’இண்ட்ராஃப் குரல்’ ஏப்ரல் மாத இதழ்

>> Monday, April 26, 2010

Suara Hindraf edisi April 2010

Read more...

’இந்திய மலேசியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம்’- பினாங்கில் கருத்தரங்கு

>> Saturday, April 24, 2010


நாளை பினாங்குத் தீவில்இந்திய மலேசியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம், முன்னேறுவதற்கான வழிஎனும் கருவை மையமாகக் கொண்ட கருத்தரங்கு நிகழ்வு ஒன்றிற்கு பினாங்கு இண்ட்ராஃப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். நிகழ்வின் விபரங்கள் பின்வருமாறு :

திகதி : 25 ஏப்ரல் 2010 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணிவரை

இடம் : பினாங்குத் தீவு (நிகழ்வு நடைப்பெறும் இடம் அறிந்துகொள்ள நிகழ்வின் ஏற்பாட்டாளர்களைத் தொடர்புக் கொள்ளவும்)

பேச்சாளர்கள் : திரு.உதயகுமார் (இண்ட்ராஃப் ஆலோசகர், மனித உரிமைகள் கட்சியின் பொதுச் செயலாளர்)
திரு. கணேசன் (இண்ட்ராஃப் தேசிய ஆலோசகர், மனித உரிமைகள் கட்சியின் தேசிய ஆலோசகர்)

மேலும் தகவல்களுக்கு நீங்கள் அழைக்க வேண்டிய எண்கள் :

திரு.கலை : 012 5637614
திரு. கனகசுந்தரம் : 017 4155449

Read more...

ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை (தொடர்ச்சி)

>> Tuesday, April 20, 2010



முதல் பாகம் : ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை

பல்வகை திறன்களைக் கைவரப் பெறாத நிலையில், குறைந்த சேமிப்பை கொண்டு தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த தோட்டப்புற சமூகத்தினர், நகர்ப்புறங்களில் ஆங்காங்கே பெருமளவில் புறம்போக்கு நிலங்களிலுள்ள குடிசைகளிலும் மலிந்த விலை வீடுகளிலும் வாழத் தொடங்கினர். இச்சமூகத்தினரில் பெரும்பான்மையினர் கீழ் நிலையிலான தொழில்களில் ஈடுபட்டுவந்ததோடு மட்டுமல்லாது கிடைக்கும் குறைந்த வருமானத்திற்குக்கூட அந்நியத் தொழிலாளர்களுடன் போட்டிப் போடும் சூழ்நிலை ஏற்பட்டது. இவர்களில் இளையோர்கள் பலர் புதிய நகர் வாழ்க்கைச் சூழலிலிருந்து அந்நியப்பட்டு நிற்பதாக கருதி வந்தனர். குறைந்த கல்வி மற்றும் சரியான தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் அவர்களில் சிலர் சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

ஆகமொத்தத்தில், மலேசியர்களின் சராசரி வருமான ஈட்டுத் தொகையிலிருந்து 30 சதவிகிதம் மட்டுமே வருமானமாக ஈட்டும் ஏழை இந்தியர்களை இரு வகுப்பாகப் பிரிக்கலாம். முதல் வகுப்பைச் சார்ந்தவர்கள், தோட்டப்புறங்களில் வசித்துக்கொண்டும் அங்கேயே தொழில் செய்துகொண்டும் இருப்பவர்களாவர். இந்த வகுப்பினர் எந்தவொரு அரசாங்கத்தின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்களிலும் இணைக்கப்படாதவர்களாவர். இரண்டாம் வகுப்பைச் சார்ந்தவர்கள், ஆரம்ப வாழ்க்கையை ரப்பர் தோட்டங்களில் தொடங்கி தற்போது நகர்ப்புறங்களில் அல்லது நகர்ப்புற அருகில் வசித்து தொழில் புரிந்து வருபவர்களாவர். இக்கட்டான சூழ்நிலையிலுள்ள ஏழை நகர்ப்புற இந்தியர்களும் மற்றும் பிற இன நகர்ப்புற ஏழைகளுமே ஒன்பதாவது மலேசிய திட்டத்தின்கீழ் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய வகுப்பினர் ஆவர்.


இவ்விரு வகுப்பினரும் எதிர்நோக்கிவரும் இக்கட்டான சமூகப் பொருளாதார பிரச்சனைகளை அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருந்தபோதிலும், இச்சமூகத்தினரை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் திட்டங்களையோ அல்லது மானிய ஒதுக்கீடுகளையோ போதுமானதாக அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவில்லை. இச்சமூகத்தின் எதிர்ப்பார்ப்புகள் ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டியது அவசியமாகிறது. புறநகர் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளில் சிறப்புக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணித்திட்டங்கள் ஆகியன இவர்களை இலக்காகக் கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டும். இச்சமூகத்தினர் பலடனடையும் வகையில் புதிய திட்டங்களானது செயல்வடிவம் கொள்வதை உறுதிச் செய்தலும் திட்ட வளர்ச்சி குறித்த அளவீடும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதே சமயத்தில் முறையான செயலாக்கம் மற்றும் அமுலாக்கக் கண்காணிப்பு திட்ட வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன.

மலேசிய இந்திய சிறுபான்மையினரை நாட்டின் முக்கிய வளர்ச்சித் திட்டத்தில் பங்கெடுக்கவைக்கும் முக்கியத் திட்டங்களை பொதுக் கொள்கைகள் ஆய்வு மையம் முன்வைக்கின்றது. நாட்டின் முக்கியத் துறைகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிதி ஒதுக்கீடுகள் கொண்டுவரப்பட வேண்டும். அதோடு, அமைச்சின் நேரடிப் பார்வையில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் திட்டங்கள் பாதிக்கப்பட்ட இந்திய சமூகத்தைச் சென்றடைவதை உறுதிச் செய்ய வேண்டும். தோட்டப்புறங்கள் அருகிலுள்ள கையிருப்பு நிலங்களை தோட்டப்புறத் தொழிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக ஒதுக்கி அவர்கள் விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்புத் தொழிலை மேற்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும். அதோடு, தோட்டப்புற சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கூட்டு முறையிலான விவசாயத் திட்டங்கள், கால்நடை வளர்ப்புத் திட்டங்கள், உணவு உற்பத்தி, அழகுப் பூக்கள் நடவு மற்றும் விற்பனை போன்ற திட்டங்களுக்காக அரசாங்கம் சிறப்பு நிலத்திட்டங்களை கொண்டுவர வேண்டும்.

மேலும் இளையோர்கள் எதிர்நோக்கும் சமூகச் சீர்கேடுகளை குறைப்பதற்கு ஒன்பதவாது மலேசியத் திட்டத்தின்கீழ் சிறார் பராமரிப்பு மையங்களை எழுப்புவதற்கும், குறைந்த வருமானம் கொண்டவர்கள் வசிக்கும் இடங்களில் குறிப்பாக மலிவுவிலை மாடிக் குடியிருப்பு இடங்களில் பாலர்ப் பள்ளிகளை எழுப்புவதற்கும் அரசாங்கம் தாராள நிதி ஒதுக்கீட்டினைச் செய்ய வேண்டும். குறைந்த வருமானமுடைய குடும்பத்திலுள்ள இந்திய மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முழு மானியம் பெறாத அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் முழு மானியம் பெறும் பள்ளிகளாக அரசாங்கம் மாற்ற வேண்டும். இவற்றைத் தவிர்த்து, நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா இயக்கங்களைப் பயன்படுத்தி சிறப்புப் பயிற்சித் திட்டங்கள், வாழ்க்கைக் கல்விகளான தொழிற்திறன் மற்றும் வியாபாரத் திறன் குறித்த பயிற்சிகளை தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்த இளையோர்களுகு வழங்க வேண்டும்.

ஏழை இந்திய சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியப் பங்காற்றுவதால், தரமான ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேற்கல்விக்கான வாய்ப்புகள் இவர்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய இளையோர்களுக்கு கல்வி மேற்கொள்ள இடங்கள் மற்றும் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்திட அரசாங்கம் முறையான நிதி ஒதுகீடுகள் செய்ய வேண்டும். இதன்வழி இவர்கள் நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்கு சரிசமமான பங்கை ஆற்றமுடியும். இறுதியாக தொழில் முனைவர் மேம்பாட்டிற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு மிக முக்கியமாகும். ஒதுக்கப்படும் இந்நிதியின்வழி சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவர்கள் சுலபமாக ஊக்குவிப்புக் கடன் பெற்று வியாபாரம் தொடங்கி சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிக்கோல வாய்ப்பு உள்ளது. அதே சமயம், நாட்டின் மொத்த பொருளாதார சொத்து மதிப்பில் இந்திய சமுதாயத்தின் பங்கு விழுக்காடு 3 சதவிகிதத்தை எட்டுவதற்கு இத்திட்டங்கள் உதவி புரியும்.

Read more...

ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை



மூலம் : சிறுபான்மை இனத்தவருக்கான வெற்றிகரமான குறியிலக்கை உறுதிச் செய்தல் : குறைந்த வருமானம் பெறும் மலேசிய இந்தியர்கள், ஒரு பார்வை. (பொதுக் கொள்கைகள் ஆய்வு மையம்)

1970-ஆம் ஆண்டுகள் தொடங்கி செயல்முறைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் பெருந்திட்டங்களின் வரைவுகளை ஆய்வு செய்யும்பொழுது, குடிப்பெயர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஏழை கிராமப்புற இந்தியர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதை பலகாலமாகவே அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகக் காட்டுகிறது. இந்நிலைமை குறித்த விழிப்புணர்வு இருப்பினும், நாளுக்கு நாள் பெருகிவரும் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக குறைந்த அளவிலான சில திட்டங்களே அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அதே சமயம், குறைந்த வருமானம் பெரும் இந்திய சமுதாயத்தினரின் ஏற்றத்திற்கு மானியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிகளும் அவை சென்றடைந்த வழிகளும் நிலைமையை சரி செய்வதில் தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது.

பெரும்பான்மை இந்தியர்கள் சமூக-பொருளாதார ரீதியில் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் தோட்டப்புறங்களில் நிலவிய பொருளாதாரச் சூழ்நிலைதான். சில பரம்பரைகளாகவே வேலை வாய்ப்பிற்கும், குடியிருப்பு வசதிக்கும் இந்திய வம்சாவளியினர் தோட்டப்புற ஆலைகளை நம்பியிருந்த சூழ்நிலை இருந்து வந்தது. இந்த தோட்டப்புற தொழிலாளர்கள் குறைந்த வருமானம் பெருபவர்களாகவும், அடிப்படை வசதிகள் குறைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களாகவும், முறையான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் அற்றவர்களாகவும் அதே சமயம், அவர்களின் பிள்ளைகள் குறைந்த அடிப்படை வசதிகள் கொண்ட தமிழ்ப் பள்ளிகளில் தங்களின் ஆரம்பக் கல்வியைப் பெறும் சூழ்நிலையும் இருந்து வந்தது. தோட்டப்புறங்களும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என அரசாங்கத்தால் முத்திரைக் குத்தப்பட்டதன் விளைவாக, 70-ஆம் மற்றும் 80-ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்கள் தோட்டப்புற மக்களைச் சென்றடையவில்லை. இருப்பினும், தோட்டத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என அரசாங்கம் வகைப்படுத்தியிருந்ததால், தோட்டப்புற குடியிருப்பு வசதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டங்களை அமுல்படுத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டு மிகக் குறைந்த அளவிலேயே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

1980-ஆம் ஆண்டு தொடங்கி நாட்டின் பொருளாதாரம் அதிவேகத்தில் முன்னேற்றத்தைக் கண்டுவந்த வேளையில், தோட்டப்புற இந்திய சமூகம் நாட்டின் பொருளாதார வெள்ளோட்டத்திலிருந்து பின்தள்ளப்பட்டும் அனைத்துவிதமான மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து ஒதுக்கப்பட்டும் பாதிப்பிற்குள்ளாயினர். கடந்த 20 ஆண்டுகளில் புதிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கும் தோட்டப்புற நிலங்கள் துண்டாடப்பட்ட சமயங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை இந்தியர்கள் குடிப்பெயர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தோட்டப்புறங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இவர்கள் தங்களின் வருமானம் ஈட்டும் தொழிலை மட்டும் இழக்கவில்லை, மாறாக, மேலும் முக்கியமாக குடியிருப்பு, வாழ்ந்தச் சூழல், அடிப்படைச் சலுகைகள், சமூக-கலாச்சார தொடர்புடைய வசதிகள் மற்றும் காலங்காலமாக தோட்டத் தொழிலாளர் சமூகம் கட்டியெழுப்பிய சமூக வலுவாக்க அரண் போன்றவற்றை இழக்க நேரிட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாது, தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் குடும்ப வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக தோட்ட நிறுவனம் வழங்கிய சிறு விவசாய நிலங்கள், கால்நடை வளர்ப்புக்கு வழங்கிய நிலங்கள் போன்றவற்றையும் இழந்துள்ளனர். தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடியமர்வு செய்யப்படும் தோட்டத் தொழிலாளர்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்பது முன்பே அறியப்பட்ட விடயமாகும். பெருமளவிலான கட்டாயக் குடியமர்விற்கு ஆளான தோட்டத் தொழிலாளர்கள் உளவியல் ரீதியில் பல பிரச்சனைகளையும் எதிர்நோக்கிய வேளையில், இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எந்தவொரு திறன் பயிற்சிகளையும் வழங்கியோ அல்லது மேம்படுத்தப்பட்ட குடியிருப்புச் சூழலில் இவர்களை மறுகுடியமர்வு செய்ததோ கிடையாது.

தொடரும்...

Read more...

சைட் இப்ராஹிமா அல்லது கமலநாதனா? – வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளரையே தேர்ந்தெடுங்கள்

>> Monday, April 19, 2010


உலு சிலாங்கூர் வாக்காளர்களுக்கு மனித உரிமைகள் கட்சி வழங்கும் அறிவுரைவாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளருக்கு மட்டுமே வாக்களியுங்கள், வெற்று வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளருக்கு வாக்களிக்காதீர்கள்

இவ்வாண்டிலேயே பல நம்பிக்கை வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும் காலமாக உலு சிலாங்கூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் விளங்குகின்றது. இம்முறை உலு சிலாங்கூர் மக்கள் இருபக்க அரசியல் கட்சிகளிடமும் விவேகத்துடன் காயை நகர்த்திக்காட்ட வேண்டும். இல்லையெனில், வெற்று வாக்குறுதிகளையும் பொய்யான தேர்தல் பரப்புரைகளை மட்டுமே உலு சிலாங்கூர் மக்கள் பெறப்போவது உறுதி.

வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளர்களுக்கே இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.

அண்மையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் தனது வாராந்திர ஆட்சிக்குழு கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களிடம் ஓர் அறிக்கை விடுத்திருந்தார். அதாவது அரசாங்க நிலங்களில் 15 வருடங்களாக வசித்துவரும் 1 லட்சம் புறம்போக்கு குடிசைவாசிகள் மற்றும், தற்காலிக குடியிருப்பு லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு சிலாங்கூர் மாநில பக்காதான் அரசு நிலப்பட்டா வழங்கவுள்ளதாகவும், அதே சமயம் கூடிய விரைவில் சிலாங்கூர் மாநிலத்தில் நிலவிவரும் நிலம், வழிப்பாட்டுத் தளங்கள், பள்ளிகள் மற்றும் சாலைகள் குறித்த பிரச்சனைகளுக்கு மாநில பக்காதான் அரசு தீர்வு காணவிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

நில விவகாரம் குறித்த வாக்குறுதியானது பக்காதான் மாநில மந்திரி புசாரின் வாக்குறுதியாகும்.

உண்மையிலேயே மலேசிய இந்திய ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் யாதெனில், அவர்களது பெயரிலேயே சொந்த நிலப்பட்டாக்கள் கிடைக்கப்பெற வேண்டும், தேசியப் பள்ளிகளைப் போலவே தமிழ்ப்பள்ளிகள் அனைத்திற்கும் சொந்த நிலங்களும் நிலப்பட்டாக்களும் வழங்கப்படவேண்டும், வழிபாட்டுத் தளங்கள் உள்ள நிலங்கள் உள்ளபடியே மக்களுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டும். இவையனைத்தும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் நடக்க வேண்டும். இதனைத் தவிர்த்து எடுக்கப்படும் வேறெந்த முடிவுகளும் நிச்சயம் மாற்றத்தினைக் கொண்டுவரப்போவதில்லை. இடைத்தேர்தலுக்குப்பின் வழக்கம்போல் நாம் காதால் கேட்டுப் புளித்துப்போன வெற்று வாக்குறுதிகள்தான் எஞ்சியிருக்கும்.

சாயிட் இப்ராஹிம் தயவு செய்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதித்து மனித உரிமைகள் கட்சி முன்வைக்கும் கோரிக்கைகள் நிறையவே உள்ளன. ஆனால், முதல் கோரிக்கையாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப் பள்ளிகளில் சொந்த நிலம் இல்லாத தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலப்பட்டாக்களைக் கொடுங்கள். ஆனால் இதற்கு நாங்கள் காத்திருக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரிந்த ஒன்றே.

மஇகாவும் அம்னோவும் இணைந்து வழங்கியுள்ள வாக்குறுதிகளில் ஒன்றான மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்களின் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்பதாகும். இந்த வாக்குறுதியானது இடைத்தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றப்படாவிட்டால் அனைத்தும் தேர்தலை முன்னிட்டே வைக்கப்படும் வெற்று வாக்குறுதிகளாகிவிடும். தேர்தல் முடிந்த பின்பு, வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு எந்தவொரு காரணத்தையும் அவர்கள் கூறலாம். ”மைக்கா நிறுவனத்திற்கு இத்தனை கடன்கள் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாதுஅல்லது பங்குகளை அதிகப்படியாக நிர்ணயத்திருக்கின்றனர். எங்களால் 1 ரிங்கிட்டிற்கு 25 சென் மட்டுமே வழங்க முடியும், காரணம் பல எதிர்மறை விளம்பரங்களால் மைக்கா நிறுவனம் கடுமையாக பாதிப்பிற்க்குள்ளாகிவிட்டதுஎன காரணங்களை அடுக்கி தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

மலேசிய இந்திய ஏழைகளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் யாதெனில், மைக்கா பங்குதாரர்கள் ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு முன்பே போட்டப் பணங்களை மீண்டும் பெற வேண்டும். மஇகா/அம்னோ அப்பணங்களை ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பங்குதாரர்களுக்கு கொடுக்காவிடில், இனி எப்பொழுதும் அப்பணம் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.

கமலநாதன் தயவு செய்து குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

மனித உரிமைகள் கட்சியின் நிலைப்பாடு என்னவெனில், 1984-ஆம் ஆண்டில் ரிம 1 வெள்ளிக்கு விற்கப்பட்ட பங்கின் தற்போதைய (2010) மதிப்பு ரிம 4 வெள்ளியாகும். எனவே, மைக்கா பங்குதாரர்களுக்கு தற்போதைய மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு பங்கிற்கு 4 வெள்ளி வீதம் பணம் கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள எந்தவொரு பட்டயக் கணக்கரிடமும் இவ்விடயம் குறித்து விசாரித்தால் இதே பதிலைத்தான் அவர்களும் கூறுவார்கள். தற்போது ஒரு பங்கிற்கு ரிம 1 வெள்ளி மட்டுமே கொடுக்கப்படும் என்று மஇகா அறிவித்துள்ளது. அப்படியென்றால் உண்மையான மதிப்பிலிருந்து 25 சதவிகிதம் மட்டுமே பங்குதாரர்களுக்கு வழங்கப்படுமாம். அம்னோ 106 மில்லியனுக்கு வாங்கப்போவதாகக் கூறும் மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை தற்போதைய மதிப்பை அடிப்படையாகக் கொண்டு 450 மில்லியனுக்கு வாங்குவதே நியாயம்.

இந்தத் தொகையானது பல பில்லியன் மதிப்பிலான நிறுவனங்களை அரசாங்கம் மீட்டெடுத்த தொகையைவிடச் சிறியதுதான். சில நிறுவன்ங்களை உதாரணமாகச் சொல்லலாம். மல்டி பர்பர்ஸ் ஹோல்டிங்ஸ், கொண்சோர்டியும் பெர்காபாலான் பெர்ஹாட், முன்னால் பிரதமர் மகாதீரின் மகன் நிர்வகிக்கும் நீர்க்கப்பல் போக்குவரத்து நிறுவனம், மலேசிய விமான போக்குவரத்து நிறுவனம் (மாஸ்). ரெனோங் பெர்ஹாட், தேசிய கழிவு நிர்வகிப்பு நிறுவனம், கோலாலம்பூரின் இரு பொது போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள் ஆகியன இப்பட்டியலில் அடங்கும். சிங்கபூரின்மோகன் ஸ்டான்லிநிறுவனத்தில் தென்கிழக்காசிய பொருளாதார ஆய்வியலாளராக பணியாற்றும் டேனியல் லியன் கூறுகையில், மலேசிய நாடு கடந்த 1980-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே சுமார் ரிம 100 பில்லியன் வெள்ளியை இழந்திருக்கிறது என்கிறார். இந்தத் தொகையோடு ஒப்பிடுகையில் 450 மில்லியன் பெரிய தொகை என்று கூறிவிடமுடியாது.

சைட் இப்ராஹிமா அல்லது கமலநாதனா?வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேட்பாளரையே தேர்ந்தெடுங்கள்

கொடுத்த வாக்குறுதிகளை ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் நிறைவேற்றாத எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காதீர்கள்.
வாக்குத் தேர்வினை சுலபமாக வைத்துக் கொள்ளுங்கள்

நரகன்.

Read more...

சட்டத்தை மீறும் காவல்த்துறை - இண்ட்ராஃப் மறியல்

>> Tuesday, April 13, 2010



போராட்டம் தொடரும்...

Read more...

இந்திய சமுதாயம் எதிர்ப்பார்ப்பது என்ன? - உதயகுமார், ஆறுமுகம் விளக்கம்

>> Monday, April 12, 2010



Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP