இந்திய சமூகத்தின் காலக் கண்ணாடி

>> Saturday, December 18, 2010


திரு.உதயகுமாரின் ’இண்ட்ராஃப் 25 நவம்பர் பேரணி’ நூல் குறித்து திரு.கணேசன் வர்ணிப்பு



அரசியல் வானில் மாற்றங்கள் நிகழும்போது அதற்கு முன்பாகவே அரசியல் சூழலில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அது நிகழும் பொழுது ஒரு சமூகத்தின் அரசியல் செயல்பாட்டை பழைய அச்சில் பார்ப்பது கடினமாகும். இந்த பழைய அச்சு சமூகத்தில் வேரூன்றி விட்டது.

பழைய அரசியலை தொடர்ந்து பேணி வர முயற்சித்த வண்ணம் இருப்பர். இருப்பினும் புதிய அரசியல் சக்திகள் இந்த பழைமைவாதத்தை எதிர்த்து போராடி வருவர். இந்தப் புதிய அரசியலைக் கொண்டு வரும் நபர்கள் மிகப் புதிய தகவல்களையும் அதைக் கொண்டு செல்லும் தகவல் சாதனங்களையும் தங்கள் வசம் வைத்திருப்பர். வரலாறு குறித்த புதிய கண்ணோட்டத்தை இவர்கள் கொண்டிருப்பர். ஒழுக்கத்தின் புதிய பரிணாமம் இவர்கள் வசம் இருக்கும். இவற்றைக் கொண்டு இவர்கள் மாபெரும் மாற்றத்திற்கு வித்திடுவர்.

ஒழுக்கத்தின் புதிய பரிணாமம் சமூகத்தின் ஓரங்களில் உணரப்படும், இது வலுமையான எதிர்ப்புக்கும் உட்படும். மெதுவாக இந்த புதிய பரிணாமம் சமூகத்தின் மையத்திற்கு ஊடுருவும். இந்த பரிணாமத்தில் உதயகுமார் கூறிச் செல்லும் சமயமே அதற்குள் இன்னொரு ஊடுருவல் நடப்பதை நாம் உணர முடிகிறது. ஒரு காலத்தில் செய்ய முடியாது, விவாதிக்க முடியாது, செயல்பட முடியாது என்று நமக்குள் நாம் விதித்திருந்த விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இந்த ஊடுருவலுக்குள் வரும் இன்னொரு ஊடுருவலில் மீறப்பட்டது குறித்தும் உதயகுமார் இங்கு விவரித்துள்ளார்.

சதையும் இரத்தமுமாக இருந்த ஊடுருவலை உதயகுமார் இப்புத்தகத்தில் வர்ணித்துள்ளார். பல விடயங்கள் பொதுவில் விவாதிக்கப்பட முடியாது என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. அவற்றை மீறி அந்தக் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து இருப்பது அரசியல் சூழலில் மாற்றங்களுக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை.

25-11-2007 அன்று நடைப்பெற்ற மாபெரும் இண்ட்ராஃப் பேரணியில் அதிகமானோர் கலந்து கொண்டனர். இது எப்படி சாத்தியப்பட்டது. இந்தப் பேரணிக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வுகளின் கோர்வைகளையும் எழுத்தாளர் ஆராய்ந்துள்ளார். இந்தப் பேரணி எப்படி உருவாகியது. அது எங்கே வளர்ந்தது. அதன் வித்து எங்கே தூவப்பட்டது. பெட்ரோனாசு இரட்டைக் கோபுரத்தின் வாயிலில் இந்தப் பேரணி எப்படி உச்சக் கட்டத்தை அடைந்தது என்றும் உதயகுமார் உணர்ச்சிப் பூர்வமாக இப்புத்தகத்தில் விவரித்துள்ளார். இந்த நூல் முகத்தின் காலக் கண்ணாடியாகும் என்று மனித உரிமைக் கட்சியின் ஆலோசகர் திரு.கணேசன் வர்ணித்துள்ளார். பி.உதயகுமாரின் இந்த நூல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு பத்து கேவ்ஸ் எஸ்டிசி உணவகத்தின் விருந்தினர் அரங்கில் நடைப்பெறுகிறது.

செய்தி : தமிழ் நேசன் 18-12-2010

Read more...

பினாங்கில் இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் முதல் மாநில அளவிலான மாநாடு!

>> Wednesday, December 15, 2010




கடந்த ஆகசுட்டு மாதம் 8-ஆம் நாளன்று வெற்றிகரமாக நடைப்பெற்ற இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் தேசிய மாநாட்டினையடுத்து, மாநில அளவிலான இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் முதல் மாநாடு எதிர்வரும் சனவரி மாதம் 30-ஆம் நாளன்று பினாங்கிலுள்ள செபராங் பிறை எனுமிடத்தில் நடத்தப்பெற திட்டமிடப்பட்டுள்ளது. மலேசிய சிறுபான்மை இந்தியர்களுக்கெதிரான 53 ஆண்டுகால அரசாங்கத்தின் ஓரங்கட்டுதலை முடிவுக்கு கொண்டுவர எழுந்த போராட்டம் எந்தவொரு சதிவலைக்கும் பலியாகாமல் தொடரப்பட வேண்டும் எனும் நோக்கில் நாடு தளுவிய நிலையில் சிதறிக்கிடக்கும் அடிமட்ட ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டும் எண்ணமே இம்மாநாட்டின் குறிக்கோளாகும்.

மனித உரிமை இயக்கமான இண்ட்ராஃப் அரசியல் ரீதியில் மலேசிய சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகளை மீட்டெடுத்து பாதுகாக்கவும், அரசியலில் கொள்கை ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், நாட்டின் வளர்ச்சி வெள்ளோட்டத்தில் இந்தியர்களை பங்குபெறச் செய்யவும் மனித உரிமைக் கட்சி எனும் அரசியல் களம் கடந்தாண்டு தொடங்கப்பட்டு ஆக்ககரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் நம் உரிமை எனும் ரீதியில் ’மலேசிய இந்தியர் அரசியல் தன்னாளுமை வியூகம்’ அமைக்கப்பெற்று மலேசிய இந்தியர்களுக்கான வலுவான குரல்கள் நாடாளுமன்றங்களிலும் சட்டமன்றங்களிலும் நம்மை பிரதிநிதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இண்ட்ராஃப் போராட்டங்களில் தங்களை இணைத்துக்கொண்ட ஆதரவாளர்களின் பேராதரவோடு இயக்கப்பெற்றுவரும் மனித உரிமைக் கட்சி மலேசிய அரசியலில் இந்திய சமூகத்திற்கு உண்மையான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக் கொடுக்க பொதுமக்களின் பேராதரவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பினாங்கு மாநில அளவிலான இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் மாநாட்டின் வெற்றிக்கு ஆதரவாளர்களின் பங்கினை மிகவும் எதிர்ப்பார்க்கிறோம். தன்னலம் கருதாது சமுதாய விடியலுக்காக உழைத்துவரும் இண்ட்ராஃப் இயக்கத்தின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு அளித்துவரும் பொதுமக்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர். இம்மாநாட்டு நிகழ்வின் பேராளர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தங்களின் பெயரை முன்பதிவு செய்துகொள்ள அழைக்கிறோம். மாநாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவதற்கு கட்டணங்கள் இல்லை, இந்நிகழ்வு முற்றிலும் இலவசமே. நீங்கள் முன்பதிவு செய்துகொள்ள கொடுக்கப்பட்டுள்ள பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளர் : திரு.கலைச்செல்வம் : 012-5637614

மேலும் இம்மாநாடு வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்ய நன்கொடைகளும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள், நேரடியாக மனித உரிமைக் கட்சியின் பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளரை தொடர்புகொண்டு சந்தித்து கொடுக்கலாம். மறவாமல் ரசீதினைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது, கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலும் அன்பர்கள் நன்கொடைகளை அளித்து உதவலாம். வங்கியின் மூலம் நன்கொடை அளிக்கும் அன்பர்கள் உடனடியாக மாநில பொறுப்பாளரிடம் குறுஞ்செய்தியோ அல்லது நேரடியாக அழைத்தோ தகவல் கொடுத்துவிடவும். வங்கியின் ரசீதினையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.

பினாங்கு மாநில பொறுப்பாளர் : திரு. ஜனார்தனன் துளசி

(MAYBANK 158060009715)


“நீ இவ்வுலகில் நிகழ்த்த விரும்பும் மாற்றங்களுக்கு நீயும் ஒரு காரணமாக இருக்க வேண்டும்” - மகாத்மா காந்தி

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP