‌ராச‌ர் கூட‌ சாதார‌ண‌ க‌ல்லூரி மாண‌வ‌ர் சீனிவாச‌னால் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டார்! "ப‌டுத்துக் கொண்டே செயிப்பேன்!" என‌ அன்று காம‌ராச‌ர் அவ‌ச‌ர‌ப்ப‌ட்டுக் கூறிய‌ ஒரு வார்த்தை அவ‌ர் தோலிவிக்கே கார‌ண‌மான‌து! இத‌ற்காக‌த் தான் வீராப்பு அர‌சிய‌லுக்கு ஆகாது என்ப‌து!

த‌மிழ‌ர் க‌தை தொட‌ரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP