உங்கள் வாக்குரிமையை பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்

>> Wednesday, May 25, 2011

Read more...

பினாங்கில் கர்நாடக இசை கருத்தரங்கு

>> Wednesday, May 18, 2011




அன்புடையீர்,

பினாங்கில் கர்நாடக இசை பற்றிய கருத்தரங்கொன்று எதிர்வரும் 29 -ம் திகதி மே மாதம் , நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வானது, கர்நாடக இசையின் வரலாறு மற்றும் நம் உடலுக்கு ராகங்கள் மற்றும் தாளங்களினால் ஏற்படும் நன்மைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் தனது ஆய்வின் வழி , அயல் நாடுகளில் சமர்பித்த கட்டுரைகளை கொடுக்கவுள்ளார்.

கர்நாடக இசையின் தாத்பரியத்தை புரிந்து கொள்ள மேலும் அதில் உள்ள உன்னதமான அம்சங்களை தெரிந்து கொள்ள உதவும் வகையில் இக்கருத்தரங்கு அமையவிருப்பதாகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும் நினைவாற்றல் திறமையினை பெறவும் இசை வழிகாட்டுவதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர் புஷ்கலா தெரிவித்துள்ளார்.

இப்பயன்மிகு கருத்தரங்கில் கலந்து பயன்பெற மாணவர்களையும் பெற்றோர்களையும் நிகழ்வின் ஏற்பாட்டாளர் அழைக்கிறார்.

இடம் : அருள்மிகு கருமாரியம்மன் கோயில், ஜாலான் தோடாக், செபராங் ஜெயா, 13700 பிறை, பினாங்கு.

திகதி : 29/05/2011 (ஞாயிறு)

நேரம் : காலை 8.00 மணி முதல் நண்பகல் 1.00 மணிவரை

Read more...

பினாங்கின் கடைசி இந்திய பாரம்பரிய கிராமத்திற்கு ஆபத்து!

>> Saturday, May 7, 2011

பினாங்கு மாநில ’யுனெஸ்கோ’ பாரம்பரிய நிலத்தில் அமைந்துள்ள செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் தமிழ் கிருத்துவ பாரம்பரிய கிராமத்தின் தலையெழுத்து தற்போது கேள்விக்குறியாக உள்ளது. 150 ஆண்டுகளாக இரண்டு தலைமுறையாக வாழ்ந்துவரும் இந்திய மக்களை தற்போது கத்தோலிக்க பிசோப்பாக இருப்பவர் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் தமிழ் கிருத்துவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட இந்நிலம் அருகிலுள்ள சிட்டிடெல் தங்கும்விடுதி உரிமையாளருக்கு விற்கப்படப்போவதாகவும், இவ்வாண்டு இறுதிக்குள் அங்கு வசிக்கும் மக்கள் தத்தம் வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும் கோரி நீதிமன்றத்தில் தேவாலய நிர்வாகம் வழக்கு பதிவும் செய்திருக்கிறது. ஜோர்ச்டவுன் நகர மையத்தில் உள்ள பினாங்கு சாலையில் அமைந்துள்ள அவ்வழகிய குக்கிராமமானது பினாங்குத் தீவின் கடைசி இந்திய பாரம்பரிய கிராமம் என அறியப்படுகிறது. இக்கிராமத்திற்கும் புவா பாலா கிராமத்திற்கு ஏற்பட்ட முடிவுதானா? வாருங்கள் அங்குள்ள மக்களையே நாம் கேட்போம்..



போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP